Jump to content

நலத்திட்டங்களில் புறக்கணிப்பு! கிளிநொச்சி மக்கள் மகஜர் கையளித்தனர்….


Recommended Posts

நலத்திட்டங்களில் புறக்கணிப்பு! கிளிநொச்சி மக்கள் மகஜர் கையளித்தனர்….
 

கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப் பகுதி மக்கள் கடந்த காலத்தில், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் அரசாங்க அதிகாரிகளால் பல்வேறு நலத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை கண்டித்து (28.01.2015) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி அரச செயலகம், கரைச்சி பிரதேச செயலகம் என்பவற்றின் முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அத்துடன், ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிள்ளதுடன் பிரமதர், வடமாகாண முதலமைச்சர், ஆகியோருக்கும் பிரதிகளை கையளித்துள்ளனர். அத்துடன் என்னிடமும் தமது மகஜரின் பிரதிகளை எமது அலுவலகமான அறிவகத்தில் கையளித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளேன்.

இன்று கிளிநொச்சி நகர மக்கள் கையளித்த மகஜரின் விபரங்கள் வருமாறு,

கிளிநகர் மக்கள்,

கிளிநகரம்.

கிளிநொச்சி.

அரசாங்கஅதிபர்,

மாவட்டச்செயலகம்,

கிளிநொச்சி.

அரச அதிகாரிகளின் துஸ்பிரயோகங்களால் கிராமத்தின் அபிவிருத்தி புறக்கணிக்கப்படுகின்றமை தொடர்பானது.

அரச அதிகாரிகளின் துஸ்பிரயோகங்களாலும், அசமந்தப் போக்குகளாலும் கிளிநொச்சி நகரத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்கும் மக்களும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களும் பாதிப்படைந்து வருவதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவதுடன்,

இவ்விடயம் தொடர்பாக எங்களால் சுட்டிக்காட்டப்படும் தங்களின் கீழ் பணியாற்றும் அரசஉயர் அதிகாரிகளின் அதிகாரத் துஸ்பிரயோகங்களைத் தங்களிடம் நேரடியாக எழுத்து மூலம் சமர்ப்பிக்கின்றோம்.

கரைச்சிப் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு.நாகேஸ்வரன் அவர்கள் எமது கிளிநொச்சி பகுதிக்கு வரும் உதவித் திட்டங்களை எங்களுக்குப் பெற்றுத்தர எந்த விதத்திலும் முயற்சி எடுக்காமல் இருந்து வருகிறார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு வரும் உதவித் திட்டத்தில் எமது கிராமம் முற்று முழுதாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இப்புறக்கணிப்பை பல தடவை பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலவேறு மட்டத்தினரிடமும் நாம் எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கீழ்க்குறிப்பிடப்படும் விடங்களைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். 2010ம் ஆண்டு மக்கள் எமது கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டபோதும் அந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை உரியமுறையில் நடைமுறைப்படுத் தவறியமை.

2010ம் ஆண்டு மீள்குடியேற்றத்திலிருந்து அரச காணிக்கான காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டபோதிலும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம்.

கிராம சேவையாளர், காணி உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோர் காணி உரிமை உறுதிப்படுத்தல் படிவத்தை உறுதிப்படுத்தி ஒப்பமிட்டபின் பல கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் கொடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கை எமது கிராமத்துக்கு மட்டும் புறக்கணிக்கப்பட்டு வீட்டுத்திட்டம் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கப்பெற்றும் பல மக்களுக்கு கிடைக்கப் பெறாமலும் உள்ளது.

இதில் காணி தொடர்பான ஆவணங்கள் உள்ளவர்களுக்கும் வழங்கப்படாமை குறிப்பிடத்தக்கது. எமது கிராமத்தின் அனைத்து சமூக கட்டமைப்புக்களையும் உள்ளடக்கிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு, எமது கிராம அபிவிருத்திச் சங்கத்தால் முன்மொழியப்பட்ட பிரதேச செயலகத்திற்கு எதிரேயுள்ள காணியை எமக்குத் தருவதாக உறுதிமொழி கூறிய பிரதேச செயலாளர் அதன் பின் அக்காணியின் ஒரு பகுதியை சமுர்த்தி வங்கிக்கு கொடுத்து விட்டு மீண்டும் எமக்கு உறுதிமொழி வழங்கினார்.

அந்தக்காணி வரைபடம் வரையப்பட்டுள்ளதாகவும், அந்தக்காணி எமக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, எம்மை இரண்டு வருடகாலமாக ஏமாற்றி வந்த பிரதேச செயலாளர், தற்போது நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் இக்காணியை எமக்குத் தரமறுக்கின்றார்.

தற்போது UNHABITED நிறுவனத்தினர் எமக்கான கட்டிடம் கட்டுவதற்கு முன்வந்தபோது இக்காணி தொடர்பாக பிரதேச செயலாளருக்குத் தெரியப்படுத்தியும் பொறுப்பற்ற விதத்தில் கிண்டல் கதைகளைக் கதைத்து வருகின்றார்.

ஆரம்பத்தில் தனது சொந்தத் தேவைகளுக்கு இக்காணியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்களின் எதிர்ப்பால் கைவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேறு மாவட்டங்களில் இருந்து வேலைபெற்று வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டமை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டமை.

பொதுமக்கள், பொது அமைப்புக்கள், பிரதேச செயலாளரைச் சந்திக்கச் சென்றால்,கதவைப் பூட்டிக்கொண்டு,தான் இல்லை என்று கூறுமாறு அங்குள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடுதல்.

கிளிநொச்சி ஐந்து வீட்டுத்திட்ட குடியிருப்புக்கு உரிய பொதுப்பாதையை ஒருவர் கைப்பற்றி வைத்துள்ளார் என்பதை பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியபோது, விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறப்பட்டபோதும் மீண்டும் பாதையைப் பிடித்து அடைப்பதற்கு பெந்தகொஸ்தே சபைக்கு அனுமதி கொடுத்துள்ளார்.

இன்னும் பல பிரச்சினைகளை எமது மக்கள் தெரியப்படுத்துகின்றபோதும் அவற்றை உதாசீனம் செய்து வருகிறார். எமது கிராமத்தின் எங்களுடையவாழ்வியல் அபிவிருத்தி, கிராம அடிப்படை வசதிகளுக்கான அபிவிருத்தி என்பன இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்ட செயலாளரின் பொறுப்பற்ற செயல்களால் எமது கிராம அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, தன்னலமற்ற, பாரபட்சமற்ற மக்கள் சேவையாளர் ஒருவரை பிரதேச செயலாளராக நியமித்து எமது மக்களதும், கிராமத்தினதும் அபிவிருத்திக்கு உதவுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டுத்திட்ட விடயம் தொடர்பாக எமது மக்கள் இவரிடம் சென்றால் அவர்களுடன் உரிய முறையில் உரையாடாமல் பொறுப்பற்ற விதத்தில் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துத் திருப்பி அனுப்புதல், பண்பற்ற விதத்தில் நடந்து கொள்ளல்.

கடமை நேரத்தில் கடமையில் இருப்பதில்லை என்பது உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உண்டு.

காணி அற்றவர்களுக்கும் விதை தானியம், மரக்கன்றுகள் வழங்குகின்றமை.

எனவே மேற்கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பிரதேச செயலாளரையும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரையும் இடமாற்றம் செய்வதோடு, உடனடியாக எமது காணி உரிமைப் பத்திரத்தையும் எமக்கான வீட்டுத்திட்ட வசதியையும் பொது அமைப்புக்களுக்கான காணியையும் பெற்றுத் தருவதோடு, ஏனைய கிராமங்களைப் போன்று எங்களுடைய கிராமத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கும் எங்களுடைய வாழ்வாதார அபிவிருத்திக்கும் ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSC_0021.jpgDSC_00251.jpgDSC_00281.jpgDSC_00311.jpgDSC_00441.jpgDSC_00501.jpgDSC_00621.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.