Jump to content

காங்கேசன்துறை குண்டு வெடிப்புச் சம்பவம்! தகவல்களை மறைக்க படையினர் முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
bomp_blast_002.jpg
வடமாகாணத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த சமயம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைக்க படையினர் முயற்சித்து வருகின்றனர்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் தஙகிருந்தார்.
 
இந்நிலையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, கட்டடப் பகுதிக்குள் பாதுகாப்பு கடமையிலிருந்த படையினரின் பகுதிக்குள் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது.
 
குறித்த வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? அல்லது தற்செயலாக நடைபெற்றதா? என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.
 
குறித்த விசாரணைகளின் அடிப்படையில் 7 படையினர் கைது செய்யப்பட்டதாகவும்,  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் குறித்த தகவலினை வெளிப்படுத்த படையினர் நீண்ட மௌனம் சாதிப்பதாகவும் தெரியவருகின்றது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குறித்த விசாரணைகளின் அடிப்படையில் 7 படையினர் கைது செய்யப்பட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன
உவங்களுக்கிடையே ஒற்றுமையில்லை போலகிடக்கு ..:D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.