Jump to content

”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!!


Recommended Posts

”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!!

 

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். குறிப்பாக சைவ உணவு கிடைக்காமல் போனதால் இஷாந்த் சர்மா ரொம்பவே கொந்தளித்துப் போனாராம். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முன்னர் 5 டெஸ்ட் போட்டிகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!! ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் பட்டு உயிரிழந்தார். இதனால் போட்டிகள் 4 ஆகக் குறைக்கப்பட்டது.

 

இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றது முதலே சாப்பாடு பெரிய பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் ஹியூக்ஸின் இறுதி சடங்கு நேரம் என்பதால் இந்திய வீரர்கள் சமாளித்திருக்கின்றனர். பின்னர் பயிற்சி ஆட்டம் நடைபெற்ற நிலையிலும் சாப்பாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் கேட்ட சைவ உணவு முறையாக வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்தனர். அடிலெய்ட் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வீரர்களுக்காக இந்திய சமையல்காரர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

தற்போது பிரிஸ்பேனில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற போது மீண்டும் சாப்பாடு பிரச்சனையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளனர் இந்திய வீரர்கள். தமக்கு சைவ உணவு கிடைக்காத காரணத்தால் இஷாந்த் சர்மா ரொம்பவே கோபமாக இருக்கிறாராம். அவருடன் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அணி நிர்வாகத்திடம் கடுமையான கோபத்துடன் புகார் அளித்துள்ளனர். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஐசிசியின் பணியாளர்கள், இந்திய அணி இயக்குனர் ரவவிசாஸ்திரி ஆகியோருக்கும் இதே சிக்கல்.. இவர்கள் தற்போது வெளியில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிடுகின்றனராம்... அய்யயோ.. பிள்ளைக சரியா சாப்பிடாததால்தான் தோல்வியோ?

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/indians-unhappy-with-food-australia-ishant-sharma-angry-217433.html

Link to comment
Share on other sites

சைவச் சாப்பாடு இல்லாததால் மைதானத்தை விட்டு உணவு தேடி ஓடிய இஷாந்த் சர்மா, ரெய்னா!

 

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை இந்தியா நழுவ விட்ட சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வந்தது முதல் சரியான சாப்பாடு கிடைக்கவில்ல என்ற பெரும் கவலையில் வீரர்கள் உள்ளனராம். அதிலும் பிரிஸ்பேன் 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளின்போது சைவச் சாப்பாடு கிடைக்காமல் இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, டைரக்டர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் உணவு தேடி மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

ஆஸ்திரேலியாவுக்குப் போய்ச் சேர்ந்த சில நாட்களிலேயே பில் ஹியூக்ஸ் என்ற இளம் வீரர் புவன்சர் பந்து தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் இந்திய வீரர்கள் சோகமடைந்தனர். இதனால் முதல் டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டு தாமதமாக தொடங்கியது.

 

சாப்பாட்டுச் சண்டை இந்த நிலையில் தற்போது இந்திய வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே சாப்பாடு விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது

 

சைவ சாப்பாடு கிடைக்கவில்லை ஆஸ்திரேலியாவுக்கு வந்தது முதலே இந்திய வீரர்கள் சரியான சாப்பாடு கிடைக்காமல் அவதிப்படுகின்றனராம். இருப்பினும் ஹியூக்ஸ் மரணத்தால் ஆஸ்திரேலியாவில் நிலவி வந்த சோக மன நிலை காரணமாக சாப்பாடு பிரச்சினையை வெளிப்படையாக கிளப்பாமல் இருந்துள்ளனர். ஆனால் தற்போது தங்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்கவில்லை என்று புலம்ப ஆரம்பித்துள்ளனராம்.

 

வாக் அவுட் செய்த வீரர்கள் குறிப்பாக பிரிஸ்பேன் 2வது டெஸ்ட் போட்டியின்போது சைவச் சாப்பாடு கிடைக்காத காரணத்தால் சாப்பிடாமல் வீரர்கள் எழுந்து சென்றது தெரிய வந்துள்ளது.

 

டென்ஷன் ஆன இஷாந்த், ரெய்னா, ரவி 3வது நாள் ஆட்டத்தின்போது, மதியச் சாப்பாடு சாப்பிட இந்திய வீரர்கள் போனபோது அவர்களுக்கு அசைவச் சாப்பாடு மட்டுமே பரிமாறப்பட்டதாம். இதனால் சைவப் பிரியர்களான இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, அணி இயக்குநர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்தனர். இதனால் மதியச் சாப்பாட்டை சாப்பிடாமல் அங்கிருந்து வெளியேறினர். மைதானத்தை விட்டு வெளியே வந்த அவர்கள் வெளியில் சைவச் சாப்பாடு கிடைக்காமா என்று போய்ப் பார்த்துள்ளனராம்.

 

வெளியில் வைத்து சாப்பிட்ட கொடுமை சைவச் சாப்பாடு கிடைத்து அதை வாங்கிக் கொண்டு வந்தபோது வெளியிலிருந்து வரவழைக்கப்படும் சாப்பாட்டை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டனராம் ஆஸ்திரேலிய அதிகாரிகள். இதனால் வேறு வழியில்லாமல் சர்மாவும், ரெய்னாவும் வெளியில் வைத்தே சாப்பிட்டுள்ளனர்.

 

ஏன் இப்படி...! முதல் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர்களுக்குத் தேவையான சாப்பாட்டைத் தர போதிய ஏற்பாட்டை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்திருந்ததாம். அதாவது இந்திய சமையல்காரரையே ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர். ஆனால் பிரிஸ்பேனில் அதைச் செய்யவில்லையாம். இதனால் சைவச் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

 

http://tamil.oneindia.com/news/sports/india-australia-angry-ishant-sharma-leaves-gabba-because-no-217481.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

limepickle.jpg

இதுக்குத்தான்... ஊரிலிருந்து புறப்படும் போது...
ஒரு ஊறுகாய் போத்திலையும் கொண்டு போக வேணும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தடவை தோற்கும் போதும் ஏதாவது ஒரு காரணம் வைத்திருப்பார்கள்...கடைசி வரை தோல்வியை ஒத்துக் ஏற்கும் மனநிலை இவர்களுக்கு இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் இது நல்ல காரணம்...  பசி தீர்ந்தால்தான் பவுன்ட்ரி ,சிக்சர் பறக்கும். வயிறு புல்லானால்தான் , போலிங் பிட்சில் எகிறும்...!  :)

Link to comment
Share on other sites

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த விடயத்தில் சரியாக செயல்படவில்லை.

 

கடந்த ashes டூர் போக முதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களுக்கு என்ன காலை, மாலை உணவு, தேநீர் இடைவேளையில் என்ன உணவு தரப்பட வேண்டும் என 82 பக்கத்தில்

 

ஒரு அறிக்கையை அனுப்பி இருந்தார்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுபாட்டு சபைக்கு. :D

 

http://www.telegraph.co.uk/sport/cricket/international/theashes/10433915/The-Ashes-2013-14-England-ridiculed-for-sending-82-page-list-of-goji-berry-and-quinoa-catering-demands.h

 

http://www.smh.com.au/sport/cricket/englands-cricket-team-demands-silver-service-on-dietary-needs-20131107-2x4fq.html

 

 இவர்கள் கேட்ட உணவு எல்லாம் கொடுத்ததும் டெஸ்ட் போட்டியில் 5-0 தோல்விதான் அடைந்தார்கள் :o:lol:  வழமை போல

Link to comment
Share on other sites

இஷாந்த், ரெய்னா அடுத்தவாட்டி இந்த ஹோட்டல்களுக்கு போங்க பாஸ்

 

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் சைவ உணவைத் தேடி மைதானத்தில் இருந்து வெளியேறிய கிரிக்கெட் வீரர்கள் இஷாந்த் சர்மாவும், ரெய்னாவும் மெல்போர்ன் நகரில் இருக்கும் சில சைவ உணவகங்களுக்கு செல்லலாம். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியிலும், பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது. பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது சைவ உணவு கொடுக்கப்படவில்லை என கிரிக்கெட் வீரர்கள் இஷாந்த் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா மதிய வேளையில் மைதானத்தில் இருந்து வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தனர்.

 

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இஷாந்த், ரெய்னா அடுத்தவாட்டி இந்த ஹோட்டல்களுக்கு போங்க பாஸ் இந்நிலையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 3வது டெஸ்ட் போட்டிக்காக மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளன. வரும் 26ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்குகிறது.

 

மெல்போர்ன் மைதானத்திலும் சைவ உணவு கிடைக்காவிட்டால் இஷாந்தும், ரெய்னாவும் சுவையான சைவ உணவு சாப்பிட நகரில் உள்ள சில உணவகங்களின் பெயர் வருமாறு,

1. ஆங்கன்

 

2. ரெட் பெப்பர்

 

3. தந்தூரி டென்

 

4. ஹார்ன் ப்ளீஸ்

 

5. டோன்கா

 

6. ப்ளோரா

 

7. டூ ஃபேட் இன்டியன்ஸ்

 

 

:D :D

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ishant-raina-can-try-these-restaurants-melbourne-217632.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.