Jump to content

என்னை நம்புங்கள்; முல்லைத்தீவில் மகிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5b1e8c8b16ce7a64f62776bc098c1eef.jpg

என்னை நம்புங்கள். நான் எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன், என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
 
இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
ஆளும் அரசு தொடர்பாகப் பொய் பரப்புரைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன என அவர் குற்றஞ்சாட்டினார்.
 
இந்தக் குற்றச்சாட்டைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். வடக்கு மாகாண சபைக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அது முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்
 
 
 
2(159).jpg
 
3(137).jpg
 
1(194).jpg
 
4(107).jpg
 
6(61).jpg
 
 
 
5(87).jpg
 
55(10).jpg
 
unnamed%20copy(13).jpg
 
 

http://onlineuthayan.com/News_More.php?id=878293735818740669

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பீட்டோம், நம்பீட்டோம்....
 
ஏங்க, சும்மா தான் கேட்கிறேன், ரொம்ப பயப்பிடுறீன்களோ ? :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நம்பீட்டோம், நம்பீட்டோம்....
 
ஏங்க, சும்மா தான் கேட்கிறேன், ரொம்ப பயப்பிடுறீன்களோ ? :D

 

 

தெற்கில்

தமிழர்களை  அழித்தது நான்தான்

 

வடக்கில் 

என்னை  நம்புங்கள்

நான் அவனில்லை............. :(  :(  :(

Link to comment
Share on other sites

என்னை நம்புங்கள். நான் எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன், என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்/////

முழுக்க முழுக்க தமிழரின் தாயக பகுதியில் அமைந்திருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மகிந்தா கூறியது இது ஆனால் மேடையில் கட்டபட்டிருக்கும் அந்த பெரிய பானரில் மருந்துக்கு கூட தமிழ் இல்லை..... ஆனால் தன்னை நம்பட்டாம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தானாக வரவேண்டும். இப்படி கூவிக் கூவிக் கேட்டு வாங்கக்கூடாது. 

Link to comment
Share on other sites

முல்லைத்தவில் மகிந்த போட்ட ஓர் கட்சி தாவல் நாடகம்

முல்லைத்தீவில் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 21 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசியல் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

 
பரபரப்பூட்டும் செய்தியாக இந்த அறிவித்தல் மேடை தொகுப்பாளரால் அறிவிக்கப்பட்டது. இதற்காக சில உறுப்பினர்களும் ஏற்பாடு மேடையில் நின்றனர். 
 
சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை அழைத்து வந்து அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் என்று மேடையில் காட்டப்பட்டனர். 
 
அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுதந்திரக்கட்சிக்கு கட்சி தாவியவர் என ஓர் நாடகம் போட்டப்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 
 
மக்களை திசை திருப்பவே இவ்வாறு ஓர் நாடகம் போடப்பட்டது என்றும் அது மக்களுக்கு தெரிந்திருந்தபடியால் அந்த நாடகம் எடுபடவில்லை என்று  எமது செய்தியாளர்  குறிப்பிடுகின்றார். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவால் எந்தவித கூச்சமும் இல்லாமல் எப்படி இவ்வாறு  முல்லைத்தீவில்  சிரிக்க முடிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணியும் 5000 ரூபா காசும் கொடுத்த நம்பி விடுவார்களா பாஸ் 

Link to comment
Share on other sites

https://www.facebook.com/video/video.php?v=316081015252851

 

மகிந்தவின் குடும்பம் மக்கள் பணத்தை கொள்ளையடித்த விதம்
வெளிச்சத்திற்கு வரும் மகிந்த குடும்பத்தின் ஊதாரிகள் 
மலேசியாவில் இருந்த விமானத்தை 
மகிந்தவின் மைத்துனர் சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு
வரவழைத்த விதம் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழில்(??) பேசி வாக்காளர்களை கவரும்(??) மகிந்த

 

 

பொறுத்த இடத்தில் வேண்டாம் என்று சொல்கிறார்

அத்துடன்

உங்கள் பிரதேசம்

உங்கள் பகுதி என்று அடிக்கடி சொல்கிறார்

மனதில்  நினைப்பது தானே வெளியில் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் நல்லாய்... தமிழ் பேசுறார்.
இதனைப் பயன் படுத்தி, அவரை... எங்களைப் போன்ற, ஒரிஜினல்... தமிழனாக்க முயற்சிக்க வேண்டும். :D  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.