Jump to content

சிறிலங்காவின் புதிய அரசாங்கமும் மகிந்தவின் பழைய அரசாங்கமும் ‘ஒரே முகத்துடனேயே’ உள்ளன – மாயா அருள்பிரகாசம்


trinco

Recommended Posts

தமிழ் சமூகத்தினர் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை மிகவும் நேசிப்பதால் இவர்கள் தேர்தலில் சிறிசேனவுக்கு ஆதரவாக அதிகம் வாக்களித்துள்ளனர் எனவும் இதனால் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழ் சமூகத்தின் ‘அடிப்படைத் தேவைகளை’ மீளவும் நிலைநிறுத்த வேண்டும்’

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு யுத்த மீறல்களை மேற்கொண்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்ச அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்டதையடுத்து, ஈழத்தமிழரான இசைக் கலைஞர் மாயா அருள்பிரகாசம் சனல் 04 செய்திச் சேவையிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்ப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட யுத்தம் மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மே 2009ல் சிறிலங்கா இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கையின் போது போர் வலயங்களில் அகப்பட்டிருந்த தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டதாகவும் இதில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

போரின் போது தமிழ்ப் புலிகள் சிறார்களைப் போரில் ஈடுபடுத்தியமை, போர் வலயத்தில் அகப்பட்டிருந்த தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை மற்றும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டமை உட்பட பல்வேறு யுத்த மீறல்களில் ஈடுபட்டதாக சிறிலங்கா அரச தரப்பு குற்றம் சுமத்தியது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக ஐ.நா தற்போது விசாரணைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் ராஜபக்ச இதற்குத் தனது ஒத்துழைப்பை வழங்க மறுத்துவிட்டார்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டவரும் போரின் இறுதிக்கட்டத்தில் ராஜபக்சவின் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்பட்டவருமான மைத்திரிபால சிறிசேன தற்போது அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய புதிய அதிபர் சிறிசேனவும் தனது நாட்டில் அனைத்துலக விசாரணைகள் இடம்பெறுவதற்கு தனது ஒத்துழைப்பை வழங்க மறுத்துள்ளதாக சனல் 04 செய்திச் சேவையிடம் அருள்பிரகாசம் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் கடந்த முப்பது ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்த அரசியல்வாதிகளே தற்போது சிறிசேனவின் அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பதால் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ‘ஒரே முகத்துடனேயே’ உள்ளதாகவும் அருள்பிரகாசம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் சமூகத்தினர் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை மிகவும் நேசிப்பதால் இவர்கள் தேர்தலில் சிறிசேனவுக்கு ஆதரவாக அதிகம் வாக்களித்துள்ளனர் எனவும் இதனால் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழ் சமூகத்தின் ‘அடிப்படைத் தேவைகளை’ மீளவும் நிலைநிறுத்த வேண்டும் என மாயா அருள்பிரகாசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் ராஜபக்ச அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவமயமாக்கல் போன்ற சில முன்னெடுப்புக்களைப் புதிய அரசாங்கம் களையும்போது மட்டுமே நாட்டில் மீளிணக்கப்பாட்டை நிலைநிறுத்த முடியும் என மாயா அருள்பிரகாசம் சனல் 04 செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

“ஐ.நா விசாரணையின் போது ராஜபக்ச ஹேக்கிற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் போருக்குப் பின்னான தற்போதைய சூழலில் அமைதியுடன் வாழவேண்டும் என்பதே எமது முதன்மையான கோரிக்கையாகும். போர் தொடங்கிய காலத்திலிருந்து பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் மீது பல்வேறு மீறல்கள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழ் மக்களும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களும் பலவந்தமாகக் காணாமற்போயுள்ளனர்” என அருள்பிரகாசம் தனது நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2009லிருந்து சிறிலங்காவிற்கு சனல் 04 தொலைக்காட்சி சேவை பயணிப்பதற்கான அனுமதி சிறிலங்கா அரசாங்கத்தால் மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபோது மட்டும் சனல் 04 தொலைக்காட்சி சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் போது சனல் 04 தொலைக்காட்சி சேவையும் சிறிலங்காவுக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் நிபந்தனை விதித்திருந்தார். சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தொடர்பாக சிறிலங்கா உயர் ஆணையாளருடன் நேர்காணலை மேற்கொள்வதற்கு சனல் 04 தொலைக்காட்சி சேவை கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை இதற்கான எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக பாப்பரசர் ஒருவர் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை தற்போது மேற்கொண்டுள்ளார். தற்போதைய பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் கடந்த செவ்வாயன்று சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட போது, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா விசாரணைக்கு ஆதரவு வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

“‘பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு உண்மையைக் கண்டறிய வேண்டுமே தவிர பழைய காயங்களைக் கிளறுவதை நோக்காகக் கொண்டிருக்கக் கூடாது. நீதியை மேம்படுத்தல், ஆற்றுப்படுத்தல் மற்றும் ஒற்றுமை போன்றன இதற்கு மிகவும் அவசியமானவையாகும்” என சிறிலங்காவின் தலைநகரான கொழும்பைச் சென்றடைந்த போது பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

“மீள்கட்டுமானம் என்பது உட்கட்டுமானங்களைப் புனரமைத்தல் மற்றும் வளங்களைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியிருப்பினும், இதற்கும் மேலாக, மனித கண்ணியத்தை ஊக்குவித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும் உள்ளீர்க்கப்படுதல் போன்றன முதன்மைப்படுத்தப்பட வேண்டும்” என பாப்பரசர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட பாப்பரசர் சிறிலங்காவின் புதிய அதிபர் சிறிசேனவையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது தனது அரசாங்கம் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட பின்னர் மக்கள் மத்தியில் சமாதானம் மற்றும் நட்புறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும் சிறிசேன, பாப்பரசரிடம் தெரிவித்தார்.

 

 

http://www.puthinappalakai.net/2015/01/16/special-news/2935

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.