Jump to content

தெரிதலும், புரிதலும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெரிதலும், புரிதலும்..!

 

eorvp_164519.jpg

 

 

ஒரு குடும்பம் அவர்களுக்கு ஒரு சிறு குழந்தை..

ஒரு நாள் வேலை விடயமாக அம்மா வெளியே சென்றுவிட, வீட்டில் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை தந்தை ஏற்கிறார்.

குழந்தையும் சமர்த்தாக தன்னுடைய விளையாட்டு பொம்மைகளை வைத்து விளையாட ஆரம்பித்தது.. அதில் உறவினர் ஒருவர் பரிசளித்த பொம்மை "காஃபி செட்" குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். megere2.gif

தந்தை வரவேற்பறையில் அமர்ந்தவாறு தினசரிகளை படிக்கத் தொடங்கினார்.. mdrdevanttele.gif

 

 

சிறிது நேரத்தில் குழந்தை பொம்மை "காஃபி செட்டை" தந்தையிடம் நீட்டி, "அப்பா,.! இந்தா..நான் போட்ட டீ., குடி..!" என்றது. அந்த பொம்மையினுள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. petit-matin.gif

தந்தையும் குழந்தையை கொஞ்சியவாறு " ஆஹா..செல்லம்.., நீ தயாரித்து கொடுத்த டீ மிகப் பிரமாதம்.." என பாராட்டியவாறே வாங்கி மட மடவென குடித்தார். இம்மாதிரி பல தடவைகள் தொடர்ந்து நடக்க, வெளியே சென்ற தாயும் வீடு திரும்பினாள்.

தாய், கணவனைப் பார்த்து "என்ன நடக்குது இங்கே..?" என குறுகுறுத்தவாறு வினவினாள்..tricotte07.gif

தந்தையோ.. "உஷ்ஷ்..! நம் குழந்தை எவ்வளவு சமர்த்தா எனக்கு டீ போட்டுக்கொடுத்தது தெரியுமா..? நான் பலமுறை வாங்கி சாப்பிட்டேன்.. நீயும் அந்த இனிமையை சோதித்துப் பார் தெரியும்" என்றார்..பெருமையாக..

இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், குழந்தையும் வந்தது.. அதே "டீ"யுடன்..!  தந்தையும் உடனே அதை ஆர்வத்தோடு வாங்கிப் பருகினார்...

 

இதை கவனித்த தாய் அமைதியாக கணவனைப் பார்த்துக் கேட்டாள்..

"ஏங்க.. என்ன இது..? நம்ம வீட்டில் எங்கே குழந்தைக்கு எட்டுகிற மாதிரி தண்ணீர் குழாய் இருக்கிறது என உங்களுக்கு தோன்றவே இல்லையா..? அது டாய்லெட் குழாயிலிருந்து தண்ணீரை பிடித்துக்கொண்டு வருகிறது.. நீங்களும் மட மடன்னு குடித்துவிட்டீர்களே? யோசிக்க வேணாம்..?" urinoir.gif

கணவர் திரு திருவென விழித்தார்..! vil-36chandelles.gif

நீதி:

தந்தைக்கு குழந்தையை "தெரியும்!"

 

ஆனால் பெற்ற தாய்க்குத்தான் குழந்தையை "புரியும்..!!"

 

 

 

-மின்னஞ்சலில் வந்ததன் தமிழாக்கம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லா அப்பாக்களுக்கும் பொருந்தாது அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே , சகோதரி சுமேக்கு குழந்தையைத் தெரியும்...!

அப்பாக்கு குழந்தையைப்  புரியும்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவுக்கு அது தெரிந்தாலும் குடிப்பான்

ஏனென்றால் பிள்ளை மகிழணும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே , சகோதரி சுமேக்கு குழந்தையைத் தெரியும்...!

அப்பாக்கு குழந்தையைப்  புரியும்...!  :)

 

The best one liner with twist..! :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிள் அன்ட் ஸ்வீட் என்று சொல்லுவார்களே அப்படி இருக்கிறது விடயமும் சொன்னவிதமும் இணைப்பிற்கு நன்றி ராசவன்னியன்

:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிள் அன்ட் ஸ்வீட் என்று சொல்லுவார்களே அப்படி இருக்கிறது விடயமும் சொன்னவிதமும். இணைப்பிற்கு நன்றி ராசவன்னியன். :wub:

 

தொழில்நுட்பம் சார்ந்த மற்ற விடயங்களுடன், ரசித்த காணொளிகள், இந்த மாதிரி எளிமையான நீதிக் கருத்துக்கள், படித்த சொற்பொழிவுகள் ஆகியவற்றை அவ்வப்போது எனது நண்பர்கள் குழாமில் பகிர்ந்து கொள்வோம்.. அதில் என் மனதை கவர்ந்தவற்றை இங்கே தமிழாக்கம் செய்து பகிர்கிறேன்..

 

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.