Jump to content

ரஜினியின் லிங்காவால் ரூ. 30 கோடிக்கு நஷ்டம்... விநியோகஸ்தர்கள் போர்க்கொடி!


Recommended Posts

லிங்கா படத்தால் தங்களுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இந்த இழப்பை நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுதொடர்பாக யூடியூப்பில் ஒரு வீடியோ உலா வருகிறது. அந்த வீடியோவில் அந்த விநியோகஸ்தர்கள் கூறியுள்ளதாவது:

முதல் விநியோகஸ்தர்:

நான் திருச்சி தஞ்சாவூர் ஏரியா விநியோக உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்து வாங்கினேன். லிங்கா பட இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய இயக்குநர்கள், ரஜினி சார் உள்ளிட்டோர் இந்தப் படம் படையப்பா படத்தை விட நன்றாக போகும், 10 மடங்கு படையப்பாவை விட சிறப்பாக இருக்கும் என்றனர். பெரும் வசூலை கொடுக்கும் என்றனர். மேலும் அவர்களே வாலன்டியராக சிலரை விட்டு கேஸ் போடச் சொல்லி பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்கள். இதையெல்லாம் நம்பித்தான் நாங்கள் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கினோம். ஆனால் மக்களிடம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படத்தின் ரிலீஸ் தேதியைப் பார்த்தால் ரஜினி பிறந்த நாளன்று படத்தை வெளியிட முடிவு செய்தார்கள். ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா.. இத்தன வருடம் சினிமாவில் இருக்கும் ரஜினிக்கு அது தெரியாதா... ரஜினி ரசிகர்களைப் பார்த்தால் அவர்களுக்கு 45 வயதுக்கு மேல் இருக்கும். அவர்களின் பிள்ளைகள் அரையாண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் எப்படி கூட்டம் வரும். இதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். படம் இப்படி தவறான தேதியில் வெளியானதால்தான் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தோல்வி அடைந்து விட்டது. ரஜினி பெரிய ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அவரையும், எங்களைப் போன்றவர்களையும் வாழவைக்கும் இடம் திரையரங்குகள்தான். பல கோடி பணத்தைப் போட்டு படத்தை எடுத்து விட்டு கல்யாண மண்டபத்தில் படத்தைப் போட்டுக் காட்ட முடியாது. திரையரங்குகளில்தான் அதைக் காட்ட முடியும். நாங்கள் பெரும் விலை கொடுத்துள்ளோம். அதையெல்லாம் திரையரங்க உரிமையாளர்கள் தலையில்தான் சுமத்தியுள்ளோம். அவர்களும் பல லட்சம் செலவிட்டு, சில இடங்களில் கோடிக்கணக்கில் கொடுத்துள்ளனர். கடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்த இழப்பை சமாளிக்க, இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களை ரீகன்சிடர் செய்து தர வேண்டும். எங்களுக்கு 20 சதவீதம் கூட போட்ட பணம் வரவில்லை. இதை மரியாதைக்குரிய ரஜினி சார் தர வேண்டும். பல நூறு கோடிக்கு கிட்டத்தட்ட ரூ. 200 கோடிக்கு மேல் படத்தின் வியாபாரம் நடந்துள்ளது. அதில் ரூ. 20 முதல் 30 கோடி வரைதான் தற்போது இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வசூலான தொகையிலிருந்து இந்த இழப்பை ரஜினி சார் தாய் மனப்பான்மையுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்றார் அவர்.

2வது விநியோகஸ்தர்:

ரஜினிகாந்த் நன்றாக நடித்திருக்கிறார், படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லித்தான் நம்பி வாங்கினோம். ஆனால் படத்திற்கு ஆடியன்ஸிடம் ரெஸ்பான்ஸ் இல்லை. எந்தத் தியேட்டரிலும் படம் ஹவுஸ்புல் ஆக வில்லை. நேற்றெல்லாம் ஒரு தியேட்டரில் 10 டிக்கெட்தான் விற்றுள்ளது. ஓப்பனிங் சில காட்சிகள்தான் ஹவுஸ்புல் ஆனது. மற்றபடி எங்குமே புல் ஆகவில்லை. நான் செங்கல்பட்டு உரிமையை வாங்கியுள்ளேன். பெரும் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது 64 தியேட்டர்களில் படம் போட்டுள்ளோம். எங்குமே போட்ட தொகை கவர் ஆகவில்லை. ரூ. 14 கோடி கொடுத்து வாங்கினோம். இப்போது தியேட்டர்கார்ரகள் எங்களை நெருக்குகிறார்கள். நாங்கள் தயாரிப்பாளர்களைக் கேட்டுள்ளோம். அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை. ரஜினி சார் இந்த இழப்பை சரிக்கட்ட வேண்டும் என்று கேட்கிறோம் என்றார்.

 

3வது விநியோகஸ்தர்:

நான் செளத் ஆர்க்காடு, நார்த் ஆர்க்காடு உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்தோம். இதில் தியேட்டர்காரர்கள் ரூ. 4 கோடி கொடுத்தனர். மீதப் பணத்தை நாங்கள் போட்டோம். இப்போது தியேட்டர்களில் ரூ இரண்டே கால் கோடிதான் வசூலாகியுள்ளது. எனவே அவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு பிரச்சினை செய்கிறார்கள். எனவேதான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார். ஆனால், இந்தப் புகார் குறித்து லிங்கா தயாரிப்பாளர் மற்றும் பிரதான விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸிடம் விசாரித்தபோது, இவர்கள் விநியோகஸ்தரே இல்லை என்றும், அவர்கள் கூறும் விலைக்கு படம் விற்கப்படவும் இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் புகார் கூறிய விநியோகஸ்தர்கள் மற்றும் அலுவலக முற்றுகை குறித்து தயாரிப்பாளர் சார்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 http://tamil.oneindia.com/news/tamilnadu/distributors-say-they-have-suffered-loss-from-lingaa-217362.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
லாபம் வந்தால் உங்களுக்கு 
நஷ்டம் வந்தால் ரஜனி சாரா?
என்ன கணக்கிது?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லாபம் வந்தால் உங்களுக்கு

நஷ்டம் வந்தால் ரஜனி சாரா?

என்ன கணக்கிது?

உங்கள் கேள்வி சரிதரன்.

ஆனால், 10 ரூபா விக்கிற பொருளை, நல்ல பொருள்ண்ணே, உங்க ஊரில 100 ரூபா போகும் பயப்பிடாம 70 கொடுத்து எடுத்திட்டுப் போங்க என்னு தலைல கட்டிவிட்டால், எதிர்பார்த்த லாபம் வராவிடில் refund கேட்பார்கள் தானே.

20 ரூபா திருப்பிக் கொடுத்தாலும் தயாரிப்பாளருக்கு நட்டம் இல்லையே.

ஆனாலும் ரஜனி படங்கள், பல கோடிகளை பிரட்டும் மெகா பிஸ்னஸ் தன்மை கொண்டவை.

Link to comment
Share on other sites

லாபம் வந்தால் உங்களுக்கு

நஷ்டம் வந்தால் ரஜனி சாரா?

என்ன கணக்கிது?

இதை நானும் யோசிப்பதுண்டு. பாபா படத்தில் ஏற்பட்ட நட்டத்தில் ஒரு பங்கை திருப்பிக் கொடுத்ததாக ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி எனும் ஏமாற்று  பேர்வழி தமிழகத்தை எதிர்பார்க்கவைத்தே வியாபாரம் செய்வதில் கில்லாடி .

இனி ரஜனிக்கு இறங்கு முகம் தான்.

அமிதாப் மாதிரி இலகுவாக சுதாகரிக்கும் திறமை குறைவு.

கடைசி 15 வருட மாஸ்க் ஊடக விளையாட்டினால் தான் பிழைப்பு அப்படியும் எதிர்த்து சவுண்ட்விட்டவைகளை மறைமுகமாய் தூது விட்டு வாயை மூட வைப்பது உ .ம் மனோரமா .

இல்லாத ஒன்றை பெரிதாக காட்டிக்கொள்வது.இல்லாதது தமிழர்களிடம் உழைத்து விட்டு ஒரு சதமும் ஈகாமல் M .G .R என்ற பில்டப் அடிப்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நானும் யோசிப்பதுண்டு. பாபா படத்தில் ஏற்பட்ட நட்டத்தில் ஒரு பங்கை திருப்பிக் கொடுத்ததாக ஞாபகம்.

 

ம்ம்ம்

கொடுத்து பழக்கிவிட்டார்.

இனி அல்லாவுக்கு பகிடியும் தெரியாது

வெற்றியும் தெரியாது என்றபடிதான் போகப்போகுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி எனும் ஏமாற்று  பேர்வழி தமிழகத்தை எதிர்பார்க்கவைத்தே வியாபாரம் செய்வதில் கில்லாடி .

இனி ரஜனிக்கு இறங்கு முகம் தான்.

அமிதாப் மாதிரி இலகுவாக சுதாகரிக்கும் திறமை குறைவு.

கடைசி 15 வருட மாஸ்க் ஊடக விளையாட்டினால் தான் பிழைப்பு அப்படியும் எதிர்த்து சவுண்ட்விட்டவைகளை மறைமுகமாய் தூது விட்டு வாயை மூட வைப்பது உ .ம் மனோரமா .

இல்லாத ஒன்றை பெரிதாக காட்டிக்கொள்வது.இல்லாதது தமிழர்களிடம் உழைத்து விட்டு ஒரு சதமும் ஈகாமல் M .G .R என்ற பில்டப் அடிப்பது. 

 

நீங்கள் சொல்வது சரி ஆயினும் தயாரிப்பாளர் குஞ்சுமோன் ( ஜெண்டில்மான் படத்தினை எடுத்தவர்) ஒரு முறை இதிலுள்ள அருமையான பொருளாதார விளக்கத்தினை தந்தார். 
 
ரஜனி போன்ற mass ஹீரோ வயதாகி விட்டது என ஒதுங்காமல், ரசிகர் ஆதரவு இருக்கும் வரை நடிப்பதன் மூலம் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை பெற்று சம்பளம் பெற உதவ முடியும். அவர்கள் குடும்பங்கள் உணவு பெற உதவ முடியும். ஏனெனில் அவர்களது வேலை நிரந்தரம் இல்லாதது. மேலும் இவரது பட பிரமாண்ட வியாபாரம் மூலம் திரளும் பணம் மீண்டும் இங்கே முதலீடு செய்யப் படுமே, என்றார்.
 
இந்த எல்லோராலும் ஆதரவு தரப் பட்ட கருத்தின் மூலமே, பாபாவில் அடி வாங்கி ஒதுங்கி இருந்த ரஜனி படையப்பா, சந்திரமுகி, சிவாஜி போன்ற பிரமாண்டமான படங்களில் நடிக்க வந்தார். குஞ்சுமோன் சொன்னது சரிதான் என நிருபித்தார்.
 
இவர் படங்களின் வியாபாரத்தின் அளவினையும், அதில் புரளும் பணத்தின் அளவினையும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என விரியும் சந்தையையும் அதில் இந்த படத்துடன் தொடர்பானவர்களுக்கு, அட இங்கே நம்ம தமிழ் கடைகளில் DVD விற்பவர்கள், தமிழ் படம் ஓடும்  தியேட்டரில்  டிக்கெட், சோளப் பொரி விற்பவர் வரை பிழைப்பவர்கள் அதிகம் என்பதால், ரஜனி என்னும் குறுகிய கண்ணோடத்தில் பார்க்க முடியாது எனும் குஞ்சுமோன் வாதம் எனக்கு சரியாகப் படுகின்றது.  
Link to comment
Share on other sites

பல காலம் விநியோகஸ்தர்களாகவும், திரையரங்கு உரிமையாளர்களாகவும் இருப்பவர்களுக்கு ஒரு படத்தினை பார்த்து விட்டு இது ஓடுமா இல்லையா என்பதை அனுமானிக்க முடியவில்லையாயின் அது அவர்களது தவறாகும்.  படம் பார்க்காமல் விற்பவர் தன் சரக்கை நல்லது என்று சொல்வதை வைத்து முடிவெடுப்பவர் முட்டாளாகத் தான் இருப்பர்.

 

இவர்களை விட அடி முட்டால்கள் எந்தவொரு விமர்சனத்தினையும் வாசிக்காமல் முதல் இரண்டு நாளில் விழுந்தடித்து புதுப்படம் பார்க்கப் போகின்றவர்கள்.

 

அதை விட முட்டாள்கள், ரஜனி / விஜய் / அஜித் /சிம்பு போன்றோரின் படம் உன்னதமான சினிமாவாக இருக்கும் என கற்பனை பண்ணுகின்றவர்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நீங்கள் சொல்வது சரி ஆயினும் தயாரிப்பாளர் குஞ்சுமோன் ( ஜெண்டில்மான் படத்தினை எடுத்தவர்) ஒரு முறை இதிலுள்ள அருமையான பொருளாதார விளக்கத்தினை தந்தார். 

சிம்பிள் உங்கள் வீட்டில் நடைபெறும் வேலை 30000 பெறுமதி யானது வேலை முடிஇன்த்ததும் மேத்திரி 3கோடி ரூபாயை தன்னுடைய சம்பளம் என தன் வீட்டுக்கு கொண்டு போவதுக்கு ஒப்பானது இந்த கதை.அப்பத்தான் குஞ்சு மோன்,ரஜனி வகையறாக்கள்   தமிழ்நாட்டில் பிழைக்கலாம்.

Link to comment
Share on other sites

தமிழ்நாடு ஓரளவு விழித்துக்கொண்டுவிட்டதா? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஓரளவு விழித்துக்கொண்டுவிட்டதா? :wub:

 

இனியும்.... விழிக்கா விட்டால், அந்தத் தமிழ் நாட்டை..

அலாரம் அடித்து தான்.... எழுப்பணும்...

ஹ.... ஹா.... ஹா.......

 

-ரசனியின் பஞ்ச் டயலாக்கு.-

(ப்ளீஸ்... இதனை, ரசனி சாரின் குரலில் வாசித்து, இன்பம் அடையுங்கள்.) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஓரளவு விழித்துக்கொண்டுவிட்டதா? :wub:

 

ஆங் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது.   அவரு அடுத்த தமிழக முதல்வர் ஆக கனவு காண்கிறார்.  :o
 
சிங்கம் உள்ளார போனதும் நரிகள் (ரஜனி, குஸ்பு, விஜய், வாசன், தமிழ் இசை, ஸ்டாலின் ) எல்லாம் முதல்வர் ஆக கனவு காணுகினம்.  :rolleyes:  :icon_idea:  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆங் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது.   அவரு அடுத்த தமிழக முதல்வர் ஆக கனவு காண்கிறார்.  :o
 
சிங்கம் உள்ளார போனதும் நரிகள் (ரஜனி, குஸ்பு, விஜய், வாசன், தமிழ் இசை, ஸ்டாலின் ) எல்லாம் முதல்வர் ஆக கனவு காணுகினம்.  :rolleyes:  :icon_idea:  :lol:

 

ஆங் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது.... :D 

 

உங்க மக்கள திருப்திப்படுத்த

ஆள

உங்களுக்கு முடியல என்பதை ஒத்துக்கொள்ளணும்  முதலில்... :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஓரளவு விழித்துக்கொண்டுவிட்டதா? :wub:

தமிழ்நாடாவது விழித்துக்கொள்வதாவது! :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிக்கு மார்க்கட் இருந்தால் மட்டும் போதாது. கதையும் இருக்கவேண்டும் என்பதை ரசிகர்கள் உணர்த்துகின்றார்கள். ஆனால் ஒரு படம் வெற்றி பெறுமா இல்லையா என்பது வெறும் சூதாட்டம். இதில் எதிர்வு கூற முனைவது வீண் வேலை.

தொடர்ந்து மொக்கையாகவே தமிழ்ப்படங்கள் வருவதால் இதுகளைப் பார்ப்பதையே விட்டுவிட்டேன். எனவே எனக்கு நட்டமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் பார்த்துவிட்டேன், ஒரு அலுப்பு படம். நட்டம் வரும்தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கா படத்தால் நஷ்டம்.. புகார் கொடுத்தவர், போலீஸ் வந்ததால் ஓட்டம்!

லிங்கா படத்தால் தங்களுக்கு நஷ்டம் என்று கூறி, விநியோகஸ்தர் அலுவலகம் முன்பாக சிலர் நேற்று முற்றுகையிட்டனர். ஆனால் அப்படி முற்றுகையிட்டவர்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பொய்யான புகார் கூறி, நன்றாக ஓடும் படத்துக்கு எதிர்மறை பிரச்சாரம் செய்வதாகவும் லிங்கா தரப்பில் போலீசில் புகார் கூறப்பட்டதால், முற்றுகையிட்டவர்கள் திடீரென மாயமானார்கள்.

 

லிங்கா படத்தை திருச்சி - தஞ்சையில் திரையிட்ட வகையில் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறி, விஜயபார்கவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை சிலர் முற்றுகையிட்டனர். இதுகுறித்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் தகவல் அனுப்பினர். அந்த நிறுவனத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த நான்குபேர் தங்களை லிங்கா விநியோகஸ்தர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர் தன்னை திருச்சி - தஞ்சை பகுதி விநியோகஸ்தர் என்று கூறி, லிங்காவை வெளியிட்டதிலஸ் தனக்கு ரூ 8 கோடி நஷ்டம் என்றார். மேலும் ரஜினி பிறந்த நாளில் இந்தப் படத்தை வெளியிட்டது தவறு, அது என்ன தேசிய விடுமுறை நாளா, ரஜினி ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்றெல்லாம் அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அவரது புகார் குறித்து லிங்கா தயாரிப்பாளர் மற்றும் பிரதான விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸிடம் விசாரித்தபோது, இப்படி ஒரு விநியோகஸ்தரே இல்லை என்றும், அவர் கூறும் விலைக்கு படம் விற்கப்படவும் இல்லை என்றும் தெரிவித்தனர். "படம் வெளியாகி ஒரு வாரம் கூட முடியவில்லை. திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நஷ்டம் என்று எப்படி சொல்ல முடியும்? இதை விநியோகஸ்தர்கள் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் சொல்லாமல், பிரஸ்ஸை அழைத்தது ஏன்? இது திட்டமிட்ட சதி என்பதைப் புரிந்து கொள்ள இதுவே போதும். லிங்கா வசூல் இதற்கெல்லாம் பதிலடியாக அமையும்," என்றனர்.

மேலும் திருச்சி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஏரியாக்களில் முதல் வாரம் வெளியான அனைத்து அரங்குகளிலும் படம் இரண்டாவது வாரமும் நல்ல வசூலுடன் தொடர்கிறது என்றும் தெரிவித்தனர். புகார் கூறிய 'விநியோகஸ்தர்' மற்றும் அலுவலக முற்றுகை குறித்து தயாரிப்பாளர் சார்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் மாயமாகிவிட்டனர். அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணும் வேலை செய்யவில்லை!

thatstamil
 

Link to comment
Share on other sites

மோனா கசோலினா பாடல் பிடிச்சிருக்கு. மனோவுக்கும் பாடகிகளுக்கும் பாராட்டுக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல காலம் விநியோகஸ்தர்களாகவும், திரையரங்கு உரிமையாளர்களாகவும் இருப்பவர்களுக்கு ஒரு படத்தினை பார்த்து விட்டு இது ஓடுமா இல்லையா என்பதை அனுமானிக்க முடியவில்லையாயின் அது அவர்களது தவறாகும். படம் பார்க்காமல் விற்பவர் தன் சரக்கை நல்லது என்று சொல்வதை வைத்து முடிவெடுப்பவர் முட்டாளாகத் தான் இருப்பர்.

இவர்களை விட அடி முட்டால்கள் எந்தவொரு விமர்சனத்தினையும் வாசிக்காமல் முதல் இரண்டு நாளில் விழுந்தடித்து புதுப்படம் பார்க்கப் போகின்றவர்கள்.

அதை விட முட்டாள்கள், ரஜனி / விஜய் / அஜித் /சிம்பு போன்றோரின் படம் உன்னதமான சினிமாவாக இருக்கும் என கற்பனை பண்ணுகின்றவர்கள். :)

ஒரு நடிகரை பிடிக்கும்,பிடிக்காது என்பது உங்கள் ரசனை சம்மந்தப்பட்ட விசயம்.அதற்காக அந்த நடிகரின் படங்களை பார்ப்பவர்களை முட்டாள் என்பது படு கேவலமான விடயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலத்துக்கு வருகிறது நடிகர் ரஜினி மனைவி சொத்து...

 

 

rajiniii.jpg

 

 

நடிகர் ரஜினி நடித்த, 'கோச்சடையான்' படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனை, 'மீடியா ஒன்' நிறுவனம் திருப்பிச் செலுத்தாததால், அதற்கு பிணையாகக் கொடுக்கப்பட்ட, நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தின், 22 கோடி ரூபாய் சொத்தை கையகப்படுத்த, இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியான, 'எக்சிம்' நடவடிக்கை எடுத்துள்ளது.
 
 
ரஜினி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்த, 'கோச்சடையான்' திரைப்படம், மே, 23ம் தேதி வெளியானது. நாட்டிலேயே முதல் முறையாக முப்பரிமாண முறையில் (3டி), 'மோஷன் காப்சரிங்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் இப்படம் தயாரிக்கப்பட்டது. ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கிய இப்படத்தை, 'ஈராஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 'மீடியா ஒன் குளோபல் என்டர் டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்தது.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.