Jump to content

ஆளும் தரப்புக்கு மாறினார் சதாசிவம்


Recommended Posts

sathasivam.jpg
 
ஐக்­கிய தேசிய கட்­சியின் மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­ன­ணியின் செய­லா­ள­ரு­மான எஸ். சதா­சிவம் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு வழங்க தீர்­மா­னித்­துள்ளார்.அத்­துடன் அவ­ரது இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­ன­ணியும் ஜனா­தி­ப­தியின் வெற்­றிக்கு முழு­மை­யான அர்ப்­ப­ணிப்பை வழங்­கு­மெ­னவும் எஸ்.சதா­சிவம் தெரி­வித்தார்.
 
நேற்று கொழும்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பினால் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட எஸ்.சதா­சிவம் தனது இந்த முடிவை அறி­வித்தார். விசே­ட­மாக நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­கின்­ற­மையே பொது எதி­ர­ணி­யுடன் முரண்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­த­தா­கவும் அவர் கூறினார்.
செய்­தி­யாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;
 
இது­வரை காலமும் நான் ஜக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து கொண்டு மக்­களின் நன்­மைக்­காக செயற்­பட்­டுள்ளேன். எனினும் தற்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­பா­டுகள் முற்­றிலும் மக்கள் நல­னுக்கு எதி­ராக உள்­ளது. மலை­யக மக்­க­ளுக்கு பல பிரச்­சி­னைகள் உள்­ளன. வீட்டுப் பிரச்­சினை சம்­பள உயர்வு, சுகா­தார பிரச்­சி­னைகள் என்­பன உள்­ளன. ஆனால் அவற்றை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் தீர்த்­து­வைத்­துள்­ளனர். எனினும் இவை அனைத்­தையும் விடவும் மிகப்­பெ­ரிய சிக்கல் பொது எதி­ரணி சொல்­வது தான். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வ­தாக பொது எதி­ரணி தெரி­வித்­தி­ருப்­பது மிகவும் மோச­மான செயற்­பா­டாகும். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கினால் அது சிறு­பான்மை மக்­க­ளுக்கு மிகவும் பாதிப்­பாக அமையும்.
 
நாட்டில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை அவ­சி­ய­மாக செயற்­பட வேண்­டி­ய­தொன்­றாகும். சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களை பாது­காப்­பதில் நிறை­வேற்று முறை­மையே முக்­கி­ய­மா­னது. இதனை நீக்­கு­வது சிறு­பான்மை மக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­விடும்.
 
மேலும் பொது எதி­ர­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களை மறந்து விட்­டனர். எனவே அவை அனைத்தையும் கருத்திற் கொண்டே நான் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் இருந்து அரசாங்கத்திற்கு வந்துள்ளேன்.நாம் இனி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றிக்காக போராடி வெற்றியினை உறுதிப்படுத்துவோம் என்றார்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.