Jump to content

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்; சரத் பொன்சேகா எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்; சரத் பொன்சேகா எச்சரிக்கை 

dfa4f50c77533d7b2fb43c7aa7c128eb.jpg
விடுதலைப் புலிகள் விவகாரத்தை சரியான வகையில் கையாளாவிடின் நாட்டின் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 
வடக்கில் யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும்.
 
 
மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. 
 
நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும்.
 
வடக்கு, கிழக்கில் வாக்களிக்க செல்பவர்களை தடுக்கவென தேர்தலின்போது, மேலதிக படையினர் நகர்த்தப்படவில்லை. ஆனால், வாக்களிப்பை தடுப்பதற்காக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. 
 
 
தேர்தலுக்கு முன்னர், வடக்கு பாதுகாப்பு படைகளின் தளபதியை இடமாற்றம் செய்தனர். சில புலனாய்வு அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்தனர். எம்மிடம் இது தொடர்பான விவரங்கள் உள்ளன. விரைவில் இவற்றை விசாரணைகளின் மூலம் அம்பலப்படுத்துவேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 
சில மாதங்களுக்கு முன்னர் சில தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். முன்னிருந்த அரசின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். நான் இராணுவத்தை விட்டு இளைப்பாறியதும் அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
 
இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசு இதை செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=265643831826650805#sthash.SzHS643p.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சில மாதங்களுக்கு முன்னர் சில தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். முன்னிருந்த அரசின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். நான் இராணுவத்தை விட்டு இளைப்பாறியதும் அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
 
இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசு இதை செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கடலும்

மண்ணும்

மிருகங்களும்

பறவைகளும்

சிங்களமும் மாறவில்லை.

 

தமிழன் மாறிவிட்டான்

ஈழத்தை புதைத்துவிட்டான்....... :( 

Link to comment
Share on other sites

சிங்களவர்களின் பார்வையில் தமிழன் எப்போதும் புலிமுகத்துடன்தான் தெரிவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலும்

மண்ணும்

மிருகங்களும்

பறவைகளும்

சிங்களமும் மாறவில்லை.

 

தமிழன் மாறிவிட்டான்

ஈழத்தை புதைத்துவிட்டான்....... :( 

எல்லோரும் சேர்ந்து தமிழனை புதைத்தனர் 

ஈழமும் புதைந்து விட்டது.  

இனி நீங்களும் நானும் கவலைப்பட்டு எதுவும் நடக்கப்போவதில்லை 

கோட்டு சூட்டு போட்டு வந்து கோமாளிகள் கூத்தாடும் ஜெனிவாவுக்கு தயாராகுங்கள் 

கூத்தை பார்க்க நாங்களும் தயாராகிறோம். :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் புதைத்தாலும் சிங்களவன் புதைக்கமாட்டான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சேர்ந்து தமிழனை புதைத்தனர் 

ஈழமும் புதைந்து விட்டது.  

இனி நீங்களும் நானும் கவலைப்பட்டு எதுவும் நடக்கப்போவதில்லை 

கோட்டு சூட்டு போட்டு வந்து கோமாளிகள் கூத்தாடும் ஜெனிவாவுக்கு தயாராகுங்கள் 

கூத்தை பார்க்க நாங்களும் தயாராகிறோம். :)  

 

நிச்சயமாக வருவேன்.

புலம் பெயர் தமிழர் என்ன செய்யணும் என்பதில் தெளிவாக உள்ளேன்....

img173_Page_1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் இருப்புக்கு புலிகளும், தமிழனும் மிக முக்கியம். பிச்சைக்காரனின்  புண் போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு, தமிழர்கள் யாராவது கோட்டுச்சூட்டுப்போட்டால்  ஒருசிலரது முதுகு அரிப்பெடுக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு, தமிழர்கள் யாராவது கோட்டுச்சூட்டுப்போட்டால்  ஒருசிலரது முதுகு அரிப்பெடுக்குது.

அண்ணை 

நாங்க சொல்வது ஆணையாளர்கள் (அழுகையாளர்கள் ) என்ற பெயரிலும் ,அனுசரணையாளர்கள்

என்ற பெயரிலும் வந்து கதிரை பிடிச்சி விளையாடும் கோமாளிகளை (இதில கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட் படிப்புகள் வேற), இன்னும் கொஞ்ச காலத்தில் அங்க போய் காயுற  நம்மட சனத்தையும் கோமாளியாக்கிடுவானுகள்...பிறகென்ன ஜெனிவா வெள்ளி விழா ,ஜெனிவா பொன் விழா என்று கொண்டாட வேண்டியதுதான் 

(தமிழர் கோட்டு சூட்டு போட்டதால் தான் இந்த விவகாரம் ஜெனிவாவரை  இவ்வளவு தூரம் வந்தது என்பதை மறக்குமளவு இன்னும் நன்றி கேட்டு போய்விடவில்லை நாங்கள் )

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் விவகாரத்தை சரியான வகையில் கையாளாவிடின் நாட்டின் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்/////

சரி இனி என்ன தமிழ் மக்களின் வாக்குகளை வைத்து ஆட்சியில் அமர்ந்தாச்சு......இனி 5 வருஷத்துக்கு புலி பூச்சாண்டி காட்டி.....தமிழர்களை தொடர்ந்தும் இராணுவ ஆட்சிக்குள் வைத்திருக்க வேண்டியது தான்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்; சரத் பொன்சேகா எச்சரிக்கை

 

புத்தியை காட்ட வெளிக்கிட்டுட்டாங்கள்.......  நாய்வாலை நிமித்தலாம் எண்டு சொன்ன ஆக்கள் வரிசையாய் வாங்கோ.... :lol:  :D

Link to comment
Share on other sites

இதற்கு நாங்களும் முழு ஆதரவுதான் .இந்த விடயத்தில் கூட்டமைப்பும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கவேண்டும் .

 

கனேடிய தமிழ் காங்கிரஸ் மைத்திரியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்கள் .

இன்றும் கொடியுடன் அலையும் அமைப்புகளுடன் எந்த உறவையும் வைக்காமல் கூட்டமைப்பு இலங்கை அரசுடனும் புலம்பெயர்ந்த அமைப்புகளுடனும் சமயோசிதமாக நடந்து நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஒரு விடிவைகொண்டுவரவேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை 

நாங்க சொல்வது ஆணையாளர்கள் (அழுகையாளர்கள் ) என்ற பெயரிலும் ,அனுசரணையாளர்கள்

என்ற பெயரிலும் வந்து கதிரை பிடிச்சி விளையாடும் கோமாளிகளை (இதில கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட் படிப்புகள் வேற), இன்னும் கொஞ்ச காலத்தில் அங்க போய் காயுற  நம்மட சனத்தையும் கோமாளியாக்கிடுவானுகள்...பிறகென்ன ஜெனிவா வெள்ளி விழா ,ஜெனிவா பொன் விழா என்று கொண்டாட வேண்டியதுதான் 

(தமிழர் கோட்டு சூட்டு போட்டதால் தான் இந்த விவகாரம் ஜெனிவாவரை  இவ்வளவு தூரம் வந்தது என்பதை மறக்குமளவு இன்னும் நன்றி கேட்டு போய்விடவில்லை நாங்கள் )

 

எழுதுவதற்கு எல்லாம் இலகுதான். ஆனால் அந்தக் கோட்டுச் சூட்டுப் போட்டு ஜெநீவாவரை ஒரு குழுவினரை அனுப்பப் படும்பாட்டைப்பற்றியும் அதற்காக குறிப்பிட்ட சிலர் மட்டுமே இழக்கும் தம் சொந்தப் பணம் நேரம் மற்றும் விரயங்கள் பற்றியும் யாருக்கும் விளங்கப் போவதில்லை. அனால் நாங்களும் எழுதவேண்டும் என்று எழுத மட்டும் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நாங்களும் முழு ஆதரவுதான் .இந்த விடயத்தில் கூட்டமைப்பும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கவேண்டும் .

 

கனேடிய தமிழ் காங்கிரஸ் மைத்திரியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்கள் .

இன்றும் கொடியுடன் அலையும் அமைப்புகளுடன் எந்த உறவையும் வைக்காமல் கூட்டமைப்பு இலங்கை அரசுடனும் புலம்பெயர்ந்த அமைப்புகளுடனும் சமயோசிதமாக நடந்து நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஒரு விடிவைகொண்டுவரவேண்டும் .

இவர்களின் அலுவலகங்கள் உங்கள் வீட்டு குசினிக்குள்ளா இருக்கிறது ?

Link to comment
Share on other sites

சரத் பொன்சேகாவிற்கு பதவி ஆசை வந்துவிட்டது. இப்போ வேறு ஒரு திரியில் தனித்து தீப்பந்தத்தின் கீழ் போட்டியிடப்போவதாக கூறியிருக்கின்றார்.தன்னுடைய குடியுரிமை கிடைக்கும் வரை வாலைச்சுருட்டி கொண்டிருந்தவர் வாலை வெளியே நீட்டியுள்ளார்.இவர் ராணுவப்புரட்சி செய்தாலும் வியப்பில்லை.குதிரையின் குணமறிந்து தான் கொம்பில்லாதது போல் இவரை அறிந்து தான் இவரின் குடியுரிமை நீக்கப்பட்டிருக்கலாம். இப்போ குழப்ப வெளிக்கிட்டுள்ளார்.புலிகள் எத்தனை பேர் இறந்தார்கள்,எத்தனைபேர் தப்பினார்கள் என்று இவருக்கும் கோத்தாவுக்கும் தான் வெளிச்சம். இல்லையேல் இச்செய்தி எழுதும் வரையில் ராணுவப் பிரசன்னத்தில் நடைமுறையில் இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது தானே உண்மை 

 

(எல்லோராலும் கோரமான  படங்களைப்பார்க்க முடியாது)

 

http://www.nitharsanam.net/27298/news/27298.html/comment-page-2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
60/70 வருச பிரச்சனையை 100 நாளிலை முடிச்சு காட்டுறன் எண்டுறான் அவன்..
:rolleyes:
யாழ்களத்திலையும் இரண்டொரு பேர் பட்டுவேட்டி சால்வையோடை நன்நாளை பொன்னாளாய் கொண்டாடப்போகினமாம். :lol:  :lol:  :lol:
 
அதுசரி அதிரடியாய்  ரெடி பண்ண இதென்ன தேத்தண்ணியும் வடையுமே?????? :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா முடிச்சது போக மிச்சத்துக்கு இவர் கணக்குப் பண்ண வந்திருக்கிறார் போல. இவருக்கும் எம்மக்களை வாக்குப் போடச் சொல்லி சிங்கக் கொடியை தூக்கினோர் எம்மினத்தில் உண்டு. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு நாங்களும் முழு ஆதரவுதான் .இந்த விடயத்தில் கூட்டமைப்பும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கவேண்டும் .

 

கனேடிய தமிழ் காங்கிரஸ் மைத்திரியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்கள் .

இன்றும் கொடியுடன் அலையும் அமைப்புகளுடன் எந்த உறவையும் வைக்காமல் கூட்டமைப்பு இலங்கை அரசுடனும் புலம்பெயர்ந்த அமைப்புகளுடனும் சமயோசிதமாக நடந்து நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஒரு விடிவைகொண்டுவரவேண்டும் .

 

அரச பயங்கரவாதமும் ஒட்ட நறுக்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

சரத் சரியான முறையில் தான் சொல்கிறார். தமிழர் பிரச்சனை அரசியல் ரீதியாக‌ தீர்க்கப்பட வேண்டும் இல்லையேல் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கும் என்று சிங்களவர்களுக்கு சொல்லப்படும் செய்தியாக இருக்க வேண்டும்.
 
ஒரு வகையில் நல்ல செய்தி தான். வெற்றியீட்டி விட்டோம் தமிழருக்கு எதுவும் தேவையில்லை என்ற நினைப்புள்ள  சிங்களவருக்கு தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும். அதுவும் ஒரு ராணுவத் தளபதியின் வாயில் இருந்து வருவது இன்னும் நல்லது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக, தென் கிழக்காசிய நாடுகளின் அரசியல் முழுக்க... இப்ப 'பயங்கரவாதம்' எண்ட எண்ணெய்யில தான் ஓடுது!  :o

 

வட இந்தியனுக்கு 'வருணாச்சிரம தர்மத்தை' விட்டால், பிழைக்கிறதுக்கு வழி இல்லை!

 

சிங்களவனுக்கும், தமிழனை விட்டால் வருமானத்துக்கு வேற வழியில்லை!

 

இது தான் நடை முறை 'யதார்த்தம்'!

Link to comment
Share on other sites

சரத் சரியான முறையில் தான் சொல்கிறார். தமிழர் பிரச்சனை அரசியல் ரீதியாக‌ தீர்க்கப்பட வேண்டும் இல்லையேல் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கும் என்று சிங்களவர்களுக்கு சொல்லப்படும் செய்தியாக இருக்க வேண்டும்.

ஒரு வகையில் நல்ல செய்தி தான். வெற்றியீட்டி விட்டோம் தமிழருக்கு எதுவும் தேவையில்லை என்ற நினைப்புள்ள சிங்களவருக்கு தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும். அதுவும் ஒரு ராணுவத் தளபதியின் வாயில் இருந்து வருவது இன்னும் நல்லது.

சந்தேகப்பட்டால் எல்லாவற்றிலும் சந்தேகப்படுவது நம்பினாலும் கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் நம்புவது தமிழரின் பலவீனம்..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச பயங்கரவாதம் தலைதூக்காமலிருந்திருந்தால் தமிழ்த்தீவிரவாதம் தோன்றியிராது என்பதை இன்னும் சிங்களம் புரிந்துகொள்ள மறுக்கிறதா?

 

அட அழிவுக்குள் வாடும் எம்மில் பலபேருக்கே புரியாதபோது அழித்துவிட்டு, மீதியையும் அழிக்கத் திட்டமிடுவோருக்கா புரியப்போகிறது! 

Link to comment
Share on other sites

அரச பயங்கரவாதம் தலைதூக்காமலிருந்திருந்தால் தமிழ்த்தீவிரவாதம் தோன்றியிராது என்பதை இன்னும் சிங்களம் புரிந்துகொள்ள மறுக்கிறதா?

 

அட அழிவுக்குள் வாடும் எம்மில் பலபேருக்கே புரியாதபோது அழித்துவிட்டு, மீதியையும் அழிக்கத் திட்டமிடுவோருக்கா புரியப்போகிறது! 

எவருக்கும் எதுவும் புரியாமல் இல்லை .சுதந்திரத்திற்கு முன்பே சிங்களவரிடம் தோற்ற வரலாறு எமது .

தமிழர்களின் அரசியலை தலைமைகள் கையாண்ட விதங்கள் பற்றித்தான் விமர்சனங்கள் .அரசியல் போராட்டமோ ஆயுத போராட்டமோ இரண்டிலும் தோற்றவர்கள் நாங்கள்தான் .ஒரு விடயம் ஏன் தோல்வி அடைகின்றது என்றால் அது சரியாக நடாத்தப்படாததால் தான் .

இன்று இருக்கும் எமது அரசியல் தலைமை கூட உண்மையானதோ நேர்மையானதோ மக்களுக்காக தம்மை அர்பணிப்பவர்களோ அல்ல எனவே மீண்டும் நாம் தோற்கவேண்டிவரலாம் .

வெறும் சுயநலத்தால் பிழையான தலைமைகளுக்கு பின்னால் மக்கள் இழுபட்டுக்கொண்டிருந்தால் எக்காலமும் நாம் சிங்களத்தை வெல்லப்போவதில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு வருகின்ற வேளையில்....

பொங்கல் பானையை காலால் உதைத்து போல் உதைத்து விட்டு...

இப்போது வியாக்கியானம் பேசிப்பலன் இல்லை.

இன்னும் காக்கை வன்னியர்கள் புதுப்பரிமாணத்தில் வருவார்கள்/வந்து கொண்டிருக்கின்றார்கள்..... தமிழினத்திற்கு இதுவும் புதிதல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.