Jump to content

தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா .....?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா ...?
 
ஒவ்வரு நாளும் உலகில் உள்ள ஓவரு மனிதரும் வாழ்விற்காக எதோ ஒருவகையில் போராடி கொண்டுதான் இருக்கிறோம்.
வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பிடித்தமாக அமைவதில்லை என்று பலரும் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்.
 பிடித்தமாக ..? என்றால் என்ன ..? 
வாழ்க்கை பிடிக்காவிட்டால் தற்கொலை செய்து இறந்துபோகும் வசதி எல்லோருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன்.
ஆக தற்கொலை செய்யாது எல்லோரும் வாழ்வதால் ...
எல்லோருக்கும் வாழ்க்கை பிடித்திருக்கிறது என்று கொள்ளலாமா ?
இப்போதைய காலகட்டம் பிடிக்காது போனாலும் .....
எதிர்கால நாட்களை எமக்கு பிடித்ததாக அமைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரு போராட்டமாக வாழ்கையை கொண்டிருக்கிறோம். 
வசதியான வாழ்வு அமைப்பது என்பதற்காக பலரும் போராடுகிறோம்.
இதில் வசதி எனும் சொல் ஆளுக்கு ஆள் வித்தியாசமான பொருளை கொடுக்கும்.
ஒருவருடைய கடந்த கால வாழ்வு தற்போதைய வாழ்வின் சூழ்நிலை என்பது "வசதி" எனும் சொல்லின் அர்த்தத்தை மாற்றிகொள்கிறது.
இதிலும் சில மனிதர் புதிராக இருக்கிறார்கள் .....
வசதியான வாழ்வு உடையவர் என்று பலர் பார்த்து சொல்லும்  வாழ்வை கொண்டிருந்த சிலர் 
மற்றவர்கள் வசதியாக இல்லையே ....??
என்று தமது வசதியை துறந்து மற்றவர்கள் வசதி பெறுவதற்கு போராடுகிறார்கள் அல்லது சேவை செய்கிறார்கள். 
எல்லா வசதியும் இருந்த புத்தர் அனைத்தையும் துறந்து ஆன்மீகவாதியாகி அடுத்தவருக்கு வழி காட்டியாக மாறினார்.
அதே புத்தரை எமக்கு வரம்தாரும் என்று கேட்டு அவரை கடவுளாக வணங்கும் மனிதர்கள். ... ..  வரமாக.... இருக்கும் நிலையில் இருந்து 
அடுத்த நிலைக்கு குத்துகரணம் அடிக்கும் வசதியைதான் கேட்கிறார்கள்.
அனைத்தையும் துறந்து இருக்கும் புத்தரால் மனிதர்களுக்கு எதை கொடுக்க முடியும் ...?
புத்தரிடம் இருப்பது தூய்மையான மனம் ஒன்றே ...... அதை புத்தரை வணங்கும் எத்தனை மனிதர் பெற தயாராக இருக்கிறார்கள் ?
புத்தருக்கு பிடிக்கதுபோய் ..... புத்தரே தூக்கி எறிந்துவிட்டு போன வசதியான வாழ்வு வேண்டும் என்று 
புத்தரை தேடி சென்று பல மனிதர்கள் நாளும் கேட்கிறார்கள்.
இது ஒரு முரண்பாடாக இருக்கிறது இல்லையா ......??
 
நான் என்ன சொல்லவருகிறேன் ...... என்று குழப்பாமாக உங்களுக்கு இருக்கலாம்.
முற்றையும் துறந்து .... மனிதன் நித்திய சாந்தி அடைவதன் மூலமே 
நிரந்தரமான மகிழ்ச்சியை வாழ்வில் எட்டமுடியும். அதுதான் வாழ்வின் பூரணம்.
இன்று தொடங்கிய புத்த மதம் இன்று ...
வசதியான வாழ்வை தேடும் மனிதருக்கு ஒரு கோவிலாக மாறி .... நாளும் நாளும் வசதி வேண்டும் என்று கேட்டு வணங்கும் மனித கூட்டத்தால் நிறைந்து வழிகிறது. 
மனிதன் முரண்பட்டு நிற்கிறான்!
முரண்பாடு என்பதும் வாழ்வின் ஓர் அங்கமா ??
கெட்டது என்று பலர் சொல்லும் மதுவை நான் பலமுறை குடித்திருக்கிறேன் ....
இனியும் குடிப்பேன். நண்பர்களுடன் கூடினால் அவர்களோடு சேர்ந்து அதை குடித்து கொள்கிறேன்.
அது எந்த கெடுதலையும் எனக்கு இதுவரை செய்யவில்லை....
அதை குடிப்பதால் எந்த கெடுதலையும் நான் யாருக்கும் செய்ததும் இல்லை.
அதனால் நான் இனியும் அதை குடிக்கலாம் என்று நம்புகிறேன்.
உலகில் இன்னொரு மனித கூட்டம் என்னை மது குடிப்பவர் என்று தள்ளிவைக்கவோ அல்லது கேவலமாக பார்க்கவோ கூடும்.
 
எது சரி ........?
எது பிழை ..........?
என்பதை எது தீர்மானிக்கிறது என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது.
 
தற்செயலாக கீழே இருக்கும் வீடியோவை பார்த்தேன் ...
பின்பு இவருடைய எல்லா வீடியோவையும் பார்த்தேன் ...
இவர் ஒரு யாழ்பாண தமிழர் என்பதை இவருடைய வீடியோக்கள் மூலம் அறிந்துகொண்டேன்.
இவருடைய பிள்ளையின் வாழ்வின் தேடல் எதுவாக இருக்கும்?
என்றொரு கேள்வி எனக்குள் பிறந்தது .............
எனது பிள்ளை வசதியாக இருக்க வேண்டும் என்று நான் இப்போதே பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன் என்பதால்.
எனது பிள்ளை எந்த குளத்தில் தொலைந்துபோகும் .........?
என்று ஒரு கேள்வி எனக்குள் வர தொடங்கியது.
 
 
கீழே இருக்கும் வீடியோவை 
நேரம் இருந்தால் ஒருமுறை பாருங்கள் 
உங்களுக்கு உங்கள் மனதில் வரும் எண்ணங்களை முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
உங்கள் எண்ணங்கள் தனக்கும் வேண்டுமாம் என்று இந்த பிள்ளை சொல்கிறது விரும்பினால் யூ ட்டுப் சென்று அவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இவை அனைத்தும் யூ டூப் தளத்தில் புப்ளிக்காக இருப்பதால் 
நான் எந்த பிரைவசி மீறலையும் செய்யவில்லை என்று நம்புகிறேன். 
இன்னொரும் ஒரு வீடியோ இதில் இன்னொரு .....
எனக்கு சிந்தனையை தூண்டும் விடயம் இருக்கிறது.
உங்களில் சிலருக்கும் அது புரியலாம். 

 

Link to comment
Share on other sites

 

அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா ...?
 
ஒவ்வரு நாளும் உலகில் உள்ள ஓவரு மனிதரும் வாழ்விற்காக எதோ ஒருவகையில் போராடி கொண்டுதான் இருக்கிறோம்.
வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பிடித்தமாக அமைவதில்லை என்று பலரும் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்.
 பிடித்தமாக ..? என்றால் என்ன ..? 
வாழ்க்கை பிடிக்காவிட்டால் தற்கொலை செய்து இறந்துபோகும் வசதி எல்லோருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன்.
ஆக தற்கொலை செய்யாது எல்லோரும் வாழ்வதால் ...
எல்லோருக்கும் வாழ்க்கை பிடித்திருக்கிறது என்று கொள்ளலாமா ?
இப்போதைய காலகட்டம் பிடிக்காது போனாலும் .....
எதிர்கால நாட்களை எமக்கு பிடித்ததாக அமைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரு போராட்டமாக வாழ்கையை கொண்டிருக்கிறோம். 
வசதியான வாழ்வு அமைப்பது என்பதற்காக பலரும் போராடுகிறோம்.
இதில் வசதி எனும் சொல் ஆளுக்கு ஆள் வித்தியாசமான பொருளை கொடுக்கும்.
ஒருவருடைய கடந்த கால வாழ்வு தற்போதைய வாழ்வின் சூழ்நிலை என்பது "வசதி" எனும் சொல்லின் அர்த்தத்தை மாற்றிகொள்கிறது.
இதிலும் சில மனிதர் புதிராக இருக்கிறார்கள் .....
வசதியான வாழ்வு உடையவர் என்று பலர் பார்த்து சொல்லும்  வாழ்வை கொண்டிருந்த சிலர் 
மற்றவர்கள் வசதியாக இல்லையே ....??
என்று தமது வசதியை துறந்து மற்றவர்கள் வசதி பெறுவதற்கு போராடுகிறார்கள் அல்லது சேவை செய்கிறார்கள். 
எல்லா வசதியும் இருந்த புத்தர் அனைத்தையும் துறந்து ஆன்மீகவாதியாகி அடுத்தவருக்கு வழி காட்டியாக மாறினார்.
அதே புத்தரை எமக்கு வரம்தாரும் என்று கேட்டு அவரை கடவுளாக வணங்கும் மனிதர்கள். ... ..  வரமாக.... இருக்கும் நிலையில் இருந்து 
அடுத்த நிலைக்கு குத்துகரணம் அடிக்கும் வசதியைதான் கேட்கிறார்கள்.
அனைத்தையும் துறந்து இருக்கும் புத்தரால் மனிதர்களுக்கு எதை கொடுக்க முடியும் ...?
புத்தரிடம் இருப்பது தூய்மையான மனம் ஒன்றே ...... அதை புத்தரை வணங்கும் எத்தனை மனிதர் பெற தயாராக இருக்கிறார்கள் ?
புத்தருக்கு பிடிக்கதுபோய் ..... புத்தரே தூக்கி எறிந்துவிட்டு போன வசதியான வாழ்வு வேண்டும் என்று 
புத்தரை தேடி சென்று பல மனிதர்கள் நாளும் கேட்கிறார்கள்.
இது ஒரு முரண்பாடாக இருக்கிறது இல்லையா ......??
 
நான் என்ன சொல்லவருகிறேன் ...... என்று குழப்பாமாக உங்களுக்கு இருக்கலாம்.
முற்றையும் துறந்து .... மனிதன் நித்திய சாந்தி அடைவதன் மூலமே 
நிரந்தரமான மகிழ்ச்சியை வாழ்வில் எட்டமுடியும். அதுதான் வாழ்வின் பூரணம்.
இன்று தொடங்கிய புத்த மதம் இன்று ...
வசதியான வாழ்வை தேடும் மனிதருக்கு ஒரு கோவிலாக மாறி .... நாளும் நாளும் வசதி வேண்டும் என்று கேட்டு வணங்கும் மனித கூட்டத்தால் நிறைந்து வழிகிறது. 
மனிதன் முரண்பட்டு நிற்கிறான்!
முரண்பாடு என்பதும் வாழ்வின் ஓர் அங்கமா ??
கெட்டது என்று பலர் சொல்லும் மதுவை நான் பலமுறை குடித்திருக்கிறேன் ....
இனியும் குடிப்பேன். நண்பர்களுடன் கூடினால் அவர்களோடு சேர்ந்து அதை குடித்து கொள்கிறேன்.
அது எந்த கெடுதலையும் எனக்கு இதுவரை செய்யவில்லை....
அதை குடிப்பதால் எந்த கெடுதலையும் நான் யாருக்கும் செய்ததும் இல்லை.
அதனால் நான் இனியும் அதை குடிக்கலாம் என்று நம்புகிறேன்.
உலகில் இன்னொரு மனித கூட்டம் என்னை மது குடிப்பவர் என்று தள்ளிவைக்கவோ அல்லது கேவலமாக பார்க்கவோ கூடும்.
 
எது சரி ........?
எது பிழை ..........?
என்பதை எது தீர்மானிக்கிறது என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது.
 
தற்செயலாக கீழே இருக்கும் வீடியோவை பார்த்தேன் ...
பின்பு இவருடைய எல்லா வீடியோவையும் பார்த்தேன் ...
இவர் ஒரு யாழ்பாண தமிழர் என்பதை இவருடைய வீடியோக்கள் மூலம் அறிந்துகொண்டேன்.
இவருடைய பிள்ளையின் வாழ்வின் தேடல் எதுவாக இருக்கும்?
என்றொரு கேள்வி எனக்குள் பிறந்தது .............
எனது பிள்ளை வசதியாக இருக்க வேண்டும் என்று நான் இப்போதே பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன் என்பதால்.
எனது பிள்ளை எந்த குளத்தில் தொலைந்துபோகும் .........?
என்று ஒரு கேள்வி எனக்குள் வர தொடங்கியது.
 
 
கீழே இருக்கும் வீடியோவை 
நேரம் இருந்தால் ஒருமுறை பாருங்கள் 
உங்களுக்கு உங்கள் மனதில் வரும் எண்ணங்களை முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
உங்கள் எண்ணங்கள் தனக்கும் வேண்டுமாம் என்று இந்த பிள்ளை சொல்கிறது விரும்பினால் யூ ட்டுப் சென்று அவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 

அந்த பிள்ளை எனது மருமகள் .மற்றவர்கள்  எனது மச்சாள்மார்களும் மருமக்களும் மருதர். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி மருது...!   அந்த புல்லாங்குழல் வாசிப்பும் நன்று...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி மருது...!   அந்த புல்லாங்குழல் வாசிப்பும் நன்று...!! :)

அது  யாழ்பாணம் நாயன்மார்கட்டில் இருந்து .........

அந்த பிள்ளை எனது மருமகள் .மற்றவர்கள்  எனது மச்சாள்மார்களும் மருமக்களும் மருதர். :o

எனக்குள் பல சிந்தனைகளை விதைக்கிருக்கிறார் .....
கல்வியிலும் முன்னேற்றமாக இருக்கிறாரா ?
இருக்கவேண்டும் என்று எதிர்பார்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நீச்சல் பழகிய குளங்களில் நாயன்மார்கட்டு பிள்ளையார் கோவில் குளமும் ஒன்று...! முதல் அதை சரியாய்க் கவனிக்கவில்லை...!! இப்ப விளங்குது...!!!

 

நன்றி மருது...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.