Jump to content

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது பற்றி இந்தியா-இலங்கை அதிகாரிகள் டெல்லியில் ஆலோசனை:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
eelam-refugees-310115-350-india.jpg

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகள், தானாக முன்வந்து தங்கள் நாடு திரும்பி செல்வதற்கான அம்சங்கள் குறித்து இந்தியா, இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையின்போது, லட்சக்கணக்கானோர் இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். தற்போது, 34 ஆயிரத்து 524 குடும்பங்களைச் சேர்ந்த, 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 அகதிகள் தமிழகத்தில் உள்ளனர்.

   

இவர்களில், 19 ஆயிரத்து 625 குடும்பங்களை சேர்ந்த 64 ஆயிரத்து 924 பேர் 107 அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றத் துக்கு பிறகு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா தனது முதல் வெளி நாட்டு பயணமாக இந்தியா வந்தார். அப்போது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் அவர் 3 மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தினார். அதில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சொந்த நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், இதற்கான பேச்சுவார்த்தையை மாத இறுதியில் நடத்துவதெனவும் அறிவிக்கப்பட்டது.

 

இதற்கிடையே, இலங்கை அரசு நம்பத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்த பின்னரே இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கான நடைமுறை பற்றி ஆலோசிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் கடிதம் எழுதினார். இந்நிலையில், தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை, அவர்கள் விருப்பத்துடன் தாயகம் திருப்பி அனுப்புவது குறித்த முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்திய வெளியுறவுத் துறை இணை செயலளர் சுஜிந்திரா துரை தலைமையில் இந்திய அதிகாரிகளும், இலங்கையின் வெளியுறவுத் துறை இணை செயலாளர் தலைமையில் அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழக அரசு தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. அகதிகளை தாயகம் அனுப்பும் முன்பாக அவர்களி டம் கருத்து கேட்பது, தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, இலங்கையில் அவர்களை எங்கு தங்க வைப்பது, அவர்களுக்கென தனி வீடுகள் கட்டுவதா என பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

http://seithy.com/breifNews.php?newsID=125710&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.