Jump to content

அனுராதபுரம் செல்கிறார் மோடி! - பௌத்த தொடர்பை வலுப்படுத்தும் முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
modi-200-news.jpg

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து பௌத்தத்துடன் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 அல்லது 14 அன்று இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புராதன அநுராதபுர நகரத்திற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

வலுக்கட்டாயமாக திணித்தல் அல்லது பலத்தை பிரயோகித்தலுக்கு பதில் இந்தியா ஏனைய நாடுகளை கவரும் மென்மையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகின்றது என்பதை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. இலங்கை வரும் மோடி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

 

அநுராதபுரம் 4ம் நூற்றாண்டு முதல் 11 வரை இலங்கையின் தலைநகராக விளங்கியதோடு பல வருடங்களாக தேரவாத பௌத்தத்தின் மையப்பகுதியாகவும் காணப்பட்டது. அசோக மன்னனின் மகன் மகேந்திர, பௌத்தம் குறித்து இரு உரைகளை நிகழ்த்திய நகரமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் பௌத்த பாரம்பரியம் காணப்படுவதை உலகிற்கு உணர்த்தும் இந்திய அரசாங்கத்தின் திட்டத்தின் படியே அனுராபுரத்திற்கான இந்த விஜயம் இடம்பெறுவதாக அதிகாரியொருவர் குறிப்பிட்டார். இது மக்களுக்கு இடையிலான தொடர்புகளை அதிகரிக்கும் பௌத்த பாரம்பரியத்தினை கொண்டிருக்கும் தென்னாசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மென்சக்தியை ஊக்குவிக்க உதவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://seithy.com/breifNews.php?newsID=127237&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

அக்கம்பக்கத்து மச்சாள்மாரெல்லாம் ஓடிவிட்டினம்.. இனிமேல் அதட்டி ஒண்டும் நடக்காது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த லதா மாளிகைக்கும் செல்வாரா? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்த பாரம்பரிய ஊரில் எல்லாளன் என்று ஒரு செருப்பு தைக்கிறவர் வாழ்ந்ததாக 
துட்கைமுனுவை பற்றி பேசும்போது பௌத்தர்கள் பேசுகிறார்கள்.
அவரும் பௌத்தரா ??  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த லதா மாளிகைக்கும் செல்வாரா? :wub:

குமாரசாமி அண்ணா தலதா மாளிகையில் புத்தரின் பல்லுமட்டுதானே இருக்கின்றது அதில என்னத்தை பார்க்க இருக்கின்றது :D    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா தலதா மாளிகையில் புத்தரின் பல்லுமட்டுதானே இருக்கின்றது அதில என்னத்தை பார்க்க இருக்கின்றது :D    

 

புத்தர்ரை பல்லும் பௌத்ததிற்கு புராதனம்.....அதை மோடி பார்த்து கும்பிட்டு பெருமை சேர்க்க வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர்ரை பல்லும் பௌத்ததிற்கு புராதனம்.....அதை மோடி பார்த்து கும்பிட்டு பெருமை சேர்க்க வேண்டும். :lol:

எனக்கென்னமோ இந்தியாவையும் சிறிலங்காவையும் சேர்த்து அகண்ட புத்த தேசம் ஒன்றை அமைக்க முயற்சிக்கின்றார்கள் போல  ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இந்தியாவையும் சிறிலங்காவையும் சேர்த்து அகண்ட புத்த தேசம் ஒன்றை அமைக்க முயற்சிக்கின்றார்கள் போல  ..

எனக்கு என்னமோ சம்மந்தர் சுமந்திரன் போல மோடியும் ராஜதந்திர அரசியல் வாதி போல தெரிகிறார்.
இலங்கையில் புத்த மதம் மட்டும்தான் இருக்கிறது என்றுவிட்டால் 
98வீதமான பிரச்சனை முடிந்துவிடும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கு என்னமோ சம்மந்தர் சுமந்திரன் போல மோடியும் ராஜதந்திர அரசியல் வாதி போல தெரிகிறார்.
இலங்கையில் புத்த மதம் மட்டும்தான் இருக்கிறது என்றுவிட்டால் 
98வீதமான பிரச்சனை முடிந்துவிடும். 

 

அப்படிஎன்றால் நிச்சயமாக அதில ஒரு ராஜதந்திர அரசியல் இருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.