Jump to content

செத்தான்டா சேகரு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செத்தான்டா சேகரு..!  smileys-confused-389931.gif

இன்று சேகருக்கு பிறந்தநாள்.. !

 

அவனை மகிழ்விக்க தீர்மானித்த மனைவி, நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு இரவு நடன நிகழ்சிக்கு அழைத்துச் சென்றாள்... :huh:

ஓட்டல் வாசலில் வரவேற்பவர்: "என்ன சேகர்..! எப்படி இருக்கிறீர்கள்...?"

மனைவி: "அவருக்கு எப்படி உங்களை தெரியும்...?"

சேகர்: "ம்.. அவரும் நானும் கோல்ஃப் விளையாடுவோம்..அதனால் பழக்கம்..."

மதுபானம் பரிமாறுபவர்:  "வழக்கமான மது வகைகள்தானே சேகர்...?"

மனைவி: "உண்மையை சொல்லுங்கள்.. இவருக்கு எப்படி உங்களை தெரியும்..?"

சேகர்:  "அவர் எங்கள் பெளவுலிங் விளையாட்டுக் குழுவில் ஒரு அங்கத்தவர்...!"

சேகர் இப்படி சமாளித்துக்கொண்டிருக்கும் போது அவனை நெருங்கிய நடன மாது,  "வழக்கமான குலுக்கல் டான்ஸா சேகர்..? வா..!" என அழைத்தாள்..

 

மிதமிஞ்சிய ஆத்திரத்தாலும், கோபத்தாலும் கொதித்த மனைவி, சேகரை தரதரவென வாசலுக்கு இழுத்து வந்து அவனை டாக்ஸியில் ஏற்றி அமர்ந்தாள்...

 

 

 

 

அடுத்து என்னவாயிற்று...? :o:huh::icon_idea:

 

....

 

 

....

 

 

....

 

 

 

....

 

 

 

....

 

 

....

 

 

 

....

 

 

 

 

....

 

 

 

 

....

 

 

 

 

....

 

 

 

 

அவர்களை ஏற்றிக்கொண்ட டாக்ஸி ஓட்டுனர்: "என்ன சேகர், இம்முறை ஒரு அட்டு ஃபிகரை கூட்டிட்டு வந்திருக்கே..? அதே ஓட்டலுக்கு போகட்டுமா..?" :unsure:

 

 

அந்த சேகருக்கு இன்று மரண ஊர்வலம்..! :(:mellow::icon_mrgreen:

 

 

 

 

 

-மின்னஞ்சலில் வந்ததை தமிழாக்கம் செய்து பதிந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சேகரு மக்கு சேகரா இருக்கே
ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகளை மனைவிக்கு கொடுக்கலாமா? :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேகருக்கும் , எனக்கும்  அர்தாஷ்டமச்சனி..., அவருக்கு பெண்ணில , எனக்கு பொருளில...!  :o  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... எனக்கு பொருளில...!  :o  :lol:

 

என்னதான் அந்த அதிசய "பொருள்"..? :):icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

------

அவர்களை ஏற்றிக்கொண்ட டாக்ஸி ஓட்டுனர்: "என்ன சேகர், இம்முறை ஒரு அட்டு ஃபிகரை கூட்டிட்டு வந்திருக்கே..? அதே ஓட்டலுக்கு போகட்டுமா..?" :unsure:

 

 

அந்த சேகருக்கு இன்று மரண ஊர்வலம்..! :(:mellow::icon_mrgreen:

 

 

இதற்குப் பிறகும், சேகர்.... சாகாமல் இருந்தால், சேகருக்கு.... ஆயுசு கெட்டி. :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேகர் ஒரு கஞ்சன்.

 

தனது மனைவியின் பிறந்த நாளன்று வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் போயிருந்தான்.

அதனால் மனைவி, "எனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கப் பணம் தேவை. எனவே உடனடியாக காசோலை அனுப்புங்கள்..!" என்று போனில் அவனிடம் சொன்னாள்.

சேகர் தான் மகா கஞ்சனாச்சே..!

ஒரு காசோலை எழுதி, அதில் 'ஆயிரம் ரூபாய்' என்பதற்குப் பதில் 'ஆயிரம் முத்தங்கள்' என்று எழுதியனுப்பினான்.

இரண்டு நாள் கழித்து மனைவிக்கு போன் செய்து, "காசோலை கிடைத்ததா ?" என்ற கேட்டான்.

ம்…..கிடைத்தது.. . ஆனால், வங்கி காசாளர் தான் பாவம்.. அதை எனக்கு கொடுப்பதற்குள் மனுசன் ரொம்பவே திணறிப் போனார்..!" என்று சொன்னாள் மனைவி.

 

மயக்கமானான் சேகரு..!

 

 

-- புத்தகத்தில் படித்தது.

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான கணவன், மனைவிக்கிடையே உரையாடல் இது..

 

 

mohankumar13112009_a.jpg

 

 

 

மனைவி : "நான் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்..? மறுமணம் செய்துகொள்வீர்களா..?"

கணவன் :  "ஓ.. ! இல்லவே இல்லை..!!  நான் எப்படி அதை நினைப்பேன்..?"

 

 

"ஏன் அப்படி சொல்கிறீர்கள்..? இன்பத்திலும் துன்பத்திலும் தோள்கொடுக்க உங்களுக்குகென துணையொன்று வேண்டும்.. ஆகையால் நீங்கள் மறுமணம் செய்துகொள்ளுங்கள்..!"

"ஆ.. ! என்ன அன்பான, இனிமையான மனைவி நீ..!! இறந்த பின்பும் என்னைப் பற்றி இவ்வளவு அக்கறையாக இருக்கிறாயே..?"

 

 

"ம்.. நான் இறந்தபின் இன்னொரு மறுமணம் செய்துகொள்வதாக சத்தியம் செய்யுங்கள்..!"

"சரி..சரி.. நீ இவ்வளவு தூரம் கேட்பதால், உனக்காக நான் மறுமணம் செய்துகொள்கிறேன்..!"

 

 

"அப்படி மறுமணம் புரிந்தால், இந்த வீட்டில்தான் அவளோடு வசிப்பீர்களா..?"

"ஆமாம்.. ஆனால் உன்னுடைய அறையை அவளுக்கு எப்பொழுதும் உபயோகிக்க கொடுக்கமாட்டேன்..!"

 

 

"என்னுடைய காரை அவளுக்கு ஓட்டக் கொடுப்பீர்களா..?"

"ச்சே..ச்சே..! அந்த காரை உன்னுடைய ஞாபகார்த்தமாக வைத்துக்கொள்வேன்.. அவளுக்கு புதுக் கார்தான் வாங்குவேன்..!"

 

 

"அவளுக்கு என்னுடைய நகைகளை கொடுப்பீர்கள்தானே..?"

"நோ..நோ..! அந்த நகைகளில் உன் நினைவுகள் புதைந்திருக்கும்.. வருபவள் அவளுக்கு பிடித்த நகைகளை வாங்குவாள்..!"

 

 

"அவள் என்னுடைய செருப்புகளையா அணிவாள்..?"

"இல்லவே இல்லை..! அவளுடைய கால் அளவு 5.. ! உன்னுடைய கால் அளவோ 7..!! "

 

 

....

 

 

....

 

 

அடுத்த நிமிடம் மயான அமைதி, நிசப்தம்...

 

திடீரென " ஐயோ..." ஓலம் !  :o:huh::(:lol:

 

 

 

 

-படித்ததை தமிழாக்கம் செய்தேன்.

 

Link to comment
Share on other sites

ராசவன்னியர் சூரன் போன்று வரம் பெற்றவரோ. :rolleyes:  வெட்ட வெட்டத் தலை முளைக்கிறதே... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியர் சூரன் போன்று வரம் பெற்றவரோ. :rolleyes:  வெட்ட வெட்டத் தலை முளைக்கிறதே... :o

 

இந்த வரிகளை உங்களிடம் நிச்சயம் எதிர்பார்த்தேன்... பிசகாமல் எழுதியும் உள்ளீர்கள்..! :lol:

 

Link to comment
Share on other sites

இனிமேல் கால் அளவு பார்த்துத்தான் சின்னவீடும் பிடிக்கவேணும் போல இருக்கு.. :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நிமிடம் மயான அமைதி, நிசப்தம்...

திடீரென " ஐயோ..." ஓலம் ! :o:huh::(:lol:

 

 

 

 

இப்ப அதே மனைவி  தனது காதலனிடம், அட அதற்குள் அவர் இறந்து ஒரு மாதமாகி விட்டது , அவருடைய  செருப்புகள் உங்களுக்கும்  அளவாய் இருக்கின்றன... இனி நீங்கள் அவருடைய பொருட்கள் எல்லாவற்றையும் அனுபவியுங்கள்...!!  :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவி  என்றால் இப்படி நினைத்திருப்பாள்.

வரட்டும்

வரட்டும்..

எனது இடத்துக்கு  வருவது தான்

நான்  உனக்கு கொடுக்கும் ஆகக்கூடிய தண்டனை.. :lol:  :D

 

 

இனிமேல் கால் அளவு பார்த்துத்தான் சின்னவீடும் பிடிக்கவேணும் போல இருக்கு.. :o:D

 

ஏதோ

இனித்தான்  ஆரம்பிக்கப்போறது போல கதை போகுது.. :icon_mrgreen:

அப்ப மச்சாள்மார் என்னவாம்.. :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நிமிடம் மயான அமைதி, நிசப்தம்...

திடீரென " ஐயோ..." ஓலம் ! :o:huh::(:lol:

 

 

 

இப்ப அதே மனைவி  தனது காதலனிடம், அட அதற்குள் அவர் இறந்து ஒரு மாதமாகி விட்டது , அவருடைய  செருப்புகள் உங்களுக்கும்  அளவாய் இருக்கின்றன... இனி நீங்கள் அவருடைய பொருட்கள் எல்லாவற்றையும் அனுபவியுங்கள்...!!  :lol::D

 

இதுக்கு பெயர்தான் 'குண்டக்க மண்டக்க நினைப்பு'. Good lateral thinking. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை படிக்கும் அன்பர்களுக்கு ஒரு ஆச்சரியமான உண்மையை கண்டிப்பாக சொல்லவேண்டும்..!. :)

உலகில் 75 சதவீதமான பெண்களின் பெயர்கள் A ல் முடிவதாகவும், 15 சதவீதமான பெண்களின் பெயர்கள் I ல் முடிவதாகவும் கண்டுபிடுத்துள்ளனராம்.

உதாரணத்திற்கு,

பத்மா - PadmA

மைதிலி - MaithilI


நீங்களும் உங்கள் மனைவி, துணைவி, இணவி மற்றும் உற்றாரின் பெயரை சோதித்திப் பாருங்கள், புரியும்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை படிக்கும் அன்பர்களுக்கு ஒரு ஆச்சரியமான உண்மையை கண்டிப்பாக சொல்லவேண்டும்..!. :)

உலகில் 75 சதவீதமான பெண்களின் பெயர்கள் A ல் முடிவதாகவும், 15 சதவீதமான பெண்களின் பெயர்கள் I ல் முடிவதாகவும் கண்டுபிடுத்துள்ளனராம்.

உதாரணத்திற்கு,

பத்மா - PadmA

மைதிலி - MaithilI

நீங்களும் உங்கள் மனைவி, துணைவி, இணவி மற்றும் உற்றாரின் பெயரை சோதித்திப் பாருங்கள், புரியும்! :icon_idea:

 

எனக்கு அந்த தேடலே தேவையற்றது

முழுப்பெயரே இருக்கே........ :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

75 % அல்ல 98 % அப்படித்தான். அதிகம் எல்லாப் பெண்களின் பெயரும்  "ஆ ஆ" , "ஈ  ஈ" என்றுதான் முடியுமமது அவர்களின் அனிச்சையான செயற் பாடுகளுடன் தொடர்வது....!

 

கடை வீதிக்குப் போனால் தெரியும். புடைவைக் கடைக்குள் போணால்  ஆ..ஆ..ஆ.. என நோக்குவார்கள்.

நகைக் கடைக்குள் நுழைந்தால் ,  ஈ ... ஈ... ஈ... என இளிப்பார்கள்.

 

வேண்டுமென்றால் அடுத்தமுறை சொப்பிங் போகும்போது  கவனித்துப் பார்க்கவும்.  :lol::)

 

ஐயாம் எஸ்கேப்...!!

Link to comment
Share on other sites

ஆகா! எங்கள் உறவுகள் சிலர் மனிசியைக் கண்டாலே பயந்து நடுங்குவது பதிவிலும் தெரிகிறது, பின்னூட்டங்களிலும் தெரிகிறது. emoticon-anime-051.gif 

எனக்கு அந்தப் பயம் இல்லை. ஏனென்றால் என் பெயர் 'ஆ' என்றே முடிகிறது.barmy.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! எங்கள் உறவுகள் சிலர் மனிசியைக் கண்டாலே பயந்து நடுங்குவது பதிவிலும் தெரிகிறது, பின்னூட்டங்களிலும் தெரிகிறது. emoticon-anime-051.gif

எனக்கு அந்தப் பயம் இல்லை. ஏனென்றால் என் பெயர் 'ஆ' என்றே முடிகிறது.barmy.gif

 

vil-effraye.gif   'ஆ' என்று பயத்தில், வலியால் அலறும் ( ஆச்சரியத்தால் அல்ல..!) நெடிலால், பெயரிலேயே பயத்தை வரித்துக்கொண்டவர் தாங்களன்றோ?  :lol::D

 

Link to comment
Share on other sites

பயத்திலும் பலவகை உண்டா?? அறியத்தந்தமைக்கு நன்றிகள் ராசவன்னியரே !!  :blink:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயத்திலும் பலவகை உண்டா?? அறியத்தந்தமைக்கு நன்றிகள் ராசவன்னியரே !!  :blink:  :lol:

 

பயமா..???? :o:huh::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kungumam-dk-3221.jpg

 

 

சேகரு ஒரு பெண்ணை காதலித்தான்..

 

ஒருநாள் தன்னுடைய தாயிடம் மகிழ்ச்சியுடனும், சிறிது வெட்கத்துடனும் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவளையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் சொன்னான்.

தாயிடம், "அம்மா ஒரு வேடிக்கைகாக செய்வோம்.. நான் என் காதலியையும் சேர்த்து மூன்று பெண்களை நம் வீட்டிற்கு அழைத்து வருகிறேன்.. நீங்கள் அப்பெண்களில் எந்தப் பெண் என் காதலி? என சரியாக ஊகித்து அடையாளம் காட்ட வேண்டும்..!" என கேட்டுக்கொண்டான்.

தாயும் சம்மதிக்கவே, மறுநாள் மூன்று அழகான பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து வரவேற்பறையில் உட்காரவைத்துவிட்டு தாயை அழைத்தான். தாயும் அவர்களை வரவேற்று சில நேரம் மகிழ்ச்சியுடன் அளவளாவினாள்.

பின் தாயை தனியே அழைத்து," ம்.. இப்பொழுது சரியாக சொல்லுங்கள்.. நான் காதலிக்கும் பெண் யாரென் கண்டுபிடித்தீர்களா...?" என ஆவலுடன் கேட்டான்.

தாய் உடனே பதிலளித்தாள்.. " இரண்டு பெண்களுக்கும் நடுவில் உட்கார்ந்திருக்காளே, அவள்தான் நீ திருமணம் செய்யப்போகும் பெண்" என்றாள்..

சேகரு மிதமிஞ்சிய ஆச்சரியத்தால் கூவினான்.." எப்படியம்மா.., இவ்வளவு சரியாக ஊகித்து கண்டுபிடித்தீர்கள்..?"

தாய் நிதானமாக சொன்னாள்...

...

....

....

....

"எனக்கு அவளை பிடிக்கவில்லை"

 

                          |

                         V

 

சேகரு மூர்ச்சையானான்.

 

 

 

-படித்ததின் தமிழாக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக உள்ளது தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

75 % அல்ல 98 % அப்படித்தான். அதிகம் எல்லாப் பெண்களின் பெயரும்  "ஆ ஆ" , "ஈ  ஈ" என்றுதான் முடியுமமது அவர்களின் அனிச்சையான செயற் பாடுகளுடன் தொடர்வது....!

 

கடை வீதிக்குப் போனால் தெரியும். புடைவைக் கடைக்குள் போணால்  ஆ..ஆ..ஆ.. என நோக்குவார்கள்.

நகைக் கடைக்குள் நுழைந்தால் ,  ஈ ... ஈ... ஈ... என இளிப்பார்கள்.

 

வேண்டுமென்றால் அடுத்தமுறை சொப்பிங் போகும்போது  கவனித்துப் பார்க்கவும்.  :lol::)

 

ஐயாம் எஸ்கேப்...!!

 

உங்கள் அனுபவத்தை  வைத்து எல்லோரையும் ஒரே வண்டிலில் பூட்டுவது தவறு

 

:lol: :lol:

இந்த திரியை படிக்கும் அன்பர்களுக்கு ஒரு ஆச்சரியமான உண்மையை கண்டிப்பாக சொல்லவேண்டும்..!. :)

உலகில் 75 சதவீதமான பெண்களின் பெயர்கள் A ல் முடிவதாகவும், 15 சதவீதமான பெண்களின் பெயர்கள் I ல் முடிவதாகவும் கண்டுபிடுத்துள்ளனராம்.

உதாரணத்திற்கு,

பத்மா - PadmA

மைதிலி - MaithilI

நீங்களும் உங்கள் மனைவி, துணைவி, இணவி மற்றும் உற்றாரின் பெயரை சோதித்திப் பாருங்கள், புரியும்! :icon_idea:

 

உண்மைதான் அண்ணா :D

 

Link to comment
Share on other sites

சேகரின் தாய்க்கு இரண்டு பெண்களைப் பிடிக்காது போயிருந்தால் சேகரின் கதி என்ன....?? emoticon-misc-005.gif  :D  :lol:  

Link to comment
Share on other sites

சேகரின் தாய்க்கு இரண்டு பெண்களைப் பிடிக்காது போயிருந்தால் சேகரின் கதி என்ன....?? emoticon-misc-005.gif:D:lol:

வாழ்வுதான்.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.