Jump to content

370 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின், அதிகார பூர்வ அறிவிப்பு….


Recommended Posts

மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச்.370 விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8-ந்தேதி மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கே தான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டது. அதிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்திய பெருங்கடலின் ஆழத்தில் விமானத்தின் சிதைவு பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் தேடுதல் வேட்டையும் தோல்வியிலே முடிந்தது. மாயமான விமானம் தொடர்பான மர்மம் இன்றுவரையில் வெளியாகவில்லை. இருப்பினும் விமான விபத்து தொடர்பான பல்வேறு தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் வெளியாகியது.

இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச்.370 விபத்தில் சிக்கியது என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் யாருமில்லை என்றும் தெரிவித்துள்ளது. 239 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் என்று பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்ட போதிலும் விமானம் எங்கே விபத்தில் சிக்கியது என்பது தெரியாததாகவே நீடித்து வருகிறது.

விமானம் விபத்துக்குள் சிக்கியது என்று மலேசியா அரசு அறிவித்துள்ளது, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க வழிவகை செய்துள்ளது. மாயமான விமானத்தை மீட்பது என்பதற்கு எங்களுடைய முன்னுரிமை எப்போதும் உள்ளது என்று மலேசியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் இறுதியாக விழுந்ததாக கருதப்படும் பகுதியில் 4 கப்பல்கள், சோனார் டெக்னாலேஜ் உதவியுடன் தேடுதல் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சேட்டிலைட் டேட்டாக்கள் மற்றும் விமானத்தின் செயல்பாடு டேட்டாக்கள் அடிப்படையிலும் ஆஸ்திரேலியாவின் பெர்த் சிட்டிக்கு மேற்காக கடலில் விமானம் இறுதியாக காணப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே மாயமான மலேசிய எம்.எச் 370 விமானத்தை தேடும் பணி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது என்றும் விமானத்தில் இருந்த 239 பேரும் உயிரிழந்தனர் என்றும்அறிவிக்கப்பட்டது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.Mre1.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/37327.html#sthash.7IlydE1G.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலை எந்த மூலையிலையெண்டாலும் குண்டூசி விழுந்தாலே இடி விழுந்தமாதிரி சத்தம் கேக்கிற நாடுகளுகள் எல்லாம் ஒண்டும் தெரியாதமாதிரி இருக்கினமாம்....... :lol:

 

இதுக்கை சம்பந்தா சம்பந்தமில்லாத ஒருத்தர் மூக்கை நுளைச்சு விமானம் விழுந்த இடத்தை தானும் தேடுறாரம்... :D  :lol:

Link to comment
Share on other sites

விமானம் எங்கே என்று தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியும். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது விஷயம் ஆறி பலவருடங்களுக்குப் பிறகுதான் வெளிய வரும். இதில் அவுஸ் JORN காரணமாக மூக்கை  நுழைத்து அநியாயமாக காசைக் கடலிலே கொட்டிவிட்டது.

Link to comment
Share on other sites

விமானம் எங்கே என்று தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியும். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது விஷயம் ஆறி பலவருடங்களுக்குப் பிறகுதான் வெளிய வரும். இதில் அவுஸ் JORN காரணமாக மூக்கை  நுழைத்து அநியாயமாக காசைக் கடலிலே கொட்டிவிட்டது.

உங்களின் வரிப்பணம் கவலையாகத்தான் உள்ளது

Link to comment
Share on other sites

  • 1 month later...

“239” பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் தொடர்பில் புதிய தகவல். - See more at: http://www.canadamirror.com/canada/38985.html#sthash.kDmzalLj.dpuf

 

இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கண்டுபிடிக்கப்படும் என முழுநம்பிக்கை எனக்கு உள்ளது என்று மலேசியா போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்து உள்ளார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.

மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை 11 மாதங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வருகிற 8-ம் தேதியுடன் விமானம் மாயமாகி ஒருவருடம் ஆக உள்ளது.

இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசியா போக்குவரத்து துறை மந்திரி லியோ தியாங் லாயும், இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கண்டுபிடிக்கப்படும் என முழுநம்பிக்கை உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

மலேசிய அதிகாரிகள் விமானம் தொடர்பாக எந்தஒரு தகவலையும் அழிக்கவில்லை, மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மலேசிய விமானம் மாயமாகி ஒருவருடம் ஆகும் நிலையில் வருகிற ஞாயிறு அன்று மலேசிய விமான போக்குவரத்து துறை இடைக்கால அறிக்கையை வெளியிடுகிறது. ஆஸ்திரேலியா தலைமையில் தொடர்ந்து இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Malaseja-600x395.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/38985.html#sthash.kDmzalLj.dpuf

Link to comment
Share on other sites

“M – H 370″ பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் அதிர்ச்சித் தகவல்… -

 

 

உலகை உலுக்கிய மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமான விவகாரம் தொடர்பான இடைக்கால அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையில், விமானம் மாயமாகும் அந்தப் பயங்கரத் தருணங்களின் போது வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் பணியின் போது உறங்கியதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும், மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் வெளியாகியுள்ளது. இதில், விமானத்தின் தொடர்பு அறுந்த நேரமான அதிகாலை 1.20 மணியிலிருந்து காலை 5.20 மணிவரையிலான காலக்கட்டத்தில் வான்வழிக் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் உறங்கிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுப்பாட்டாளர் காலை 5.20 மணிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரியுடன் 4 நிமிட நேர உரையாடல் செய்துள்ளார். அப்போது மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரி திரும்பத் திரும்ப விவரங்களைக் கேட்டிருக்கிறார். ஆனால், அந்த கட்டுப்பாட்டாளரோ, இருங்கள் நான் எங்கள் கண்காணிப்பு அதிகாரிய்யை எழுப்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதாவது தான் அதிகாலை 3 மணியளவில்தான் தகவல்தொடர்பு கோபுரத்தின் கட்டுப்பாட்டைக் கையாண்டதாகவும் அதனால் விவரங்கள் பற்றி உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்: “நான் சூப்பர்வைசரை எழுப்பி மீண்டும் சரிபார்க்கக் கோருகிறேன், கடைசி தொடர்பு பற்றிய விவரம் என்னவென்று நான் அவரிடம் கேட்கிறேன்…” என்று அவர் கூறியதாக ஸ்டார் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

வியட்நாமின் ஹோ சி மின் நகர வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, ஏன் தங்கள் பகுதிக்குள் இன்னமும் விமானம் வரவில்லை என்ற கேள்வியைக் கேட்க 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது, ஆனால் சர்வதேச உடன்படிக்கைகளின் படி 2 நிமிடங்களில் இந்த கேள்வி எழுந்திருக்க வேண்டும். என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீருக்கடியில் விமானம் சென்றால் அதனை கண்டுபிடிக்க உதவும் லோகேட்டரின் பேட்டரி 2012-ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டது என்றும் இந்த இடைக்கால அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை 600 பக்கங்கள் கொண்டது. எங்கே சென்றது இந்த விமானம்? தொடர்கிறது புதிர்…Mis-Malaseja.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/39099.html#sthash.xib1E0PM.dpuf

Link to comment
Share on other sites

  • 1 month later...

எதுவும் கிடைக்கவிட்டால் மாயமான மலேசிய விமான தேடல் பகுதி அதிகரிக்கப்படும்: ஆஸி. Posted by: Siva Published: Thursday, April 16, 2015, 15:30 [iST]

 

கோலாலம்பூர்: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370-இன் பாகங்கள் தற்போது தேடப்படும் இடத்தில் கிடைக்காவிட்டால் தேடல் பகுதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது. விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் ஆஸ்திரேலியா தலைமையில் பலநாடுகள் தேடி வருகின்றன.

பாகம் விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் நீர்மூழ்கி கப்பல்கள், அதிநவீன கருவிகள் மூலம் தேடல் நடந்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாக தேடியும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இதனால் விமானம் அங்கு தான் விழுந்ததா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/mh370-search-area-could-be-extended-224858.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்தியா-மலேசியா இடையே வங்காள விரிகுடாவில் மாயமான மலேசிய விமானம் MH370-ன் உதிரிபாகங்கள் கிடக்கிறது என்று விமான போக்குவரத்து துறைநிபுணர் ஆண்ட்ரே மில்னே தெரிவித்து உள்ளார்.

மாயமான விமானம்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.

மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஓயாத சர்ச்சை

இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை ஒரு வருடங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே மாயமான மலேசிய விமானம், வேண்டுமென்றே அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டது.

அமெரிக்க–தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டு போர் பயிற்சியின்போது மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இன்னொரு தகவல் கூறியது. மேலும், ஹிட்ச் என்ற தீவிரவாதிதான் இந்த விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச்சென்றவர். விமானம் பாகிஸ்தான் எல்லையில் காந்தகார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று ரஷியாவில் இருந்து வெளிவரும் மோஸ்கோவ்கி கொம்சோலெட்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

எனினும் விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.

வங்காள விரிகுடாவில் கிடக்கிறது

இந்நிலையில் இந்தியா-மலேசியா இடையே வங்காள விரிகுடாவில் மாயமான மலேசிய விமானம் MH370-ன் உதிரிபாகங்கள் கிடக்கிறது என்று விமான போக்குவரத்து துறைநிபுணர் ஆண்ட்ரே மில்னே தெரிவித்து உள்ளார்.

விமானம் மாயமானதில் இருந்து நிபுணர் ஆண்ட்ரே மில்னே இதுதொடர்பாக விசாரித்து வந்துஉள்ளார். அவர் விமானத்தின் உதிரிபாகத்தை இந்தியா-மலேசியா இடையே வங்காள விரிகுடாவில் கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் விமானத்தை கண்டுபிடிக்க 1.3 மில்லியன் பவுண்ட் பணம் வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

வங்காள வரிகுடாவில் மீதம் உள்ள பகுதிகளும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். ராணுவ விமான தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஆண்ட்ரே இதற்கு ஆதரவாளர்கள் பணம் வழங்குவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

அவர் பேசுகையில், இந்த பகுதிகளில் தேடப்படவில்லை. விமானத்திற்கு என்னநடந்தது என்பதில் உண்மையை கண்டுபிடிக்க, வழியினை ஆய்வு செய்ய எனக்கு உங்களுடைய உதவி தேவைப்படுகிறது. மாயமான மலேசிய விமானம் குறித்து கேள்விபட்டவர்கள், ஒவ்வொரு நபரது நெஞ்சையும் தொட்டிருக்கும். விமானம் மாயமான விவகாரம் உலகத்தில் உள்ள அனைத்து விமானபோக்குவரத்து துறை நிபுணர்களையும் பேசவைத்து உள்ளது.

விமானத்தில் பயணம் செய்தவர்களை மாயமாக செய்வதன் மூலம் இதுவும் மனிததன்மைக்கு எதிரான கிரிமினல் குற்றம் என்றமுறையில் இது என்னுடைய நெஞ்சை தொட்டு உள்ளது. விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், இந்த துணிகர முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும், என்று தெரிவித்து உள்ளார்.

Malaysia-airlines-600x450.jpg

Missing-MH370.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/41612.html#sthash.3V64UpEN.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.