Jump to content

வாசகியாயிருத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாசகியாயிருத்தல்

மோகனா இசை

படுக்கை வசதி கொண்ட பேருந்திலேயே சென்று பழக்கப்பட்டதால் இருக்கை வசதி கொண்ட பேருந்தும், குண்டும் குழியுமான பாதைகளும் அயர்ச்சியைத் தந்தது. படுக்கை வசதி கொண்ட பேருந்தில் கூட இந்த சாலையில் வசதியாக பயணம் செய்துவிட முடியப்போவதில்லை என்று தொன்றியது. எது எப்படியோ பயணங்கள் இனிமையானவை தான், எந்த ஒரு காரணமும் இல்லாமலேயே கூட, ஆனால் இனிமையான காரணத்துடனான இந்த பயணத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது மனம். பயணத்தை அனுபவித்து செய்வதின் இன்பம் அந்த பயணத்திற்கான காரணமாக இல்லாமல் வேறதாக இருக்க முடியும்? ஒரு எழுத்தாளனை பார்க்க சென்று கொண்டிருக்கும் இந்த பயணம் என்னளவில் வித்யாசமான அனுபவம் தான். என் நண்பனும் இன்னும் காதலை சொல்லிக்கொள்ளாததால் நண்பனாக உடனிருந்தான், மிகவும் ஆச்சரியமாக என் கவனத்தை எள்ளளவும் பெறாமல். முகநூலில் நிலையை புதுப்பித்தால் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருகிறேன் என்று போட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஏன் இந்த பயணம் என்றும், ஒரு எழுத்தாளனை சந்திக்கத்தான் வேண்டுமா என்றும் யோசனையாக இருந்தது, என்றாலும் வாசிப்பின் மீதான விருப்பத்தின் ஆழம் தான் இந்த பயணத்திற்கு என்னைத் தூண்டியது. வாசிப்பு இன்றைக்கு நேற்று ஆரம்பித்த பழக்கமில்லை, முதன்முதலில் நூலகத்திற்கு சென்றபோது எனக்கு எத்தனை வயதென்று நினைவில்லை, 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். முதன் முதலில் நூலகத்தில் கையொப்பமிட்டு வாசித்த இன்பம் இன்றும் இனிக்கிறது. பள்ளி நூலகத்தில் எடுத்து வாசித்த சிண்ட்ரெல்லா கதையையும், கிரேக்க கதைகளையும் இன்றும் பசுமையாக நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறது. கல்லூரியில் பெரியார் வாசிக்காமல் இருந்திருந்தால் இந்த பயணமே கூட சாத்தியப்பட்டிருக்காது என்று தான் படுகிறது.

“பொம்பள பிள்ளைக்கு என்ன பழக்கம், எப்ப பாத்தாலும் புத்தகமும் கையுமா?”

“சாப்பிடறப்ப கூட புத்தகமா, தூக்கி போடு.”

“பறிட்சை முடிந்த கையோடு புத்தகமும் கையுமா உட்கார்ந்தா ஆயுடுச்சா, சமைக்க கத்துக்கோ, போற வீட்ல நல்ல பேர் எடுக்கற வழியப்பாரு”.

“ராத்திரி 12 வரைக்கும் என்ன கதை புத்தகம் படிக்க வேண்டி கடக்கு? எடுத்து வைச்சிட்டு படு போ”

எத்தனை யேச்சு, பேச்சுக்களுடன் பழகிய பழக்கம்? மாடிப்படிகளில், துணிதுவைக்கும் கல்லில், மொட்டைமாடியில், கட்டிலடியில் என மறைந்து மறைந்து வாசித்துப் பழகிய பழக்கம். இரண்டு மூன்று நூலகங்களில், ஒவ்வொன்றிலும் இரண்டிற்கும் மேல் அடையாள அட்டை வைத்துக்கொண்டு வாசித்துப் பழகிய பழக்கம். வடை சுற்றிய காகிதமானாலும், கடலை சுற்றிய காகிதமானாலும் படித்துவிட்டே எறிந்து பழகிய பழக்கம். வேலை தேடிக்கொண்டிருந்த நாட்களில் டீ, காப்பி வாங்க காசில்லாமல் போனால் கூட பரவாயில்லை என்று வார இதழ்கள் வாங்கி படித்துப் பழகிய பழக்கம்.

”கல்யாண்ஜி கவிதைகள் ரொம்ப நல்லா இருக்குப்பா, நீ சொன்னது உண்மை தான்”

“நானெல்லாம் அதை 13 வயசிலேயே வாசிச்சாச்சி, நீ ரொம்ப லேட்”

என் நண்பன் என்னிடம் கூறிய போது கோபம் வரவில்லை. பெண்ணென்றால் வட்டமொன்றை போட்டுக் கொண்டு தான் இயங்க வேண்டும் என்ற சராசரி குடும்பத்திலிருந்து வந்தவள் நான். இன்று வரை எனக்கான வட்டத்தை சற்று பெரிதாக்கிக் கொள்ள முடிந்ததே தவிர, அதன் எல்லையை அழித்துவிட முடியவில்லை. எந்த ஒரு சாதாரண வாசகனையும் போல நானும் கல்கி, சாண்டில்யன், சுஜாதா, பாலகுமாரன் என்று தான் வாசிப்பைத் தொடங்கினேன். இத்தனை எழுத்தாளர்களா, இத்தனை வகைகளா என்று தெரிந்து கொள்ள நீண்ட காலம் பிடித்தது. இன்று யோசிக்கையில் இப்படி இருந்தவிட்ட இயலாமை சற்றே வலிக்கிறது. என் வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவன் என்பதால் இவன் மேல் ஏகப்பட்ட பிரியம், ஆனால் என்ன செய்து அந்த பிரியத்தை தீர்த்துவிடமுடியும்? ஒரு விளையாட்டு வீரன் மேல், ஒரு கதாநாயகன் மேல், ஒரு இசையமைப்பாளர் மேல், ஒரு பாடகர் மேல் வைக்கும் பிரியம் போன்றதல்ல இது. அதனால் தான் விசிறி என்று பொதுப்படுத்திவிடாமல் வாசகர் என்று ஒரு தனியான அடையாளம் வந்ததோ என்னவோ? மேற்கூறியவர்கள் மேல் வைக்கும் பிரியத்திற்கும், எழுத்தாளன் மேல் வைக்கும் பிரியத்திற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளதாக நம்புகிறேன். நான் அவனிடம் என்ன எதிர்பார்த்து போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் அவன் நட்பு நிச்சயம் ஒரு கிடைக்கற்கரிய பொக்கிஷம் என்று தான் நம்புகிறேன்.

“அம்மா நான் அந்த எழுத்தாளனை பார்க்க போயிட்டுருக்கேம்மா, போய் சேர்ந்த உடனே உனக்கு கால் பண்ணறேன்”

“ஆமா, உனக்கு பாக்க வேற ஆளே கிடைக்கலயா? என்னமோ பண்ணு”

அம்மா காலையில் கூறியதையும் அவனுக்காக வரிந்துகட்டிக்கொண்டு பேசியதையும் நினைத்தால் சிரிப்பாக வந்தது. எத்தனையோ சாக்கடைத்தனமான செயல்களை செய்துகொண்டும், புன்முகத்துடன் அப்படியான செயல்களை எதிர்கொண்டும் இருக்கும் இவர்கள், வெளிப்படையாக எழுதும் ஒரு எழுத்தாளனை இகழ்ச்சியாகப் பேசுவது மிகவும் ஆச்சரியமான ஒன்று. இவர்களின் தூய்மைகளை வேறுபடுத்திக் காட்டவாவது ஒருவன் வேண்டாமா? அவன் எழுத்துக்களில் பாலியல் அதிகம் என்பது தான் என் அம்மாவின் கசப்பிற்குக் காரணம். அவனின் பாலியல் எழுத்துக்களை கோவிலில் உள்ள பாலியல் சிற்பங்கள் போலத் தான் எடுத்துக்கொள்ள முடிகிறது. அவன் மேலுள்ள அளவு கடந்த மரியாதை மற்றும் பிரியம் தான் நான் இப்படி எடுத்துக்கொள்ள காரணமென்றால் இருந்துவிட்டு போகட்டுமே, அவன் அப்படி எழுதுவதால் என்ன புதிதாக கெட்டுவிடபோகிறது. மேலும் அவன் பெண்களின் சார்பாக வைக்கும் தத்துவார்த்த தர்க்கங்களின் ஆழமும், புனிதமும் எனக்குத் தெரியும். அவன் எழுத்து பெண்ணிற்குமானது, பெண்ணிற்காக எழுதப்பட ஆண் எழுத்துக்களை அவன் வாயிலாக மட்டுமே அதிகம் வாசித்துள்ளேன். அப்படி எழுதியவர்கள் பலர் இருக்கிறார்கள் தான், ஆனால் எனக்கென்னவோ இவனைத் தான் கொண்டாடத் தோன்றுகிறது.

எத்தனை யோசித்தாலும் தீராதவை அவனைப் பற்றிய எண்ணங்கள். இப்படி ஆர அமர அனுபவங்களை அசைபோட ஏற்ற சமயம் பயணங்களில் தான் வாய்க்கிறது. இடையிடையே விழித்துக்கொண்ட பொழுதெல்லாம் அவனைக்காண சென்று கொண்டிருக்கிறோம் என்பதை தான் முதலில் நினைத்துக் கொண்டேன். குழந்தைகள் தீபாவளிக்கான நாட்களை எண்ணிக் கொள்வதைப்போல இன்பம், ஒரு குறுகுறுப்பு. இந்த வயதில் இப்படியான சந்தோசங்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இப்படியான என் உணர்வுகளை முதிர்ச்சியின்மையாக நினைத்துக் கொள்பவர்கள் நிச்சயம் பாவப்பட்டவர்கள்.

கடற்கரை நகரங்களுக்கே உரிய பிரத்யோகமான சீதோசன நிலையில் ஒரு அதிகாலை வேலையில், பேருந்திலிருந்து இறங்கினேன். இனிமையாக தொடரும் பயணமும், நினைத்துப்பார்த்துக் கொண்ட நினைவுகளும் மனதில் மெலிதான சந்தோசத்தைக் கொடுத்தது, மிகவும் இயல்பான உற்சாகத்துடன் என் நண்பன் பேசிய ஆட்டொவில் ஏறினேன். என்னால் தனியாக இந்த சந்திப்பை நிகழ்த்திக்கொள்ள முடியாது என்று தோன்றியது, ஒரு வகையில் என் நண்பன் தான் என்னளவில் இந்த சந்திப்பை இயல்பானதொன்றாக்க முடியும் என்று தோன்றுகிறது.

oOo

எத்தனை பெரிய நிகழ்வும் மிக இயல்பாக, எளிமையாக ஒரு கணத்தில் நிகழ்ந்து விடுகிறது, அந்த நிகழ்வைப் பற்றிய எதிர்பார்ப்புகளும், அந்த நிகழ்வின் தாக்கமும் தான் கடினமானது, அலங்காரமானது. எளிமையான ஒரு இல்லத்தில், மிக எளிமையான ஒரு அறையில் அழுத்தப்பற்றிய கைக்குலுக்கலுடன் எங்கள் சந்திப்பு மிக இயல்பாக நிகழ்ந்தது.

”வணக்கம்ண்ணா”.

“வாங்க” சம்பிரதாய பேச்சுக்கள்,

அவன் முகம் எனக்கு பரிட்சயமான ஒன்று தான், புத்தகங்களில், வலையில். ஆனால் நேரில் பார்க்க அத்தனை கடுமையானதாக இல்லை என்று பட்டது, எனக்கென்னவோ அனைத்து எழுத்தாளர்களையும் கடுமையான முகம் உள்ளவர்களாகத்தான் யொசிக்கத்தோன்றுகிறது. அவன் எழுத்துக்களை கண்டு நான் பொதுவாக மிரள்வதால் அப்படி உருவகித்துக் கொண்டேனோ என்னவோ..

எந்த புத்தகத்தைக் கண்டாவது நீங்கள் மிரண்டதுண்டா? மிரளும் அதே சமயம் விரும்பியதுண்டா? என்னிடம் அவனெழுதிய அப்படியான புத்தகம் உள்ளது, எந்த ஒரு புத்தகமும் என்னுடன் இத்தனை பயணப்பட்டதில்லை, இத்தனை கவனம் பெற்றதில்லை, எந்த புத்தகத்தையும் மகிழ்வான கணங்களுக்கான பக்கங்கள், கவலையான கணங்களுக்கான பக்கங்கள், சோர்வான கணங்களுக்கான பக்கங்கள் என்று பிரித்து வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டாடியதில்லை. அவன் எழுத்து என்னை வேறொரு உலகத்திற்கு கொண்டு சென்று விடுகிறது, வார்த்தைகளின் வசீகரம் புத்தகத்திற்குள் என்னை இழுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது, அப்படியான பொழுதுகளில் புத்தகத்தை விட்டு வெளியேறவே முடியாமல் அதிலேயே சுலன்றுகொண்டிருந்து அதன் பக்கங்களில் தொலைந்துள்ளேன் என்பதை நீங்கள் நம்ப மறுத்தால் நீங்கள் அப்படியான புத்தகங்களை படித்ததில்லை என்று தான் கூறுவேன்.

அவனுடைய கதைகளை மறுபடியும் படிக்கும் போது அவனது கதாபாத்திரங்களின் நம்பிக்கைகளை நான் கொண்டிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கும், இது நானாக வேண்டுமென்றே செய்து கொண்ட ஒன்றில்லை என்பதை நான் இங்கு குறிப்பிடத்தேவையில்லை. ஆளுமை என்ற வார்த்தைக்கு என்னளவில் அர்த்தமே அவன் தானோ என்று மயக்கமாக உள்ளது. இப்படியான ஆளுமையுள்ளவனை காணவந்துவிட்டதை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் பேச ஆரம்பித்த சற்று நேரத்திலெல்லாம் மிகவும் பழகியவனைப் போல உணர்ந்தாலும் என் அறியாமையை காட்டிவிடக் கூடாது என்பதால் பெரும்பாலும் மௌனமே காத்தேன், ஆனால் ஏதாவது பேசத்தானே வேண்டும்.

“நிறைய குறிப்பெடுத்துக்கொண்டு எழுதுவீங்களாண்ணா?” கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே எத்தனை பைத்தியக்காரத்தனமான கேள்வியென்று மனதிற்குள் இயலாமை படர்ந்தது.

ஒரு கதையின் பெயரைக்குறிப்பிட்டு, மூன்று தலைமுறைகளை தொட்டு எழுத வேண்டியிருந்ததால், அவற்றிற்கான ஆண்டுகள் சரியாக இருக்க வேண்டும் என்று மிகவும் பிரயாசைப்பட்டேன் என்றான். நான் உடனே அந்த கதையின் சாரத்தையும், அது எந்த கதைத்தொகுப்பில் உள்ளதென்றும், அது எனக்கு மிகவும் பிடித்த கதையென்றும் கூறிய போது எனக்கு பெருமை பிடிபடவில்லை, எத்தனையோ கதைகளில் அந்த கதையை நியாபகம் வைத்துள்ள அளவு அவனைப் படித்துள்ளேன், ஏதோ வர வாய்ப்பிருந்து அவனைக் காண வந்துவிடவில்லை என்ற பெருமை எனக்கு.

அவன் பேச்சு போர்ஹேஸை தொட்ட போது என் மனதில் ஒரே குதூகலம், அவன் நிச்சயம் போர்ஹேஸை குறிப்பிட்டு பேசுவான் என்று எதிர்பார்த்தேன். என் நண்பன் தடுமாறிய போது எந்த புத்தகத்தில் எந்த இடத்தில் போர்ஹேஸை குறிப்பிட்டுள்ளான் என்று சரியாகக் கூறினேன். பெயர் போடுதல் என்பது ஒரு கலை, சில எழுத்தாளர்கள் பெயர் போட்டு எழுதுவது ஏதோ வரலாறு படிப்பது போல இருக்கும், இவன் எழுதுவது அந்த பெயரை அறிமுகப்படுத்திக்கொள்ள தூண்டும்.

போர்ஹேஸ் என்றொரு எழுத்தாளனை உங்களுக்குத் தெரியுமா? இந்த பெயரைத் தொட்டுள்ள நிறைய எழுத்தாளர்களை நான் படித்துள்ளேன், ஆனால் இந்த பெயர் எனக்கு அறிமுகமாகியது அவனால் தான், அவன் குறிப்பிட்டுள்ளான் என்பதால் தான் போர்ஹேஸ் என் கவனத்தைப்பெற்றான். மேலும் எத்தனை பெயர்கள்? எத்தனை நிகழ்வுகள்? எத்தனை விசயங்களை அவன் எனக்கு அறிமுகப்படுத்தியுள்ளான்? அறிமுகப்படுத்திக்கொள்ள தூண்டியுள்ளான்? எத்தனை விதமான விசயங்கள், எத்தனை விதமான கற்பனைகள், எத்தனை வித்யாசமான கதையாடல்கள், எத்தனை வசீகரமான வார்த்தைகள், எத்தனை கசப்பான உண்மைகள். மிரண்டுவிடும் பெயர்கள் தான், மிரண்டுவிடும் செய்திகள் தான், மிரண்டுவிடும் செல்லாடல் தான். ஆனால் அந்த மிரட்சியின் வெளிப்பாடு அவன் எழுத்துக்களை நிராகரித்துவிடுவது அல்ல கொண்டாடுவது.

“பியர் குடிக்கிறீங்களா?, ஆர்டர் பண்ணவா?” அவன் தான், என்னிடம் தான். மிக இயல்பாக மறுத்தேன், தேனீரை மறுப்பது போல். இப்படி கூட நடந்துகொள்ளவில்லையென்றால் அவனுடைய வாசகியென எப்படி சொல்லிக்கொள்வது? இதில் பெரிதாக அலட்டிக்கொள்ள எந்த தேவையும் இல்லை, போலியான எந்த மனப்பாங்கையும் நான் வளர்த்துக் கொள்ளவில்லை, அதற்கான கூலியை எங்கெங்கும் நான் பெரும்போதிலும். மேலும் போதை சாரயத்தினுடைய தாக்கம் மட்டும் தானா? போதையை அவன் எனக்கு இதற்கு முன் அளித்ததேயில்லையா என்ன?

குஜராத் கலவரத்தில் கண்ணீருடன் உயிருக்காக கெஞ்சுபவனின் புகைப்படம், பூகம்பத்தில் கணவன் மனைவியாக கட்டிப்பிடித்தபடி இறந்திருந்த புகைப்படம், ஒரு எலும்பும் தோலுமான சிறுவனும் அவன் பின்னாள் உட்கார்ந்திருக்கும் கழுகு புகைப்படம் போன்ற புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா? அந்த புகைப்படங்கள் பாதிக்கும் அளவு மனதை பாதிக்கும் கதாபாத்திரங்களை படித்துள்ளீர்களா? அப்படியான கதாபாத்திரங்கள் நிரம்பியவை தான் அவனுடைய புத்தகங்கள். அந்த புகைப்படங்களை என்னால் நிச்சயம் இன்னொரு முறை பார்த்துவிடவே முடியாது. ஆனால் அவன் எழுத்தின் மீதான போதை இப்படியான ஒரு தாக்கமுள்ள அவன் எழுத்துக்களைக் கூட மீண்டும், மீண்டும் படிக்கத்தூண்டுவது எந்த விதத்திலும் சாராய போதைக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. மேலும் போதை, ஒரு பெண்ணாக எனக்கு அறிமுகமில்லாத ஒரு விசயம், ஆனால் போதையை மிகுதியான காட்டத்துடன் எனக்கு அறிமுகப்படுத்தியது அவன் தான்., மயங்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ள எந்த நிகழ்வுகளும் கிடைக்கப்படாதவள் நான், ஆனால் மயக்கத்தை பல்வேறு கதையாடல் மூலம் எனக்கு பரிசளித்தவன் அவன். அந்த மாய புத்தகத்தை படிக்கப் படிக்க எனக்கு அப்படியான போதையின் மற்றும் மயக்கத்தின் தெவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவை எனக்கு மட்டுமேயான பிரத்யோகமான அனுபவமாக, நிலைப்பாடாக நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

இயல்பாக பியரை மறுத்த என் செய்கைக்காக அவன் முகத்தில் எந்த ஒரு ஆச்சரியமோ, சலனமோ இல்லை. நீண்ட நேரம் கழித்தே என் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டான், கடைசி வரை நான் என்ன செய்கிறேன் என்று கேட்டுக்கொள்ளவே இல்லை. அவனின் அனைத்து உரையாடல்களும் பெரும்பாலும் என் நண்பனுடன் தான். என் பேச்சிலிருந்து நான் அவன் எழுத்துக்களை ஆழமாக படித்துள்ளேன் என்றும் பெரும்பாலும் அவனுடைய எல்லா புத்தகங்களையும் படித்துவிட்டேன் என்றும் அவன் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது.

தனக்கு நிறைய தெரியும் என்று காட்டிக்கொள்ள நண்பன் அதிகம் பிரயாசித்தான், பொதுவாக பெரும்பாலோனோர் கேட்டிராத பியானோ இசைகளைப் பற்றி, பியானோ இசையமைப்பாளர் பற்றி என் நண்பன் பேசிய போதிலும், சங்க பாடல்கள் மற்றும் ஆழ்ந்த இலக்கியம் பேசிய போதும் கூட அவன் ஆச்சரியப்படவில்லை. “இப்படியெல்லாம் நீ இல்லாம இருந்தா என்னை படிச்சிருக்கவே மாட்ட” என்ற ஒரு அலட்சிய மனோபாவம் தான் அவனிடம் இருந்தது என்று படுகிறது.

நானும் பெரிதாக எதற்காகவும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படியான அனுபவங்களுக்கு ஒரு வாராகத் தயாராகத்தான் வந்திருந்தேன். மனதில் படர்ந்த ஆழமான அமைதியுடன், மிரண்டு விடக்கூடிய சூழ்நிலைகளிலும் கொஞ்சம் கூட மிரளாமல் அவனை தொடர்ந்து கவனித்தேன். மேலும் அவனை அவனுடைய புத்தகங்களில் உள்ள கதாபார்த்திரங்களில் தேடிக்கொண்டிருந்தேன் என்று தான் கூறவேண்டும். ஆச்சரியமாக அதை ஒட்டிய ஒரு பேச்சும் வந்தது.

”அந்த புத்தகத்தில், அந்த கதாபாத்திரத்தின் அப்பா கூடை பின்னும் தொழில் செய்யராரே, உங்க அப்பா கூடை பின்னும் தொழில் செய்தாரான்னு கேக்கரான்யா ஒருத்தன், அப்படியே பார்த்தாலும் அந்த கதாபாத்திரம் தான் கூடை பின்றதா நான் எழுதிருக்கேன், இப்படியான ஆட்களை என்னய்யா செய்வது”.

”….. புத்தகம் தானேண்ணா?” எப்படியோ தவறான பெயர் வாயில் வந்துவிட்டது அதுவும் இரண்டு புத்தகங்களின் பெயர்களை ஒன்றினைத்து. நான் மாயபுத்தகம் என்று கூறிக்கொண்டிருந்த புத்தகத்தின் பெயரும், அவன் குறிப்பிட்ட புத்தகத்தின் பெயரும் சற்றே ஒன்றானதால் வாயில் சட்டென விட்டது.

“இல்லை, அந்த புத்தகம் வேறு, அது ….” அவன் அப்படி குறிப்பிட்டது நான் வெகுவாக ரசித்த அந்த மாய புத்தகத்தினை தான், அப்படி ஒரு புத்தகத்தை எனக்கு தெரிந்திருக்க முடியாது என்பது போல் அவன் பேசிவிட்டது எனக்கு வலித்தது. இத்தனை தான், இத்தனை தான் நான் என்னை வெளிக்காட்டிக்கொண்டது.

யோசித்துப்பார்த்தால், ஏன் இப்படி, ஏன் இப்படி என்று பதைபதைப்பதற்கான அனுபவங்கள் கிடைக்கப்படாத வாழ்க்கை தான் என்னுடையது, அதனால் தானோ என்னவோ ஏன் இப்படி, ஏன் இப்படி என ஒவ்வொரு வாசிப்பின் இருதியிலும் பதைபதைப்பதற்கான அனுபவங்கள் நிறைந்த புத்தகங்களை எனக்கு கொடுத்துள்ளான், அவன் நிச்சயம் அசாதாரண குணமுடையவனாகத்தான் இருக்க முடியும், அவனுக்கு தன் கதாபாத்திரங்களுக்கு வலியை மட்டும் தான் கொடுக்கத்தெரியும், அவனை எனக்கு பெரும்பாலும் தெரியும், அவன் வாழ்க்கை, அவன் படிப்பு, அவன் குடும்பம் மற்றும் இன்னபிற, என்னை அவனுடைய வாசகியென சொல்லிக்கொள்ள மிகுந்த பிரயாசைப்பட வேண்டியதாக உள்ளது, அவன் வாசகி என்ற நிலையை நான் அத்தனை எளிதாக அடைந்துவிடவில்லை, வாசகியென சொல்லிக்கொள்ள அவன் என்னென்ன மதிப்பீடுகள் வைத்துள்ளானோ? அல்லது இல்லையோ? ஆனால் நான் வைத்துள்ளேன், ஒருவனின் வாசகியென என்னைக் கூறிக்கொள்ள நான் பல மதிப்பீடுகள் வைத்துள்ளேன், அத்தனை மதிப்பீடுகளையும் பூர்த்திசெய்து கொண்டு தான் அவனின் வாசகியென என்னை சொல்லிக்கொண்டுள்ளேன்.

“பின்னவீனத்துவம் எழுதுவதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் யாரண்ணா சொல்வீர்கள்?” அவன் பதில் கூறவேயில்லை. யாரை மனதில் வைத்துக்கொண்டு நண்பன் கேட்கிறான் என்று எங்கள் மூவருக்குமே தெரிந்திருந்தது.

“ஏண்ணா சினிமாவிற்கு போகவில்லை” சினிமாவிற்கு போன எந்த எழுத்தாளனையும் குறையொன்றும் கூறிவிடவில்லை.

என் நண்பன் சுவாரஸ்யமான எந்த கேள்வியையும் அவனிடம் கேட்டுவிடவில்லை. எனக்கான கவனத்தை அவன் கொடுக்கவில்லை, அல்லது நான் பெற்றுக்கொள்ளவில்லை, ஆம், நான் பெற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மையாக இருக்க வேண்டும், அவனுடன் தனியாக இருக்கப்பெற்ற பொழுதுகளில் கூட அவனிடம் நான் அவனை எத்தனை படிக்கிறேன் என்று கூறிவிட முடியவில்லை. அது சம்பிரதாயமான சொல்லாடலாகத்தான் இருக்கும் என்று யோசித்தேனோ என்னவோ, எதையுமே கூறிக்கொள்ளவில்லை. காரணம் பிடிபடவேயில்லை. என்னுள் இருந்த பல்வேறு எண்ணங்களை எந்தெந்த வரிசையில், எந்தெந்த முகபாவனையில், எந்தெந்த ஒலி அலைவரிசையில் அவனிடன் பேச வேண்டும் என்று 100 முறைக்கும் மேல் ஒத்திகை பார்த்துக்கொண்டதை நினைத்தால் சிறு பிள்ளைத் தனமாக இருந்தது.

“வரேண்ணா, உடம்பை பார்த்துக்கொங்க”.

“பெங்களூரு போய் சேர்த்த உடன் கட்டாயமா கால் பண்ணி செல்லிடுங்க”.

சம்பிரதாயமான ஆனால் அக்கறையான விடைபெறும் படலம்.

oOo

கடலின் பிரம்மாண்டம் என்னை எப்போதும் மலைத்து நின்றுவிடச் செய்கிறது, எனக்கு என்றுமே கடல் சற்று பயம் தான், ஆனாலும் கடற்கரை மீது அளவுகடந்த ஆசை, அரிதாகவே வருவதால் எதையாவது யோசித்துக்கொண்டு பல மணி நேரம் உட்கார்ந்துவிடுவேன். இன்று என்னுள் அவனின் நினைவுகள் மட்டும் தான் நிறைந்திருந்தது. பொதுவாக நிறைவான சந்திப்புதான் என்றாலும் ஏதோ ஒரு நிரடல்.

பெண்ணாக இருப்பதற்கான கடனை எல்லா இடங்களிலும் அடைத்துக்கொண்டே இருக்க வேண்டியிருப்பதை நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது. ஒரு சாராயக்கடையில். கடற்கரையில், ஒரு உணவகத்தில் எளிதாக கிடைக்கப்பெறும் எழுத்தாளன் மற்றும் வாசகனுக்குறிய நெருக்கத்தை அதனாலான பந்தத்தை ஒரு வாசகியால் பெற்று விடவே முடியாதோ என்று மிரட்சியாக இருக்கிறது. இரவு நேர சாலைகளைப் போல், இரவு நேர தேனீர் கடைகளைப்போல், எழுத்தாளர்களின் நெருக்கமான வாசகர் வட்டம் கூட ஆண்களால் மட்டுமே ஆனதோ? அதுவும் இவனைப்போன்ற ஒரு எழுத்தாளனின் வாசகர் வட்டதிற்குள் ஒரு பெண்ணால் வரவே முடியாதோ என்று ஏக்கமாகவும் இருக்கிறது.

பெண்ணானதால் இப்படி இருக்கலாம், பெண்ணுடல் சார்ந்த அரசியலும் இதில் அடங்கியிருக்கலாம், என்னவோ அதுவும் கூட நான் பெண்ணாய் பிறந்ததற்கு அடைக்கவேண்டிய கடன் தான். எத்தனை பெண் விடுதலை பேசித் திரிந்த போதிலும் ஒரு வெள்ளைக்கார பெண்மணி சுட்டிக்காட்டிய பிறகே தன் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்த பாரதியின் வழிவந்தவர்கள் தானே இவர்கள் என்று அலட்சியமாக இருக்கிறது. ஒரு எழுத்தாளனின் மேல் வைக்கும் பிரியம் அவன் எழுத்தின் மீது வைப்பது தான் அதை மீறி வசீகரிக்க அவனிடமும் ஒன்றுமில்லை, என்னிடமும் ஒன்றுமில்லை. அவனுடன் அதிகம் பேசவேண்டும், விவாதிக்க வேண்டும், எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் என் விருப்பமாக இருந்தது, அப்படி நடக்காதது தான் என்னுள் நிரடலாக இருக்கிறது, அவனுடனான ஒரு பயணம், அவனுடனான கடற்கரை, அவனுடனான சில மணித்துளிகள் எனக்கு கிடைக்கப்பெறுமா? அது பெண் உடல் அரசியல் தாண்டி இயல்பானதாக அமையுமா? ஒரு முறை நிச்சயம் முயன்று தான் பார்க்க வேண்டும் என்று தோன்றியது, அது அத்தனை எளிதாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை என்று பட்டது!

கடற்கரையில் அவனுடனான சந்திப்பை சுற்றி பலவற்றையும் யோசித்தவாரே நீண்ட நேரம் உட்கார்த்திருந்தேன், கையில் அவன் கொடுத்த, அப்போது தான் வெளியான ஒரு புத்தகம். நண்பன் கடலில் நீந்திக்கொண்டிருந்தான். இத்தனை தூரம் வந்ததற்காக கடலில் சம்பிரதாயமாக கால் நனைத்தேன், முழங்கால் முட்டியைத் தாண்டி அலைகள் என்னைத் தொடாத தூரத்தில் நின்று கொண்டேன். கடலில் நீந்தி, கடலில் படகு விட்டு, கடலின் உப்பு காற்றிலேயே வாழும் மக்களை கண்டு பொறாமையாக இருந்தது. கடற்கரையிலேயே நின்றுவிடும் துயரத்துடனும், அவன் கொடுத்த புத்தகத்துடனும் கடலை விட்டு நகர்ந்தேன். கையும் மனமும் அந்த புத்தகத்தை பற்றிக்கொண்டது. என்னால் நிச்சயம் அந்த புத்தகத்தைப் படித்து முடித்துவிடாமல் தூங்க முடியப்போவதில்லை.

.- See more at: http://solvanam.com/?p=37319#sthash.M6HdIEvk.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.