Jump to content

அரும்பிலே.. உதிர்ந்து மலர்ந்த என் மகள்!‏


Recommended Posts

இரவு வேளையில்.. எனக்கு பரப்புரைக் கூட்டங்கள் இல்லாத வேளையில், நான் வீட்டில் இருந்து கவிதையோ கட்டுரையோ எழுதிக் கொண்டிருப்பேன்.. அந்த வேளைகளில் அவள் என் காலடியில்தான் அனேகமாக இருப்பாள்!

 

உடனே நீங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, நான் ஏதோ என் பழைய காதலியைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நினைத்தால்… ஏமாறப் போவது நிச்சயம் நீங்கள்தான்!

 

அவள் ஓர் சிறுமி..! தூரத்து.. உறவு முறையில் அவள் எனக்கு மகள்தான்..!

 

அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்..! நிறம் கறுப்புத்தான்.. ஆனால்.. அவளிடம் எனக்கு எப்போதுமே பிடித்தது அவளது அந்த கருவிழிகளும் கூரிய நாசியும் நீண்ட கூந்தலும்தான்.. “சித்தப்பா”.. என்றுதான் எப்போதும் என்னை கூப்பிடுவாள்!.. வகுப்பில் கொஞ்சம் மக்கு!.. அதனால், தாய் தகப்பன் யோகண்ணையிடம் போய் படியடி.. என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்..!..

 

வெளியில் எல்லோரும் என்னை எப்படியோ எல்லாம் அழைப்பார்கள்.. ஆனால்.. அவளோ சித்தப்பா என்றுதான் அழைப்பாள்..!

 

அவள், கணக்கில் ஏதும் தவறு விட்டுவிட்டால், அவளின் காதைப் பிடித்துக் கிள்ளும்போது.. “ஆ..” என்று சொல்லிவிட்டு பேசாமல் இருப்பாள்.. புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போகும்போது மட்டும் “நோவெண்ணை”.. என்று சொல்லிக் கொண்டு ஒடிவிடுவாள்!.. அவளின் அந்த துறு துறுக்கும் மீன் விழிகளும்.. அந்த துடுக்குத் தனமும்தான் எப்போதும் எனக்குப் பிடிக்கும்!

 

படிக்க வரும்போது எனக்கு கொய்யாக் காயோ, அல்லது இலந்தைப் பழமோ கொண்டுவந்து தருவாள்.. எல்லாம் அவள் மரத்தில் ஏறிப் பிடுங்கியதாகவோ.. அல்லது நிலத்தில். விழுந்தவைகளாகத்தான் இருக்கும்.. எனக்கு தரும்போது மட்டும் என் கண்முன்னாலேயே அவற்றை கழுவித்தான் தருவாள்.. இல்லையென்றால் நான் சாப்பிடமாட்டேன் என்று அவளுக்கு தெரியும்!

 

என் மகள்.. என்னருகே .. இல்லாத வெற்றிடத்தை நிரப்பிய ஓர் குட்டித் தேவதை அவள், என்றுதான் நான் அந்த நாட்களில் நினைத்திருந்தேன்..!..

 

நாட்கள் போகப் போக அவளை ஒருநாளைக்கு காணாவிட்டாலும் கூட எனக்கு மனம் வேப்பங் காய்போல்.. வெறுத்துவிடும்.. எனது வீட்டு விறாந்தையில் அமர்ந்து, நான் எழுதிக் கொண்டிருக்கும்போது.. அவள் படிக்க வந்தால், என்னைக் குழப்பக் கூடாது என்று நினைத்து.. என் காலடியில் ஒரு குப்பி விளக்கை வைத்துக் கொண்டு, படித்துக் கொண்டிருப்பாள்..நான் கற்பனை உலகத்துக்குள் இருந்து திரும்பியதும்தான் என் காலடியில் அவள் இருந்து எழுதிக் கொண்டிருப்பதை கவனிப்பேன்..!

 

எனக்கு அவள் கொய்யாக் காயையோ, இலந்தைப்பழத்தையோ தருவதை கவனித்துக் கொண்டிருக்கும் என் மனைவி.. “அடியே.. நாங்கள் இஞ்சை இருக்கிறது உன்ரை கண்ணுக்கு தெரியாதோ.. அவருக்கு மட்டும் ஒழிச்சுக் கொண்டுவந்து குடுக்கிறாய்.. என்ன..?” என்று கேட்பார்..  “நீங்களும் அவரும் ஒண்டா..?” என்று அதற்கு ஏதோ ஓர் வார்த்தை அம்பை எய்து விடுவாள்..!

 

இப்படி சில வருடங்கள் ஓடியபோதுதான்.. சில நாட்களாக அவள் படிக்க வரவில்லை.. என்ற எண்ணம் எனக்கு உறைத்தது! அந்தக் காலத்தில் நான் பெரும்பாலும் இரவு பன்னிரண்டு மணிக்கு பின்னர்தான் வீட்டுக்கு பரப்புரை முடிந்து வருவது வழக்கம்..!.. அப்படியான வேளைகளில் மாலையிலேயே சில நிமிடங்கள் என்னிடம் வந்து, தமிழ் படித்துவிட்டுப் போவாள்!.. இப்போதோ, மாலையிலும் ஆள் இல்லை.. இரவிலும் இல்லை.. “எங்கே அந்த செம்பகம்..”? என்று என் மனைவியிடம் கேட்டேன்..

 

“அவளா.. குண்டு போட்டுவிட்டாள் “.. என்று சொல்லி சிரித்தார்!.. எனக்கு உண்மையிலேயே அது புரியவில்லை..!..

அந்த ஊரில் புழக்கத்தில் உள்ள வக்கணையான வார்த்தை.. அது என்று பின்னர்தான் அறிந்து கொண்டேன்!.. ஆனால் அது.. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்! ஆயினும், எண்ணி ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் புத்தகங்களோடு வந்து விட்டாள்.!.. கூடவே டன் கணக்கில், நாணம்.. அச்சம்.. மடம் பயிர்ப்பு என்று சுமந்து கொண்டு வந்தாள் !

 

எங்கே அந்த குட்டித் தேவதை..? என்று நான் தேடவேண்டியிருந்தது! எனினும், என் மீது உள்ள அந்தப் பாசம் மட்டும் அவளுக்கு குறையவே இல்லை..! இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருந்தவேளை.. ஒருநாள்.. என் மகளைக் காணவில்லை என்று எல்லோரும் தேடத் தொடங்கினர்..! ஒரு நாள் முழுதும், தேடுதல் வேட்டையின் பின். அவர்களின் முடிந்த முடிவு.. என்ன தெரியுமா..?

 

குருவி.. இயக்கத்தை நோக்கி பறந்துவிட்டது.. என்பதுதான்!.. ஆயினும் அது எனக்கு மனத்தில் சிறிது வலியை ஏற்படுத்தினாலும் கூட.. சில நாட்களின் பின்னர், கடற்புலிகளின் மகளிர் அணிக்கு பாடம் எடுக்க போயிருந்தபோது.. செண்பகம் ஒன்று தலையை.. மறைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதை சற்று தூரத்தில் கண்டேன்.!

 

ஒ.. எனக்கு தெரியாமல் ஒரு.. ஈ. எறும்புகூட கடற்புலிகள் அணிக்குள் வரமுடியாது என்பது, அன்றுதான் என் மகளுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.. ஆயினும், அன்று வகுப்பு முடிந்து நான் போகப் புறப்பட்டபோது….

“சித்தப்பா..” என்ற குரல் என் பின்னால் இருந்து கேட்டது!

 

அவள்தான்!.. பயிற்சி இராணுவ உடையில் அற்புதமாக நின்று கொண்டிருந்தாள்..!

 

“வீட்டில சொல்லி விடாதங்க சித்தப்பா.. நான் இஞ்சை இருக்கிறன் எண்டு”.. என்று என்னிடம் கெஞ்சினாள் ..!

“சரி..” என்று சொல்லிவிட்டு, நான் வந்து முதல் சொன்னது பக்கத்துவீட்டில்.. என்ன தெரியுமா..?

“உங்கட மகள் கடற் புலிகளின் மகளிர் அணியில் பயிற்சி பெறுகிறாள்”.. என்பதுதான்!. பொய் சொல்லக் கூடாது பாப்பா!..

 

பின்னர் அடிக்கடி நான் அங்கே வகுப்பு எடுக்கப் போகும்போதெல்லாம்.. எனக்கு தேநீர் கொண்டுவர இரண்டு மூன்று பேர் சண்டை பிடிப்பார்கள்..அதில் அவளும் ஒருத்தி..! எண்ணி ஒரு வருடத்துக்கு பின்னர் ஓர் நாள்.. சாதாரண குட்டைப் பாவாடையுடன், கழுத்தில் ஓர் படப் பிடிப்பு கருவி தொங்க, என் முன் வந்து, வீட்டு வாசலில் நின்றாள் ..! எனக்கு ஆச்சரியமாக இருந்தது!

 

“என்னடி..இயக்கத்தை விட்டுவிட்டியா..?” -என்று கேட்டேன்

 

“ச்சீ.. மூணுநாள் லீவு..” என்றாள்..

 

“ஒரு வருசம் கூட ஆகல்ல.. அதுக்குள்ள ஆர் உனக்கு லீவு தந்தது?” என்று கேட்டேன்..

 

“ஆக்கள்தான்..”

 

ஒ.. மீண்டும் அந்த வாய் நீண்டுவிட்டது.. இன்னும் மூன்று நாளைக்கு தொல்லைதான்! என்று நினைத்தேன்..

ஆனால்… என்னுடன் சேர்ந்து படம் எடுப்பதிலேயே பத்து பதினைந்து முறை செலவிட்டாள் ..!

மனைவி நேரடியாக பகிடியாக அவளிடம் இப்படி கேட்டார்!

 

“என்னடி அவரோட சேர்ந்து படம் எடுக்கத்தானோ இந்த கமேறாவை கொண்டு வந்தனி ..”?

 

“ஓம்..”

 

அரிவாள் வீச்சுப்போல் வந்தது அவளிடம் இருந்து பதில்!

 

ஆயினும், அப்போது அவளிடம் நான் காண முடியாமல் இருந்தது.. அவளது அந்த சுருண்ட, நீளமான கூந்தலையும்.. அந்தச் சின்னஞ் சிறு கள்ளமில்லா முகத்தையும்தான்! !

அன்று எங்கள் வீட்டில்தான் படுத்தாள்!.. கடற் புலிகள் அமைப்பில் தான் செய்த வித்தைகள் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட வேண்டும் என்பதற்காகவே அங்கே அன்று தங்கினாள் ! …. விறாந்தையில் அமர்ந்திருந்து..

 

சரிசாமம் சேவல் கூவும் வரை.. என்னை தூங்கவிடாமல்.. தான் பங்கு பற்றிய சண்டைகள்.. லெப் கேர்ணல் நளாயினியின் திறமை.. போன்றவற்றை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தபோது.. எனக்கும் தூக்கம் பறந்துபோய் விட்டது..!

 

“போடி.. போ… புழுகாதை..” என்று அறைக்குள் இருந்து வந்த வார்த்தைக்கு, அவள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

 

“”உங்களுக்கு என்ன தெரியும்?.. போய் சமையுங்கோ ..”

 

ஆம்.. அவள்.. அப்போது கடற் புலிகள் மகளிர் அமைப்புத் தளபதி…. லெப் கேர்ணல் நளாயினியின் முக்கிய மெய்க் காப்பாளர்..!

 

அவள் தரையில் பிறந்து வளர்ந்த முயல்.. இப்போது கடலில் இருபது கிலோ மீட்டர் தூரம் தினமும் நீந்தும் ஓர் சுறா!.. மட்டும் அல்ல.. அவள் ஓர் சிறந்த ஒட்டியும் கூட..!.. சிறந்த ‘எய்மர் ‘..வேறு!

“சாகர வர்த்தனா போர்க்கப்பலை கற்பிட்டிக் கடலில்.. லெப் கேர்ணல் நளாயினியும், ஒரு சில கரும்புலிகளும் மூழ்கடிக்கு முன்னர், கடைசி நிமிடம் வரை நளாயினியோடு, கூட நின்ற வீரக் குயில் அது!

அவள் லீவு முடிந்து முகாம் திரும்பும் போது, என் கண்கள் கலங்கிவிட்டன..! என் பெற்ற மகளைப் பிரியும் வேதனை போல் ஏதோ ஒன்று இதயத்தை வந்து அடைத்தது!

 

எண்ணி ஒரு மாதம் கூட ஆகவில்லை.. வன்னியில் 1996 இல் நான் இருந்தபோது என் காதுகளில் வந்து விழுந்த அந்த கெட்ட செய்தி..

 

வல்வை கடலில் நிகழ்ந்த பாரிய நேரடிச் சமர் ஒன்றில்.. கரும்புலிகளுடன்.. லெப் மகேஸ்வரியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டாள் என்பதுதான்!

 

ஆம்.. அவள்தான்.. என் பெறாமகள்..! இல்லை நான் பெற்ற மகள் கூட என்மீது இப்படி பாசத்தை பொழிந்திருக்க முடியாது! எத்தனை கனவுகளை நாம் அழித்துவிட்டோம் அந்த மண்ணில்?

எத்தனை கற்பனைக் கோட்டைகளை நாம் இடித்து தகர்த்துவிட்டோம் அந்த மண்ணில்?

ஆயினும், நாம் இன்னும் நம்பிக்கையோடு நிமிர்ந்தே நிற்கிறோம்.. ஒரு நாளைக்காவது மீண்டும் எங்கள் சுதந்திர தமிழீழத்தில் கால் பதித்துவிட்டு மரணிப்போம் என்று!

 

ஈரம் கசியும்.. நெஞ்சின் நினைவில் இருந்து அழியாத நினைவு இது!

 

அரும்பிலே.. உதிர்ந்து மலர்ந்த என் மகள்!

 

– மு. வே. யோகேஸ்வரன்

 

http://www.velichaveedu.com/281152357/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரியின் ஆத்மா எப்பவோ சாந்தியடைந்திருக்கும்...இணைப்பிற்கு நன்றி விஸ்வா

Link to comment
Share on other sites

லெப்டினன்ட் மகேஸ்வரி சுண்டிக்குளம் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

 

இந்த கடற்சமரில் கடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன் மற்றும் கப்டன் இளையவள் ஆகியோரும் லெப்.மகேஸ்வரி உட்பட 21 கடற்புலிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

 

ராஜன் விஷ்வாவின் பதிவில் உள்ளது போன்று லெப்டினன்ட் மகேஸ்வரி கரும்புலி மாவீரர் அல்ல. கடற்புலி என்பதை மாறி பதிவு செய்து விட்டார் என்று நினைக்கிறேன்.

 

கடற்புலி லெப்டினன்ட் மகேஸ்வரி பற்றிய மேலதிக தகவல்கள்

http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=7960

Link to comment
Share on other sites

தகவலுக்கும் இணைப்பிற்கும் நன்றிகள் மின்னல் அண்ணா திருத்தி விட்டேன், உரியவருக்கும் தெரியபடுத்தி விட்டேன். ஆதவன் அண்ணா வருகைக்கு நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மு.வே.யோகேஸ்வரன்(வாஞ்சிநாதன்) ,இவரின் மகனொருவரும் ஆ.க.வெளி சமரில் வீரச்சாவடைந்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தம்பி ராஜன் விஷ்வா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்தலுக்கு நன்றி ராஜன் விஷ்வா

Link to comment
Share on other sites

மு.வ அண்ணனுடன் முகப்புத்தகத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது, அவரின் திலீபனோடு பன்னிரண்டு நாட்கள் தொடரை தொடர்ந்து படிந்து வந்தேன் ஒரு கட்டத்திற்கு மேல் படிக்க முடியவில்லை. முகப்புத்தகத்தில் இவர் எழுதி வந்த வாய்க்கால் கரையோரம் தொடர் விரைவில் நாவலாக வரப்போகிறது... கருத்தும் பச்சையும் இட்ட அனைவர்க்கும் எனது நன்றிகள்...

(யாரேனும் கதையில் வரும் குறித்த மாவீரர் லெப்டினன்ட் மகேஸ்வரியின் படத்தை காண நேர்ந்தால் அறியத்தரவும் )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.