Jump to content

எனது அடுத்த குறி சிதம்பரம்: சுப்ரமணியன்சாமி


Recommended Posts

Tamil_News_large_114342220141221215809.j

 

புதுடில்லி: ஜெயலலிதா, கறுப்பு பணத்திற்கு அடுத்து சிதம்பரம் தான் எனது அடுத்த இலக்கு என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார். 
 
இது தொடர்பாக அவர் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலிலும் காங்கிரசால் எழுச்சி பெற முடியாது. ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுத்தது. மோடியின் சிறந்த நிர்வாகத்திறனே அவரை பிரதமர் வேட்பாளராக உயர்த்தியது. அரசியல் என்பது பல விபத்துக்கள் நிறைந்தது. தனிநபர்களின் செல்வாக்கு மற்றும் புகழ் காரணமாக சர்வதேச கொள்கைகள் மாறும். மக்கள் அனைவரும் நடுநிலை வகிக்கின்றனர். மோடிக்கு எதிராக இல்லை. 
 
மீடியாக்களை வரிவிதித்து நிதியமைச்சராக இருந்தபோது சிதம்பரம் மிரட்டினார். குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் அந்த மீடியாக்களுக்கு வரிவிதித்தார். ஜெயலலிதா வழக்கு, கறுப்பு பண வழக்கு அடுத்ததாக சிதம்பரம் தான் எனது அடுத்த குறி. வெளிநாட்டு முதலீடு தொடர்பான அமைப்பு எடுத்த முடிவுகள் பின்னணியில் சிதம்பரம் உள்ளார். இதில் அவர் தான் குற்றவாளி. செபி தொடர்பான வழக்குகளிலும் அவர் தான் குற்றவாளி. குற்றச்சாட்டுக்கள் மீதான ஆதாரங்களை பிரதமர் மோடியிடம் அளித்துள்ளேன். மோடி சி.பி.ஐ.,க்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியுள்ளேன். இந்த வழக்கு தொடர்பான போலீசாரின் அறிக்கைக்கு காத்துக்கொண்டுள்ளேன். ஜனவரிக்குள் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவேன். இந்த வழக்கில் சசிதரூர் போலீசாரை தவறாக வழிநடத்தினார். ஆதாரங்களை சேதப்படுத்தினார் என கூறினார்.
 
 
Link to comment
Share on other sites

தொடரட்டும் உன் பணி , அப்படியே ரஜீவ கொன்ற உங்களை எப்படி உள்ள போடுறது அதயும் யாரும் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.