Jump to content

ஆணுறையை.... தவிர்க்க, ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10-1410338042-pulse5.jpg

 

ஆணுறையை.... தவிர்க்க, ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்!!!

 

ஆரோக்கியமான உறவிற்கு தேவையானது பாதுகாப்பான உடலுறவு. இருப்பினும் ஆணுறை பயன்படுத்துவதை சில ஆண்கள் தவிர்த்து வருகின்றனர். ஆணுறையின் மீது எப்போதுமே ஆணுகளுக்கு வெறுப்பு தான். அது ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆண்களை ஆணுறை பயன்படுத்த வைப்பதும் கஷ்டம் தான். ஆணுறையை தவிர்ப்பதற்கு ஆண்கள் பல சாமார்த்தியமுள்ள சாக்கு போக்குகளை கூறி வருகின்றனர்.

 

'உடலுறவு' கொள்ள ஆசை? ஆனா கருத்தரிக்க வேண்டாமா!

ஆணுறை மட்டும் கட்டாயம் இல்லை என்ற நிலை வந்தால், கண்டிப்பாக ஆண்கள் ஆணுறையை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இப்போதுள்ள பெண்கள் எல்லாம் தைரியத்துடன் அதிகாரத்துடன் செயல்படுவதால், அவர்களின் முகத்திற்கு நேராக முடியாது என ஆண்களால் கூற முடிவதில்லை. அதனால் அதற்கு சாமர்த்தியமான வழிகளை கையாளுகின்றனர். ஆணுறை என்பது உடலுறவு இன்பத்திற்கு தேவையற்ற இடைஞ்சல் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். அதனை தவிர்க்க அவர்கள் கூறும் காரணங்கள் புத்திசாலித்தனமாகவும் இருக்கிறது.

 

கருத்தடையும், கருத்தடை சாதனங்களும்...

ஆண்கள் ஆணுறை அணியவில்லை என்றால், அவர்களிடம் உடலுறவில் ஈடுபடும் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பெண்கள் மற்றும் கர்ப்பமாகி விட்டால், அவர்களை முதலில் குறை கூறுவதும் ஆண்களாக தான் இருக்கும். பெண்களுக்கு உண்டாகும் STD பிரச்சனைகளுக்கும் அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். அதனால் பெண்களின் பாதுகாப்பும் வருங்காலமும் ஆண்கள் ஆணுறை பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. சரி அதனை பயன்படுத்தாமல் இருக்க, அப்படி என்ன காரணங்களை தான் ஆண்கள் அடுக்குகிறார்கள் என பார்க்கலாமா?

 

பிளாஸ்டிக் உணர்வு.

ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும் பிளாஸ்டிக் உணர்வு உடலுறவின் சுகத்தை முழுமையாக அழித்து விடுகிறது என்பது பல ஆண்கள் கூறும் காரணமாகும். அதனால் ஆணுறை இல்லாமல் தொடர பெண்களை அவர்கள் சமாதானப்படுத்த முயல்வார்கள்.

 

பாதுகாப்பான நாட்கள் தானே?

பாதுகாப்பான நாட்கள் தான்; ஆனால் STD பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா ஆண்களே? பெண்களுக்கு பாதுகாப்பான நாட்கள் இருக்கிறது என்பதை காரணம் காட்டி ஆண்கள் ஆதாயம் தேட முயல்வார்கள். இதனால் அவர்கள் அந்த நாட்களில் ஆணுறை பயன்படுத்த வேண்டியதில்லை பாருங்கள்.

 

ஆணுறையும் கூட தோற்று போகும்.

ஆணுறைகள் 3% தோல்வி வீதத்தை கொண்டுள்ளது. ஆனால் ஆண்கள் அந்த வீதத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இதை ஒரு காரணம் காட்டி, என்ன தான் பாதுகாப்பாக இருந்தாலும், அது கடவுள் கையில் தான் உள்ளது என தத்துவமும் பேசுவார்கள்.

 

ஏன் மாத்திரை எடுத்துக் கொள்ள கூடாது?

ஆனால் STD-க்கு எதிராக மாத்திரைகள் பாதுகாப்பை அளிக்காது தானே? மேலும் அதில் 20% தோல்வி வீதமும் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த சூட்டில் இருக்கும் ஆணிடம் இதை கூறி பாருங்கள்; கண்டிப்பாக அவருக்கு காது கேட்காது.

 

அனுபவிக்க முடியாது.

இந்த அனைத்து பொய்யான சாக்குகளுக்கு பிறகு, பெண்களின் திருப்தியின் மீது அக்கறை உள்ளவரை போல் ஆண்கள் நடிப்பார்கள். ஆண்கள் ஆணுறை அணிந்து கொண்டால், பெண்களால் முழுமையான திருப்தியை அடைய முடியாது என்றும் நம்ப வைப்பார்கள்.

என்னால் என்னை கட்டுப்படுத்த முடியும்.

உங்களால் முடியலாம், ஆனால் உங்கள் கட்டுப்பாடுகளின் தரத்தின் மீது சோதனை மேற்கொள்வது நல்லதாகும். தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்ற பெரிய ஈகோவை ஆண்கள் கொண்டுள்ளனர். அதனால் விந்தணு வெளிப்படும் வேளையில் தங்கள் ஆணுறுப்பை வெளியே எடுத்து விடுவதாக மார்த்தட்டி கொள்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவ்வகையான விஷயங்களை சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம்; செய்வதற்கு???

 

அவசர கால கருத்தடைப் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சில நேரங்களில் புத்தியில்லாமல் பைத்தியகாரத்தனமாக ஆண்கள் நடப்பார்கள். இயல்பாக பயன்படுத்தும் கருத்தடை தோல்வியில் முடியும் போது அவசர சூழ்நிலைகளுக்கு மட்டும், காலை நேரத்திற்கு பின் இந்த மாத்திரைகள் உண்ண வேண்டும் என்பதை யாராவது அவர்களுக்கு விரிவாக சொல்லுங்களேன். நினைத்த நேரம் இந்த மாத்திரைகளை விழுங்க முடியாது.

என் மீது நம்பிக்கை இல்லையா?

உங்கள் ஆணிடம் பாதுகாப்பைப் பற்றி பேச தொடங்கினால், உடனே நம்பிக்கை பற்றிய பிரச்சனையாக்கி விடுவார்கள். இந்த பிரச்சனையை இழுத்தால் அதற்காக நீங்கள் ரொம்பவும் வருத்தப்படாதீர்கள். ஆணுறையை தவிர்க்கவே இந்த சீனெல்லாம் போடுகிறார்கள்.

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

சிறியர் நீங்கள் என்ன காரணம் சொல்வதுண்டு. அதையம் எழுதினால் வாசிப்பவர்கள் பயன்பெறுவார்கள்.

Link to comment
Share on other sites

என்ன இருந்தாலும் பிளாஸ்டிக் உணர்வு மூடை கெடுத்து படுக்க வைத்து விடும் என்பது உண்மைதான் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் நீங்கள் என்ன காரணம் சொல்வதுண்டு. அதையம் எழுதினால் வாசிப்பவர்கள் பயன்பெறுவார்கள்.

 

 

அவருக்கு இது இப்ப அணியத் தேவையில்லை, தடை செய்துவிட்டார்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148254-ஆண்களுக்கான-கருத்தடை-அவசியமா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் நீங்கள் என்ன காரணம் சொல்வதுண்டு. அதையம் எழுதினால் வாசிப்பவர்கள் பயன்பெறுவார்கள்.

 

ஆணுறை போட்டுக் கொண்டு, உடலுறவில் ஈடுபட்டால்.... ஆணுறை கழண்டு, உள்ளுக்குப் போனால்.... ஆஸ்பத்திரிக்குப் போய், ஆபரேஷன் பண்ணித்தான்... வெளியே எடுக்க வேண்டும் என்பேன்.

அதற்குப் பயந்து, இதுவரை யாரும் என்னை... ஆணுறை போடச் சொல்லி வற்புறுத்தியது இல்லை, ருல்பன். :icon_idea:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு இது இப்ப அணியத் தேவையில்லை, தடை செய்துவிட்டார்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148254-ஆண்களுக்கான-கருத்தடை-அவசியமா/

 

ஹி..ஹீ..ஹி...

நான்.... கருத்தடை செய்ததற்கு, இந்த ஆணுறை அணியாமல் இருக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம், உடையார்.

அதில் 28´வது  பதிவில்.... புங்கையூரான் நாசூக்காக சுட்டிக்காட்டியுள்ளார். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க செயற்கையை இயற்கைக்குள் திணிப்பதற்கு எதிரானவர்கள். அந்த வகையில்..ஆணுறை அவசியமில்லை என்று கருதும் வகுப்பினர். அந்த வகைக்கு ஏற்ப தனிமனித ஒழுக்கத்தை செம்மைப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகிறோம். அத்தோடு இன்னும் இப்படியான விடயங்களில் ஈடுபடக் கூடிய அளவுக்கு எங்களின் மனதுக்கு ஏற்ற ஆள் வரல்ல..!! கவனிங்க ஆள்.. ஒருமை. ஆக்கள் என்று விழிக்கவில்லை..!! ஏன்னா நாங்க மனிதன் மொனாகமி என்று நம்பும் வகுப்பினர். :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க செயற்கையை இயற்கைக்குள் திணிப்பதற்கு எதிரானவர்கள். அந்த வகையில்..ஆணுறை அவசியமில்லை என்று கருதும் வகுப்பினர். அந்த வகைக்கு ஏற்ப தனிமனித ஒழுக்கத்தை செம்மைப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகிறோம். அத்தோடு இன்னும் இப்படியான விடயங்களில் ஈடுபடக் கூடிய அளவுக்கு எங்களின் மனதுக்கு ஏற்ற ஆள் வரல்ல..!! கவனிங்க ஆள்.. ஒருமை. ஆக்கள் என்று விழிக்கவில்லை..!! ஏன்னா நாங்க மனிதன் மொனாகமி என்று நம்பும் வகுப்பினர். :icon_idea::)

இதில் என்ன ஆச்சரியம்! ஆணுறை அவசியமில்லை என்று கருதும் வகுப்பினராக இருப்பதால்தான் எல்லாம் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கின்றது. <_<

ஒற்றை ஆளுக்கு இலவு காத்த கிளி மாதிரி காத்திருந்து என்ன பிரயோசனம்? :blink:

ஒரு முழுமையான ஆண் கலவியில் ஈடுபடும்போது வெளியேறும் விந்தணுக்கள் ஐரோப்பாவில் இருக்கும் அத்தனை பெண்களையும் கருக்கட்ட வைக்குமளவுக்கு அதிகூடிய எண்ணிக்கையில் உள்ளதாம். :huh: எத்தனை இலட்சகோடி உயிர்களை தோற்றுவிப்பதை வீணாக்குகின்றீர்கள் என்று யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் மனதுக்கு ஏற்ற ஆள் வருமட்டும் "கனாக்கண்டேன் தோழி" என்று காத்திருக்கமாட்டீர்கள் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன ஆச்சரியம்! ஆணுறை அவசியமில்லை என்று கருதும் வகுப்பினராக இருப்பதால்தான் எல்லாம் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கின்றது. <_<

ஒற்றை ஆளுக்கு இலவு காத்த கிளி மாதிரி காத்திருந்து என்ன பிரயோசனம்? :blink:

ஒரு முழுமையான ஆண் கலவியில் ஈடுபடும்போது வெளியேறும் விந்தணுக்கள் ஐரோப்பாவில் இருக்கும் அத்தனை பெண்களையும் கருக்கட்ட வைக்குமளவுக்கு அதிகூடிய எண்ணிக்கையில் உள்ளதாம். :huh: எத்தனை இலட்சகோடி உயிர்களை தோற்றுவிப்பதை வீணாக்குகின்றீர்கள் என்று யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் மனதுக்கு ஏற்ற ஆள் வருமட்டும் "கனாக்கண்டேன் தோழி" என்று காத்திருக்கமாட்டீர்கள் :wub:

 

அதையே இப்படி யோசிச்சுப் பாருங்கள்.. அந்தளவு சின்ன நிகழ்தகவுக்குரிய அரிய நிகழ்வை சந்திச்சு சாத்தியமாக்க.. உள்ள முட்டையை தருபவளை காத்திருந்து சரியானவளாய் தேர்வு செய்வதில் என்ன தவறுன்னு....???! (வாழ்க்கை என்பது இது மட்டுமல்ல.. இதுவும் அடங்கினது என்ற வகையில்..). மீண்டும் இயற்கையோடு கதைக்கிறம். செயற்கையை இதற்குள் ஏன் இப்ப அநாவசியமா புகுத்துவான். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹி..ஹீ..ஹி...

நான்.... கருத்தடை செய்ததற்கு, இந்த ஆணுறை அணியாமல் இருக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம், உடையார்.

அதில் 28´வது  பதிவில்.... புங்கையூரான் நாசூக்காக சுட்டிக்காட்டியுள்ளார். :D  :lol:

 

அட அப்படியும் ஒரு செய்தியிருக்கா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  உனக்கும்  இடையில்  எவரும் வேண்டாமடி.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஆணுறை போட்டுக் கொண்டு, உடலுறவில் ஈடுபட்டால்.... ஆணுறை கழண்டு, உள்ளுக்குப் போனால்.... ஆஸ்பத்திரிக்குப் போய், ஆபரேஷன் பண்ணித்தான்... வெளியே எடுக்க வேண்டும் என்பேன்.

அதற்குப் பயந்து, இதுவரை யாரும் என்னை... ஆணுறை போடச் சொல்லி வற்புறுத்தியது இல்லை, ருல்பன். :icon_idea::D

"யாரும் " ???? இதுவரை எத்தனை பேர்?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"யாரும் " ???? இதுவரை எத்தனை பேர்?

 

வாசிக்கணும்

அப்படியே போய்க்கிட்டிருக்கணும்... :icon_mrgreen:

அது தான் எல்லோருக்கும் நல்லது...

நீங்க அவரைக்கேட்க

அவர் உங்களைக்கேட்க

அதை நாங்க வாசிக்க.... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கணும்

அப்படியே போய்க்கிட்டிருக்கணும்... :icon_mrgreen:

அது தான் எல்லோருக்கும் நல்லது...

நீங்க அவரைக்கேட்க

அவர் உங்களைக்கேட்க

அதை நாங்க வாசிக்க.... :lol:  :D

 

நான்...  எண்ணிக்கையை, சொல்ல....

அது விசுகருக்கு, வயித்தெரிச்சலை கிளப்ப....

ஏனப்பா... ருல்பன்,

லீவு நாட்களில்... மனுசரை... சந்தோசமாக இருக்க விடுங்கோவன். :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுறை போட்டுக் கொண்டு, உடலுறவில் ஈடுபட்டால்.... ஆணுறை கழண்டு, உள்ளுக்குப் போனால்.... ஆஸ்பத்திரிக்குப் போய், ஆபரேஷன் பண்ணித்தான்... வெளியே எடுக்க வேண்டும் என்பேன்.

அதற்குப் பயந்து, இதுவரை யாரும் என்னை... ஆணுறை போடச் சொல்லி வற்புறுத்தியது இல்லை, ருல்பன். :icon_idea:  :D

:rolleyes:

 

chipotle_chillies.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.