Jump to content

தங்கச் சாமியாருக்கு விதிக்கப்பட்ட ரூ. 48 இலட்சம் அபராதத்தை அப்போதே செலுத்தினார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச் சாமியார் என்றழைக்கப்படும் கண்டி, கால்தென்ன காமினி ஆனந்த என்ற பிரபல சாமியார், வருமான வரி கட்டாத காரணத்தால் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு மணி நேரத்தில் அபராதமாக சுமார் 48 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார்.

unnamed_31.jpg

அம்பிட்டிய கால்தென்ன ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தல் பிரபல சாமியராக இருக்கும் இவர், காளி தேவியின் அருள் கொண்டு அற்புதங்கள் மேற்கொள்பவராக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

இதன் காரணமான இவரது தேவாலயத்திற்குச் சென்று அனேகர் தங்கமாக தமது காணிக்கைகளைச் செலுத்துவர். இவரது உடலில் சுமார் 20ற்கும் மேற்பட்ட கிலோ எடைகொண்ட தங்கம் அணிந்து கொண்டு, சர்வசாதாரணமாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் பல வருடங்களாக வருமான வரி செலுத்த வில்லை என தொடரப்பட்ட வழக்கில் கண்டி நீதவான் சிரிநீத் விஜேசேக்கர ரூபா 488 6840 அபராதத்தை விதித்தார்.

இருப்பினும், சுமார் ஒரு மணி நேரத்தில் அப்பணம்முழுவதும் செலுத்தப்பட்டு அவர் விடுதலையாகியுள்ளார்.

http://www.virakesari.lk/articles/2015/01/28/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

gold-samy.jpg

 

 

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில்,

கால்தென்ன காமினி ஆனந்த.... என்ற சிங்களச் சாமியாரா? :o 

அவர் சிங்களவராக இருந்த படியால் தான்.....  உடம்பில் இருபது கிலோ நகையுடன் சர்வசாதரணமாக நடமாடியுள்ளார்.

தமிழனாக இருந்திருந்தால், தலையை கொய்து..... மகாவலி ஆற்றில், வீசியிருப்பார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....

அம்பிட்டிய கால்தென்ன ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தல் பிரபல சாமியராக இருக்கும் இவர், காளி தேவியின் அருள் கொண்டு அற்புதங்கள் மேற்கொள்பவராக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

...

http://www.virakesari.lk/articles/2015/01/28/

 

 

சிங்களவரான இவர் ஏன் இந்துக்கள் கோவிலில் இருக்க வேண்டும்? vil-nono.gif

 

சிங்களர்கள் பெளத்தர்களா, இந்துக்களா? emotplus1004.gif

 

இந்து தெய்வங்களையும் வணங்குவார்களென்றால், ஏன் வடகிழக்கில் இந்துக் கோவில்கள் இடிக்க வேண்டும்? down.gif

ஒரே குழப்பம்!  emboubli2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் ஒரு தாமரைப் பூவும், ஊதுவர்த்தியும், கொடுத்துவிட்டு அருள் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள்....! :o:)

தமிழர்கள்தான் தங்க நகைகளும், தட்சனைகளும் கொடுத்துவிட்டு அல்வா வாங்கிக் கொண்டு போவார்கள்...!! :lol::)  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.