Jump to content

ஒரு மாதிரியான கதை


Recommended Posts

பெண் பார்த்து நிச்சயம் செய்து கல்யாணம் முடிக்கும், அண்ட் நகர வாசத்தின் வீச்சை வீட்டுக்குள் கொண்டுவராத பெரும்பான்மைகளுக்கான பதிவு இது so மொக்கை கேள்விகளை தவிர்க்கவும்.

முதல்ல பெண்லாம் பார்த்துட்டு போயி, அப்பறம் மாப்பிள்ளை நகை வேண்டாம்ன்னு சொல்லி, பெத்தவங்க மட்டும் அவங்க கவுரவம் அதில் அடங்கி இருக்குன்னு குறிப்பிட்ட நகையை பேசி முடிச்சு நிச்சயதார்த்தம் வரைக்கும் இந்த பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஒரு வழியா கொண்டு வந்திடுவாங்க. இந்த சமயத்தில் நமக்கு இருந்த ஒரு டென்சன் கொஞ்சம் முடிவுக்கு வந்திருக்கும் அது என்னன்னா, நாம பயந்துட்டே இருப்போம், நம்மள எல்லாம் இந்த மாப்பிள்ளைக்கு பிடிக்குமா? ஒரு வேளை நம்மள ரிஜெக்ட் பண்ணிட்டா என்ன பண்றது, ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்ல இருந்து தகவல் சொல்லாம போன மாதிரி போய்டுவாங்களோ, இந்த மாதிரி சந்தேகங்களை தாண்டி தான் நிச்சயதார்த்தம் நடக்கும், அப்பவும் சந்தேகம் இருக்கும் இவருக்கு உண்மைலேயே நம்மள பிடிச்சுருக்கா இல்ல வேற வழி இல்லாம வந்திருக்காரா? இந்த மாதிரி (vice versa also), எல்லாமே நல்லபடியாதான் நடக்கும் ஆனாலும் இந்த சந்தேகத்தை ஒன்னும் செய்ய முடியாது வரத்தான் செய்யும்,

நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் தான் செல்போன் நம்பர் பரிமாற்றமே நடக்கும், (இப்ப செல்போன்ல சிம் கார்டு போட்டு கிப்டாவே கொடுத்திடறாங்க சிலர்) இப்ப தான் முதல் பிரச்சினை ஸ்டார்ட் ஆகும் ”யார் முதல்ல call பண்றதுன்னு” மாப்ள நம்பர்ல இருந்து போன் வரும்.. கடைசில பார்த்தா அதுல அவங்க அம்மா பேசுவாங்க அப்பறம் அவங்க நம்ம அம்மாக்கிட்ட பேசுவாங்க, என்னமோ இவங்க ரெண்டு பேரும் பேசிக்கத்தான் நாம போன் வச்சிருக்கற மாதிரி, போனை கட் பண்ணும்போது மாமியா சொல்லும் ”இந்தா பையன் கிட்ட ரெண்டு வார்த்த பேசிடு” அது ஒரு இக்கட்டான சூழ்நிலை இருவருக்குமே, அவங்க நல்லாருக்கிங்களா ன்னு கேட்பார் நாம ஹ்ம்ம் நல்லாருக்கேன்.. அவ்வளோ தான் அந்த கான்வோவே. பிக்காஸ் ஒரு மிகப்பெரிய தயக்கம் முன்னாடி இருக்கும் அதுக்கு காரணம் நம்மள பெத்தவங்கதான், ஏன்னா நம்மள ”இவ போன் பேசறதுக்கு அலையறாளோ!” அப்படின்னு நினைத்து விடுவாங்களோ? நாம இவ்வளவு நாளா ரொம்ப நல்ல பொண்ணுன்னு வீட்ல பெயர் எடுத்திருக்கொமே, அதுலாம் கெட்டுப் போய்டுமோன்னு பயம் இருக்கும், அதனாலேயே யாருக்கும் தெரியாம மறைந்து இருந்து ஒரு பத்து நிமிடம் மட்டும், முன்னாடியே சொன்ன அந்த நமக்கு தேவையான கேள்விகள் மட்டும் கேட்டுட்டு, ஹப்பாடி உண்மைலேயே இவருக்கு நம்மள பிடிச்சிருக்குன்னு கன்பார்ம் செஞ்சுக்குவோம்,

இந்த அம்மாக்கள் இருக்காங்களே உஸ்ஸ்ஸ்ஸ் தோழியிடம் பேசுவதாக சீன்லாம் போட்டு மிக கவனமாக டி போட்டு அவர்ட்ட பேசிட்டு இருக்கும்போது ”யாரு மாப்ளையா?” ன்னுவாங்க.. தட் ஞே மூமென்ட் :))) ரொம்ப நாள் கழித்து நான் எப்படிம்மா கண்டுபிடிச்ச?ன்னு கேட்டேன்.. அதற்கு அவளின் பதில் ”நான் உன் அம்மாடி!”

அம்மாவிடம் பெர்மிசன் கிடைத்தது விடிஞ்சாலும் அடைஞ்சாலும் போனும் கையுமாத்தான் திரிவோம்.., எல்லாம் அப்பா வீட்டில் இல்லாத நேரங்களில் தான் நடக்கும், அப்பா மேல் அளவுக்கு மேல் பயம் கலந்த மரியாதை, ஒரு நாள் அப்பா கிட்டயும் மாட்டிக்குவோம்.. அப்போ பதறி எந்திரிச்சி திரு திருன்னு முழிக்கும் போது, கையாலேயே பேசு பேசுன்னு சைகை காமிச்சுட்டு சிரிச்சுக்கிட்டே போய்டுவார்… வாழ்வில் உன்னதமான தருணங்களில் அதுவும் ஒன்று.., இதுக்கு அடுத்து நம்மள கேள்வி கேட்க ஆளே இல்ல, மாப்ள வீட்ல எதுனா கேட்கனும்னா கூட நம்மகிட்ட தான் சொல்வாங்க அந்த அளவுக்கு டீப்பபா போயிருக்கும், சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நடந்த சுவாரஸ்யமான விசயங்களை பரஸ்பரம் இருவருமே ஒரு மாசத்துல பேசி தீர்த்து முடிச்சுடுவோம்.

இப்ப அடுத்த பிரச்சினை, இந்த தோழிகள் எல்லாம் ஒன்னா சேர்ந்து ”அப்படி என்னதான்டி மணிக்கணக்கா பேசுவிங்க” அதுக கேட்கும் தோரணைலையே ஒரு டபுள் மீனிங் இருக்கும், அப்பறம் ஏற்கனவே கல்யாணம் முடித்த நம்மள விட சீனியர் தோழிகள் சொல்வாங்க ”அப்ப அப்படிலாம் நீங்க பேச ஆரம்பிக்கலையா? எப்படிக்கா ? பாவம் உம்புருசன் உன்னைய கட்டிக்கிட்டு என்ன பாடு படப்போறானோன்னு திரிய பத்த வச்சுட்டு போய்டும்., அதுல இருந்து வேற ஒரு கனவுக்கு ரெக்கை முளைச்சுடும், அதுக்கு அப்பறம் இந்த டாப்பிக்க எப்படி ஆரம்பிக்கறது என்று இருவருமே பெரிய குழப்பத்தில் இருப்பாங்க, சில மாப்பிள்ளைகள் ரொம்ப விவரமா ”நம்ம ஹனிமூன் எங்க வச்சுக்கலாம்ன்னு” தொடங்குவாங்க, அப்படி இல்லாத சில அப்பாவி மாப்பிள்ளைகளுக்கு நாமதான் எடுத்து கொடுக்கணும், ”அந்த அக்கா இப்படிலாம் சொல்லுது” அப்படின்னு.. ஆச்சா! இப்பருந்து கல்யாணம் முடியறதுக்கு முதல் நாள் வரைக்கும் காமத்தை பற்றி தியரி எல்லாம் பேசி முடிச்சிடுவாங்க.

இப்ப அடுத்த பிரச்சினை முதலிரவுல.., எவ்வளவோ தன்னை பற்றி உயர்வாக நினைத்துக்கொண்டிருந்த ஆணின் எண்ணத்தில் சம்மட்டி அடி விழும் நாள், இவ்வளவு நாள் தியரியா பேசிட்டு இருந்த காமத்தை பிராக்டிகலாக செயல்படுத்துதல் எவ்வளவு பெரிய கஷ்டம்ன்னு தெரியும் நாள் அதுதான், அந்த நேரத்தில் ஆணும் மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது, பெண்ணும் அதிருப்தி ஆகி கணவனை பார்க்க கூடாது.. இரண்டுமே ஆபத்து.. இப்படி தான் ஆகும் இதுதான் இயல்பு, மறுநாள் காலையில் ஒரு கூட்டமே உங்களை கொத்திப்பிடுங்க காத்திருக்கும் என்னாச் என்னாச் என்னாச் என்று!, ஒன்னுமே ஆகலன்னு மட்டும் சொல்லிட்டா போதும் ஒவ்வொருவரும் தன் பராக்கிரம பலத்தை எடுத்துக்காட்டாக சொல்லி இன்னும் குற்ற உணர்ச்சி கொள்ள வைத்துவிடுவார்கள், actually அவிங்களுக்கும் இப்படிதான் நடந்திருக்கும் இருந்தாலும் அதை வெளியில் சொல்வது மதிப்பு குறைவான விஷயம் என்பதால் சொல்ல மாட்டாங்க இரு பாலருமே,! முதலிரவு இபப்டி முடிவதற்கான காரணம் ஒரு பெண்ணின் நிர்வாண உடல் ஆணுக்கு பழக வேண்டும், அதை பற்றிய ஆச்சர்யம் கொஞ்சமேனும் உடைந்தால் தான் அவனால் அடுத்த கட்டத்திற்கே செல்ல முடியும் இதற்கு குறைந்த பட்சம் ஒரு வாரமேனும் எடுக்கும் அதற்குதான் இரண்டாம் மறுவீடு என்று தாய் வீட்டில் மூன்று நாட்கள் தங்கச் சொல்வார்கள் so பொறுமை காக்க!.

இப்ப அடுத்த பிரச்சினை.. எல்லாம் சுமுகமாக முடிந்த பின்னர் கொஞ்ச நாள் கழித்து கணவர் வழக்கம் போல வேலைக்கு போக ஆரம்பிப்பார், அதுவரை ஏதோ சந்தோசமாக இருந்தது பறிக்கப்பட்டு தனிமையில் தள்ளப்பட்டதாக தோன்றும், இன்னும் கொஞ்ச நாள் கழித்து அதாவது மூன்று மாதம் கழித்து, மொத்த வாழ்வும் சூனியமாக தோன்றும் கணம் அது, வேலைக்கு போகும் மனைவிகள் இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பித்துக்கொள்வார்கள், வீட்டிலேயே இருக்கும் மருமகள் தான் ஐயோ பாவம், ஏன்னா பேச ஆளே இருக்காது, வீட்டு வேலை செய்வது தான் ஒரு வேலையாகவே இருக்கும் தினமும் இதையே தானே செய்கிறோம் என்று சலிப்பு தட்ட ஆரம்பிக்கும்,

இப்ப அடுத்த பிரச்சினை, வீட்ல போர் அடிக்குதுன்னு கணவனிடம் போன் பேசலாமே ன்னு போன் பண்ணினால் வரக்கூடிய பதில் ”போன வை நான் அப்பறமா கூப்பிடறேன்” முதல் நிராகரிப்பு அது, அதுக்கு அவர்கள் ஆயிரம் காரணம் சொல்வார்கள் ஆரம்பத்தில் இது அப்படியே பழகி பழகி பழகி ஒரு கட்டத்தில் ”எதுனா முக்கியமா இருந்தா மட்டும் போன் போடு அடிக்கடி தொந்தரவு செய்யாத” என்று சொல்வதில் வந்து நிற்கும், நாம் ஏமாற்றப்பட்டதாக மனம் நம்ப வைக்கும், கல்யாணத்துக்கு முன்னாடி ”நீ பேசறது கேட்டுட்டே இருக்கலாம்ன்னு சொன்ன அதே வாய்தான் இப்போ தொனதொனன்னு பேசாம இருன்னு சொல்லும். இந்த சமயத்தில் மனைவிகளில் ஓவர் ரியாக்சன்களால் கணவர்களுக்கும் ஒருவித எரிச்சல் வரும், இப்போது எல்லா பழியையும் ஆண்கள் மேல போட்டு தப்பித்து விட பார்ப்பார்கள் பெண்கள், ஆணுக்கு தன் மேல் குற்றம் சொல்வதை ஒத்துக்கொள்ளவே முடியாது, உறவில் விழும் முதல் விரிசல்…, இது இந்த இடத்தில் இருந்து வாழ்க்கையை சரியாக கொண்டு போக தெரியாத இருவருமே பிரிந்துதான் ஆக வேண்டும். இதுக்கு காரணம் கல்யாணத்துக்கு முன்னாடி போன் பேசியதா என்றால் நிச்சயமாக இல்லை.. பேசவில்லை என்றால் இதே பிரச்சினை ஒரு இரண்டு மாதம் கழித்து வரும் அவ்வளவுதான். இந்த இடைப்பட்ட காலத்தில் கர்ப்பமான பெண்கள் வாழ்க்கை முற்றிலும் வேறு தளத்தில் பயணிக்கும், கர்ப்பிணி பெண்ணின் மனநிலைக்கு தனி பதிவே தேவைபடுவதால் இன்னொருநாள் சொல்கிறேன்.

இப்ப அடுத்த பிரச்சினை கல்யாணமான ஆறே மாதத்தில் தனக்கு பிரைவேசி இல்லைன்னு தனிக்குடித்தனம் போகும் பெண்கள் போல் முட்டாள் இந்த உலகத்திலேயே இல்லை, மாமியார் கூட சண்டை போடுவது நாத்தனார் கூட சண்டை போடுவது எல்லாம் நம் சுயத்தை நிலை நிறுத்திக்கொள்ளும் விடயமாக இருக்கலாம் இந்த நேரத்தில் யாருக்கு சப்போர்ட் செய்யணும்ன்னு கணவனை தர்மசங்கடபடுத்தக்கூடாது, பெண்கள் சண்டைகளை பெண்களோடு முடித்துக்கொள்ளனும், கூட்டத்தில் வாழ்ந்தவனை தனியா பிரித்துக் கொண்டு வந்து வாழ்வதென்பது கத்தி மீது நடப்பது போல் ஆபத்தானது, கல்யாணம் முடித்த ஆண்கள் நிம்மதியாக இருக்கணும் இல்லையேல் அந்த நிம்மதிக்காக அவன் தேர்ந்தெடுக்கும் வழிகள் ஆபத்தாக அமையும்,

இப்ப அடுத்த பிரச்சினை. கணவர்களே! ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு இரண்டு மணி நேரமாவது வீட்டிலே இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள் முக்காவாசி பிரச்சினை வரவே வராது, நீங்கள் தூங்கும் நேரம் சாப்பிடும் நேரம்லாம் இதில் சேர்த்தி இல்ல, நண்பர்களோடு போகணும்ன்னு தோணும் ஆனா பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்ல இருக்காளே என்ன பண்றது, பொண்டாட்டி தாசன் என்று நண்பர்கள் கேலி பேசத்தான் செய்வாங்க, சொல்லிட்டு போறாங்க, உங்க பொண்டாட்டிக்கு தானே தாசனா இருக்கிங்க தப்பே இல்ல,

அப்பறம் மனைவிகளே! ஓட்டு மொத்த அன்பையும் கணவன் மீது கொட்டாதிர்கள், மாமியார் உங்களை கரிச்சு கொட்ட இதுவே காரணமாக கூட அமையும், அதாவது பாசமாக இருக்கின்றேன் என்பதை எஸ்டாபிளிஷ் செய்யவேண்டாம், பிக்காஸ் இந்த அன்புக்கு கணவனால் ஈடுகட்ட முடியாது விச் மீன்ஸ் நம்மை போல் பாலிஷாக பேச அவனுக்கு தெரியாது, அவன் அப்படிதான் டிசைன் செய்யப்பட்டிருக்கிறான், மேலும் கணவர்களிடம் சொல்லகூடாத ஒன்று அவன் தாயை பற்றிய குறைகள், அவன் தாய் பேயாக இருந்தாலுமே அவனுக்கு அவள் தாய், அவளை ரிபிளேஸ்மென்ட் செய்யவேண்டும் என்று நினைக்கவே கூடாது, பாசத்தை பங்குபோட வரவில்லை பகிரவே வந்திருக்கிறோம், அப்பறம் கணவனின் முகத்தை வைத்தே அவன் எந்த உணர்ச்சியில் இருக்கிறான் என்று நம்மால் எளிதில் சொல்லிவிட முடியும் ஆனால் அவர்களால் எவ்வளவு மெனக்கட்டாலும் முடியாது, ஆண் ஏன் இப்படி இருக்கிறான் என்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் ”அதான் ஆண்’

சரி இதற்கான தீர்வுதான் என்ன? கல்யாணம் முடிந்த முதல் மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்கு யாருமே கணவன் மனைவி அல்ல, இருவரும் பரஸ்பர சொரிதல்களுக்கு பயன்படும் கருவி அவ்வளவுதான். இதை மட்டும் புரிந்துகொண்டால் போதும் அதை விட்டுட்டு நான் அதிக பாசத்தை கொட்டுகிறேன் அவர்(ள்) கொட்டவில்லை, என் மேல அக்கறையே இல்ல, இந்த மாதிரிலாம் சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிர்கள், நாம நம்ம அப்பாவையும் அம்மாவையும் அப்பறம் சொந்தத்தில் உள்ளவர்களை ஐடியல் கப்பிளாக எடுத்துக்கொள்வது முதல் பிரச்சினை, அவங்கள மாதிரி ஈருடல் ஒருயிரா நம்மால் ஏன் இருக்க முடியவில்லை என்ற கேள்வி வேற வரும், actually அன்பு பாசம் நேசம் கரிசம் அக்கறை எல்லாம் எடுத்த உடனே படார்ன்னு வந்திடாது அதற்கு கால அவகாசம் வேண்டும் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள். அதிக பட்சமாக ஏழு வருடங்கள், அதற்கு பின் தான் இணை என்பவர்கள் தன் உடலின் ஒரு பகுதி என்று ஆவார்கள், குறிப்பறிந்துசெயல்படும் கணவன் அண்ட் மனைவி எல்லாம் இப்போதுதான் சாத்தியம்,

சொல்லாமல் விட்டவை அதிகம் மற்றொரு பதிவில் சொல்கிறேன்

நீடூழி வாழ்க!

https://meenammakayal.wordpress.com/2015/02/01/கில்மா-கதை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடிஎல்லாமா இருக்குப் பிரச்சனை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.