Jump to content

இரணைமடு குளத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வான் கதவுகள் திறக்கப்படலாம்: தாழ்நிலப் பகுதிகளுக்கு எச்சரிக்கை


Recommended Posts

iranaimadu%20656546554.jpg

 

இரணைமடுக் குளத்துக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது என்றும், தற்போது குளத்தின் நீர்மட்டம் 30 அடியை எட்டியுள்தால் எவ்வேளையிலும் வான் கதவுகள் திறக்கப்படலாம் எனவும் கிளிநொச்சி நீர்ப்பசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக குளத்தின் கீழ் உள்ள தாழ்நிலப்பகுதிகளிலுள்ள மக்களை அவதானத்துடன் இருக்கும்படி கேட்டக்கட்டுள்ளது. இதேவேளை, வீதிப்புனரமைப்பு பணிகளின்போது அமைக்கப்பட்ட தற்காலிக பாலங்கள், வீதிகளை அழிக்கும் நடவஎக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. -
 
http://www.malarum.com/article/tam/2014/12/20/7569/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-.html#sthash.ZNELjuvX.dpuf
 
 
Link to comment
Share on other sites

இரணைமடுவின் நீர்மட்டம் அதிகரிப்பு; 6 குளங்கள் வான்பாய்கின்றன

 

Iranamadu01.jpg

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சியின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுவின் நீர்மட்டம், 30 அடி 2 அங்குலமாக அதிகரித்துள்ள அதேவேளை, முல்லைத்தீவில் முத்தையன்கட்டு நீர்ப்பாசன குளத்துக்கு கீழுள்ள 6 குளங்கள் வான் பாய்கின்றன. 

இரணைமடுவின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (21) 30 அடி 2 அங்குலமாக அதிகரித்துள்ள நிலையில், இந்த மாவட்டத்தில் தொடர்மழை பெய்தால் இக்குளம் வான் பாயும் அபாயம்  உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியிலாளர் என்.சுதாகரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் (72.55 மில்லிமீற்றர்) மழையால் இரணைமடு குளத்தின்; நீர்மட்டம் சடுதியாக அதிகரித்தது. இதனால், வான் பாயும் அபாயம் இருப்பதாகவும் வான் பாயும் பகுதிகளிலுள்ள மக்களின் பாதுகாப்பு, அனர்த்த பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பன பற்றி சனிக்கிழமை (20) ஆராயப்பட்டது. 

தற்போது, மழை குறைந்துள்ளதுடன் இரணைமடுக் குளத்துக்கான நீர் வரத்தும் குறைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலையில் 30.2 அடியாக குளத்தின் நீர்மட்டம் இருக்கின்றது. 31 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால் வான் கதவுகள் திறக்கப்படும். 

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களில் அக்கராயன் குளம் 19 அடி 02 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளம் 06 அடி 06 அங்குலமாகவும், கல்மடு குளம் 23 அடி 5 அங்குமாகவும், கனகாம்பிகைக்குளம் 10 அடி 7.5 அங்குலமாகவும் (1.5 அங்குலம் வான் பாய்கிறது), வன்னேரிக்குளம் 09 அடி 09 அங்குலமாகவும் (3 அங்குலம் வான் பாய்கிறது), முறிப்பு குளம் 14 அடி 02 அங்குலமாகவும், பிரமந்தனாறு குளம் 10 அடி 10 அங்குலமாகவும், குடமுறுட்டி குளம் 08 அடி 07 அங்குலமாகவும் (2 அங்குலம் வான் பாய்கிறது) நீர்மட்டம் இருப்பதாக அவர் தெரிவித்தார். 

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக முத்தையன்கட்டு நீர்ப்பாசன குளத்துக்கு கீழுள்ள 6 குளங்களில் வான் பாய்கின்றதாக முத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியிலாளர் ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தார்.

தட்டயமலைக்கு 14 அடியாகவும் (3 அங்குலம் வான் பாய்கிறது), விஸ்வமடுக் குளம் 20 அடி 8 அங்குலமாகவும் (5 அங்குலம் வான் பாய்கின்றது), கணுக்கேணி குளம் 12 அடி 09 அங்குமாகவும் (3 அங்குலம் வான் பாய்கிறது), உடையார்கட்டுக் குளம் 23 அடி அங்குலம் 11 அங்குலமாகவும் (7 அங்குலம் வான் பாய்கிறது), மருதமடுக் குளம் 14 அடி 4 அங்குலமாகவும் (2 அங்குலம் வான் பாய்கிறது), மடவாளசிங்கக் குளம் 16 அடி 8 அங்குலமாகவும் (2 அங்குலம் வான் பாய்கிறது) நீர் மட்டம் காணப்படுகின்றது. 

இதனைவிட, முத்தையன்கட்டுக்குளம் 15 அடி 02 அங்குலமாகவும், தண்ணி முறிப்புக்குளம் 11 அடியாகவும் காணப்படுவதாக பொறியியலாளர் தெரிவித்தார்.
Iranamadu02.jpg

 

 

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/136298----6--.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.