Jump to content

ஓடும் ரயிலில் இருந்து போலீசால் தூக்கிவீசப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாரணாசி: உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஓடும் ரயிலில் இருந்து ரயில்வே காவலரால் தூக்கி வீசப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரிதா, தனது உறவினர்களுடன் கான்பூரில் வேலை செய்யும் தனது கணவர் பார்வேஸ் பாலை பார்க்க சென்றுள்ளார். ஹவுரா - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது உறவினர்களுடன் அசான்சோலில் இருந்து கான்பூர் சென்றுள்ளார்.

ரயிலில் அதிகமான கூட்டம் இருந்ததால், ரிதா தனது 18 மாத குழந்தை காஜல், அப்பா மானிக் பால் மற்றும் சகோதரர் ஜெய்தீப் பால் ஆகியோருடன் பார்சல் பெட்டியில் ஏறியுள்ளார் என்று கூறப்படுகிறது. ரயில் வாரணாசி வந்ததும், ரயில்வே காவலர் ஒருவர் பார்சல் பெட்டிக்குள் வந்ததோடு, அவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.

அப்போது, பணத்தை கொடுங்கள், இல்லையென்றால் ரயிலைவிட்டு இறங்குங்கள் என்று காவலர் மிரட்டியுள்ளார். அவர்கள் கொடுக்க மறுக்கவே ரயிலில் இருந்து வெளியே தள்ளியுள்ளார்.  காவலர் வெளியே தள்ளியபோது ரயில் புறப்பட்டுவிட்டது. ஓடும் ரயிலில் இருந்து வெளியே விழுந்த ரிதா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ராஜேஸ் குமார் சிங் கூறுகையில், ரிதா மற்றும் ஜெய்தீப் என்று இரண்டு பேர் இங்கு அனுமதிக்கப்பட்டனர். ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட ரிதா மார்பு பகுதியில் காயம் காரணமாக உயிரிழந்தார் என்று கூறினார்.

இது குறித்து ரிதாவின் தந்தை மானிக் கூறுகையில், "ரயில் பெட்டிக்குள் ஏறிய நபர் என்னிடம் இருந்த ரூபாய் 3,500-யை பிடுங்கி கொண்டார். எனது மகன் ஜெய்தீப்பை கடுமையாக தாக்கினார். என்னுடைய மகளை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்தார். அந்த நபர் போலீஸ் சீருடையில் இருந்தார். வாக்கி டாக்கியும் வைத்திருந்தார்” என்று கூறினார்.

இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில், ஓடும் ரயிலில் பெண்ணை வெளியே தள்ளிவிட்டது ரயில்வே போலீஸ் படையை சேர்ந்த சரத் சந்திரா துபே என தெரியவந்துள்ளது.

இது குறித்து ரயில்வே காவல்துறை அதிகாரி ஒ.பி.சிங் கூறுகையில், "நாங்கள் குற்றவாளியை காவலில் எடுத்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=37954

Link to comment
Share on other sites

வட இந்தியாவில் காட்டுமிராண்டிகள் அதிகம் என்பது இன்னுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.. அந்த காட்டுமிராண்டி ஜீன்களில் கொஞ்சம் சிங்கள ரத்தத்திலும் ஓடுவது தெளிவு. எல்லாருக்கும் ஜீன் மாற்று சிகிச்சை செய்ய வேணும். :o

Link to comment
Share on other sites

வட இந்தியாவில் காட்டுமிராண்டிகள் அதிகம் என்பது இன்னுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.. அந்த காட்டுமிராண்டி ஜீன்களில் கொஞ்சம் சிங்கள ரத்தத்திலும் ஓடுவது தெளிவு. எல்லாருக்கும் ஜீன் மாற்று சிகிச்சை செய்ய வேணும். :o

 

வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர் என்று அவர்களது மகாவம்சமே தெரிவிக்கிறது. மகாவம்சக் கூற்றின் படி காட்டு மிருகமான சிங்கத்திற்கு பிறந்த சிங்கபாகுவின் மூத்த மகன் விசயனாவான். இவன் சிங்கபாகு ஆட்சி செய்த வங்க தேசத்தில் உள்ள லாலா நாட்டு மக்களுக்கு மிகவும் கொடுமையானவனாகவும் வன்முறை மிக்கவனாகவும் இருந்தான். இவனுடைய முறையற்ற நடத்தை காரணமாக, அவனது நண்பர்கள் 700 பேருடன் அவனுடைய தந்தையால் நாடுகடத்தப் பட்டான். அவர்கள் கப்பலில் செல்லும் போது புயல் வீசவே கப்பல் இலங்கைகையின் தம்பலகாமத்தில் தரை ஒதுங்கியது. அங்கே இயக்கர் தலைவி குவேனியைக் கண்டு அவளை மணந்து இலங்கையின் மன்னன் ஆனான். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். பின்னர் பட்டம் கட்டுவதற்கு அரசகுமாரி தேவைப்படவே, குவேனியை துரத்திவிட்டு பாண்டி நாட்டு மதுராபுரியிலிருந்து அரசகுமாரியை வருவித்து மணந்து முடிசூடிக்கொண்டான்.             (ஆதாரம் விக்கிபீடியா)
 
இச்சரித்திர வாயிலாக தாய்வழி ஜீன்களைக் கொண்டும் தந்தைவழி ஜீன்களைக் கொண்டும் சிங்களவர்கள் உள்ளனர். தாய்வழி ஜீன்களைக் கொண்ட சிங்களவர்களையே இன்றும் நல்ல மனிதர்களாகக் காண்கிறோம். தந்தைவழிக் காட்டுமிராண்டி ஜீன்கள் ரத்தத்தில் ஓடும் சிங்களவர்களையே மகிந்த ராசபக்ச, கோத்தபாய ராசபக்ச போன்ற வடிவங்களில் காண்கிறோம்.  :o  :o
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?     
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
    • வடை போய் தங்கம் வந்தது  டும் டும் டும்☺️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.