Jump to content

PLOTல் இருந்தபோது, கடத்தப்பட்ட என் கணவர் இருந்தாக புளொட் சிவா தெரிவித்தார் பெண் சாட்சியம்:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தான் புளொட் இயக்கத்தில் இருந்தபோது கடத்தப்பட்ட எனது கணவர் சிவாவும் இருந்தாக பெண்ணொருவர் இன்று சாட்சியமளித்தார்.

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இன்று (17.12) சாட்சியம் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்தும் அங்கு சாட்சியமளித்த அவர்,

மகாறம்பைக்குளத்தில் இருந்து 2008.5.19 அன்று 30 வயதுடைய சிவலிங்கம் சிவானந்தன் என்ற எனது கணவர் வவுனியா நகருக்கு வந்தபோது ஆட்டோ ஒன்றில் கடத்தப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

கடத்தப்பட்டு மூன்றாம் நாள் வவுனியாவின் இரு நிலையான தொலைபேசிகளில் இருந்து கணவர் காணாமல் போன விடயம் தொடர்பில் ஒருவருக்கும் தெரியப்படுத்தக்கூடாது எனவும் யாராவது கேட்டால் அவர் கொழும்புக்கு வேலைக்கு போய் விட்டதாக கூறுமாறு தெரிவித்தார்கள்.

அதன் பின்னர் கணவனை விடுவிப்பதற்கு 50 இலட்சம் தருமாறு கோரினார்கள். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தபோது 10 இலட்சம் கேட்டார்கள்.

அதுவும் இல்லை என்று கூறி 5 இலட்சத்து ஜம்பதனாயிரம் ரூபா பணத்தை வவுனியா அப்சரா கூல்பாருக்கு முன்பாக வைத்திருந்தபோது ஒருவர் வந்து வாங்கி சென்றார். ஆனால் இன்று பணமும் இல்லாமல் கணவரும் இல்லாமல் இரு பிள்ளைகளுடன் கஸ்டத்துடன் வாழ்ந்து வருகின்றேன்.

என்னிடம் பணம் பறித்தவர்கள் தம்மை கருணா குழு என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பின்னர் எனக்கு அழைப்பு வந்த தொலைபேசி இலக்கத்தை விசாரித்து பார்த்தபோது அது புளொட் இயக்கத்தின் இறம்பைக்குளம் அலுவலக இலக்கங்கள் என அறிந்தேன்.

அதன் பின்னர் புளொட் இராணுவ பொறுப்பாளராக இருந்த சிவாவிடம் கேட்டபோது கணவர் தொடர்பாக யாரிடமும் முறைப்பாடு செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் பெண் என்றும் பார்க்காமல் கடத்துவன் என தெரிவித்தார்.

இதன் பின்னர் சிவா 28 இலட்சம் பணம் தந்தால் உனது கணவரை வெளிநாட்டிற்கு டிக்கட் போட்டு அனுப்பி விடுகின்றேன் என தெரிவித்தார். ஆனால் கணவரை காட்டவில்லை.

சில காலம் கழித்து சிவாவை நோரில் கண்டு கேட்டபோது தான் சிறை சென்று வந்துள்ளதாகவும் தான் இயக்கத்தில் இருந்தபோது கணவர் இருந்ததாகவும் தற்போது என்ன நடந்தது என தெரியாது எனவும் கூறினார். நானும் அவர்களிடம் பயத்தால் தற்போது செல்வதில்லை என தெரிவித்தார்.

  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114554/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

புலிகள் புளட் மீது முன்பு தாக்குதல் நடத்தியதால் வேறு வழி இல்லாமல் புளட் ஆள்கடத்தலில் ஈடுபடுகிறது..

Link to comment
Share on other sites

தடை செய்ததால் விளைந்த அறுவடை . 

இரண்டிக்கும் என்ன சம்பந்தம் என்று கொஞ்சம் விளக்க முடியுமா அர்ஜுன் . பொய்யை எத்தனை முறை நீங்கள் இங்கே சொல்வீர்கள் . தாங்கமுடியலைப்பா .புளொட் எல்லாம் ஒரு போராட்ட இயக்கம் என்று .... அதுக்கு வக்காலத்து வங்க கொஞ்ச பேர் ...., அந்த பெண்ணின் கணவரை திரும்ப கொடுகின்ற வழிய சொல்லுங்கோ ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்ததால் விளைந்த அறுவடை . 

இது மிஞ்சினதுகளின் அடாவடித்தனம் ...........
                    முழுமையும் இருந்திருந்தால் ??
 
தீர்கதரிசிகள் புலிகள்! 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.