Jump to content

இராணுவத்தின் பிடியிலிருந்து ஒரு தொகுதி காணிகள் விரைவில் விடுவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
உயர்பாதுகாப்பு வலையமாக கையகப்படுத்தி வைத்திருக்கும் பொது மக்களுடைய காணிகளில் ஒரு தொகுதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2012 ஆம் ஆண்டு யாழ்.அரசாங்க அதிபராக இருந்து திருமதி இமெல்டா சுகுமார் உச்ச நீதிமன்றத்தில் அனுப்பிவைத்த சிபார்சின் அடிப்படையில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 8 கிரம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளது.
 
 
அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலையமாக உள்ள பகதிகளில் 8 கிராம சேவகர் பிரிவுகளை விடுவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என்று மாவட்டச் செயலகத்தினால் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களில்ன் அடைப்பிடையில் உச்ச நீதிமன்றத்திற்கு சிபார்சு ஒன்ற அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
 
அனுப்பிவைக்கப்பட்ட சிபார்சு இதுவரை காலமும் நடமுறைக்குக் கொண்டுவரப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவ்வாறு உச்ச நீதிமன்றத்தில் அனுப்பிவைக்கப்பட் சிபார்சின் அடிப்படையில் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள 15 கிராம சேவையாளர் பிரிவுகளின் சுமார் 25 ஆயிரம் மக்களை உள்ளடக்கிய 8 கிராம சேவகர் பிரிவுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 
அந்தக் குழு ஆராய்ந்து விரைவில் வலி.வடக்கில் மீள்குடியெற்றம் மிக விரைவில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=611673836127721198#sthash.nFdZ1IjS.dpuf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.