Jump to content

பதினொரு பேய்கள் - அ. முத்துலிங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பதினொரு பேய்கள்

அ. முத்துலிங்கம்

ஆறு மாதம் சென்ற பின்னர்தான் தோழர் சிவா சுப்பிரமணியத்துக்கு என்ன பிரச்சினை என்பது புரிய ஆரம்பித்தது. இயக்கத்தில் அவர் சேர்ந்து மூன்று வருடம் ஆகியிருந்தது. அவருடன் சேர்த்து செயல்குழுவில் 11 பேர் இருந்தனர். அவர்தான் யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாளர் என்று அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் செயற்குழுக் கூட்டத்தில் செல்வன் கேட்ட கேள்வி அவரை யோசிக்க வைத்தது. அதில் இருந்த நியாயம் அவருக்கும் தெரியும். மற்ற குழுக்காரர்கள் அவனை அவமானப்படுத்திவிட்டார்கள். எல்லோரிடமும் வாகனம் இருந்தது. துப்பாக்கி இருந்தது. அவர்களிடம் ஒன்றுமில்லை. தலைவர்கள் இந்தியாவில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு கட்டளைகள் பிறப்பித்தார்கள். எப்படிப் போராட முடியும்?

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் எட்டுக் குழுக்கள் இயங்கின. அவர்களுடைய குழுவை ஒருவருமே கணக்கில் எடுப்பதில்லை. யாழ்ப்பாண நூல் நிலையத்தை அரச படையினர் எரித்த அடுத்த மாதம் சுந்தரம் குழுவினர் ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கினர். அவர்கள் இயக்கம் என்ன செய்தது? வெலிக்கட சிறையில் 18 போராளிகளை சிங்கள அதிகாரம் கொன்றொழித்தது. அவர்கள் இயக்கம் என்ன செய்தது? வேறொரு இயக்கம் திருநெல்வேலியில் தாக்குதல் நடத்தி 13 ராணுவத்தினரைக் கொன்றது. ஆயுதமே இல்லாமல் எப்படி ராணுவத்தோடு போராடுவது? அவர்களைப் பார்த்துப் பின்னாலும் சிரித்தார்கள், முன்னாலும் சிரித்தார்கள்.

‘நேற்று நான் உரும்பிராய் காவல் அரணைக் கடந்தபோது இயக்க காவல்காரர்கள் என்னிடம் அடையாள அட்டையை கேட்டார்கள். அவர்களுக்கு நான் இயக்கத்தில் வேலை செய்வது தெரியும். காட்டினேன். கால்சட்டை பொக்கற்றுகளைக் காட்டச் சொன்னார்கள். நான் இழுத்து வெளியே விட்டேன். அவை மாட்டு நாக்குகள்போலத் தொங்கின. வாகன இலக்கத்தைக் கேட்டார்கள். சைக்கிளுக்கு எங்கே இலக்கம் இருக்கு? எனக்கு வெட்கமாய் போய்விட்டது. அவர்களிடம் துப் பாக்கி இருந்தது தோழர். நாங்களும் ஈழ விடுதலைக்காகத் தானே போராடுகிறோம். எங்களை மதிக்கிறார்கள் இல்லை.’

இதைக் கேட்டுக்கொண்டு நின்ற மற்றொரு தோழர் சொன்னார். ‘இதுவாவது பரவாயில்லை. எனக்கு நடந்ததைக் கேளுங்கள். என்னுடைய இயக்கத்தின் பெயரைக் கேட்டார்கள். நான் சொன்னேன். ஐந்து எழுத்துகளா என்று கேட்டார்கள். ஓம் என்றேன். ஆங்கிலத்தில் எத்தனை எழுத்துக்கள் என்று கேட்டார்கள். குத்துமதிப்பாக 26 என்று சொன்னேன். மிச்சம் 21 எழுத்துகள் சும்மாதானே இருக்கின்றன. அவற்றையும் சேர்ப்பதுதானே என்று ஒருவன் சொன்னான். மற்றவர்கள் சிரித்தார்கள். எல்லா இயக்கங்களுக்கும் சிரிப்பு காட்டுவதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்.’

தோழர் சிவாவுக்கு இது புதிதல்ல. அவரை ஒருமுறை சைக்கிளை உருட்டிக்கொண்டு ஒரு மைல்தூரம் நடக்கவைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு அவர் பொறுப்பாளர் என்பது அந்த இயக்கக்காரர்களுக்குத் தெரியும். அவர் காதுபட ஒருவன் மற்றவனுக்குச் சொன்னான். ‘அண்ணை, மூக்கிலே குறுக்காக எலும்பு சொருகிக்கொண்டு, கையிலே கம்பைச் சுழட்டிக் காட்டு நடனம் ஆடக்கூடத் தகுதியில்லாத ஆட்கள் எல்லாம் இயக்கம் நடத்தினம். கொஞ்சம் நடந்து போனால் உடற்பயிற்சி கிடைக்கும்.’ அந்த அவமானத்தை மறக்க முடியாது. அவர்கள் எல்லாம் வெட்கித் தலை குனிகிறமாதிரி பெரிசாக ஏதாவது செய்யவேண்டும்.

ஒரு வருடம் முன்னர் சொப்பனா, இயக்கத்தில் சேர வந்தபோது தோழர் சிவா மறுத்துவிட்டார். ‘நான் எப்படி முடிவு செய்யமுடியும். கமிட்டிதான் முடிவு செய்யும்’ என்று சொல்லிக் கடத்தினார். பெண் விடுவதாயில்லை. ‘என்ன கமிட்டி? நீங்கள்தானே கமிட்டி’ என்று பிடிவாதம் பிடித்தாள். தன் வளைவுகளை மேலும் விஸ்தரித்துக்கொண்டு நின்றாள். தோழர் சிவா பார்த்தார். ‘நல்ல அலங்காரம்தான். நெற்றியிலே பொட்டு. காலிலே கொலுசு. கூந்தலிலே மல்லிகைச் சரம். போர்க் கோலத்தில்தான் வந்திருக்கிறீர்.’ அவள் முகம் சிறுத்துப் போனது; ஆனாலும் பிரகாசம் குறையவில்லை. ‘உங்கள் இடுப்பில் ஒரு துப்பாக்கிகூட இல்லை. எப்போது போர் துடங்கி நீங்கள் புறப்படுவீர்களோ அப்போது நானும் போர்க்கோலத்தில் வருவேன்.’ தோழர் சிவாவுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அவள் நினைவு பின்னர் அவருக்கு அடிக்கடி வந்து போனது.

இன்னொரு பிரச்சினை இருந்தது. இயக்கத் தோழர்களுக்குப் புத்திஜீவிகளைப் பிடிக்காது. மூன்று வருடங்களுக்கு முன்னர் அரவிந்தன் இயக்கத்தில் சேர வந்தபோது எல்லோரும் அவனைத் துரத்திக் கேலி செய்தனர். காரணம் அவன் நடக்கும்போது இறகு பறப்பது போலிருக்கும். அப்படி மெலிந்து நீண்ட குச்சிபோலத் தேகம். ‘ஏகே 47ஐ அவன் தோளில் தூக்கிவைக்க இன்னொருவர் தேவைப்படும்’ என்று பகிடி செய்தார்கள். ஏ லெவல் சோதனையில் நாலு பாடங்களிலும் ஏ எடுத்தவன், படிப்பு வேண்டாமென்று இயக்கத்தில் சேர வந்திருந்தான். உடல் வலுவானவர்கள் போர் செய்ய ஒன்றையுமே கண்டு பிடித்ததில்லை. அவர்கள் உடலை நம்பியிருந்தார்கள். பலசாலியை வெற்றிகொள்ள ஆயுதம் கண்டு பிடித்தவன் புத்திசாலி. கல்லாயுதத்தை முறியடிக்க கத்தியைக் கண்டுபிடித்தவன் உடல் வலுவில்லாதவன்தான். கத்தியை வெற்றிகொள்ள துப்பாக்கியைக் கண்டுபிடித்தவனும் புத்திஜீவிதான். ‘அவனைச் சேருங்கள், எங்களுக்குப் பலமாயிருப்பான்’ என்று தோழர் சிவா பரிந்துரை செய்தார்.

ஒன்றுமே செய்யாமல் இருந்தால் அவர்கள் இயக்கத்தைப் பற்றி எப்படி வெளியே தெரியவரும்? வங்கியைக் கொள்ளை அடிக்கலாம் என்று ஒருவர் சொன்னார். தோழர் சிவாவுக்கு அது விருப்பமில்லை. அப்படி முடிவெடுத்தாலும் எப்படி? அவர்களிடம் ஒரு கறள் பிடித்த துப்பாக்கிகூட இல்லையே. ஒரு துப்பாக்கி இடுப்பில் இருந்தால் ரகஸ்யக் குரலில் பேசினாலும் அது இடிமுழக்கம்போலக் கேட்கும். ஏ லெவல் அரவிந்தன் அருமையான யுத்தி ஒன்று சொன்னான். ‘யாழ்ப்பாணம் கோர்ட்டிலே லைசென்ஸ் இல்லாததால் பொதுமக்களிடம் பறிமுதல் செய்த 8 வேட்டைத் துப்பாக்கிகள் உள்ளன. அதைப் பூட்டி வைத்திருக்கும் இடமும் எனக்குத் தெரியும். ஓர் இரவிலே அதைக் கொள்ளையடித்துவிடலாமே.’

அந்த இடத்துக்குக் காவலே இல்லை. மறுநாள் இரவு பூட்டை உடைத்து உள்ளேபோய் 8 துவக்குகளையும் கைப்பற்றி விட்டார்கள். ‘தோழர், தோட்டாக்கள் இல்லை. கொஞ்சம் கறள் பிடித்துப்போய் இருக்கு. என்ன செய்யலாம்?’ ‘அது பரவாயில்லை. குழாயில் பாதியை வெட்டுங்கள். காவுவதற்கு வசதியாயிருக்கும். தோட்டா இல்லை என்பது எங்களுக்குத்தான் தெரியும். துப்பாக்கிக்கும் தெரியும். குறிபார்க்கப்படும் ஆளுக்குத் தெரியாது அல்லவா?’ என்றார் தோழர் சிவா. 11 பேருக்கு 8 துப்பாக்கிகள். இதுதான் ஆரம்பம். உடனேயே செயற்குழுவைக் கூட்டினார்கள். இந்தியாவிலிருக்கும் மேலிடத்துக்கு அறிவிக்காமல் காரியம் செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

‘துப்பாக்கிதான் கிடைத்துவிட்டதே, வங்கியைக் கொள்ளையடிப்போம்.’ இவர் வங்கியைக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாய் இருந்தார். இன்னொருவர் ‘சிறையை உடைப்போம். ஆறுமாதம் முன்பு மட்டக்கிளப்பு சிறையை உடைத்து போராளிகள் வெளியேறினார்கள். அவர்கள் துணிச்சலில் பாதியாவது எங்களுக்கு வேணும்’ என்றார். ‘ராணுவ வாகனத்துடன் மோதுவோம்’ என்றார் இன்னொரு தோழர். அவர் தோட்டா இல்லையென்பதை மறந்துவிட்டார். ‘ராணுவத்துக்கு உதவும் தேசவிரோதிகளைப் பிடித்து வந்து அடைத்து வைப்போம்’ என்றார் ஒருவர். அப்பொழுதுதான் தோழர் சிவாவுக்குப் புதிதாக மூளையிலே பொறி உண்டாகியது. ‘நாங்கள் செய்வது உலகச் செய்தியாக வேண்டும். இலங்கை, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா எல்லாம் எங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும். தோட்டா இல்லாத துப்பாக்கியால் செய்யக்கூடிய ஒரே காரியம் ஆட்களைக் கடத்துவதுதான். அமெரிக்காவிலிருந்து சுற்றுலா வரும் ஆளைக் கடத்தினால் உலகப் பிரபல்யம் உடனேயே கிடைத்துவிடும். என்ன கோரிக்கை என்பதைப் பிறகு தீர்மானிக்கலாம்’ என்றார். எல்லோருக்கும் பிடித்துக் கொண்டது. ஜனாதிபதி ரேகன் டெலிபோனில் அவர்களை அழைத்துக் கெஞ்சுவது கண் முன்னே வந்தது. பாதிவெட்டிய துப்பாக்கிகளைத் தூக்கித் தலைக்குமேலே பிடித்துக்கொண்டு எல்லோரும் நடனமாடினார்கள்.

இத்தனை சுலபமாகத் திட்டத்தைச் செயலாக்கலாம் என ஒருவருமே நினைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலென் தம்பதிகள் வசித்தனர். ஒரு மாதம் முன்புதான் திருமணம் செய்து குடிநீர் ஆராய்ச்சி செய்வதற்காக வந்திருந்த ஸ்டான்லி அலெனுடன் புது மனைவி மேரியும் இருந்தார். இருவரும் அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தின் ரூஃலின் கம்பனிக்காக வேலைசெய்தனர். ‘சுற்றுலாப் பயணிகளுக்குக் காத்திருக்கத் தேவையில்லை, இவர்களையே கடத்தலாம்’ என்று ஏ லெவல் அரவிந்தன் சொன்னான். அப்படியே முடிவும் எடுக்கப்பட்டது.

வியாழக்கிழமை, 10 மே 1984 அன்று மாலை ஆறுமணிக்கு இருவர் தம்பதிகள் வசித்த குருநகர், பீச் ரோட் 19ஆம் வீட்டுக்கதவைத் தட்டினார்கள். நூலகத்துக்கு நன்கொடை பெற வந்ததாகச் சொன்னதும் அலென் அடுத்தநாள் காலை வந்து சந்திக்கச் சொன்னார். மறுபடியும் இரவு 10 மணிக்குப்போய் கதவைத் தட்டினார்கள். அவர்கள் திறக்கவில்லை. தம்பதிகள் ஜேம்ஸ்பொண்ட் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் முன்கதவைத் தட்டிக்கொண்டிருக்க இருவர் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்தார்கள். துப்பாக்கிகளைக் கண்டதும் தம்பதிகள் வெலவெலத்து விட்டார்கள். அலென் கட்டை கால்சட்டையும் ஒரு பனியனும் அணிந்திருந்தார். மனைவி மெல்லிய வெள்ளை உடையில் காணப்பட்டார். இருவருடைய கண்களையும் கட்டி அவருடைய வாகனத்திலேயே அவர்களை ஏற்றிக் கடத்தினார்கள்.

மாறனுக்கு காரோட்டத் தெரியும் ஆனால் லைசென்ஸ் கிடையாது. மைக்கேல் கொழும்புக்காரன். அவனிடம் லைசென்ஸ் இருந்தது, ஆனால் யாழ்ப்பாண வீதிகள் பழக்கமில்லை. மைக்கேல் ஓட்ட மாறன் பக்கத்தில் இருந்து வழிசொல்லிக்கொண்டு வந்தான். போராளிகள் காரிலே முகமூடிகளைக் கழற்றினார்கள். மைக்கேல் சொன்னான் ‘நாங்கள் முகமூடி அணிந்தது வீண். இவர்கள் எங்களை அடையாளம் காணவே முடியாது. எல்லா முகங்களும் இவர்களுக்கு ஒன்றுதான்’ என்றான். மண்டை தீவு, மணல்வீதி 18ஆம் நம்பர் வீடு ஒரு தோழருடையது. அங்கே தம்பதிகளை அடைத்துவைத்தனர். இரண்டு காவலாளிகள் துவக்குகளுடன் வீட்டிலேயே தங்கினர். மற்ற இருவரும் வாகனத்தை ஓட்டிச்சென்று சேந்தன்குளம் கடற்கரையில் நிறுத்திவிட்டு மெதுவாக வீடு போய்ச் சேர்ந்தனர். மாறன் 200 றாத்தல் எடை இருப்பான். காலையும் மாலையும் உடற்பயிற்சி செய்து உடம்பை பயில்வான்போல முறுக்கி வளர்த்து வைத்திருப்பான். முதலைக் கண்ணீர் தெரியும். இவனுக்கு முதலைச் சிரிப்பு. சும்மா இருக்கும்போதே சிரிப்பது போன்ற முகம். கழுத்துக்கு மேலே அவன் உடம்பு வேலை செய்வதில்லை. ஆனால் அன்று அவன் கடற்கரையில் வாகனத்தை நிறுத்தியது அவன் வாழ்க்கையில் அபூர்வமாகப் புத்தியை உபயோகித்து செய்த முதல் காரியமாகும்.

அடுத்த நாள் காலை 9 மணிக்கு ஒரு பையன் யாழ்ப்பாண அரசாங்க அதிபரிடம் சென்று ஒரு கடிதத் தைக் கொடுத்துவிட்டு ஓடினான். அவர் கடிதத்தைத் திறந்து பார்த்ததும் நடுநடுங்கிவிட்டார். அது இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு எழுதப்பட்டிருந்தது. சொற்குற்றம் பொருட்குற்றத்துடன் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் சொல்லப்பட்ட விசயம் மட்டும் குற்றமற்றதாக இருந்தது. அதன் சுருக்கம் இதுதான்.

1. அமெரிக்க உளவுப்பிரிவைச் சேர்ந்த ஸ்டான்லி அலென் தம்பதியினரைக் கடத்தியிருக்கிறோம். அவர் களை விடுதலை செய்வதற்கான நிபந்தனைகள்.

2. மட்டக்கிளப்பு சிறையில் அடைத்துவைத்திருக்கும் 20 விடுதலைப் போராளிகளை உடனே விடுதலை செய்யவும். போராளிகளின் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது.

3. இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை காசாகவோ தங்கமாகவோ தமிழ்நாடு அரசின் வசம் எங்கள் சார்பில் ஒப்படைக்கவேண்டும்.

4. அவகாசம் 72 மணி நேரம் மட்டுமே. தவறினால் தம்பதிகள் சுட்டுக் கொல்லப்படுவர்.

இப்படிக்கு

மக்கள் விடுதலைப் படை

கடிதம் கொடுத்த சில மணி நேரங்களிலேயே விசயம் உலகச் செய்தியாகிவிட்டது. இலங்கை பத்திரிகைகள் எழுதின. ரேடியோக்கள் அலறின. திருச்சி வானொலி முதலில் செய்தியை அறிவித்தது. பிபிசி தமிழோசை தொடர்ந்தது. இங்கிலாந்து பத்திரிகைகள் எழுதின. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டதாக அமெரிக்காவிலிருந்து ஓர் அனுதாபி டெலிபோனில் தகவல் சொன்னார். இலங்கை பாதுகாப்பு அமைச்சராக இருந்த அதி புத்திசாலி லலித் அத்துலத்முதலி, நிருபர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேட்ட கேள்விக்கு ‘‘கடத்தல்காரர்களுக்கு என்னுடைய பதில் காதைப் பிளக்கும் மௌனம்’’ என்றார். பின்னர் அவருடைய புத்தி சாதுர்யத்தின் கனம் தாங்க முடியாமல் வாயைத் திறந்தார். ‘கடத்தல்காரர்களின் வாகனம் சேந்தன்குளம் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அலென் தம்பதியினரை இந்தியாவுக்கு கடத்திவிட்டார்கள். இங்கே தேடுவதில் என்ன பிரயோசனம்? இந்தியா கடத்தல்காரர்களுக்குத் துணைபோய்விட்டது’ என முதல் கணையை ஏவினார்.

அமெரிக்க உபஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் இந்திரா காந்தியை சந்திப்பதற்காக டெல்லி வந்திருந்தார். ‘தமிழ்நாடு அரசு கடத்தல் பணத்தை அவர்கள் சார்பாக பெறும்’ என்று எழுதியது இந்திரா காந்திக்கு அவமானகரமாக இருந்தது. இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா இந்திய தூதர் சாட்வாலை நெருக்கினார். உலகம் முழுக்கப் பரபரப்பாகியிருந்தது. ஆனால் ஒருவருக்கும் மண்டைதீவு, மணல்வீதி 18ஆம் நம்பர் வீட்டை சோதிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அது மிக மிக அமைதியாக இருந்தது. உரும்பிராய் வேம்பன் ஒழுங்கையில் இருக்கும் கல்வீட்டைச் சோதிக்கலாம் என்றும் ஒருவருக்கும் தோன்றவில்லை. அங்கேதான் தோழர் சிவா இருந்தார். அது கலகலப்பாகவும் கொண்டாட்டத்துடனும் இருந்தது. காரணம் ஒரு வருடம் முன்னர் இயக்கத்தில் சேர வந்த சொப்பனா வீட்டைவிட்டு வெளியேறி இயக்கத்தில் இணைந்துவிட்டார். திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தோழர் சிவா கேட்டபோது ‘போர் துடங்கி விட்டதே’ என்றார். திருச்சி வானொலியைக் கேட்டதிலிருந்து சொப்பனா வானிலிருந்து கீழே இறங்கவில்லை.

தோழர் சிவா ரேடியோவை ஒரு காதில் வைத்தபடியே இருந்தார். துப்பாக்கிதாரிகள் கடத்தியதாக பிபிசி சொன்னது அவர் வாழ்நாளில் கிடைத்த பேறு. மூன்று நாள் முடியும்முன்னரே அவர் நினைத்ததுபோல உலகப் புகழ் கிடைத்துவிட்டது. ‘அது என்ன, சொப்பனா? உம்முடைய அப்பாவுக்கு வேறு பெயர் கிடைக்க வில்லையா?’ இறுக்கமான அவர் முகத்தில் நிரந்திர புன்னகை வந்துவிட்டது. அவள் தலைகுனிந்தாள். ‘பிடிக்கவில்லையா?’ ‘அப்படிச் சொல்லுவேனா? நல்ல பெயர்தான், பொருள் தெரியவில்லை.’ ‘சொப்பனம். சொப்பனம் என்றால் கனவு. கனவானவளே என்று அர்த்தம். கனவிலேதான் நான் ஒருத்தருக்கு கிடைக்கக் கூடியவள்’. ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ என்ற பாடலைக் கேட்டதில்லையா? ‘சிவகவி’ படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடியது. அந்தப்படத்தை அப்பா 9 தடவை பார்த்தாராம். அதுதான் சொப்பனா என்று வைத்திருக்கிறார்.’ ‘அப்பாடி, உம்முடைய பெயரில் இத்தனை விவரம் இருக்கா?’ ‘அடுத்தவரியில் உங்கட பெயர் வருகுது.’ ‘அது என்ன?’ ‘சுப்ரமண்ய ஸ்வாமி உனை மறந்தேன்.’ அவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு ‘என்னை மறப்பீர்களா?’ என்றாள். எட்டுத் துப்பாக்கிகளையும் யாரோ பறித்துவிட்டதுபோல நிராயுதபாணியாக நின்று முத்தமே படாத அவள் முகத்தை ஆராய்ந்தார். எங்கே தொடங்கலாம் என்று தோழரால் முடிவுக்கு வரமுடிய வில்லை.

ஞாயிறு பகல் முடிந்து இரவு தொடங்கியது. விடிந்தால் திங்கள் காலையாகிவிடும். 72 மணி நேரம் கெடு நெருங்கியது. பிணைக் கைதிகளைச் சுடவேண்டும் அல்லது விடுவிக்க வேண்டும். ஞாயிறு இரவு அலென் தம்பதியினரைப் பார்க்க தோழர் சிவா போனார். மிகப் பரிதாபமான காட்சி. அவர்கள் இருவரும் நிலத்திலே உட்கார்ந்து ஐஸ்கிரீம் கூம்பை நக்கிக்கொண்டிருந்தனர். ஒரு போராளியின் மனைவி பக்கத்திலே நின்று சுளகினால் விசுக்கிக்கொண்டிருந்தார். அவர்கள் உடம்பிலே வியர்வை ஆறாக ஓடியது. பயமாக இருக்கலாம். தாங்கமுடியாத வெக்கையாகவும் இருக்கலாம். ‘எல்லாம் வசதியாக இருக்கிறதா?’ ‘ஆமாம் இருக்கிறது. நன்றி.’ என்றார்கள். இரண்டு நிமிடத்தில் 15 தடவை நன்றி சொன்னார்கள். ஐஸ்கிரீம்தான் அவர்களின் கடைசி உணவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே சாப்பிட்டார்கள். தோழர் சிவா சொன்னார். ‘உங்களைக் கொல்லமாட்டோம். நாங்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. உரிமைக்காகப் போராடுகிறோம். ஒருகாலத்தில் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையில் பிரிட்டிஷ்காரரை எதிர்த்து உங்கள் தேசம் விடுதலைக்காகப் போராடினது அல்லவா? அதுபோலத்தான் இதுவும். பொறுத்துக்கொள்ளுங்கள்.’

அன்று இரவு இந்திரா காந்தி அமெரிக்க தம்பதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். எம்ஜிஆர் பொலீஸ் மா அதிபரை அழைத்து விவகாரத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும்படி கட்டளையிட்டார். கே. மோகன்தாஸ் செயல்வீரர் என்று பெயர் எடுத்தவர். இயக்கத் தலைவர் பத்மநாபாவையும் அவருடைய உதவியாளர்களையும் கைது செய்து சென்னை ஹொட்டல் அறை ஒன்றில் அடைத்தார். ‘அங்கே அலென் தம்பதிகள் கொலை செய்யப்படும் அதே நேரம் இங்கே நீங்கள் அனைவரும் கொல்லப்படுவீர்கள்’ என்று கடைசி எச்சரிக்கை விடுத்தார்.’ ‘அலென் தம்பதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்’ என்று பத்மநாபா உத்தியோகபூர்வ மாக ரேடியோவில் அறிவித்தார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆள் கடத்தல் விவகாரம் முற்றுப் பெற்றது.

வேறு வழியில்லை. 14 மே 1984 திங்கள் இரவு சரியாக 8.45 மணிக்கு அலென் தம்பதிகளை யாழ்ப்பாணம் தேவாலயத்தின் ஆயரிடம் இயக்கத்தினர் ஒப்படைத்தனர். தம்பதிகளுக்கும் இயக்கத்தினருக்கும் ஆயர் இஞ்சிக் கோப்பி வழங்கி கொண்டாடினார். அதே சமயம் உரும்பிராய் வேம்பன் ஒழுங்கை கல்வீட்டில் தோழர் சிவா அளவுமீறிய உற்சாகத்தில் இருந்தார். இயக்கம் உலகச் செய்தியாகிவிட்டது. மூன்று நாட்களில் சொப்பனா தோழருடைய இரும்பு இதயத்தைப் பிளந்து உள்ளே நுழைந்துவிட்டாள். கடத்தல் வெற்றிகரமான முடிவை எட்டியபோது அவரைக் கட்டிப்பிடித்துப் பெரிய முத்தம் ஒன்று கொடுத்தாள்.

தோழர் சிவா மறுபடி சொப்பனாவை அணைத்தார். அன்று இரவு அது 17வது தடவை. அவள் அவருடைய தலைமுடியை ஏழு குதிரை வேகத்தில் இழுத்தபடி முன்னேறினாள். அவள் கன்னமும் உதடுகளும் நெற்றிப் பொட்டும் ஒரே சிவப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. ‘ஓ சொப்பனா, சொப்பனா’ என்றார் தோழர் சிவா. அவருக்கு அந்தப் பெயரைப் பலதடவை உச்சரிக்க வேண்டும்போலத் தோன்றியது. அவர் குனிந்து தன் கால் பெருவிரலைப் பிடித்தார். ‘என்ன? என்ன?’ என்று பதறினாள் சொப்பனா. நேற்று மதில் பாய்ந்தபோது காயம் என்றார். ‘இங்கேயா?’ என்று பெருவிரலை தடவினாள். ‘ஓமோம்’ என்று தலையாட்டினார். அங்கே முத்தம் பதித்தாள். ‘இங்கே?’’ என்று கணுக்காலைத் தடவினாள். அவர் ‘ஓமோம்” என்று சொல்ல அங்கே முத்தம் பதித்தாள். ‘இங்கே?’ முழங்காலைத் தடவினாள். ‘ஓமோம்’. அங்கேயும் முத்தம் பதித்தாள். அவள் முத்தங்கள் மேல்நோக்கி ஏறின. உடம்பின் உறுப்பின் பெயர்களும் மாறியபடியே வந்தன.

புத்திஜீவிகளுக்கு ஒரு பழக்கம் உண்டு. சமய சந்தர்ப்பம் தெரியாது. ஏ லெவல் அரவிந்தன் பதற்றமாக உள்ளே நுழைந்தான். ‘நீங்கள் ஆள் கடத்தல் வெற்றி என்று சொல்லி கொண்டாடுகிறீர்கள். இது முழுத்தோல்வி அல்லவா? வெளியிலே தலைகாட்ட முடியவில்லையே?’

‘என்ன தோழர் இப்படிச் சொல்கிறீர்? எங்களுடைய வெற்றியை குறைவாக எடைபோடுகிறீர். இன்று நாங்கள் உலகச் செய்தி. இலங்கை பேப்பர்கள், இந்திய பேப்பர்கள், அமெரிக்க பேப்பர்கள் எல்லாம் இதே செய்திதான். பெருமைப்படும் நாள் இது.’

‘பெருமை கிடக்கட்டும். நாங்கள் எதற்காகக் கடத்தி னோம்? அந்தக் காரணம் நிறைவேறியதா? அதுவல்லவா முக்கியம் தோழர்.’

‘அதிலென்ன சந்தேகம். உலக நாடுகள் எமது இயக்கத்தின் செயல்பாடுகளைக் கண்டு வியப்பு மேலிட்டு நிற்கின்றன. இது சாதனையல்லவா? ஆக 11 பேருடன், 8 வெட்டிய பாதி துப்பாக்கிகளுடன், 12,400 ரூபாய் செலவில் உலக சாதனை படைத்திருக்கிறோம். தோழரே, நீர் ஒரு வரலாற்றுப் புள்ளியில் நிற்கிறீர்.’

தோழர் அரவிந்தன் கீழே பார்த்தார். அவருக்குப் புள்ளி தெரியவில்லை. ‘உங்களுக்குப் புளியமரத்து பேய் கதை தெரியுமா?’ என்றார்.

‘இது கதை பேசும் நேரமில்லை. கொண்டாடும் நேரம் தோழர். சுருக்கமாகச் சொல்லுங்கள்.’

‘ஒரு வீட்டுக்காரர் முன் வளவில் இருந்த புளிய மரத்தில் 10 பேய்கள் குடியிருந்தன. ஒருநாள் வீட்டுக்காரர் புளியமரத்தை வெட்டி எள் விதைக்கத் தீர்மானித்தார். அவருக்கு 10 மூட்டை எள் கிடைக்கும். இதைக் கேள்விப்பட்ட பேய்கள் அலறியடித்துக்கொண்டு அவரிடம் வந்தன. ‘ஐயா, மரத்தை வெட்டவேண்டாம். நாங்கள் எங்கே போவோம்? உங்களுக்கு வருடத்துக்கு 10 மூட்டை எள் தந்துவிடுகிறோம்.’ வீட்டுக்காரர் சம்மதித்தார். சில வருடங்கள் ஓடினதும் ஒரு புதுப்பேய் வந்து சேர்ந்தது. அது சொன்னது, ‘இது கேவலம். மனிதன் அல்லவா பேய்க்குப் பயப்படவேண்டும். நான் அந்த மனிதப் பதரிடம் பேசுகிறேன்’ என்று வீறாப்பாய்ப் போனது. வீட்டுக்காரர் மாட்டுக்கு சூடுபோட இரும்புக் கம்பியை நெருப்பில் பழுக்கக் காய்ச்சிக்கொண்டு இருந்தார். பேயைக் கண்டதும் அவர் கையில் சூட்டுக் கம்பியுடன் பேச வந்தார். பேய்க்கு நாக்குழறியது. ‘நான் புதுப்பேய். நாங்கள் 11 பேய்கள். இனிமேல் 11 மூட்டை எள் - இல்லை, இல்லை - இனிமேல் 11 மூட்டை எள்ளை எண்ணெயாகவே தருகிறோம்.’

‘என்ன சொல்ல வருகிறீர், தோழர்? விளக்கமாகச் சொல்லலாமே.’

‘நாங்கள் கேட்ட பணயப் பணம் 2 மில்லியன் டொலர். அது கிடைக்கவில்லை. சிறையில் இருந்து 20 போராளிகளை விடுவிக்கவேண்டும். அதுவும் நிறைவேறவில்லை. மாறாக சிறையில் அடைத்த போராளிகளின் தொகை 22 ஆக கூடியிருக்கிறது.’

‘அது எப்படி?’ ‘நாங்கள் விடுதலை செய்யக் கோரியவர்களின் பட்டியலில் சிலர் ஏற்கனவே விடுதலையாகி வெளியே இருந்தனர். அவர்களையும் இன்னும் சிலரையும் பொலீஸ் மறுபடியும் பிடித்து சிறையில் அடைத்துவிட்டது. எதற்கு என்று கேட்டதற்கு அப்பொழுதுதானே உங்களை விடுதலை செய்யலாம். அதுதானே கோரிக்கை’ என்றார்களாம். இப்பொழுது சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 22.’

‘அது இருக்கட்டும், தோழர். போராட்டத்தில் ஒன்றிரண்டு பின்னடைவுகள் ஏற்படும். அது இயற்கை. இலங்கை சரித்திரத்தின் திசையை உடைத்திருக்கிறோம்.’

‘ஓம் தலைவா.’

‘இனிமேல் எங்கள் போராட்டம் உலகமயமாக்கப்பட்டு விடும். நகர்வுகள் இல்லை. பாய்ச்சல்தான்.’

‘ஓம் தலைவா.’

‘புதிய பெண்கள் அணி துவங்கப்பட்டுவிட்டது. அதன் தலைவி இவர்தான், சொப்பனா.’

அவசரமாகத் தலையை ஒதுக்கி, சேலையை நேராக்கி, உதட்டுக் காயத்தை மறைத்தவாறு சொப்பனா உடம்பை விறைப்பாக வைத்துக்கொண்டு செருப்புக் காலில் நின்றார்.

‘ஓம் தலைவா.’

http://www.kalachuvadu.com/issue-181/page86.asp

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பன்னிரெண்டாவது பேய்

யமுனா ராஜேந்திரன்

wallpaper-coloured-chaos-1920.jpg

ஈழவிடுதலைப் போராட்டம் போல அந்த நிலம் சார்ந்தவர்களாலேயே உலகின் வேறு எந்த விடுதலைப் போராட்டமும் இவ்வளவு இழிவுபடுத்தப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். விடுதலைப் போராட்டம் இலங்கை அரசினதும் உலக அரசுகளினதும் அரசியல் வியூகத்தினால் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. 1,50,000 ஈழமக்கள் இலங்கை அரசினால் கொல்லப்பட்டார்கள். போராட்டத்தின் வீழ்ச்சிக்கு போராளி இயக்கங்களின் அரசியல் தந்திரோபாயத் தவறுகள் பகுதிக்காரணமாக இருப்பினும் 1989 ஆம் ஆண்டு நிகழ்ந்த சோவியத் வீழ்ச்சி மற்றும் 2001 ஆம் ஆண்டு நிகழ்ந்த நியூயார்க் செப்டம்பர் தாக்குதல் நிகழ்வுகளையடுத்து உலக அரசுகள் அனைத்தும் ஒப்பிய பயங்கரவாத எதிர்ப்பு எனும் நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் உலகெங்குமிருந்த விடுதலை இயக்கங்கள் தமது விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு நடத்த வேண்டியிருந்தன.

நடந்து முடிந்த ஒரு வீழ்ந்துபட்ட மக்கள் கூட்டத்தின் இறையாண்மைக்கான போராட்டம் குறித்த மீள்பார்வை அல்லது விமர்சனம் என்பதற்கான முறையியலைக் கண்டடையவேண்டியது அந்தச் சமூகத்தின் அறிவுஜீவிகளதும் கலைஞர்களதும் பொறுப்பாகிறது. துரதிருஷ்டவசமாகத் தனிநபர்களை ஒரு நிகழ்வுக்குப் பொறுப்பாக்குகிற, அவர்களை மிக இழிவாகச் சித்தரிக்கிற புனைவுகளும் அபுனைகளும்தான் இங்கு விமர்சனமுறையியலாக அறியப்பட்டிருக்கிறது. பிளாட் அல்லது டெலோ பற்றிய இழிசித்தரிப்புகளை புலிகள் கொண்டாடுவர். புலிகள் பற்றிய இழிசித்தரிப்புக்களை டெலோ அல்லது ஈபிஆர்எல்எப்பினர் கொண்டாடுவர். ஈபிஆர்எல்எப் குறித்த இழி சித்திரிப்புகளை புலிகள் கொண்டாடுவர். போராளி இயக்கத்தலைவர்கள், ஆண், பெண் போராளிகள் என இவர்களது இழிசித்திரிப்புகளுக்குத் தப்பியவர்கள் வெகுசொற்பம். இந்தச் சித்தரிப்புகளில் எழுதுபவரின் காமக்களியாட்டக் குரோதங்கள் விகாரமாக இளித்துக் கொண்டிருக்கும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து ஐந்து ஆண்டுகளின் பின் முப்பதாண்டுகால ஈழப் போர்க்காலம் குறித்த விமர்சனப் புனைவு மற்றும் அபுனைவின் முகம் இன்று இதுதான். இந்த எழுத்துவகையினத்தின் இழிவின் கடைசிக் கண்ணிதான் ஈழ அரசியலிலோ அல்லது ஈழடுதலைப் போராட்டத்திலோ அல்லது பொதுவான கிளர்ச்சி அரசியலிலோ எந்த ஈடுபாடும் எப்போதும் காட்டியிராத அ.முத்துலிங்கத்தின் ‘பதினோரு பேய்கள்’ எனும் சிறுகதை.

முத்துலிங்கம் இன்று ஈழச்சூழலில் அல்லது தமிழகச் சூழலில் பெற்றிருக்கும் முக்கியத்துவத்திற்கான காரணம் என்ன? லாண்டரிக் கணக்கையும் சுவாரசியமான எள்ளல் நடையில் எழுதுகிற சுஜாதா போன்று எதையும் மிகமேற்போக்காக நக்கலாக எழுதுகிற எழுத்துப்பாணி அவருடையது. அவருக்கு கனடா தமிழ்த்தோட்டத்தின் இயல்விருதில் இருக்கிற இலக்கிய அதிகாரம் ஈழம் மற்றும் தமிழகம் என விருது அங்கீகாரத்திற்கு அலைகிற அத்தனைக் கனவான் எழுத்தாளர்களையும் அவர் குறித்துப் பேசவைக்கிறது அல்லது அவரது தயவுக்கு அலையவைக்கிறது. அரசியல் காரணங்களினால் ஈழத்தமிழர்களின்பால் பொதுவாகத் தமிழகத்தில் நிலவுகிற அனுசரணையான உணர்வை தமது புகழுக்கெனக் கச்சிதமாக அறுவடை செய்து கொண்டவர்களில் முத்துலிங்கம் முக்கியமானவர்.

எந்தவிதமான சீரிய சிந்தனயோ மானுட தரிசனமோ அற்ற மிகச் சாதாரணமான பொக்கையான தட்டையான அந்தந்த நேர வாசிப்புச் சுவாரசியம் தருபவை என்பதனால் மட்டுமே வாசகரைக் கவரும் எழுத்து முத்துலிங்கத்தினுடையது. தமிழகத்தில் ஜி.நாகராஜன் முதல் கோபிகிருஷ்ணன் வரை, ஈழத்தில் கோவிந்தன் முதல் குணா கவியழகன் வரை என தீவிர இலக்கியம் வாசிப்பவர்கள் இந்தக் கனடிய மேட்டுக்குடிக் கனவானது எழுத்துக்கள் இயங்கும்வெளி தினத்தந்திப் பத்திரிக்கையின் ‘பருவப்பெண் பாவடையில் இரத்தம், கல் தடுக்கியதால் விளைந்த விபரீதம் ’எனும் சுவாரசிய எழுத்துக்குக் கொஞ்சும் மேலானது மட்டும்தான் என்பதை அறியமுடியும்.

1984 மே 10 ஆம் திகதி அமெரிக்கப் பிரஜைகளான அலன் தம்பதிகளை யாழ்ப்பாணத்தில் வைத்து ஈபிஆர்எல்எப் அமைப்பைச் சேர்ந்த மக்கள் விடுதலைப் படை கடத்தியது. இந்தக் கடத்தில் அந்த இயக்கத்தின் தலைவர்கள் பத்மநாபா, வரதராஜபெருமாள் மற்றும் அன்றைய மக்கள் விடுதலைப் படைத்தளபதி டக்ளஸ் தேவானந்தா போன்றோரின் அறிவுறுத்தலில்தான் நடைபெற்றது என்று இலங்கையில் இந்தியத் தலையீடு பற்றிய தனது நூலில் எழுதுகிறார் பயங்கரவாத ஒழிப்பு நிபுணர் ரோகான் குணரத்ன.

இச்சம்பவம் பற்றி 2010 ஆம் ஆண்டு செப்ட்பர் 12 ஆம் திகதியிட்ட த நேஷன் இதழில் எழுதும் டி.சபாரத்னம் இத்தகைய நடவடிக்கைளில் ஈடுபட்டதற்கான தனது வருத்தத்தை அல்லது மன்னிப்புக் கோரலை நல்லிணக்க ஆனைக்குழுவினர் முன் அன்றைய இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிவு செய்ததாக எழுதுகிறார்.

எண்பதுகளில் தமிழக இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த மோகன்தாஸ் அன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலர் டி.அந்தோனிக்கு வழங்கிய தனது நேரடி அறிக்கையில் அலன் தம்பதியர் விடுவிக்கப்படவில்லையானால் பத்மநாபா, வரதராஜ பெருமாள், டக்ளஸ் தேவானந்தா போன்றோரிடம் அவர்கள் மூவரும் சுட்டுக் கொலை செய்யப்படுவார்கள் என ஏகே47 முனையில் மிரட்டல் விடுத்ததனையடுத்து மக்கள் விடுதலைப் படைத்தளபதி டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்திற்குத் தொடர்பு கொண்டு அலன் தம்பதிகளை விடுவிக்கப் பணிக்கிறார். அலன் தம்பதிகள் விடுவிக்கப்படுகிறார்கள்.

இந்த வேறுபட்ட மூன்று வாக்குமூலங்களில் இருந்து நாம் ஒரு பொதுவான முடிவுக்கு வரமுடியும். ஈபிஆர்எல்எப்பின் தலைமைக்கு அலன் தம்பதியர் கடத்தல் முன்கூட்டியே தெரியும். அதனை அன்றைய மக்கள் விடுதலைப் படைத்தளபதி டக்ளஸ் தேவானந்தாவே நெறிப்படுத்தினார். இத்தகைய செயல்களுக்காகப் பிற்பாடு அவர் வெளிப்படையாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆனைக்குழுவின் முன்பாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இதிலிருந்து பெறப்படும் ஒரு தரவு யாதெனில் : அலன் தம்பதியர் கடத்தில் ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் தலைமையின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டதேயன்றி மனம்பேதலித்த ஓரு சில விடலைகளால் நிகழ்த்தப்பட்ட அபத்த நாடகம் இல்லை அது என்பதுதான்.

அ.முத்துலிங்கம் ஆண்டு திகதி குறிப்பிட்ட அலன் தம்பதிகள் கடத்தில் சம்பவத்தினையடுத்து இலங்கை, இந்தியா, தமிழகம், அமெரிக்கா என்ற நாடுகளில் இடம்பெற்ற ஊடகச் செய்திகள், தலைவர்கள் மற்றும் இலங்கை இந்தியப் படையினருக்கு இடையிலான ஊடாட்டங்கள் என அனைத்தையும் ஏதும் புனைவற்று உள்ளபடியே எழுதுகிறார். லலித் அதுலத் முதலி, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, எம்.ஜி.ஆர், மோகன்தாஸ், ஜோர்ஜ் புஸ், இந்திரா காந்தி என அரசியல் தலைவர்கள், கார்டியன், பிபிசி, நியூயார்க் என ஊடகங்கள் என நிஜஉலகை அவர் கதையில் மறுபடைப்புச் செய்கிறார்.

இந்தக் கதையில் இரண்டு விஷயங்களைப் புனைவாக்கி எழுதுகிறார் முத்துலிங்கம். ஓன்று, இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்ட குழுவிலுள்ள பெண்ணுக்கு ‘சொப்பனா’ எனப் பெயர். கடத்தலுக்குத் தலைமையேற்பவருக்கு தோழர்.சிவா சுப்பிரமணியம் எனப்பெயர். இரண்டாவது புனைவுதான் மிக முக்கியமானது. பிற போராளி இயக்கங்கள் செய்துவரும் தாக்குதலால் மனம்வெம்பி சில விதூஷகர்களும் முட்டாள்களும் ஈபிஆர்எல்எப் தலைமைக்குத் தெரிவிக்காமல் அலன் தம்பதிகளைக் கடத்துகிறார்கள். ஓரு உண்மை நிகழ்வின் புறநிலை சார்ந்த அனைத்து அம்சங்களையும் உள்ளபடி எழுதிவிட்டு அந்த நிகழ்வின் மிக ஆதாரமான வரலாற்று உண்மையைப் புனைவாகவும் கொச்சையாகவும் முன்வைத்திருக்கிறார் முத்துலிங்கம்.

ஓரு அரசியல் தலைமையால் அரசியல் பரிமாணத்துடன் அவர்களது வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வை ஒரு சில விதூஷகர்களின் முட்டாள் விளையாட்டாக அவர் புனைகிறார். ஈழவிடுதலைப் போராட்டத்தின் பெண்போராளி ஒருவர் தலைவரை வசியப்படுத்தி அவருடன் 17 முறை உறவுகொள்கிறாள் எனவும் புனைகிறார் முத்துலிங்கம். பின்வருவது புனைவும் புனைவல்லாததுமான முத்துலிங்கத்தின் கதை விவரணைப் பகுதிகள் :

…..ஒரு வருடம் முன்னர் சொப்பனா இயக்கத்தில் சேர வந்தபோது தோழர் சிவா மறுத்துவிட்டார். ’நான் எப்படி முடிவு செய்யமுடியும். கமிட்டிதான் முடிவு செய்யும்’ என்று சொல்லி கடத்தினார். பெண் விடுவதாயில்லை. ’என்ன கமிட்டி? நீங்கள்தானே கமிட்டி’ என்று பிடிவாதம் பிடித்தாள். தன் வளைவுகளை மேலும் விஸ்தரித்துக்கொண்டு நின்றாள்….

….அமெரிக்காவிலிருந்து சுற்றுலா வரும் ஆளைக் கடத்தினால் உலகப் பிரபல்யம் உடனேயே கிடைத்துவிடும். என்ன கோரிக்கை என்பதை பிறகு தீர்மானிக்கலாம்’ என்றார். எல்லோருக்கும் பிடித்துக் கொண்டது. ஜனாதிபதி ரேகன் டெலிபோனில் அவர்களை அழைத்துக் கெஞ்சுவது கண் முன்னே வந்தது……இத்தனை சுலபமாக திட்டத்தை செயலாக்கலாம் என ஒருவருமே நினைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலென் தம்பதிகள் வசித்தனர். ஒரு மாதம் முன்புதான் திருமணம் செய்து குடிநீர் ஆராய்ச்சி செய்வதற்காக வந்திருந்த ஸ்டான்லி அலெனுடன் புது மனைவி மேரியும் இருந்தார். இருவரும் அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தின் ரூஃலின் கம்பனிக்காக வேலைசெய்தனர்……

……தோழர் சிவா மறுபடி சொப்பனாவை அணைத்தார். அன்று இரவு அது 17வது தடவை. அவள் அவருடைய தலைமுடியை ஏழு குதிரை வேகத்தில் இழுத்தபடி முன்னேறினாள். அவள் கன்னமும் உதடுகளும் நெற்றிப் பொட்டும் ஒரே சிவப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. ’ஓ சொப்பனா சொப்பனா’ என்றார் தோழர் சிவா. அவருக்கு அந்தப் பெயரை பலதடவை உச்சரிக்க வேண்டும்போல தோன்றியது. அவர் குனிந்து தன் கால் பெருவிரலை பிடித்தார். ’என்ன? என்ன?’ என்று பதறினாள் சொப்பனா. நேற்று மதில் பாய்ந்தபோது காயம் என்றார். ’இங்கேயா?’ என்று பெருவிரலை தடவினாள். ’ஓமோம்’ என்று தலையாட்டினார். அங்கே முத்தம் பதித்தாள். ’இங்கே?’’ என்று கணுக்காலை தடவினாள். அவர் ‘ஓமோம்” என்று சொல்ல அங்கே முத்தம் பதித்தாள். ’இங்கே?’ முழங்காலை தடவினாள். ’ஓமோம்.’ அங்கேயும் முத்தம் பதித்தாள். அவள் முத்தங்கள் மேல்நோக்கி ஏறின. உடம்பின் உறுப்பின் பெயர்களும் மாறியபடியே வந்தன……..

கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்திசெய்து வேலைபார்த்து பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பின் பணிபுரிந்து 2000 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் வசிக்கும் ‘புரட்சிகர அறிவுஜீவி’ அ.முத்துலிங்கம், காலச்சுவடு இதழில் ‘பதினோரு பேய்கள்‘ என இப்படித்தான் சிறுகதை எழுதியிருக்கிறார்.

சம்பவம் நிகழ்ந்த முப்பது ஆண்டுகளின் முன் இந்தச் சம்பவம் எவ்வாறு நோக்கப்பட்டது என்பதற்கும் இப்போது அது எவ்வாறு பொதுச்சமூகத்தினால் நோக்கப்படும் என்பதற்குமான இடைவெளியை அலசுவதன் மூலம் இந்தக்கதை எழுத அ.முத்துலிங்கத்தை உந்திய அவரது மனதை நாம் புரிந்து கொள்ள முடியும். எழுபதுகள் எண்பதுகள் என்பன உலகில் விடுதலைப் போராட்டங்கள் வீறுடன் நிகழ்ந்துகொண்டிருந்த காலம். ராணுவ சர்வாதிகாரிகளையும் எதேச்சாதிகார ஆட்சியாளர்களையும் அமெரிக்க மேற்கத்திய அரசுகள் ஆதரித்து வந்த காலம் அது. இவர்களுடன் இஸ்ரேலும் இத்தகைய அரசுகளை ஆதரித்து வந்தன.

உலகின் அனைத்து தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் இரண்டு எதிரிகள் இருந்தனர். உள்நாட்டில் ஒடுக்கும் அரசுகள். அந்த ஒடுக்கும் அரசுக்கு ஆதரவும் ஆயுதமும் தந்த அமெரிக்க-மேற்கத்திய-இஸ்ரேலிய அரசுகள். இவர்கள் இருவரையும் போராளி இயக்கங்கள் வெறுத்தன.

ஜெர்மனியில் ரெட் பிரிகேட், ஜப்பானில் ரெட் ஆர்மி, பாலஸ்தீனத்தில் ஜார்ஸ் ஹபாசின் விடுதலைப் படை, அமெரிக்காவில் பிளாக் பாந்தர் அமைப்பு போன்றன அமெரிக்க மேற்கத்திய பொருளாதார நலன்களைத் தாக்கி அழித்தார்கள். விமானங்களைக் கடத்தினார்கள். அமெரிக்கர்களை இஸ்ரேலியர்களைக் கடத்தினார்கள். இந்த வன்முறை நடவடிக்கையை உலகின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகள் என்றார் சார்த்தர். உளவியலாளரும் கோட்பாட்டாளருமான பெனான் இவர்களுக்காகப் பேசினார். ஜெனே இவர்களோடு நின்றார்.

அமெரிக்கா தனது உளவமைப்பின் மூலம், தனது தூதரகங்கள், வியாபார நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், கலாச்சார அமைப்புகள் போன்றவற்றின் வழியில் தனது பிரஜைகளை பிற நாடுகளை உளவறிய உபயோகித்தது. இந்தச் சூழலியே அமெரிக்கப் பிரஜைகளும் கடத்தப்பட்டார்கள். அப்போது இலங்கையில் இஸ்ரேல் உளவமைப்பு இலங்கை அரசுக்கு உதவிக் கொண்டும் இருந்தது. அலன் தம்பதியர் கடத்தலும் இத்தகைய உலக நிகழ்வுப்போக்கின் அங்கம்தான்.

மேட்டுக்குடி மனிதரான முத்துலிங்கத்திற்கு இத்தகையவர்களைப் புரிந்து கொள்ளவோ இவர்களைப் பரிவுடன் நோக்கவோ ஆன மனநிலையோ அறிவோ இருந்திருக்க முடியாது. இத்தகையை உலகப்போக்கு குறித்த அறிவு முத்துலிங்கத்திற்கு இருந்ததான அல்லது இருப்பதான எந்தத்தடயமும் அவரது எழுத்துக்களில் இல்லை.

தனக்கு முன்னால் வரிசையில் நிற்கிற பெண், தனக்கு முடிவெட்டுபவர், தான் விரும்பும் எழுத்தாளர், தான் தேடிப்போன மாட்டுமந்தை வாழ்வனுபவம் என இவ்வாறான தன்னனுபவத்தைப் புனைவுகலந்து பெரும்பாலும் எள்ளலுடன் சில சமயம் மனோரதியத்துடன் எழுதுவதான் அவரது எழுத்துலகு. ஆனாலும், அவரது மேட்டுக்குடி வாழ்நிலை அவருக்குத் தந்திருக்கும் கிளர்ச்சி செய்யும் மனிதர்பாலான அவரது ஒவ்வாமை-துவேஷம்-அறுவறுப்பு போன்றவற்றை எவ்வாறு தீர்த்துக் கொள்வது?

தனது அனுபவத்துக்கு முற்றிலும் புறம்பான, தான் கேள்விப்பட்டதற்கு மூக்கும் முழியும் சேர்த்து ‘பதினோரு பேய்கள்’ மாதிரிக் கதைகளை, போராளிகளும் போராட்டங்களும் குறித்த கதைகளை அவர் அவ்வப்போது எழுதிக் கொண்டேயிருக்கிறார்.

பதினோரு பேய்கள்’ கதையை அவர் எப்போது எழுதுகிறார்? சம்பவம் நடந்து முப்பது ஆண்டுகளின் பின், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் பெயரில் சகல விடுதலைப் போராட்டங்களும் அவர்தம் செயல்பாடுகளும் அமெரிக்க-மேற்கத்திய-இஸ்ரேலிய அரசுகளால் கொச்சைப்படுத்தப்படும் சூழலில், அனைத்து விடுதலை இயக்கங்களதும் முன்னணித் தலைவர்களும் போராளிகளும் கொல்லப்பட்ட சூழலில், முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னால், இலங்கை இராணுவம் சட்டபூர்வமாக இலங்கைத் தீவெங்கிலும் காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என இலங்கையின் மகிந்தவுக்குப் பின்னான சிறிசேனா அரசு அறிவித்த சூழலில், அனைத்துக்கும் மேலாக மத அடிப்படைவாதிகளான ஐஎஸ்ஐஎஸ்சியினர் அமெரிக்கர்களைக் கடத்தி அவர்தம் தலைவெட்டும் ஒளிப்பதிவுகள் வரும் காலத்தில் இக்கதையை எழுதுகிறார்.

‘இலங்கையில் இந்திய அமைதிப்படை எந்தவிதமான மனிதஉரிமை மீறலிலும் பாலியல் வல்லுறவிலும் ஈடுபடவில்லை’ என ‘தானைத்தலைவன்’ ஜெயமோகன் சொன்னபோது கொஞ்சமும் அசையாத அ.முத்துலிங்கத்தின் புனைவுமனம், எவ்வளவுதான் பிழைகளோடும் சிறுபிள்ளைத்தனங்களோடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் அதில் ஆத்மசுத்தியுடன் ஈடுபட்ட ஆண்-பெண் போராளிகளை பாலியல் கொச்சைகளுடன் சித்தரிக்க இப்போது, ஆம் இப்போது மட்டும், எப்படி இசைந்தது?

http://yamunarajendran.com/?p=1836

Link to comment
Share on other sites

முத்துலிங்கம் "பதினோரு பேய்களை " எழுதியது மிக சந்தோசமான விடயம் .முன்னரே அவர் எழுத்துக்களில் விமர்சனம் இருந்தாலும் இந்த கதையுடன் அவர் முகத்திரை பல  பிரபலங்களாலும் கிழிக்கபட்டிருக்கு.அதைவிட  மிக கொச்சையாக பலரால் தூற்று வாங்கியும் இருக்கின்றார் .தனது இணையத்தில் இருந்து இந்த கதையை உடனேயே எடுத்தும் விட்டார் ..

 

இனி பொது நிகழ்வுகளுக்கு வரவே யோசிக்கும்  நிலைக்குத்தான் இந்த கதை அவரை தள்ளிவிட்டிருக்கு . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.