Jump to content

கால்பந்து பட்டு இலங்கை சிறுவன் பிரித்தானியாவில் மரணம்


Recommended Posts

கால்பந்து பட்டு இலங்கை சிறுவன் பிரித்தானியாவில் மரணம்
செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2014

 

v6j2vb.jpg

பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையை சேரந்த சிறுவனொருவன் கால்பந்து மோதி உயிரிழந்துள்ளான்.

சங்கித் ஜெயக்குமார் எனும் 14 வயது மாணவன் பாடசாலையில் விளையாடிக்கொண்டிருந்த போது, வயிற்றில் கால்பந்து பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

எனினும் சிக்ச்சை பலனளிக்காத நிலையில் ஒரு நாளின் பின்னர் சிறுவன் மரணமடைந்துள்ளார்.

 

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/136054-2014-12-16-13-46-00.html

Link to comment
Share on other sites

விளையாட்டுக்களில் உயிர்போகிறது.. ஆழ்ந்த இரங்கல்கள்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

யுனில் படிக்கிறப்போ.. அடிக்கடி.. கால்பந்து விளையாடுவதுண்டு. பொதுவாக கோல்கீப்பரா தான் நிற்பது. ஒரு தடவை.. ஒரு வெள்ளை கோல் போடுவதற்காக மிக வேகமாக உடைந்த பந்தை கைகளால் தடுக்க முனைந்து அது கைகளில் சிக்காமல்.. நெஞ்சில் வந்து தாக்கி நின்றது. அது தாக்கிய வேகத்தில்.. சுருண்டு வீழ்ந்தது தான் ஞாபகம். கன நேரம் ஆச்சுது மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப. இன்று நினைத்தாலும்.. நெஞ்சு பக்கு பக்கு என்றுது. எல்லாம் நெஞ்சாங்கூட்டுக்குத்தான் நன்றி சொல்லனும். அவ்வளவு விசையை தாங்கியும் நொருங்காமல் இருந்ததற்கு..!!

 

இந்தப் பையனை அந்த நிலையில் வைச்சு நோக்கிறப்போ.. அவனின் வலியை உணர முடிகிறது. விளையாட்டில் விபத்துக்களுக்கு நேரம் காலம் குறிப்பது கடினம்..!!

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்... உங்களுக்கு ஒன்றும் நேராதது மகிழ்ச்சி.. :unsure: நெஞ்சில் பட்டது கொஞ்சம் இறங்கி.. கொஞ்சம் இறங்கி..

வயிற்றில் பட்டிருந்தால் என்ன நிலைமை..!? :(:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் பெற்றோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்... உங்களுக்கு ஒன்றும் நேராதது மகிழ்ச்சி.. :unsure: நெஞ்சில் பட்டது கொஞ்சம் இறங்கி.. கொஞ்சம் இறங்கி..

வயிற்றில் பட்டிருந்தால் என்ன நிலைமை..!? :(:rolleyes:

அதுதான் பிரச்சனை போல இருக்கு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்... கவலையான செய்தி.
14´வயது பிள்ளைகள் கணணியையும், ஐபோனையும்... நோண்டிக் கொண்டிருக்கும் போது... விளையாட்டு ஆர்வத்தில், மைதானத்தில் விளையாடச் சென்ற பையனுக்கு, மரணம் சம்பவித்ததை நினைக்க வேதனையாக உள்ளது.
எத்தனை கனவுகளுடன்... தனது வாழ்க்கையை திட்டமிட அவனும், அவனது பெற்றோரும் நினைத்திருந்தார்களோ... எல்லாம், சில மணித்துளிகளில் நனவாக போய்விட்டது.
உனது மரணத்துக்காக,  மிகவும் வேதனைப் படுகின்றேன் குழந்தாய்....v6j2vb.jpg

ஆழ்ந்த இரங்கல்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !

Link to comment
Share on other sites

D405f4054fd.jpgலண்டனில் உதைபந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது  14 வயதுடைய தமிழ் மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒந்தாச்சிமடம் கிராம மக்களை   சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லண்டன் ஹரோவில் உள்ள வைட்மோர் உயர்நிலை பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவனான ஜெயக்குமார் சுஜிந்த் (வயது 14 ) என்ற மாணவனே கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடத்தினை சேர்ந்தவர். தற்போது தனது குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வந்த நிலையிலேயே பள்ளிக்கூடத்தில் உதைபந்தாட்ட பயிற்சியில்  ஈடுபட்டிருந்த போது பந்து நெஞ்சில் அடிபட்டுள்ளது. 

இந்நிலையில் அவர் நோத் விக் பார்க் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவத்தால்

ஒந்தாச்சிமட மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளதாக கவலையளிப்பதாக ஆசிரியர்களும் சக மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

 

http://virakesari.lk/articles/2014/12/17/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

பிள்ளைகளை விளையாட்டுக்கு அனுப்ப கூட பயமாக இருக்கு இப்ப..

 

 

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.