Jump to content

"பிசாசு" - விமர்சனம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"பிசாசு" - விமர்சனம்.

 

நடிப்பு: நாகா, ப்ரயாகா, ராதாரவி

இசை: அரோல் கொரோலி

தயாரிப்பு: பாலா

எழுத்து - இயக்கம்: மிஷ்கின்

 

ஒரு சாலை விபத்தில் அழகிய இளம்பெண் ப்ரயாகா அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடிக்க, அந்தப் பக்கமாக வரும் நாகா உள்ளிட்ட மூவர் ஒரு ஆட்டோக்காரர் உதவியுடன் அவளை மருத்துவனையில் சேர்க்கின்றனர்.

 

அவர்களில் நாகாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள் ப்ரயாகா. மருத்துவமனைக்குப் போன சில நிமிடங்களில் அவன் கையை இன்னும் இறுகப் பற்றிய நிலையில், 'ப்பா..' என்ற ஒற்றைக் குரலோடு அவள் உயிர் அடங்குகிறது.

 

20-1419070168-pisasu-review4-600.jpg

 

ப்ரயாகாவின் தந்தை ராதாரவியிடம் உடலை ஒப்படைத்துவிட்டு மனசு முழுக்க பாரமாய், அவளின் ஒற்றைச் செருப்பை நினைவாக எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறான் நாகா. கவலையைப் போக்க மது அருந்த முடிவு செய்து பாட்டிலை எடுக்கிறான். முதலில் ஓபனர் காணாமல் போகிறது.. அடுத்து பாட்டில்கள் தாமாக உடைந்துவிடுகின்றன. தன் வீட்டில் அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறான் நாகா. அது இறந்துபோன ப்ரயாகாவின் ஆவிதான் என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் தெரிந்து கொள்கிறான்.

 

அடுத்து அந்த பிசாசை விரட்டும் முயற்சிகளில் இறங்குகிறான். விரட்டினானா? ப்ரயாகா பிசாசாகக் காரணமானவனைக் கண்டுபிடித்தானா? என்பதெல்லாம் திரையில் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள். படம் நூறு சதவீதம் பிசாசு சம்பந்தப்பட்டது என்பதால், பிசாசின் உருவம், நடமாட்டம் போன்றவற்றில் லாஜிக் பார்க்க முடியாது. பிசாசைப் படைப்பதில் அவரவருக்கு ஒரு பாணி!

 

ஆனால் படம் முழுக்க மிஷ்கினுக்கே சொந்தமான க்ளீஷேக்கள் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. முன்பக்க முடி பாதி முகம் மறைத்தபடி, ஒருவித சைக்கோத்தன்மை யுடன் ஹீரோ, சற்றும் இயல்பில்லாத பாத்திரங்கள், சண்டைக்காட்சி, காமிரா கோணங்களை, பழகிய மனநிலையுடன் கடந்து போக வேண்டியிருக்கிறது.

காரைவிட்டு இறங்கி மாடிப்படிகளேறி, கதவை சாவி போட்டுத் திறந்து, விளக்கின் பொத்தான்களை அழுத்தி, உடை களைந்து, குளித்து, இருக்கைக்கு வரும் வரை அந்தக் காட்சியை அசாதாரண நீளத்துடன் காட்டுவது என்ன வகை காட்சியமைப்போ... இதுபோல பல காட்சிகளில் நீ...ண்ட விவரணைகள் ஆயாசம் தருகின்றன.

 

20-1419070173-pisasu-review3-600.jpg

 

ஆனால்... மிஷ்கின் எடுத்திருக்கும் சில காட்சிகளில் மனசு நெகிழ்ந்து கண்ணீராய் வழிகிறது. அந்த அன்பும், பரிவும், மனிதாபிமானமும்தான் இந்த வாழ்க்கையை நகர்த்தும் பெரும் சக்தி.

 

ஆரம்பக் காட்சியில் மருத்துவமனை நடையில் தூரத்தில் தெரியும் ராதாரவி, 'அய்யோ மகளே.. பவானி, என் சாமி..' என கதற, உள்ளுக்குள் நாம் உடைந்து போகிறோம். பெரிய நுட்பமெல்லாம் அந்தக் காட்சிக்குத் தேவைப்படவில்லை. அடிநாதமாய் ஓடும் அன்பின் வெளிப்பாட்டைத் தவிர..

அதேபோல, தன் மகள் பேயாய் உலவும் வீட்டுக்கு வரும் ராதாரவி, மகளின் பிசாசு ரூபம் பார்த்து கதறியழ, மேலிருந்து மகளின் கரங்கள் இறங்கி வந்து அவர் தலையையும் முகத்தையும் தடவிக் கொடுக்க... பெருங்குரலெடுத்து 'என் மகளே.. தெய்வமே.. வீட்டுக்கு வந்துடும்மா.. அடுத்தவங்களுக்கு தொந்தரவு தரலாமா?' என்றெல்லாம் அவர் கதற.. அங்கே கலங்காத கண்கள் மனிதருடையவையாக இருக்காது. அத்தனை நெகிழ்ச்சி.

ராதாரவி நடிப்பில் புதிய பரிமாணம் இது. அலட்டிக் கொள்ளாமல் கலங்கடித்திருக்கிறார்.

 

20-1419070179-pisasu-review2-600.jpg

 

ஹீரோவாக வரும் நாகாவின் முகத்தை கடைசி வரை சரியாகப் பார்க்க முடியாதபடி முடி மறைக்கிறது. அதில் ஏதாவது குறியீடு வைத்திருக்கிறாரா மிஷ்கின் என்பது தெரியவில்லை.

 

ப்ரயாகாவுக்கு மிக அழகான முகம். அந்த கண்களும் உதடுகளும் ஏதோ சொல்ல வருவதைப் போன்ற தோற்றம். கொஞ்சமே வந்தாலும் நிறைக்கிறார் மனசை. மற்றெல்லாரும் சிறுசிறு வேடங்களில் வருகிறார்கள். நிறைவாய் செய்திருக்கிறார்கள்.

 

வேறு பிரதான பாத்திரங்களே படத்தில் இல்லை. ஆனாலும் கடைசி காட்சி வரை ஒரு எதிர்ப்பார்ப்புடன் படத்தை நகர்த்திச் செல்வதில் வெற்றி கண்டுள்ளார் இயக்குநர்.

 

அந்த 20 நிமிட க்ளாமாக்ஸ் காட்சி எல்லோருக்கும் புரிய வேண்டும். ஆட்டோ ட்ரைவருக்கு நிறக்குருடு என்பதை இன்னும் சற்று நேரடியாகச் சொல்லியிருக்கலாம்.

 

பேயை விரட்ட வரும் ஆவி அமலாவின் டுபாக்கூர்தனங்களைக் காட்சிப்படுத்தியிருப்பதில் மிஷ்கின் வெளிப்படுத்தியிருக்கும் 'சர்காஸம்' புன்னகைக்க வைக்கிறது. எடுத்தது பேய்ப் படம் என்றாலும், தன்னால் முடிந்த ஒரு பகுத்தறிவுப் பிரச்சாரத்தை வைத்திருக்கிறார்.

 

20-1419070185-pisasu-review1-600.jpg

 

ரவி ராயின் கேமராவும், அரோல் கொரோலியின் இசையும் படத்தின் பெரும் பலம். தேவையான காட்சிகளில் மட்டும் இசை. மற்ற நேரங்களில் மவுனம். மிக அழகாகச் செய்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் அந்த ஒற்றைப் பாடலில், வரிகளை விட வயலின் இசை மனதைப் பிசைகிறது. வெல்டன்!

 

கமர்ஷியலாக வெற்றியைப் பார்த்தாக வேண்டும்... வேறு வழியில்லை, இருக்கிற பேய் சீசனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்து மிஷ்கின் தந்துள்ள படம் இந்த பிசாசு.

 

பார்ப்பவரை நடுங்க வைக்கும், மிரள வைக்கும் பிசாசல்ல இது... பேரன்பும் பெரும் கருணையும் கொண்ட பிசாசு!

 

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

//பார்ப்பவரை நடுங்க வைக்கும், மிரள வைக்கும் பிசாசல்ல இது... பேரன்பும் பெரும் கருணையும் கொண்ட பிசாசு!//

 

 

அப்படியானால் இது சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு பிசாசு :P

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்சநாளா பேய்ப் படங்கள் கனக்க வருது

Link to comment
Share on other sites

சிரிப்பு பிசாசு என்பதால் கனபேருக்கு பிடிக்கும். ஆச்சர்யம் ஏதும் இல்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.