Jump to content

தமிழ் வித்தகர் தில்லைச்சிவன்


Recommended Posts

பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் "வேலணை வாழ் வித்தகரே'  என உயர்திரு சாலை இலந்திரயன் வேலணை அம்மன் கோவில் பாடசாலையில் இடம்பெற்ற திருமறை மகாநாட்டில் ஒலித்த கவி வரிகள் என் இளமைக் காலத்திலிருந்து இன்றும் ஒலிப்பதுண்டு...  ஓவியர் நாதனின் கைவண்ணத்தில் உருவான மண்டப முகப்பு அலங்காரம் இன்னும் கண்களில் தெரியுது. பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்களுடன் இணைந்து தமிழ் இலக்கியப் பற்றுமிக்க "தில்லைச்சிவன்' இளைஞராக ஓடித்திரிந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். நாம் அவர்பின் திரிந்து உதவி செய்ததும் இன்னும் நினைவுகளில் நிழலாடுகின்றன.  

 

சரவணையில் பிறந்த அமரர் சிவசாமி மாஸ்ரர் பன்முக ஆளுமை கொண்டவர். வெள்ளை வேட்டி தரித்த ஆசிரியர்களின் இளம் தலைமுறையினராகவும், பலமாற்றுச் சிந்தனைகளுக்கு வித்திட்டவராகவும், அவற்றைச் சமூகத்தில் படர விட்டவராகவும் விளங்கினார். சமூக மேம்பாடு பற்றியே சதா சிந்தித்தவர்.  ஆசிரியராக, தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டவராக, சமூக சமய மேம்பாடுகளுக்காக உழைத்தவராக விளங்கிய இவர் கவிஞராகவும், தமிழ் எழுத்தாளராகவும் எமக்கு அறிமுகமாகியதோடு, தீவுப்பகுதியில் ஒரு எழுத்தாளர் குழாமை உருவாக்கியவர்.

 

இலக்கியத்தைச் சுவைத்தல், படிக்க வைத்தல், அவைபற்றி பேசுதல், விமர்சித்தல் போன்றவற்றின் ஊடாக ஒரு எழுத்தாளர் பரம்பரையை வேலணை, சரவணை, புங்குடுதீவு போன்றவற்றில் உருவாக்க உழைத்தார்.  சமூகத்தை நிறுவனமயப்படுத்தியே மேம்பாடு அடையச் செய்யலாம் என்ற மெய்மையின் அடிப்படையில் கிராம மட்டங்களில் பல சனசமூக நிலையங்களை, நூலகங்களை உருவாக்கினார்.

 

தீவுப்பகுதி எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி கருத்துக்கள், விமர்சன உரைகள் என்பவற்றை ஒழுங்கமைத்து அக்காலத்தில் எம் போன்றவர்களை இலக்கிய ஆர்வலர்களாக உருவாக்கினார். நான், சட்டநாதன், முகிலன், சரவணையூர் மணிசேகரன், மாறன் போன்றோர் இவர் வழிவந்தவர்கள் எனக் குறித்துரைக்கத்தக்கவர்கள்.

 

மறுமலர்ச்சிக் கழகம் எனும் அமைப்பை ஏற்படுத்தி சில சமூகப் பணிகள் ஆற்றியமையும் நினைவுக்கு வருகின்றது. இவ்வமைப்புகளில் இவர் தலைவராக, மற்றையோர் செயலாளர், பொருளாளராக பணியாற்றியிருக்கின்றோம். புங்குடுதீவில் மு.தளையசிங்கம், மு.பொன்னம்பலம், வில்வரத்தினம் போன்றோர்களுடன் இணைந்து இலக்கியப்பணி புரிந்துள்ளார். அவர்களுடன் எம்மையும் அறிமுகப்படுத்தியவர் இவரே.

 

 கவிஞர் தில்லைச்சிவன் வேலணை வாழ் மக்கள் பலரின் வாழ்க்கைச் சுவடுகளை கவிதையாக்கி வரலாறாக்கியவர். எம் ஊரில் உள்ள அனைத்துக் கோவில்கள் பற்றியும், அத்தெய்வங்களின் புகழ் பற்றியும் கவிதை புனைந்துள்ளார். தமிழ்த் தேசியவாதியாக கடைசிவரை வாழ்ந்த கவிஞர் இடதுசாரிச் சிந்தனை கொண்டோருடனும் நட்புறவைப் பேணியவர். முக்கியமாக டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்கள் இவரது நண்பர்கள். ஜீவாவின் வேண்டுகோளுக்கமைய மல்லிகையில் இவர் எழுதியுள்ளார். அக்காலத்தில் "பட்டனத்து மச்சினி' என்ற இவரது கவிதை விமர்சகர் கனக செந்தில் நாதனால் வியந்து பாராட்டப்பட்டது.

 

பல கவிதைகளைப் படைத்தளித்த இவரது கவிதைகளில் சில நூல்களாக வெளிவந்துள்ளன. "அந்தக் காலத்துக் கதைகள்' எனும் நாட்டில் நிலவிய மரபுவழிக் கதைகளை இலக்கியமாக்கிய இவரது பணி ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு புதுவரவு என்றால் மிகையாகாது. இக்கதைகளில் நாட்டின் வரலாறு, மக்களின் நம்பிக்கைகள், நாட்டின் வளம், மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்திய விதம் என்பன கதைகள் ஊடாகத் தரிசனமாகின்றன.

 

இது நாட்டுப்புற இலக்கியமென தற்போது தமிழ்நாட்டில் புகழ்ந்து பேசப்படும் இலக்கிய வகைக்கு முன்னோடியாக விளங்கியதெனத் துணிந்து கூறமுடியும். இக்கதைகள் ஊடாக எமது ஊரை முழுமையாகத் தரிசிக்க முடிகிறது.

 

வெளிவந்த தில்லைச்சிவன் அவர்களின் நூல்கள் வருமாறு :

கனவுக்கன்னி (1961),

தாய் (1969),

ஐயனார் அருள்வேட்டலும் திருவூஞ்சலும் (1972),

தில்லை மேடைத்திருப்பாட்டு (1974),

பாப்பாப் பாட்டுக்கள் (1985), நான் (1993),

வேலணைத் தீவுப்புலவர்கள் வரலாறு (1996),

தாழம்பூ (1996), அந்தக்காலக் கதைகள் (1997),

நாவலர் வெண்பா (1997),

பூஞ்சிட்டு (பாப்பா பாட்டு) (1998),

தில்லைச்சிவன் கவிதைகள (1998),

வேலணைப் பெரியார் கா.பொ.இரத்தினம் (2000),

ஆசிரியை ஆகினேன் (2000),

காவல் வேலி (2003),

தந்தை செல்வா காவியம் (2004).

 

சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்ட இவர் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டதோடு, மக்கள் ஆதரவுபெற்ற அரசியலாளர்களுக்கு ஒத்துழைத்து மக்கள் நலன்பெறப் பாடுபட்டார். வேலணைஅராலியை இணைத்துப் பாலம் அமைக்கவேண்டுமென்ற விருப்பம் கொண்டிருந்தார். அது எமது பிரதேசத்தின் பொருளாதார, சமூக, கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்குமென அவர் நம்பினார். அவர் கனவு ஈடேற காலம் கனியவேண்டும்.  தில்லைச்சிவன் ஆசிரியராக, எழுத்தாளராக, கவிஞராக, சமூக சேவையாளராக, சமயப்பணி புரிந்தவராக, கிராமியக் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்தவராக விளங்கியதோடு சமூகத்தை நிறுவனமயப்படுத்தி சமூக மேம்பாட்டைக் காணவேண்டுமென்ற சிந்தனையையும் எம்மிடம் விட்டுச்சென்றுள்ளார்.

 

அவரது கல்வி, இலக்கிய, சமூக, சமயப் பணிகள் ஆவணப்படுத்தப்பட்டு இவ்வகையான உதாரண புருஷர்களைப் பின்பற்றி எதிர்கால சந்ததியினர் உயர்வடைய வழிசமைக்க வேண்டும். ஆனந்தகுமாரசாமியின் "சிவநடனம்' நூல் தரும் தத்துவ விளக்கங்கள்"தில்லைச்சிவன்' பெயரை உச்சரிக்கும் போது என் கவிப்புலச் சிந்தனையில் ஒளிவிடுகின்றன. சிவசாமி  தில்லைச்சிவன் ஆகி தமிழ் சமூகத்திற்கு அளித்தவை அழியாச் செல்வங்கள். அவற்றைப் பேணிப் போற்றுவோம். இவரது நினைவு தினம் இன்றாகும் 

 

 http://www.thinakkural.lk/article.php?article/qtrxljh5kr79135527eaab8716351srwpia00dbe1614481ef174f285qjfsa#sthash.zwPW2QuO.dpuf

Link to comment
Share on other sites

அமரர் சிவசாமி மாஸ்ரர் , தில்லைச்சிவன் ஆகி தமிழ் சமூகத்திற்கு அளித்தவை அழியாச் செல்வங்கள். அவற்றைப் பேணிப் போற்றுவோம். இவரது நினைவு தினம் இன்றாகும் .

Link to comment
Share on other sites

அந்தநாள் ஞாபகம் வந்ததோ  நண்பரே... நண்பரே...

வேலணை அம்மன் கோவில் பாடசாலையில் இடம்பெற்ற திருமறை மகாநாட்டில் ஒலித்த கவி வரிகள்.  ஓவியர் நாதனின் கைவண்ணத்தில் உருவான மண்டப முகப்பு அலங்காரம் இன்னும் கண்களில் தெரியுது. பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்களுடன் இணைந்து தமிழ் இலக்கியப் பற்றுமிக்க "தில்லைச்சிவன்' இளைஞராக ஓடித்திரிந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். சரவணையில் பிறந்த அமரர் சிவசாமி மாஸ்ரர் பன்முக ஆளுமை கொண்டவர். வெள்ளை வேட்டி தரித்த ஆசிரியர்களின் இளம் தலைமுறையினராகவும், பலமாற்றுச் சிந்தனைகளுக்கு வித்திட்டவராகவும், அவற்றைச் சமூகத்தில் படர விட்டவராகவும் விளங்கினார். சமூக மேம்பாடு பற்றியே சதா சிந்தித்தவர்.  ஆசிரியராக, தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டவராக, சமூக சமய மேம்பாடுகளுக்காக உழைத்தவராக விளங்கிய இவர் கவிஞராகவும், தமிழ் எழுத்தாளராகவும் எமக்கு அறிமுகமாகியதோடு, தீவுப்பகுதியில் ஒரு எழுத்தாளர் குழாமை உருவாக்கியவர்.  அமரர் சிவசாமி மாஸ்ரர் , (தில்லைச்சிவன்)கண்முன் கொண்டு வந்தமைக்கு நன்றிகள். எம்.பி. திரு செ இராசதுரை அவர்களின் பேச்சும் ஞாபகம் வருகிறது... அந்தநாள் ஞாபகம் வந்ததோ  நண்பரே... நண்பரே...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லைச்சிவன் (சிவசாமி மாஸ்டர்) அவர்களுடன் பழகி இருக்கிறேன் . தமிழில் நல்ல ஆளுமை மிக்கவர்.வாழ்க அவர்புகழ்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் பழைய ஆள்போல இருக்கு:) ,நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனா ஆளைத்தெரியாது

Link to comment
Share on other sites

தில்லைச்சிவன் மாஸ்ரர் அவர்கள் அன்பானவர், பண்பானவர் , அமைதியானவர், . தெளிந்த தூயசிந்தனையுள்ள நல்ல இதயம் கொண்டவர்,
பழக இனிமையானவர். அவர் சயிக்கிளின் முன்பக்கம் ஒரு கூடை இருக்கும் அதற்குள் பத்திகை இருக்கும்.  பல நாள் அவரின சயிக்கிள் கரியலில் இருந்து அவருடன் உரையாடியபடி பிரயாணம் செய்த நினைவு இப்போதும் மகிழ்வைத் தருகிறது. அவரைப் பற்றி இங்கு  குறிபிடுவதில் மகிழ்சியடைகிறேன். அவரின் புகழ் ஓங்குக.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஆள் இல்லை அவரின் மகனுடன் படித்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட பழக்கம். தூரத்து உறவும் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.