Jump to content

பிரான்ஸில் சாலையோரம் சென்றவர்கள் மீது காரை ஏற்றி அல்லாஹு அக்பர் என்றவர் கைது


Recommended Posts

பிரான்ஸில் சாலையோரம் சென்றவர்கள் மீது காரை ஏற்றி அல்லாஹு அக்பர் என்றவர் கைது

 

பாரிஸ்: பிரான்ஸில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது காரை ஏற்றிய டிரைவர் ஒருவர் அல்லாஹு அக்பர் என்று அரபியில் முழக்கமிட்டுள்ளார். பிரான்ஸின் டிஜான் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தனது காரை சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது ஏற்றினார். அவர் அரை மணிநேரத்தில் நகரின் 5 இடங்களில் இவ்வாறு செய்தார். இந்த சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர். அதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

பிரான்ஸில் சாலையோரம் சென்றவர்கள் மீது காரை ஏற்றி அல்லாஹு அக்பர் என்ற நபர் அந்த நபர் காரை மக்கள் மீது ஏற்றிவிட்டு இறைவன் சிறந்தவர் என பொருள் கொண்ட அரபி வாக்கியமான அல்லாஹு அக்பர் என்பதை முழங்கியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் மனநல மருத்துவமனையில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய வழக்குகளில் சிக்கியவர் என்று கூறப்படுகிறது.

 

நடந்த சம்பவத்திற்கு பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமை டூர்ஸ் நகரில் 3 போலீஸ் அதிகாரிகளை தாக்கிவிட்டு அல்லாஹு அக்பர் என்று கூறியவரை போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். மேற்கு ஐரோப்பாவிலேயே பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிக அளவில் உள்ளனர். பிரான்ஸில் 5 முதல் 6 மில்லியன் வரை முஸ்லீம்கள் வசித்து வருகிறார்கள். அண்மை காலமாக தனி நபர் ஒருவர் பிறரை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/international/driver-yelling-allahu-akbar-ploughs-into-people-france-217552.html

Link to comment
Share on other sites

ஆபத்து எங்கிருந்து என்ன வடிவில் வரும் என்று சொல்ல முடியவில்லை. அல்லாஹு அக்பர் என்ற சத்தம் கேட்டால் நாங்கள் ஓடி ஒழிக்கத் தயாரா இருக்கிறம்.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன நிலை பாதிப்படைந்தவர்கள், பள்ளிவாசல், இமாம்கள் என்ற போர்வையில் பல இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஒளிந்திருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுவடைந்து வருகின்றது.

Link to comment
Share on other sites

இனிமேல் கருத்துக்களத்திலும் இவ்வாறு சொல்லிக்கொண்டே தாக்குதல் செய்யலாம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் கருத்துக்களத்திலும் இவ்வாறு சொல்லிக்கொண்டே தாக்குதல் செய்யலாம்.. :D

 

 

நன்றி 

அல்லாஹு அக்பர் :lol:  :D
Link to comment
Share on other sites

இஸ்லாமிய சகோதரர்களை அவதூறு கூறுவதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்........  <_<  :(  :D 

 
அல்லாஹு அக்பர் .................. :o  :D 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.