Jump to content

கழிப்பறை வசதியற்ற அரசாங்க மகளிர் கல்வி நிலையங்கள்


nunavilan

Recommended Posts

கழிப்பறை வசதியற்ற அரசாங்க மகளிர் கல்வி நிலையங்கள் - சதீஸ் கார்க்கி
 
Girls%2Bat%2Bschool%2Bin%2BTatapani.jpg
 
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 2014ஆம் ஆண்டு இந்திய முழுவதும் உள்ள அரசாங்கங்கப் பள்ளிகளின் கழிப்பிட வசதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வின் படி தேசத்தில் உள்ள 1,01,443 பெண்கள் பள்ளிகள் கழிப்பறை வசதியாற்றவையாகவும், கழிப்பறைகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் 87,984 மகளிர் பள்ளிகள் உள்ளன. இந்த ஆய்வின் அறிக்கை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகார்பபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் அடைந்த பின் கடந்த 67 ஆண்டுகளில் கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்தாலும் கழிப்பறை வசதி இல்லாமல்,பயன்படுத்த முடியாத நிலையில் 1,89,427 அரசாங்க பள்ளிகள் இயங்கிகொண்டிருகின்றன. இதில் தொடக்கப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். இந்த ஆய்வின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது.
 
இதனை நாம் வேறொரு கோணத்தில் உதாரணத்தோடு அணுகுவோம். கழிப்பறை வசதி இல்லாமல்,பயன்படுத்த முடியாத நிலையில் 1,89,427 அரசாங்க (பெண்கள்) பள்ளிகள் இயங்கிகொண்டிருகின்றன என்பதனை நினைவில் கொள்க. உதரணமாக 1,89,427 பள்ளிகளிலும் தலா 100 பெண்கள் கல்வி கற்கின்றனர் என்றால் ஒட்டுமொத்த மாணவிகளின் எண்ணிக்கை 1,89,42,700 ஆக இருக்கும். உதரணமாக  1,89,427 பள்ளிகளிலும் தலா 5 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 9,47,135 ஆக இருக்கும். 
 
இதனை சரியாக குறிப்பிட வேண்டும் என்றால் 1,89,42,700 மாணவிகள், 9,47,135 ஆசிரியர்கள் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்,. இந்த எண்ணிக்கையில் மாற்றுதிரனாளி மாணவிகளும், கர்ப்பிணி ஆசிரியர்களும் அடங்கும். இத்தகைய பள்ளிகளில் இருக்கும் துப்புரவு பணியாளர்கள், இதர பணியாளர்களின் எண்ணிக்கையை சேர்த்து கொண்டால் அதன் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.
stat.JPG
 
இத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவிகள், பணியாற்றுகின்ற ஆசிரியர்கள்  பெரும்பாலும் பள்ளிசுவர்களின் பின்புறம், மரங்களின் மறைவில்,புதர்களின் மறைவில்/ பின்புறம் தான் உடல் உபாதைகளை (சிறுநீர்,மலம்) கழிக்கிறார்கள். தொடர்ந்து இத்தகைய இடங்களில் கழிப்பதால் இவ்விடம் கொசுக்களுக்கும், சிறு புச்சிகளுக்கும் இருப்பிடமாக மாறுகிறது. மேலும் இவ்விடத்திற்கு உடல் உபாதைகளை கழிக்க வரும் மாணவிகள், ஆசிரியர்களை கொசு, இதர புச்சிகள் கடிக்கின்றன, இதனால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. தொடர்ந்து இத்தகைய இடங்களில் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது, கழிவுகளை மிதித்து வகுப்பறைக்கு செல்வதானால் பள்ளி வளாகம் சுகதரமற்ற நிலையில் இருக்கிறது(இயங்குகிறது). 
 
மறைவான இடங்கள் இல்லாத, பள்ளியை சுற்றிலும் கட்டிடங்கள் இருக்கின்ற பள்ளிகளில் பயிலும் மாணவிகள், பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் உடல் உபாதைகளை கழிக்க வழியில்லாமல் அதனை கட்டுபடுத்தி கொள்கின்றனர். இதனை நாம் வேறொரு கோணத்தில் கவனிப்போம். பெரும்பாலான பள்ளிகள் காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை  4.30 மணிக்கு நிறைவுபெறுகிறது. காலை 8.30 மணிக்கு பள்ளி தொடங்குகிறது என்றால் 7.30 மணிக்கே விட்டிலிருந்து மாணவிகள், ஆசிரியர்கள் புறப்படுகிறார்கள், இவ்வாறே 4.30 மணிக்கு பள்ளி நிறைவடைந்த பிறகு விட்டிற்கு வந்து சேர மணி 5.30 ஆகிறது. காலை 7.30 மணியுலிருந்து மாலை 5.30 மணி வரை(10 மணி நேரம்) மாணவிகள்/ஆசிரியர்கள் உடல் உபாதைகளை கழிக்க செல்லாமல் தொடர்ந்து (தினத்தோறும்) கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கின்ற காரணத்தால் சிறுநீரகத்தில் கல் தோன்றுகிறது. (வேறு சில உடல்ரிதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள்) 
 
அரசாங்க பள்ளிகளின் நிலைமையை போலவே சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியிலும் கழிப்பறைகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது, இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளும், பணியாற்றும் ஆசிரியர்களும் மறைவான இடத்தில தான் உடல் உபாதைகளை கழிக்கிறார்கள். இக்கல்லூரியில் மொத்தம் 4,300க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்கின்றனர், காவலராக, இதர பணியாளராக ஆண்கள் பணிபுரிகிறார்கள். ஆண்களும் உடல் உபாதைகளை கழிக்க மறைவான இடத்தையே நாடுகிறார்கள். இவ்வாறு மறைவான இடத்தில பெண்கள் உடல் உபாதைகளை கழிக்கும்பொழுது ஆண்களின் குரலோ, காலடி சத்தமோ கேற்க்கும் பட்சத்தில் அப்பெண்கள் அடையும் பயத்தையும், மன வேதனையும் விவரிக்க இயலாத துயரத்தை அடைகிறார்கள். 
 
மாதவிடாய் காலங்களில் (காயிதே மில்லத் கல்லூரி, 1,89,427 பள்ளிகள்) மாணவிகள், ஆசிரியர்கள் உடை மாற்றிக்கொள்ளவோ, தூய்மைபடுத்திக் கொள்ளவோ வசதிகள் இல்லாமல் அவதிப் படுகிறார்கள்.குளிர் காலங்களில் வெட்பநிலை மாற்றத்தால் உடல் உபாதை அதிகமாக வெளியேற்றப்படும், உடல் உபாதைகளை கழிக்க முடியாமல் இக்காலங்களில்(குளிர்) மாணவிகள், ஆசிரியர்கள் மிகவும் அவதிப் படுகிறார்கள். 
 
மழைக்காலங்களில் மாணவிகள், ஆசிரியர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உடல் உபாதைகளை கழிக்க மறைவான இடங்களுக்கு செல்லமுடியாமல் தவிக்கிறார்கள். இத்தகைய இடங்களில் கழிக்கப்படும் உடல் உபாதைகள் மழைநீருடன் கலந்து வளாகத்துக்குள் தேங்கி நிற்கிறது, இதனால் பள்ளி,கல்லூரி வளாகம் மாசடைகிறது. மேலும் இவ்வாறு தேங்கும் மாசடைந்த தண்ணீரில் வசிக்கும் கொசுக்களின் முலம் (டெங்கு)காய்ச்சல் மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரவுகிறது 
 
இத்தகைய வேதனைகளை சுமந்து கொண்டு மாணவிகளால் எவ்வாறு முழுமனதுடன் கல்வி கற்க இயலும்?, ஆசிரியர்களால் எவ்வாறு சிறப்பாக பண்ணியாற்ற இயலும்?
 
ஆதாரம்:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழிப்பறை வசதி இல்லாத மாணவிகள்:1,89,42,700
கழிப்பறை வசதி இல்லாத ஆசிரியர்கள்:  9,47,135
மொத்தம்: 19´889´835  (19 கோடிக்கு மேல்) வளரும் சமுதாயம்.
இதற்குள் இந்தியாவுக்கு... வல்லரசு கனவும், அடுத்தவன் நாட்டு இனத்தை அழிப்பதும் தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு இந்தியா கழிப்பறை கட்ட இவ்வளவு பஞ்சிப்படுது?...இந்தியர்கள் சுத்தமாக கழிப்பறையை வைத்திருக்க மாட்டார்கள் என்டால் அட்லீஸ்ட் கட்டண கழிப்பறையாவது கட்டலாமே!

Link to comment
Share on other sites

கழிப்பறை இருப்பவர்களும் பலர் வெளியில் தான் செல்வார்கள் ,

அதுவும் குழந்தைகள் வீதியில் வந்து இருப்பார்கள் .

ரெயின் பயணத்தின் போது அதிகாலையில் தண்டவாளம் நீட்டிற்கு ஆண்களும் பெண்களும் ஆளுக்கு ஆள் முதுகை கட்டிக்கொண்டு இருப்பார்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.