Jump to content

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரானபுலம் பெயர் மக்களின் விமர்சனங்களில் நியாயத் தன்மைஉள்ளதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CanadaUthayan_articles150.jpg

அண்மைக் காலமாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பல பாராளுமன்றஉறுப்பினர்களுக்குஎதிரானவிமர்சனங்கள் புலம் பெயர்நாடுகளில்; இயங்கும் தமிழர் அமைப்புக்களிடமிருந்து எழுந்தவண்ணம் உள்ளன. குறிப்பாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்குஎதிரானவிமர்சனங்கள் உச்சநிலையை எட்டியிருக்கின்றன. இங்கிலாந்திலும் வேறுசிலநாடுகளிலும் மேற்படி இருவரினதும் உருவப்படங்களும் சிலபோராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன.புலம் பெயர் தமிழர்கள் சிலமேற்படிதலைவர்களின் படங்களில் ஏறிநின்றுகால்களால் ம்pதித்தசம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை கவலைக்குரியதாகவேஅனைவருக்கும் தோன்றியிருக்கவேண்டும்.

   

ஆனாலும் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் இவ்வாறானசெயற்பாடுகளுக்குபின்னால் வேறுஏதாவதுகாரணங்கள் இருக்கின்றதா என்றுஆராயமுற்பட்டபலர் அவ்வாறுவேறுகாரணங்கள் எதுவும் இல்லைஎன்ற முடிவுக்குவந்துள்ளதாகவே எமக்குகிடைத்ததகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும்; இலங்கைமீதானஐநாவின் விசாரணை அறிக்கைவெளியீடு ஒத்திவைக்கப்படலாம் என்றும் அதற்குசாதனமானகாரணங்கள்; உள்ளன என்றும்பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சிலநாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததையும் இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் அவரும் திரு இரா. சம்பந்னும் கலந்துகொண்டமைக்கு தன்னிச்சையானஒரு காரணத்தையும் கூறியமையும் புலம் பெயர் தமிழ் மக்களைசினமடையச் செய்திருக்கலாம். இதனாலேயே இலங்கைமீதான ஐநாவின் விசாரணை அறிக்கைவெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்குஎதிர்ப்புத் தெரிவித்துவடக்கு இலங்கையிலும்பிரிட்டனிலும் நடைபெற்றபோராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குஎதிரானகோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன.

 

குறிப்பாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் சிலபோராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன.லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சிலதினங்களுக்கு முன்னதாகநடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதும் இரண்டுதலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன. அதற்குமுன்னர் இலங்கையின் சுதந்திரதினநிகழ்வில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமைக்கு எதிர்ப்புதெரிவித்தும் புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தில் இருவரதுபடங்களும் எரிக்கப்பட்டிருந்தன.

 

ஐநாவுக்கும் அமெரிக்காவுக்கும் இலங்கைஅரசாங்கத்துக்கும் எதிராகநடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் உருவப்படங்கள் எரிக்கப்படுவதற்குஎன்னகாரணம் என்னவென்றுலண்டனில் போராட்டத்தை ஒழுங்குசெய்திருந்தபிரித்தானியதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டகருத்துக்கள் ஒரளவிற்கு எற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவே உள்ளது. அந்தக் குழுவின் கருத்துக்களின்படிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றியும் தமிழ்த் தேசத்தின் விடுதலைபற்றியும் தேர்தல் மேடைகளில் கோசங்களை எழுப்பி எமது வாக்குகளை எடுத்துவிட்டு இன்று எவ்வாறுநடந்துகொள்கிறார்கள் என்பதுதான் எமதுமக்களின் ஆட்சேபனைக்கு' காரணம் என்றுஅந்தக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாகஎம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சம்பந்தன் ஆகியோரின் அண்மைக்காலசெயற்பாடுகள் திருப்தியளிக்கும் விதத்தில் இல்லைஎன்றும் பிரித்தானியதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

 

பிரித்தானியாவில் மட்டுமல்லகனடாபோன்றநாடுகளில் வாழும் தமிழ் மக்களும் இங்கு இயங்கிவரும் தமிழர் அமைப்புக்களும் எமதுதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிலரினகுறிப்பாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாகவிசனமும் கவலையும் தெரிவித்திருந்தஅதேவேளையில் அவர்கள் இங்குஎவ்விதமான ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. அரசியல் மற்றும் நமதுசமூகம் சார்ந்தநாகரிகம் கருதிஅவர்கள்; எவ்விதமானஎதிர்ப்பையும் தெரிவிக்கவில்லைஎன்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் அண்மைக்காலசெயற்பாடுகள் குறித்துகோபங்கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள் என்பதேஉண்மை.

 

இவ்வாறானசம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைநமதுதாயகத்தின்; பலபாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளமுடியாமல் அறிக்கைகளையும்விட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் உறவுகள் நாட்டில் தமிழ் மக்களின் நிலைமையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமையையும் உணராமல் செயற்படுவதாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளதாகசெய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் தாயகத்தில் வாழும் மக்களின் நலன் கருதியும் அவர்கள் மீதுகொண்டஅக்கறைநிமித்தமுமே எமதுதலைவர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாககவனித்துவருகின்றார்கள் என்பதும் அவ்வாறு அவர்கள் சிலதவறுகளைகண்டறியும் போது இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதையும் நாம் உணரவேண்டும்.

 

கதிரோட்டம்

 

http://seithy.com/breifArticle.php?newsID=127499&category=Article&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.