Jump to content

டி.ஆர்.எஸ்., முறையை ஏற்குமா இந்தியா


Recommended Posts

டி.ஆர்.எஸ்., முறையை ஏற்குமா இந்தியா
டிசம்பர் 21, 2014.

 

புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அம்பயரின் தவறான முடிவுகள் சர்ச்சை கிளப்பின. இதனால், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறையை இந்தியா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் சில நேரங்களில் அம்பயர்கள் தவறான தீர்ப்பு தருவர். இதனால் போட்டியின் முடிவே மாறிவிடும். இதை தடுப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறையை கொண்டு வந்தது.

 

இரு அணிகள் மோதும் தொடரில், ஏதாவது ஒரு அணி எதிர்ப்பு தெரிவித்தாலும் இதனை பயன்படுத்த முடியாது. இந்திய அணி துவக்கம் முதலே எதிர்த்து வருவதால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ்., முறை பின்பற்றப்படவில்லை. இதனால் இந்தியாவுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டது. முதலிரண்டு போட்டியில் நமக்கு எதிராக 5 முறை அம்பயர்கள் தவறான தீர்ப்பு தந்தனர். இதனால், டி.ஆர்.எஸ்., முறையை இந்தியா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

இது குறித்து இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் சிலரது கருத்து.

 

ஹர்பஜன் சிங்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் தவானுக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டது. பிரிஸ்பேன் போட்டியில் புஜாரா, அஷ்வின் உள்ளிட்டோருக்கு இதே போல நடந்தது. இதனால், டி.ஆர்.எஸ்., முறையை இந்திய அணி ஏற்றுக் கொள்ள வேண்டும். இம்முறை 100 சதவீதம் துல்லியமானது இல்லை. 90 சதவீதம் நம்பலாம்.

 

லட்சுமண்: துல்லியமான முடிவை தருகிற எந்த தொழில்நுட்பத்தையும் வரவேற்கலாம். ஆனால், டி.ஆர்.எஸ்., முறையை பொறுத்தவரை இன்னும் நம்பகத்தன்மை வரவில்லை.  

          

அசார்: டி.ஆர்.எஸ்., முறையை மற்ற அணிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தியா மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது. பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய வீரர்கள் அம்பயரின் தவறான தீர்ப்பால் பாதிக்கப்பட்டனர். ஐ.சி.சி., உருவாக்கிய ஒரு முறையை, ஏற்பதில் என்ன பிரச்னை உள்ளது.      

 

வெங்சர்க்கார்: டி.ஆர்.எஸ்., முறையில் 100 சதவீதம் துல்லியம் இல்லை என்பதற்காக எதிர்த்தேன். ஆனால், அடிலெய்டு, பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணிக்கு ஏற்பட்ட பாதிப்புக்குபின் இதை ஏற்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

 

அம்பயரின் தவறான தீர்ப்பை ஏற்க முடியாது. இதனை மறுபரிசீலனை முறையை துவக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறேன்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419179598/DRSMethodTestCricketIndiaAustralia.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.