Jump to content

நெகிழ வைத்த பாராட்டும்... ஒரு ஃபேஸ்புக் தேடலும்!


Recommended Posts

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக ஃபேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார்.

சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா, தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது சவாலானதுதான் இல்லையா? ஆனால் சம்ந்தா மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் தன் மகனுக்கு கதை சொல்லியபடி ,பாடிக்கொண்டும் அவனோடு விளையாடிக்கொண்டும் வந்திருக்கிறார். சிறுவன் ரெய்லானும் உற்சாகமாக அம்மாவுடன் விளையாடியபடி மெல்ல உறங்கியும் விட்டான். ரயிலில் அப்போது கூட்டம் அதிகமாகி பலரும் நின்று கொண்டிருந்ததால், சமந்தா தனது மடியில் தலை சாய்ந்து தூங்கி கொண்டிருந்த மகனை தூக்கி தன் மீது அமர வைத்துக்கொண்டு, இன்னொருவர் உட்கார இடம் கொடுத்திருக்கிறார்.

சமந்தாவின் இந்த பயணமும், இதில் அவர் ஒரு நல்ல அம்மாவாக நடந்து கொண்டதும் யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். இவ்வளவு ஏன் சம்ந்தாவே அதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இடையே பிரிஸ்டல் ரயில் நிலையத்தில் இறங்கிய பெரியவர் ஒருவர், சமந்தாவின் தோளை தட்டி அழைத்து, ’உங்கள் பையில் இருந்து கீழே விழுந்துவிட்டது’ என்று கூறியபடி ஒரு சீட்டை கையில் கொடுத்துவிட்டு கீழே இறங்கி சென்று விட்டார்.

அந்த சீட்டை பிரித்து பார்த்த போது அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.’ நீ இந்த தலைமுறைக்கே எடுத்துக்காட்டு. அன்பாக,அமைதியாக பிள்ளைக்கு நல்ல பழக்கத்தை கற்று கொடுத்தாய்’ என்று பாராட்டி எழுதப்பட்டிருந்ததுடன், என் சார்பாக ஒரு காபி அருந்தி மகிழுங்கள் எனும் குறிப்புடன் 5 பவுண்ட் நோட்டும் இணைக்கப்பட்டிருந்தது.

உன் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், அவளும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

அதை படித்ததும் சமந்தா, முகம் தெரியாத மனிதரிடம் இருந்து இப்படி ஒருபாராட்டா ? என நெகிழ்ந்து போய்விட்டார். 23 வயதான சமந்தா, கணவர் இல்லாமல் தனியே மகனை வளர்த்து வருபவர். எனவே இந்த பாராட்டால் கூடுதலாக மகிழ்ந்து போனார். தான் பிள்ளை வளர்க்கும் விதத்திற்கு கிடைத்த சான்றிதழாகவும் நினைத்து உருகினார்.

"இதை படித்ததும் என்னால் நம்பவே முடியவில்லை, இருபது முறையாவது மீண்டும் படித்திருப்பேன். நான் பார்த்திராத, பேசியிராத ஒருவர் இவ்வாறு எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை. இப்படி அவரை எழுத வைக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்றும் தெரியவில்லை, மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன்” என்று சமந்தா நாளிதழ் ஒன்றுக்கான பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்தான் அவருக்கு, 'அடடா..! அந்த மனிதருக்கு நன்றி கூட சொல்ல முடியாமல் போய்விட்டதே!' என்று தோன்றியிருக்கிறது. அந்த நல்ல மனிதரை எப்படியாவது நேரில் பார்த்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்பதற்காக அவரை தேடும் முயற்சியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை விவரித்து, 'அவரைப்பற்றிய விவரம் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்!' என கேட்டிருக்கிறார்.

இந்த ஃபேஸ்புக் தேடலும் , அதன் பின்னே உள்ள நெகிழ வைக்கும் கதையும் இணைய உலகை இளகச்செய்துள்ளது.

இளம் அம்மாக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், மற்றவர்கள் பற்றிய மனம் திறந்த பாராட்டு எத்தனை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதற்கும் இந்த அழகான சம்பவம் உதாரணம். ஃபேஸ்புக் பதிவால் இது உலகம் முழுவதும் அறியப்பட்டதாகவும் ஆகியிருக்கிறது.

http://m.vikatan.com/tablet/index.php?module=news&aid=37850

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன். நீங்கள் இணைக்கும் பல விடயங்கள் சுவாரசியமானவையும் உடனே வாசிக்க ஆவலை ஏற்படுத்துவனவையும் ஆகும்.

 

மற்றது,

 

அந்த இளம் அம்மாவின் படத்தினையும் இணைத்தால் அவருக்காக நாங்களும் சேர்ந்து தேடலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் இப்ப நீங்கள் யாரைத் தேடப் போறீங்கள்.... இளம் அம்மாவையா  அல்லது  துலைந்த தாத்தாவையா....!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அபராஜிதன்.
அவருடைய தேடல் வெற்றியடைய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

எனக்கொரு சந்தேகம் இப்ப நீங்கள் யாரைத் தேடப் போறீங்கள்.... இளம் அம்மாவையா அல்லது துலைந்த தாத்தாவையா....!! :)

இது எல்லாம் சொல்லியா தெரிய வேணும்?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன். நீங்கள் இணைக்கும் பல விடயங்கள் சுவாரசியமானவையும் உடனே வாசிக்க ஆவலை ஏற்படுத்துவனவையும் ஆகும்.

மற்றது,

அந்த இளம் அம்மாவின் படத்தினையும் இணைத்தால் அவருக்காக நாங்களும் சேர்ந்து தேடலாம் :)

நன்றி நன்றி ☺☺

எனக்கொரு சந்தேகம் இப்ப நீங்கள் யாரைத் தேடப் போறீங்கள்.... இளம் அம்மாவையா அல்லது துலைந்த தாத்தாவையா....!! :)

நன்றி வருகைக்கு

பொடியன் கொள்ளை அழகு! :)

May god bless.

நன்றி வருகைக்கு

இணைப்பிற்கு நன்றி அபராஜிதன்.

அவருடைய தேடல் வெற்றியடைய வாழ்த்துக்கள்

நன்றி வருகைக்கு

இது எல்லாம் சொல்லியா தெரிய வேணும்?

நன்றி வருகைக்கு

நன்றி வருகைக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.