Jump to content

தமிழகம்: அதிரவைக்கும் இளவயது கர்ப்பங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது.

கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு திருமணமாகவில்லை என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

இந்த மாணவியும், இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். எல்லை மீறிய நிலையில் கர்ப்பமடைந்தார். கர்ப்பத்தை எப்படி கலைப்பது என தெரியாமல் விட, கழிப்பறையில் பிரசவிக்கும் நிலையை எட்டி விட்டார். கர்ப்பம் தரித்து உடலில் மாற்றங்கள் தெரிய துவங்கிய போது, 'எனக்கு வயிறு வலிக்கிறது. வயிற்றில் கட்டி இருப்பதாக டாக்டர் சொன்னார். சில மாதங்களில் சரியாகி விடும்' என சொல்லியிருக்கிறார் அந்த மாணவி.

இதை அப்போது நம்பிய மாணவியின் பெற்றோர், திருமணமாகாத நிலையில் மகளுக்கு குழந்தை பிறந்ததால் கதறி அழுதனர். கோவை அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம் இது. இது ஏதோ ஒரு மாணவிக்கு மட்டும் நிகழ்ந்தது என்று கருத முடியாது. அந்தளவுக்கு சமீப காலங்களாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம்பெண்கள் கர்ப்பம் அடைவது மிகவும் அதிகரித்துள்ளது. உடலுறவு மற்றும் அதன் பின்விளைவுகள் என எதுவும் தெரியாமலேயே இவர்கள் பாலுறவில் ஈடுபட்டு, சங்கடங் களை அனுபவித்து வருவது சமூகத்தின் முன் பல கேள்விகளை முன் வைக்கிறது. பாலியல் கல்வியின் தேவையை அதிர்ச்சியுடன் சொல்கிறது.

இளம் வயது கர்ப்பம் காரணங்கள்

"கருக்கலைப்பு செய்ய முன்வருபவர்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் 13 வயது முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவிகளும் இருக்கின்றனர். பல நேரங்களில் தங்கள் காதலர்களுடன் வந்து கருக்கலைப்பு செய்ய வருகின்றனர். ஆனால் அது முடியாதபோது இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன," என்கின்றனர் மருத்துவர்கள்.

sex%20education%20500%201.jpg

இது போன்ற இளம் கர்ப்பங்களுக்கு இதுதான் காரணம் என ஒன்றை மட்டும் நாம் சொல்லி விட முடியாதபடி காரணங்கள் பரவி கிடப்பதாக சொல்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். "எதிர்பாலினருடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள், இணையத்தின் ஊடாக பாலியல் சார்ந்த எழுத்துக்களையும், காட்சிகளையும் எளிதாக அணுகும் வாய்ப்பு, பாலியல் சார்ந்த உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்கள், குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரத்தை செலவழிக்காதது என இளம் கர்ப்பங்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் மிக முக்கியமானது பாலியல் சார்ந்த கல்வி இல்லாதது தான்.

ஆபாச தளங்களுக்கு முக்கிய பங்கு

தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிவேக வளர்ச்சியால் இளம் வயதிலேயே வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. அவர்களின் வாழ்க்கைமுறைகளும் அதிகரிக்கும் இளம் கர்ப்பங்களுக்குக் காரணம்.  ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு சில வசதிகளை செய்து கொடுக்கிறது. அதே வசதியை நாம் தவ றான திசையிலும் பயன்படுத்தும் போக்குகள் அதிகரித்து வருகின்றன. அதில் ஒன்றுதான் இணையத்தில் பாலியல் சார்ந்த தேடல்கள். இணையத்தை பயன்படுத்துவோரில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பாலி யல் காட்சிகள், எழுத்துகளை கொண்ட இணைய தளங்களை பார்வையிடுவதாக சொல்கிறது புள்ளி விவரங் கள்.

sex%20education%20rightt.jpgஇணையதளங்களில் பாலியல் குறித்து  தவறான பல விஷயங்கள் விரவிக் கிடக்கின்றன. பதின் பருவத்தினரை தூண்டி, அவர்களது வேட்கையை திருப்திப்படுத்தவே இந்த தளங்கள் உதவுகிறது. முதலில் இது போன்ற படங்களை பார்ப்பது என்றால் உங்களுக்கு அதற்கான கருவிகள் தேவைப்பட்டன. பின்னாளில் இன்டர்நெட் சென்டர்களுக்கு சென்றால் பார்க்க முடியும் என்ற நிலை உருவானது. பின்னர் இது வீடுகளுக்கு பரவி, இப்போது கையில் வைத்திருக்கும் செல்போன்களிலேயே பார்த்துக்கொள்ளும் சூழலை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர்கள் மட்டுமல்ல.. குழந்தைகள் கூட இந்த படத்தை பார்க்க வாய்ப்புகள் உள்ளது.

இணைய தளங்களில் ஆபாச படங்களை பார்க்க துவங்கும் சராசரி வயது 11, 12 என வெளிவரும் புள்ளிவிவரங்கள் இதையே உணர்த்துகின்றன.

இதனால் அதிக லாபம் சம்பாதிக்கும் வலை தளங்களாக இது போன்ற தளங்களே உள்ளன. இந்த காட்சி களை பார்க்கும் பதின்பருவத்தினர் அதை நோக்கி தூண்டப்படுகின்றனர். அதுதான் மேற்சொன்ன சம்பவங் களுக்கு காரணமாகிறது. இணையத்தை எந்த நாட்டிலும் தடை செய்து விட முடியாது. இதற்கு அடிமையா வதன் தீங்குகளை இளைஞர்களிடம் விளக்கினாலே போதுமானது.  பாலியல் தொடர்பான போதுமான கல்வியையும் வழங்குவதன் மூலம், இது போன்ற தளங்களின் தீயவிளைவுகளை உணர்த்தி, அதை தவிர்க்க செய்ய முடியும்.

பாலியல் கல்வி தீர்வை தரும்?

sex%20education%20right.jpg2007 ஆம் ஆண்டு மத்திய அரசு பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொண்டது. ஆனால் சரியாக முன்வைக்கப்படாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. எய்ட்ஸ் நோய் பரவலாக பரவி வந்த கால கட்டத்தில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக பாலியல் கல்வி அவசியம் என முன்வைக்கப்பட்டது. இளம் கர்ப்பங்களைத் தடுப்பதும் கூட இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

ஆனால் பாலியல் கல்வியை பள்ளிகளில் அறிமுகப்படுத்த கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டால் மேற் கத்திய கலாச்சாரத்தை கொண்டு வந்து விடும் என பழமைவாத அமைப்பு கள் குரல் எழுப்பின. 'இது விழிப்புணர்வை ஏற்படுத்தாது. மாறாக பாலியல் உணர்வுக்கு வடிகாலாக மாறி விடும்' என எச்சரித்தன. இதனால் துவங்கிய வேகத்தில் கிடப்பில் போடப்பட்டது பாலியல் கல்வி திட்டம்.

'உண்மையில் பாலியல் கல்வி என்பது அறிமுகப்படுத்தப்பட்டால், இளம் வயது கர்ப்பங்களை பெருமளவில் குறைக்க முடியும். பதின் பருவத்தினருக்கு பாலியல் கல்வி தொடர்பாக பல சந்தேகங்கள் உள்ளன. ஆனால் அவர்களின் பிரச்னைகள், சந்தேகங்கள் குறித்து பேச அவர்களுக்கு யாரும் இல்லை. இதனால்தான் பாலி யல் சார்ந்த எதுவும் தெரியாமல், சில காட்சிகளின் மூலமாக தூண்டப்பட்டு சிறு வயதிலேயே சிறுமிகள் கர்ப்பம் தரிக்கின்றனர்.

sex%20education%20right%202.jpgபாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டால், பதின் பருவத்தினர் பாலியல் உறவுகளில் ஈடுபடுவது குறையும். பாலியல் உறவில் ஈடுபடும் குறைந்த அளவிலான பதின்பருவத்தினரும் போதுமான அறிவுடன் அதில் ஈடுபடுவார்கள். எனவே பாலியல் கல்வி ஒன்றுதான் இது போன்ற இளவயது கர்ப்பங்களை குறைக்கும். ஆனால் பாலியல் கல்வி முழுமையான கல்வியாக இருக்க வேண்டும்.

எங்களை பொறுத்தவரை 'பாலியல் கல்வி' என்பதே அவசியமற்றது என நினைக்கிறோம். அதுதான் எதிர்ப்புக்கு வித்திடுகிறது. இதை வேறு பெயரில் அறிமுகப்படுத்தினால் எதிர்ப்பும் இருக்காது," என்கின்றனர் மருத்துவர்கள்.

பெற்றோர் அலட்சியமும் ஒரு காரணம்

பெற்றோர்களின் கவனமின்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணம். மனிதனாய் பிறந்த யாருக்கும், இயற் கையின் உந்துதலில் ஒரு கட்டத்தில் உடல்ரீதியான ஈர்ப்பு உருவாகும். அதை மாற்ற முடியாது. அப்போது அவர்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஆனால் பெற்றோர்கள் ஒன்று இதை கண்டுகொள்வதே இல்லை அல்லது பாலியல் விஷயங்கள் தொடர்பாக எதிர் மறையாக பேசுகின்றனர். இதில் எதுவாகினும் பெற்றோர்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கான வழிகளை  குழந்தைகள் தேடத் தொடங்கிவிடுகின்றனர்.

sex%20education%20500%202.jpg

இள வயது கர்ப்பம் என்பது  அந்த சிறுமி அல்லது மாணவியின் உடல்நிலையையும் பெருமளவில் பாதிக்கும். "இளம் பருவத்தில் கர்ப்பம் அடைவதற்கு உடல் பக்குவமாக இருக்காது. வயது முதிர்ந்தவர்களே பிரசவத்தின் போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் நிலையில், மாணவிகளும், சிறுமிகளும் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். குழந்தை பிறக்கும்போது இதனாலேயே பல சிக்கல்களும் ரத்தப்போக்கும் ஏற்படும். சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

இது மட்டுமில்லாமல் இளம் வயது கர்ப்பம் அதிகப் பதற்றம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச் னைகளையும் உருவாக்கும்.  புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்ப்புகளும் அதிகம்," என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பதின்பருவ உடலுறவு என்பது நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இவற்றை பதின் பருவத்தினர் உணர்ந்து கொள்ளச் செய்திடல் வேண்டும்!

-ச.ஜெ.ரவி
  

 

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39133

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.