Jump to content

சவுதியில் முக்காடு அணியாத மிஷல் ஓபாமா: திட்டும் மக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
28-1422417762-obama-michalle-609878.jpg

 

சவுதியில் முக்காடு அணியாத மிஷல் ஓபாமா: ட்விட்டரில் திட்டும் மக்கள்.

 

ரியாத்: சவுதி சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தலையில் ஸ்கார்ப் அணியாதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். அவர்கள் நேற்று கிளம்பி சவுதி அரேபியா சென்றனர். ஆக்ரா சென்று தாஜ் மஹாலை பார்க்கும் திட்டத்தை கூட ரத்து செய்துவிட்டு அவர்கள் சவுதி கிளம்பினர்.

 

சவுதியில் மிஷல் ஒபாமா தலையில் ஸ்கார்ப் அணியாதது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சவுதியில் பெண்கள் தலையில் ஸ்கார்ப் அணிய வேண்டும் அல்லது புர்கா அணிந்து முகத்தை மறைக்க வேண்டும். இந்நிலையில் மிஷல் ஸ்கார்ப் அணியாதது பற்றி பலரும் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 

இது குறித்து #ميشيل_أوباما_سفور (roughly, #Michelle_Obama_unveiled) என்ற ஹேஷ்டேக்கில் மட்டும் 1,500 ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன. மிஷல் இந்தோனேசியா சென்றபோது மட்டும் ஸ்கார்ப் அணிந்தாரே. சவுதி அரேபியாவில் மட்டும் ஏன் அணியவில்லை என்று சிலர் கேட்டுள்ளனர்.

 

அவசரமாக சவுதி வந்ததால் மிஷலை யாரும் குறை கூறக் கூடாது என்று சிலர் அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர். இஸ்லாத்தை அவமதித்து பிளாக்கில் எழுதியதற்காக ரைப் பதாவி என்பவருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்கப்பட்டதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

 

இந்நிலையில் ஒபாமா சவுதி சென்றுள்ளார். அவர் மறைந்த மன்னருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் புதிய மன்னர் சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிபரும் ஒரு முஸ்லிம்தானே அதனால் மக்கள் திட்டுவதில் நியாயம் இருக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிபரும் ஒரு முஸ்லிம்தானே அதனால் மக்கள் திட்டுவதில் நியாயம் இருக்கிறது!

 

எப்ப..... இருந்து, அதிபர் முஸ்லீம். :o

Link to comment
Share on other sites

மிசல் ஒபாமா அவர்கள் ஒன்றும் வீட்டு வேலைக்கு சவுதி அரபியா செல்லவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.மனிதாபிமான முறையில் ஒரு மரணச்சடங்கிற்கு சென்றார்.ஆக்ரா சென்று தாஜ் மஹாலை பார்க்கும் திட்டத்தை கூட ரத்து செய்துவிட்டு அவர்கள் சவுதி கிளம்பினர்.அவசரமாக சவுதி வந்ததால் மிஷலை யாரும் குறை கூறக் கூடாதுஅவர் ஒரு அடக்கமான உடைத்தான் அணிந்திருக்கின்றார் இது ஒன்றும் முஸ்லீம் உலகமில்லை.தயவு செய்து குரானில் கூறியபடி அனைவரையும் மதித்து நடக்கப்பழகுங்கள்.இதே குரானில் கூறப்பட்ட வாசகம்" இவ்வுலகில் தீர்ப்பு சொல்ல யாருக்கும் முடியாது.அல்ஹா ஒருவனே நீதிபதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேற்றினத்து பெண்கள் முஸ்லீம் நாட்டுக்கு போகும் போது முக்காடு போட வேண்டுமென்றால்...... அதே முஸ்லீம் நாட்டு பெண்கள் கிறிஸ்தவ நாடுகளுக்கு வரும்போது முக்காடு இல்லாமல் வரத் தயாரா????  :D

Link to comment
Share on other sites

ஒவ்வொரு நாட்டுக்கும் செல்பவர்கள் அவ் நாட்டினதும், அங்குள்ள மதத்தினதும் இனத்தினதும் சட்டங்களை மதிக்க தானே வேண்டும். சவூதியில் முக்காடு போட்டுத்தான் பெண்கள் போக வேண்டும் என்றால் அதை எதிர்த்து அங்குள்ள பெண்கள் போராடட்டும், அவ் போராட்டத்தில் வெல்லட்டும், அது வரைக்கும் வெளிநாட்டவர்கள் அதை கடைப்பிடிக்கத்தானே வேண்டும்? கிறிஸ்தவ நாடுகளில் முக்காடு போடுவது சட்டப்படி தவறல்ல என்பதால் முஸ்லிம்கள் அங்கு முக்காடு போடுவதில் என்ன தவறு?

 

சரி, அமெரிக்க சனாதிபதி நல்லூர் கோவிலுக்குள் செருப்பு அணிந்து கொண்டு போனால் அதை நாம் கண்டிக்க மாட்டோமா?

Link to comment
Share on other sites

சரி, அமெரிக்க சனாதிபதி நல்லூர் கோவிலுக்குள் செருப்பு அணிந்து கொண்டு போனால் அதை நாம் கண்டிக்க மாட்டோமா?

 

மிஷெல் ஒபாமா இஸ்லாமிய மத தலத்துக்கு முக்காடு அணியாமல் சென்றால் அது தவறு,ஆனால் அவர் சவுதிக்கு தானே சென்றார், அது தவறில்லையே நாம் என்ன ஒபாமா தம்பதியினர் யாழ்ப்பாணம் வந்து நல்லூருக்கு செருப்புடன் சென்றால் அது தவறு தான், ஆனால் அங்கு வந்து அவர்கள் அவர்கள் வேட்டி சேலை அணிய வேண்டும் என்று நாம் வற்புறுத்தினால் தான் அது தவறு,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஷெல் ஒபாமா இஸ்லாமிய மத தலத்துக்கு முக்காடு அணியாமல் சென்றால் அது தவறு,ஆனால் அவர் சவுதிக்கு தானே சென்றார், அது தவறில்லையே நாம் என்ன ஒபாமா தம்பதியினர் யாழ்ப்பாணம் வந்து நல்லூருக்கு செருப்புடன் சென்றால் அது தவறு தான், ஆனால் அங்கு வந்து அவர்கள் அவர்கள் வேட்டி சேலை அணிய வேண்டும் என்று நாம் வற்புறுத்தினால் தான் அது தவறு,

 

நல்ல பதில், டாஷ். :) 

இதற்கு, நிழலியின்... பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். :D

Link to comment
Share on other sites

மிஷெல் ஒபாமா இஸ்லாமிய மத தலத்துக்கு முக்காடு அணியாமல் சென்றால் அது தவறு,ஆனால் அவர் சவுதிக்கு தானே சென்றார், அது தவறில்லையே நாம் என்ன ஒபாமா தம்பதியினர் யாழ்ப்பாணம் வந்து நல்லூருக்கு செருப்புடன் சென்றால் அது தவறு தான், ஆனால் அங்கு வந்து அவர்கள் அவர்கள் வேட்டி சேலை அணிய வேண்டும் என்று நாம் வற்புறுத்தினால் தான் அது தவறு,

 

சவூதிக்கு செல்லும் எந்த பெண்களும் கண்டிப்பாக முக்காடு அணிய வேண்டும் என்பது அவர்களின் சட்டம். உதாரணத்துக்கு டுபாயில் இருந்து கட்டார் நோக்கிச் எவராவது வீதி வழியே வாகனத்தில் சென்றால் சவூதியின் பிராந்தியங்களைக் கடக்க வேண்டும். அப்படி கடக்கும் போது கூட பெண்கள் கண்டிப்பாக முக்காடு போட வேண்டும். அத்துடன் பெண்கள் வாகனம் செலுத்தவும் கூடாது.

(நான் இரண்டு முறை இவ்வாறு சென்று இருக்கின்றேன்)

 

சவூதியினைச் சேர்ந்த பெண்கள் கண்டிப்பாக உடல் முழுதும் கறுப்பு உடையால் மூட வேண்டும் என்றும் விதியுள்ளது. அத்துடன் அவர்கள் அருகில் கணவன் அல்லது சகோதரம் மட்டுமே இருக்கலாம் என்பதும் விதிகள். ஆனால் இவை வெளிநாட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை அல்ல. இவற்றில் தாராளமான தளர்வுகள் உள்ளது.

 

சவூதியில் இருக்கும் இத்தகைய விதிகள், சட்டங்கள் பிற்போக்கானவையா அவை நீக்கப்படல் வேண்டுமா என்பது வேறு விவாதம். முக்கியமாக அங்குள்ள பெண்கள் அதையிட்டு கவலை கொள்ள வேண்டிய விடயம்.

 

ஒரு நாட்டுக்குள் செல்பவர்கள் கண்டிப்பாக அவ் நாட்டின் விதிகளையும் சட்டங்களையும் மதிக்க வேண்டும். அது ஒபாமாவாக இருந்தால் என்ன ஓமக்குச்சி நாரயணணாக இருந்தால் என்ன.  அதிலும் முக்கியமாக மனிதவுரிமைகளை சற்றும் மதிக்காத சவூதியின் மன்னராட்சியை தாங்கிப் பிடித்து உதவிகள் செய்யும் அமெரிக்க / ஒபாமா அரசுகள் இவ் விதிகளை கண்டிப்பாக கடைப்பிடித்து இருக்க வேண்டும்.

 

ஆகவே யுவர் ஆனர், ஒபாமாவின் மனைவி முக்காடு போடாதது பிழை பிழை பிழையே ஆகும் என்று கூறி என் வாதங்களை நிறைவு செய்கின்றேன்.

நல்ல பதில், டாஷ். :) 

இதற்கு, நிழலியின்... பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். :D

 

இப்ப திருப்தியா... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப திருப்தியா... :)

 

இல்லை

உங்களது நாட்டு

வீட்டு சட்டங்கள் எப்படியும் இருக்கட்டும்

 

ஒருவரது மரண வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருபவரை

எமது சட்டப்படிதான்  வரவேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?

Link to comment
Share on other sites

தமிழனாய் பிறந்தது எனது தவறு இல்லையாயினும் தமிழனாய் பிறந்ததற்காக நான் பலமுறை என்வாழ்வில் கவலைப்பட்டதுண்டு. ஆனால் இப்படிபட்ட முஸ்லீம் நாடொன்றில் முஸ்லீமாக பிறக்காத்து குறித்து திருப்தியே.

Link to comment
Share on other sites

இல்லை

உங்களது நாட்டு

வீட்டு சட்டங்கள் எப்படியும் இருக்கட்டும்

 

ஒருவரது மரண வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருபவரை

எமது சட்டப்படிதான்  வரவேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?

சட்டம் என்றால் சட்டம்தான் என்கிற நிழலியின் நிலைப்பாட்டுக்கு நானும் ஆதரவு. :D அந்தச் சட்டம் பிடிக்காவிட்டால் சவுதியின் எண்ணையே வேண்டாம் என்று ஒபாமா புறக்கணிக்க வேணும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஷல் ஒபாமாவின் ஒப்புக்கு வேசம் போடாத நேர்மை பாராட்டத்தக்கது. :)

 

முஸ்லீம்கள் தங்களது அடையாளங்களை மற்றவர்கள் மீது திணிப்பதை நிறுத்துவதோடு.. முஸ்லீம் பெண்கள் மீதான அனைத்துவித அடக்குமுறைகளையும் கைவிட முன்வர வேண்டும். :):icon_idea:

Link to comment
Share on other sites

மிஷல் ஒபாமாவின் ஒப்புக்கு வேசம் போடாத நேர்மை பாராட்டத்தக்கது. :)

 

முஸ்லீம்கள் தங்களது அடையாளங்களை மற்றவர்கள் மீது திணிப்பதை நிறுத்துவதோடு.. முஸ்லீம் பெண்கள் மீதான அனைத்துவித அடக்குமுறைகளையும் கைவிட முன்வர வேண்டும். :):icon_idea:

நெடுக்ஸ்.. இதுக்குத்தான் சில பழமொழிகளை எழுதி வைத்திருக்கிறார்கள். :D

1) நக்குண்டார்.. நாவிழந்தார். :huh:

2) You cannot have the cake and eat it too.

3) You cannot have it both ways.

எண்ணைக்காக ஒபாமா எதையெல்லாம் சகிக்கவேண்டி இருக்கு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்காடு போட்டிருந்தாலும் விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவூதிக்கு செல்லும் எந்த பெண்களும் கண்டிப்பாக முக்காடு அணிய வேண்டும் என்பது அவர்களின் சட்டம். உதாரணத்துக்கு டுபாயில் இருந்து கட்டார் நோக்கிச் எவராவது வீதி வழியே வாகனத்தில் சென்றால் சவூதியின் பிராந்தியங்களைக் கடக்க வேண்டும். அப்படி கடக்கும் போது கூட பெண்கள் கண்டிப்பாக முக்காடு போட வேண்டும். அத்துடன் பெண்கள் வாகனம் செலுத்தவும் கூடாது.

(நான் இரண்டு முறை இவ்வாறு சென்று இருக்கின்றேன்)

 

சவூதியினைச் சேர்ந்த பெண்கள் கண்டிப்பாக உடல் முழுதும் கறுப்பு உடையால் மூட வேண்டும் என்றும் விதியுள்ளது. அத்துடன் அவர்கள் அருகில் கணவன் அல்லது சகோதரம் மட்டுமே இருக்கலாம் என்பதும் விதிகள். ஆனால் இவை வெளிநாட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை அல்ல. இவற்றில் தாராளமான தளர்வுகள் உள்ளது.

 

சவூதியில் இருக்கும் இத்தகைய விதிகள், சட்டங்கள் பிற்போக்கானவையா அவை நீக்கப்படல் வேண்டுமா என்பது வேறு விவாதம். முக்கியமாக அங்குள்ள பெண்கள் அதையிட்டு கவலை கொள்ள வேண்டிய விடயம்.

 

ஒரு நாட்டுக்குள் செல்பவர்கள் கண்டிப்பாக அவ் நாட்டின் விதிகளையும் சட்டங்களையும் மதிக்க வேண்டும். அது ஒபாமாவாக இருந்தால் என்ன ஓமக்குச்சி நாரயணணாக இருந்தால் என்ன.  அதிலும் முக்கியமாக மனிதவுரிமைகளை சற்றும் மதிக்காத சவூதியின் மன்னராட்சியை தாங்கிப் பிடித்து உதவிகள் செய்யும் அமெரிக்க / ஒபாமா அரசுகள் இவ் விதிகளை கண்டிப்பாக கடைப்பிடித்து இருக்க வேண்டும்.

 

ஆகவே யுவர் ஆனர், ஒபாமாவின் மனைவி முக்காடு போடாதது பிழை பிழை பிழையே ஆகும் என்று கூறி என் வாதங்களை நிறைவு செய்கின்றேன்.

 

இப்ப திருப்தியா... :)

நாட்டின் விதி முறைகளை நிட்ச்சயமாக மதிக்க வேண்டும்.
யாழ்ப்பான வீதிகளில்  வெள்ளைகார பெண்கள் நாகரீகமாக உடை அணிந்து போகிறார்கள்.
இங்கிருந்து (எங்களின்) போன சில அலுகோசுகள் அங்கே வெளிநாடு காட்டுகிறார்கள்.
 
 
மிசாலின் முக்காடு விடயம் ....
அரசியலோடு தொடர்பு பட்டு இருக்கிறது.
தெரியாமல் போகவில்லை .... தெரிந்துதான் போயிருக்கிறார். 
அந்த ரீதியில் இது ஏற்றுகொள்ள கூடிய ஒன்றாக இருக்கிறது.
Link to comment
Share on other sites

சவூதிக்கு செல்லும் எந்த பெண்களும் கண்டிப்பாக முக்காடு அணிய வேண்டும் என்பது அவர்களின் சட்டம். உதாரணத்துக்கு டுபாயில் இருந்து கட்டார் நோக்கிச் எவராவது வீதி வழியே வாகனத்தில் சென்றால் சவூதியின் பிராந்தியங்களைக் கடக்க வேண்டும். அப்படி கடக்கும் போது கூட பெண்கள் கண்டிப்பாக முக்காடு போட வேண்டும். அத்துடன் பெண்கள் வாகனம் செலுத்தவும் கூடாது.

(நான் இரண்டு முறை இவ்வாறு சென்று இருக்கின்றேன்)

 

சவூதியினைச் சேர்ந்த பெண்கள் கண்டிப்பாக உடல் முழுதும் கறுப்பு உடையால் மூட வேண்டும் என்றும் விதியுள்ளது. அத்துடன் அவர்கள் அருகில் கணவன் அல்லது சகோதரம் மட்டுமே இருக்கலாம் என்பதும் விதிகள். ஆனால் இவை வெளிநாட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை அல்ல. இவற்றில் தாராளமான தளர்வுகள் உள்ளது.

 

சவூதியில் இருக்கும் இத்தகைய விதிகள், சட்டங்கள் பிற்போக்கானவையா அவை நீக்கப்படல் வேண்டுமா என்பது வேறு விவாதம். முக்கியமாக அங்குள்ள பெண்கள் அதையிட்டு கவலை கொள்ள வேண்டிய விடயம்.

 

ஒரு நாட்டுக்குள் செல்பவர்கள் கண்டிப்பாக அவ் நாட்டின் விதிகளையும் சட்டங்களையும் மதிக்க வேண்டும். அது ஒபாமாவாக இருந்தால் என்ன ஓமக்குச்சி நாரயணணாக இருந்தால் என்ன.  அதிலும் முக்கியமாக மனிதவுரிமைகளை சற்றும் மதிக்காத சவூதியின் மன்னராட்சியை தாங்கிப் பிடித்து உதவிகள் செய்யும் அமெரிக்க / ஒபாமா அரசுகள் இவ் விதிகளை கண்டிப்பாக கடைப்பிடித்து இருக்க வேண்டும்.

 

ஆகவே யுவர் ஆனர், ஒபாமாவின் மனைவி முக்காடு போடாதது பிழை பிழை பிழையே ஆகும் என்று கூறி என் வாதங்களை நிறைவு செய்கின்றேன்.

 

இப்ப திருப்தியா... :)

 

நீங்கள் கூறுவது அவர் தனிப்பட்ட விஜயத்தின் நிமித்தமாக செல்லும் போது மட்டுமே , ஆனால் இவர் உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்கவை பிரதிநிதிபடுத்துகிறார், எனவே அவர் அமெரிக்க பெண் ஒருவர் அணியும் உடையுடன் சென்றது தவறில்லை

Link to comment
Share on other sites

https://www.youtube.com/watch?v=o-q6DN1Cv9E

 

 

சவுதிக்காரரின் கொடுமைகளும்............ இந்தப்படத்தில் ஹோமார் என்னும் வார்த்தை கழுதை எனப் பொருள் படும்.  அதே போல கயவான் - விலங்கு  ஹறாமி-கள்வன்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாட்டுக்கும் செல்பவர்கள் அவ் நாட்டினதும், அங்குள்ள மதத்தினதும் இனத்தினதும் சட்டங்களை மதிக்க தானே வேண்டும். சவூதியில் முக்காடு போட்டுத்தான் பெண்கள் போக வேண்டும் என்றால் அதை எதிர்த்து அங்குள்ள பெண்கள் போராடட்டும், அவ் போராட்டத்தில் வெல்லட்டும், அது வரைக்கும் வெளிநாட்டவர்கள் அதை கடைப்பிடிக்கத்தானே வேண்டும்? கிறிஸ்தவ நாடுகளில் முக்காடு போடுவது சட்டப்படி தவறல்ல என்பதால் முஸ்லிம்கள் அங்கு முக்காடு போடுவதில் என்ன தவறு?

 

சரி, அமெரிக்க சனாதிபதி நல்லூர் கோவிலுக்குள் செருப்பு அணிந்து கொண்டு போனால் அதை நாம் கண்டிக்க மாட்டோமா?

 

மோட்டுத்தனமாக தண்டனை எனும் பெயரில் கழுத்து,கை கால்களை வெட்டும் ஒரு நாட்டிலிருந்து பெண்களை போராடச்சொல்கின்றீர்கள்.!
 
முஸ்லீம் நாட்டு சட்டத்தை கலாச்சாரத்தை இதர நாட்டவர்கள் மதிக்க வேண்டுமென்றால்.....முஸ்லீம்களும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு வரும் போது அந்தந்த நாட்டு சட்டங்கள் கலாச்சாரங்களை கடைப்பிடிக்க வேண்டுமல்லவா?
 
 
இந்த விடயத்தில் பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு வணக்கம் சொல்கின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

சவூதியில் இருக்கும் இத்தகைய விதிகள், சட்டங்கள் பிற்போக்கானவையா அவை நீக்கப்படல் வேண்டுமா என்பது வேறு விவாதம்.

-----

 

சவூதியின் சட்டங்களை, விரிவாக எழுதியமைக்கு நன்றி நிழலி.

சவூதியின் சட்டம் மட்டுமல்ல, முஸ்லீம் நாடுகளில் கடைப் பிடிக்கப் படும் பல சட்டங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

மற்றைய மக்களின்... கலாச்சாரத்தையும், மதத்தையும் மதிக்கும் பண்பு, இவர்களிடம் அறவே இல்லை.

 

இப்படிப் பார்த்தால்.....

நேற்று பா.ஜ.க. முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்திய அரசியல் சட்டத்தில் இருந்து.... "இந்தியா மதச்சார்பற்ற நாடு" என்பதில் அற்ற என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று கூறிய, கருத்தும் சரியானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாய் பிறந்தது எனது தவறு இல்லையாயினும் தமிழனாய் பிறந்ததற்காக நான் பலமுறை என்வாழ்வில் கவலைப்பட்டதுண்டு. ஆனால் இப்படிபட்ட முஸ்லீம் நாடொன்றில் முஸ்லீமாக பிறக்காத்து குறித்து திருப்தியே.

 

 

அருமை துல்பன்,
 
இதையேதான் நான் தினமும் நினைப்பேன்.
 
அரபு நாடுகளில் வாழும் எனக்கு தெரியும் இங்கு எவ்வளவே கொடுமைகள் தினம், தினம் நடக்கின்றன என. பல சட்டங்கள் இங்கு இருக்கின்றன மிகவும் மனித தன்மையே இல்லாத சட்டங்கள்.
 
சொன்னல் நம்ப மாட்டீர்கள் என்னுடய கடவுச்சீட்டு என்னிடம் தான் உள்ளது, ஆனால் நான் நினைத்த நேரம் எனக்கு இந்த நாட்டை விட்டு செல்ல முடியாது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாய் பிறந்தது எனது தவறு இல்லையாயினும் தமிழனாய் பிறந்ததற்காக நான் பலமுறை என்வாழ்வில் கவலைப்பட்டதுண்டு. ஆனால் இப்படிபட்ட முஸ்லீம் நாடொன்றில் முஸ்லீமாக பிறக்காத்து குறித்து திருப்தியே.

 

முற்றிலும் தவறு. 

 

தமிழைக் கொண்ட தமிழானாய் பிறந்ததற்கு நிச்சயம் பெருமை கொள்ளவேண்டும்,

 

உங்கள் செயல்களால், ஒற்றுமையின்மையால் அழிந்த விரக்தியில், இனத்தின் அடையாளத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம், துல்பன். சமீப காலமாக இந்த விரக்தி தொற்று வியாதி போல் ஈழத்தமிழர்களை மிக வேகமாக பீடித்து வருகிறது. விழுந்தவர்கள் மீண்டதாய் எத்தனையெத்தனையோ சரித்திரங்கள் உள்ளன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் முக்காடு போடாமல் சவுதிக்கு போனால் நாட்டுக்கு உள்ளே விட மாட்டார்களா

Link to comment
Share on other sites

நாங்கள் முக்காடு போடாமல் சவுதிக்கு போனால் நாட்டுக்கு உள்ளே விட மாட்டார்களா

 

தண்டிப்பார்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.