Jump to content

நாடு கடந்த தமிழீழ அரசுடன் எதிரணியினர் இரகசியப் பேச்சு தேசத் துரோக செயற்பாடு : அமைச்சர் நிமல்


Recommended Posts

nimal-siripala-de-silva.jpg

 

எதி­ர­ணி­யினர் சிங்­கப்பூர் சென்ற வேளை நாடு கடந்த தமி­ழீ­ழத்தை சேர்ந்த 9 அமைச்­சர்­க­ளுடன் இர­க­சிய பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டுள்­ளனர். எனவே, புலம்­பெயர் தமி­ழர்­க­ளுடன் இணைந்து இந்த நாட்­டிற்கு எதி­ராக செயற்­படும் நோக்கில் இர­க­சி­ய­மாக செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்கை தொடர்பில் நாட்­டிற்கு விரைவில் உரிய தக­வல்­களை வெளி­யி­டுவோம்'' என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் அமைச்­ச­ருமான நிமல் சிறி­பா­ல டி சில்வா எச்­ச­ரித்தார்.
 
 
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தாக எதி­ர­ணி­யினர் வழங்­கிய வாக்­கு­று­தி­யா­னது மக்­களை ஏமாற்­று­வற்­கான வித்­தை­யாகும் என்றும் கொழும்பு, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
 
அங்கு அவர் மேலும் கூறு­கையில்,
 
நாட்டில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்க வேண்டும் என்ற போராட்­டத்­திற்­கா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க பாட்­டாலி சம்­பிக்க ரண­வக்க உள்­ளிட்ட அனை­வரும் மாது­லு­வாவே சோபித தேரரின் கீழ் ஒன்று கூடினர்.
 
இருப்­பினும் எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­னவின் ஜனா­தி­பதி முறை­மையை நீக்க போவ­தில்லை. மாறாக அர­சி­ய­ல­மைப்பின் 18வது திருத்த சட்­டத்­தையே நீக்­குவோம் என்று கூறி­யுள்ளார்.
 
ஏமாற்­றுக்­கா­ரர்கள் அனை­வரும் ஒன்று கூடி மக்­களின் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள முனை­கின்­றனர். இதற்­க­மைய சிலர் ஜனா­தி­பதி முறை­மையை 24 மணித்­தி­யா­லத்தில் நீக்­கு­வ­தா­கவும் ஒரு சிலர் 100 நாட்­க­ளுக்குள் நீக்­கு­வ­தா­கவும் இன்னும் சிலர் 6 மாதங்­களில் நீக்­கு­வ­தா­கவும் கூறு­கின்­றனர்.
 
இவை­ய­னைத்தும் போலி­யான வாக்­கு­றுதி. மக்­களை ஏமாற்றி வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக போலி­யான முறையில் வடி­வ­மைக்­கப்­பட்ட போராட்­ட­மாகும். எனவே இவை­ய­னைத்தும் சர்­வ­தேச சக்­தியின் தேவைக்­கேற்ப தயா­ரிக்­கப்­பட்ட ஒன்­றாகும்.
 
எதி­ர­ணியின் சிங்­கப்பூர் பயணம்
 
எதி­ர­ணியை சேர்ந்­த­வர்கள் எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மங்­கள சம­ர­வீர ராஜித சேனா­ரத்ன மைத்­தி­ரி­பால சிறி­சேன சரத்­பொன்­சேகா மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவும் கடந்த நவம்பர் மாதம் 2முதல் சிங்­கப்­பூ­ரிற்கு விஜயம் செய்­தனர்.
 
இதே காலப்­ப­கு­தியின் போது நாடு கடந்த தமி­ழீ­ழத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் அந்­நாட்டின் 9 அமைச்­சர்­களும் அதே காலப்­ப­கு­தியில் சிங்­கப்­பூரில் இருந்­துள்­ளனர். இந்­நி­லையில் சிங்­கப்­பூரில் வைத்து குறித்த இரு தரப்­புக்­க­ளுக்­கு­மி­டையே பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றுள்­ளது. எனவே விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தினைச் சார்ந்த நாடு கடந்த தமி­ழீ­ழத்­த­வர்­க­ளுடன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­யையும் உடன்­ப­டிக்கை இருப்பின் அவற்­றையும் எதி­ர­ணியின் தேசத்­து­ரோக செயலை நாட்டு மக்­களின் முன்­னி­லையில் வெளிப்­ப­டுத்­துவோம். அதற்­காக விசா­ர­ணையை செய்து வரு­கின்றோம்.
 
மைத்­தி­ரியின் குற்­றச்­சாட்டு
 
பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மொர­க­ஹ­கந்த செயற்­றிட்­டத்­தினை நிறை­வேற்ற உரிய வகையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினால் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­வ­தில்லை என குற்றம் சுமத்­தி­யுள்ளார்.
 
இவை முற்­றிலும் உண்­மைக்கு புறம்­பான கருத்­தாகும். நீர்ப்­பா­சன வேலைத்­திட்­டத்­திற்கு வருடா வருடம் உரிய வகையில் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. எனினும் தனது இய­லா­மையை மூடி மறைப்­ப­தற்­கா­கவே இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களை மைத்­தி­ரி­பால சிறி­சேன சுமத்­து­கின்றார். 2002ஆம் ஆண்டு ஆட்­சியின் போது நீர்ப்­பா­சன திட்­டத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும் என்று கூறிய ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கூட்­ட­ணி­யி­லேயே தற்­போது மைத்­தி­ரி­பால சிறி­சேனா இணைந்­தி­ருப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.
 
நீர்ப்­பா­சன திட்­டத்­தினை அமுல்­ப­டுத்தும் நோக்கில் மீள்குடியேற்றம் புதிய நகரம் அமைத்தல் உள்ளிட்ட காரண காரியங்களை நிலை நாட்டாமையினாலேயே ஜப்பானிடமிருந்து மொரகஹகந்த திட்டத்திற்கு ஜப்பான் அரசிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடன் எமது கையை விட்டு சென்றது. எனினும் ஜனாதிபதி தலையீட்டினாலேயே அது எமக்கு மீள கிடைக்க பெற்றது.
 
எனவே மக்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் துரோகம் செய்தவர்களின் போலியான வாக்குறுதி கடதாசி கிழித்தெறியப்பட்டுள்ளது என்றார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆரம்பிச்சுட்டாங்கையா, ஆரம்பிச்சுட்டாங்க...
 
இப்ப TNA நாம இரண்டு பேரோடும் பேசப் போறம், அப்புறம் யாருக்கு வாக்கு என அறிவிப்போம் எண்டு சொன்னா, அடங்குவானுங்க... :icon_idea:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.