Jump to content

மூட்டு பூச்சியை கொல்ல பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட இரசாயனப்பொருள் எட்டு மாத குழந்தையின் உயிரை எடுத்ததுடன் நான்கு உடன்பிறப்புக்களையும் ஆபத்தான நிலைக்கு தள்ளிய சோக விபத்து.


BLUE BIRD

Recommended Posts

கனடா- அல்பேர்ட்டாவில் வோட் மக்முரெ என்ற இடத்தில் 8-மாத குழந்தை ஒன்று இறந்ததுடன் மற்றும் நான்கு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் தாயார் மூட்டுபூச்சிகளை அகற்றுவதற்கு ஒரு வகை இரசாயன புகையூட்டியை உபயோகித்தமை இந்நிலைக்கு காரணமென கூறப்பட்டுள்ளது.

இவர் மூட்டு பூச்சிகளை கொல்வதற்கென அண்மையில் விடுமுறைக்கு பாகிஸ்தான் சென்று திரும்பியபோது ஒரு வகை இரசாயனப் பொருளை கொண்டு வந்தார் என அவரது சகோதரி ஷாசியா யார்க்கான் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்மாடிக்கட்டிடத்தில் இவர்கள் குடியிருந்த யுனிட்டில் மூட்டு பூச்சிகள் இருந்ததாகவும் அது குறித்து பராமரிப்பாளரிடம் தெரிவித்தபோது அவர்கள் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையாதலால் அவற்றை கொல்லும் முயற்சியை தன் கையில் எடுத்துள்ளார்.

எத்தகைய பொருள் உபயோகப்படுத்த  பட்டுள்ளதென்பது பொலிசாரால்  சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இது ஒருவகை நிறமற்ற துர்நாற்றம் வீசும் வாயு கலவை என்றும் மிகவும் ஆபத்தான விவசாய பூச்சிக்கொல்லியான இது மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பொஸ்பைன் எனப்படும் இந்த பொருள் கனடாவில் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பாவிப்பதற்கு விசேடமான அனுமதி தேவை. பெரும்பாலும் விவசாயிகள் தங்கள் பயிர்களிற்கு உபயோகிப்பது.

இரசாயன சிந்தல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்று கிழமை வோட் மக்முறெயிலிருந்து ஆர்சிஎம்பியனருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அதிகாரிகள் குறிப்பிட்ட சிந்தல் ஒரு யுனிட்டில் மட்டுமே காணப்பட்டதை கண்டுபிடித்தனர். ஆனால் முழு கட்டிடத்தில் உள்ளவர்களையும் வெளியேற்றினர்.

திங்கள் கிழமை எட்டுமாத பெண் குழந்தை இறந்து விட்டது. இரண்டு மற்றும் ஆறு வயதுடைய அதன் உடன்பிறப்புக்கள் எட்மன்டனில் உள்ள சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டனர். 4 மற்றும் 7-வயதுடைய மற்றய இரண்டு உடன்பிறப்புக்கள் வோட் மக்முரேயில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குழந்தைகளின் தாயாரும் வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இரசாயனப் பொருளை கடந்த செவ்வாய்கிழமை குழந்தைகளின் தாய் தனது யுனிட்டில் உபயோகித்ததாகவும் சனிக்கிழமை குழந்தைகள் சுகயினமுற தொடங்கியதாகவும் அவரது சகோதரி தெரிவித்தார்..

தனது குடியிருப்பு யுனிட்டில் ஒரு கொடிய இரசாயன பொருளை சிந்தி கவனக்குறைவால் தனது ஐந்து குழந்தைகளிற்கும் விசத்தை வைத்த நிடா ஹபீப் என்ற இந்த தாய் எட்மன்டனிற்கு சென்று கடுமையான சுகயீனமுற்றுள்ள தனது பிள்ளைகளை பார்க்க உதவி கோருகின்றார்.

ஹபீப்பின் இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் எட்மன்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதை ஒரு சோகம் ததும்பிய விபத்து என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆண் குழந்தைகள் எனவும் தெரியவந்துள்ளது.

தாயார் நிலத்தை வெற்றிட சுத்தமாக்கியால் துப்பரவு செய்த போது பூச்சிக்கொல்லி துகள்கள் ஆபத்தானவையாகியதுடன் நொருங்கி காற்றில் கலந்து விட்டதாக துணை தீயணைப்பு தலைமை அதிகாரி பிராட் கிரென்ஜர் தெரிவித்துள்ளார்.

இந்த நஞ்சிற்கு மாற்று மருந்து இல்லையென்றும் இது கல்லீரல், இதயம், கிட்னி போன்றனவற்றிற்கு நீண்ட கால சேதத்தை உண்டுபண்ணும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கனடா எல்லை பகுதிகள் சேவை முகமை ஆர்சிஎம்பியனருடன் இணைந்து இந்த வழக்கை கையாள்கின்றனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுமா என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

bug-600x337.jpgbug1-600x337.jpg bug2-600x337.jpg bug3.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/38483.html#sthash.AZg1knA5.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மூட்டைப் பூச்சிகளும், பாகிஸ்தானிலிருந்து... இவர்களுடன் தொத்திக் கொண்டு வந்ததாகத்தான் இருக்கும்.
ஒரு மருந்தை அடிக்க முதல்... அதில் என்ன அளவின் படி, எந்த நேரம், எப்படி அடிக்க வேண்டும் என்று ஒரு துண்டு எழுதி வைச்சிருப்பாங்களே.... அதை, இவ வாசிக்கவில்லையா? 

Link to comment
Share on other sites

அந்த மூட்டைப் பூச்சிகளும், பாகிஸ்தானிலிருந்து... இவர்களுடன் தொத்திக் கொண்டு வந்ததாகத்தான் இருக்கும்.

ஒரு மருந்தை அடிக்க முதல்... அதில் என்ன அளவின் படி, எந்த நேரம், எப்படி அடிக்க வேண்டும் என்று ஒரு துண்டு எழுதி வைச்சிருப்பாங்களே.... அதை, இவ வாசிக்கவில்லையா? 

 

 

அந்த மருந்தை அந்த நாட்டின் சீதோஸ்ண மற்றும் தகுதிகளுக்கேற்பத் தயாரித்திருப்பார்கள்.கனடாவில் அடைத்தவீட்டுக்குள் அடித்தால் அவ்வளவையும் அவர்கள் சுவாசித்திருப்பார்கள்.கனடாவில் ஒரு சிறிய வீட்டுக்குள் அதிகமானவர்கள் வசிக்கும் இனமும் இவர்கள் தான்

Link to comment
Share on other sites

வோட் மக். தற்செயல் நச்சினால் இரண்டாவது குழந்தை மரணம்?. 

 

கனடா-எட்மன்ரன். தற்செயல் நச்சினால் உயிழந்த 8-மாத பெண் குழந்தையின் மரணச்சடங்கிற்காக  மக்கள் கூடியிருந்த சமயத்தில் இரண்டாவதாக இரண்டு வயது சிறுவனும் இறந்து விட்ட செய்தி வெளி வந்துள்ளது.

இது அனைவருக்கும் கடினமானதாகும். குடும்பத்தினர், முஸ்லீம் சமுதாயம் பாடசாலை அனைத்துக்கும் கடினமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8-மாத குழந்தை சாரா ஹசனின் மரணசடங்கு வியாழக்கிழமை இடம்பெற்றது. இவள் சோகம் ததும்பிய தற்செயலான நச்சினால் அல்பேர்ட்டா வடக்கில் வோட் மக்முறெயில் மரணமானாள்.

வியாழக்கிழமை மரணமடைந்த இரண்டு வயது சியாவின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரா என்ற பெண்குழந்தை  ஞாயிற்று கிழமை இறந்தது. ஏனைய நான்கு பிள்ளைகளில் இருவர் வோட் மக்முறே வைத்தியசாலையிலும் மற்றய இருவர் எட்மன்ரன் சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்பட்டிருந்தனர். இவர்களில் இரண்டு வயதுடைய சியா வியாழக்கிழமை இறந்து விட்டான்.

மிஞ்சிய மூவரில் இருவர் வியாழக்கிழமை வீடு திரும்பிவிட்டனர்.

இந்த சம்பவத்தால் மாவட்டம் முழுவதிலும் பாடசாலை ரத்துச்செய்யப்பட்டது.

அண்மையில் பாகிஸ்தான் பயணத்தில் இருந்து திரும்பிய போது மூட்டு பூச்சியை அழிக்க உபயோகிக்கும் நோக்கத்துடன் பூச்சிக்கொல்லி மருந்தை கொண்டுவந்தமை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பூச்சிகொல்லியை உபயோகித்தமையால் குழந்தைகள் சுகயீமடைந்தது மட்டுமன்றி இருவர் மரணத்தையும் தழுவிக்கொண்டனர்.

இந்த குடும்பத்தினருக்காக அறக்கட்டளை நிதியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

boy3-600x400.jpgboy12-600x400.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/38557.html#sthash.sRMywcAi.dpuf

Link to comment
Share on other sites

இதற்காகத்தான் குடிவரவுப் பகுதியில் ஒரு படிவத்தை நிரப்பும்படி கேட்கிறவர்கள். அதை ஒழுங்காக நிரப்பினால் இப்படியெல்லாம் நடக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தந்த.... நாட்டுக்கு உரிய மருந்துகளையே.... பாவிக்க வேண்டும் என்பது எவ்வளவு தூரம் உண்மை.
பெற்றோரின் அறியாமையால்... இரு குழந்தைகளின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டு விட்டது.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.