Jump to content

சீனாவின் நிழலில் இருந்து விடுபடுமா இலங்கை?? – ஹரிகரன் (கட்டுரை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சிக்கு வந்தால், சீன ஆதிக்­கத்­துக்கு முடிவு கட்­டுவோம் என்று கடந்த புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய போது, கட்சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்­தி­ருந்தார்.

சீன நிறு­வ­னங்­க­ளுடன் தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் செய்து கொள்­ளப்­பட்ட சட்­ட­வி­ரோத உடன்­பா­டுகள் அனைத்தும், செல்­லு­ப­டி­யற்­ற­தாக்­கப்­படும் என்றும், இந்­தி­யாவைப் புறந்­தள்ள அனு­ம­திக்க முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்­டதை சாதா­ர­ண­மா­ன­தொன்­றாக எடுத்துக் கொள்ள முடி­யாது.

அதுவும், ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான முன்­னா­யத்­தங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்ற சந்­தர்ப்­பத்தில் இந்தக் கருத்து முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது.

இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் இடை யில், பாது­காப்பு சார்ந்த போட்டி இலங்­கையை மையப்­ப­டுத்­தியே உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

சீன நீர்­மூழ்­கி­களின் கொழும்பு வரு­கைகள், இந்­திய –- இலங்கை உற­வு­களின் மீது நம்­பிக்­கை­யீ­னங்­களை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பத் தொடங்­கி­யுள்­ளது.

இந்த இரண்டு பின்­புலச் சூழல்­களின் மத்­தி­யிலும், தாம் ஆட்­சிக்கு வந்தால் சீனாவைத் துரத்தி விட்டு, இந்­தி­யாவை அருகில் வைத்துக் கொள்வோம் என்று ஐ.தே.க. கூறி­யி­ருக்­கி­றது.

இந்­த­நி­லையில், ஐ.தே.க. கூறு­வது நடை­முறைச் சாத்­தி­ய­மான விட­யமா என்ற கேள்வி எழு­கி­றது.

இலங்­கையில் சீனா செய்­துள்ள மிகப் பெரி­ய­ள­வி­லான முத­லீ­டுகள், சீனா­வு­ட­னான இலங்­கையின் உற­வு­களை அவ்­வ­ளவு இல­குவில் பிரித்து விட முடியாத நிர்க்­க­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தாலும், சீனா­வுடன் செய்து கொண்ட, சட்­ட­வ­லு­வுள்ள எந்த உடன்­பாட்­டையும், இரத்துச் செய்து விட முடி­யாது.

அது இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தைப் பல­வீ­னப்­ப­டுத்தி விடும்.

ஏனென்றால், இப்­போது சீனா கொடுத்­தி­ருக்­கின்ற முண்டு தான் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை நிமிர்த்தி வைத்­தி­ருக்­கி­றது. அந்த முண்­டுத்­தடி நீக்கப்பட்டு விட்டால், பொரு­ளா­தாரம் முறிந்து விடும்.

ஏற்­க­னவே தொடங்­கப்­பட்ட சீனாவின் திட்­டங்கள் முடங்கிப் போய் விடும்.

எனவே, ஐ.தே.க. ஆட்­சிக்கு வந்தால், சீனாவின் முழு­மை­யான ஆதிக்கம் அகன்று விடும் என்று கரு­து­வ­தற்­கில்லை.

வேண்­டு­மானால், அது குறை­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.

இந்­தி­யா­வுக்கு முக்­கி­யத்­துவம் அளிக் கும், இந்­தி­யாவின் பாது­காப்­புக்கு இடை­யூறை ஏற்­ப­டுத்­தாத கொள்­கையை, நடை­மு­றை­களை ஐ.தே.க. நடைமுறைப்­ப­டுத்த முனை­யலாம்.

அதே­வேளை, சீனாவின் எல்லாப் பொரு­ளா­தார முத­லீ­டு­க­ளையும் இந்­தியா எதிர்க்­க­வில்லை என்­ப­தையும் இங்கு சுட்­டிக்­காட்ட வேண்டும்.

தனது பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டு­கின்ற சூழலில் கூட, சீனாவின் பொரு­ளா­தாரத் தலை­யீ­டுகள் தமக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்று இந்­தியா வாய் திறக்­க­வே­யில்லை.

சீனா இன்று உலகின் இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தா­ரத்தைக் கொண்ட நாடாக விளங்­கு­கி­றது.

அடுத்த சில ஆண்­டு­க­ளி­லேயே சீனா, அமெ­ரிக்­காவை முந்திக் கொண்டு, உலகின் மிகப்­பெ­ரிய பொரு­ளா­தா­ரத்தைக் கொண்ட நாடாக மாறும் என்று கணிப்புகள் கூறு­கின்­றன.

அந்த வகையில், உலகில் எந்­த­வொரு நாடுமே சீனாவின் பொரு­ளா­தார தலை­யீ­டு­களில் இருந்து தப்­பிக்க முடி­யாத ஒரு சூழல் உரு­வாகி விட்­டது.

கைத்­தொழிற் புரட்­சிக்குப் பின்னர், பிரித்­தா­னிய உற்­பத்­தி­களும், இரண்டாம் உல­கப்­போ­ருக்குப் பின்னர், ஜப்­பானின் இலத்­தி­ர­னியல் சாத­னங்­களும், எப்­படி உலகம் முழு­வ­தற்கும் தேவைப்­பட்­டதோ, இப்­போது சீனப் பொருட்கள் உலகம் முழு­வ­தற்கும் தேவைப்­ப­டு­கின்­றன. சீன உற்­பத்­திகள் தான், அமெரிக்காவையும் இந்­தி­யா­வையும் கூட ஆட்டிப் படைக்­கின்­றன.

இந்­தி­யாவில் கூட இலட்­சக்­க­ணக்­கான கோடி ரூபாவை முத­லீடு செய்யத் தயா­ராக இருக்­கி­றது சீனா. அதற்­கான கத­வு­களை இந்­தி­யாவும் திறந்து விட்டிருக்­கி­றது.

ஆந்­தி­ராவில் தான், மிகப் பெரி­ய­ளவில் சீனா முத­லீடு செய்­வதில் ஆர்வம் கொண்­டி­ருக்­கி­றது.

மோடியின் வரு­கைக்குப் பின்னர், குஜ­ராத்தின் மீதும், அதன் கண் விழுந்­தி­ருக்­கி­றது. சீன நிறு­வ­னங்­களைப் பொறுத்­த­வ­ரையில், அவை எந்த உற்பத்திப்பெய­ரையும் தக்­க­வைத்துக் கொள்­வது அவற்றின் நோக்­க­மல்ல.

அவை உற்­பத்தி அதி­க­ரிப்பை மட்­டுமே கவ­னத்தில் கொள்­பவை.

அதனால் எந்த நிறு­வ­னத்தின் பெய­ருக்­கா­கவும், தமது உற்­பத்திப் பெயர்­களை விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ராக இருக்­கின்­றன.

pm_prez_2113840f.jpgதற்­போ­தைய இந்­திய அர­சாங்­கத்தின் மேக் இந்­தியா கொள்­கையும் கூட, சீனாவின் இந்த கொள்­கைக்கு ஏற்­றது தான். எந்தப் பொரு­ளாக இருந்­தாலும், எந்த நாட்டு நிறு­வ­னமும் உற்­பத்தி செய்­யலாம், ஆனால், அதனை இந்­தி­யாவில் செய்ய வேண்டும் என்­பதே மோடியின் திட்டம்.

சீனா அதற்குத் தயா­ரா­கவே இருக்­கி­றது.

எனவே, அடுத்து வரும் ஆண்­டு­களில் இந்­தி­யாவில் கூட சீனாவின் மிகப் பெரிய முத­லீ­டுகள் கொட்­டப்­படும் சூழல் உரு­வாகும்.

பொரு­ளா­தார ரீதி­யாக சீனா வளர்ந்து விட்ட நிலையில், அதன்­போக்கில் சென்றே தாமும் தலை நிமிர வேண்டும் என்று அமெ­ரிக்­காவும் இந்­தி­யாவும் நினைக்­கின்­றன.

இது விரும்­பியோ விரும்­பா­மலோ வந்து விட்­ட­தொரு சூழ்­நிலை.

சீனாவின் வளர்ச்சி, அத­னையும் அர­வ­ணைத்தே செல்ல வேண்­டிய சூழலை முக்­கிய வல்­ல­ர­சு­க­ளுக்கு ஏற்­ப­டுத்தி விட்­டது. அதனால், சீனாவின் பொருளாதா­ரத்­துடன் ஒத்­து­ழைக்க அமெ­ரிக்­காவும் சீனாவும் முடிவு செய்து விட்­டன.

இது பொரு­ளா­தா­ரத்தில் மட்டும் தான், பாது­காப்பில் அத்­த­கைய நிலைப்­பாட்டை இரு நாடு­களும் கொண்­டி­ருக்­க­வில்லை.

Chinas-Nuclear-Submarines_0.jpgஅண்­மையில் சீன நீர்­மூழ்­கிகள் இரண்டு தடவை கொழும்பு வந்து சென்­றதை இந்­தியா மட்டும், உன்­னிப்­பாக கண்­கா­ணிக்­க­வில்லை.

அமெ­ரிக்­காவும் கூட அதனை எச்­ச­ரிக்­கை­யுடன் அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது. அண்­மையில் வொஷிங்­டனில் நடந்த இரு­நாட்டு அதி­கா­ரி­க­ளுக்கும் இடை­யி­லான பாது­காப்பு சார்ந்த உயர்­மட்டக் கூட்­டத்தில், இது­பற்றிக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

அதன் விளை­வாக, அமெ­ரிக்க, இந்­தியக் கடற்­ப­டை­யினர் ஆண்டு தோறும் நடத்தி வரும், மலபார் பயிற்சி என்ற கடற்­படைப் போர் ஒத்­தி­கையை மேலும் விரி­வாக்கிக் கொள்ள இரண்டு நாடு­களும் தீர்­மா­னித்­துள்­ளன.

இதன்­படி விமா­னந்­தாங்கி கப்­பல்கள், அணு­சக்தி நீர்­மூழ்­கி­களும் இந்த மலபார் போர்ப்­ப­யிற்­சியில் பங்­கேற்­க­வுள்­ளன.

அடுத்த கட்­ட­மாக இரு­நாட்டு விமா­னப்­படை, கடற்­ப­டையை இணைத்துக் கொள்­ளவும், வேறும் சில நாடு­களை இதில் சேர்த்துக் கொள்­ளவும் முடிவு செய்யப்­பட்­டுள்­ளது.

இது கொழும்பில், சீனாவின் ஆதிக்­கத்தை பாது­காப்பு ரீதி­யாக எதிர்­கொள்­வ­தற்­கான திட்டம்.

ஆனால், இதற்கும் பொரு­ளா­தார ரீதி­யான முத­லீ­டு­க­ளுக்கும் இடையில் குழப்­பத்தை எற்­ப­டுத்திக் கொள்ள அமெ­ரிக்­காவும் சரி, இந்­தி­யாவும் சரி தயா­ராக இல்லை. அண்­மையில் ஜவ­ஹர்லால் நேரு நினைவுப் பேரு­ரை­யாற்­று­வ­தற்­காக கொழும்பு வந்­தி­ருந்த, பா.ஜ.க.வின் முக்­கிய பேச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரான எம்.ஜே.அக்பர், இலங்­கையில் சீனாவின் பொரு­ளா­தார முத­லீ­டுகள் குறித்து இந்­தியா கவலை கொள்­ள­வில்லை என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே கருத்து முன்­னரும் பல தட­வைகள் வெளி­யா­னது தான்,

நீர்­மூழ்­கிகள் பொருட்­களைக் கொண்டு வர­வில்லை என்றும் பாது­காப்­புடன் விளை­யாட வேண்டாம் என்றும் குறிப்­பிட்ட அவர், பொரு­ளா­தார ரீதி­யான உற­வு­களை துண்­டிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­த­வில்லை.

எந்த நாடும் எல்லா நாடு­க­ளு­டனும் பொரு­ளா­தார உற­வு­களை வைத்துக் கொள்ளும் உரிமை கொண்­டவை என்­பதை சுட்­டிக்­காட்டி, சீனா­வு­ட­னான பொருளா­தார உற­வு­க­ளுக்கு குறுக்கே இந்­தியா நிற்­காது என்று அவர் கூறி­யி­ருந்தார்.

எனவே, சீனாவைத் துரத்தி விட்டு, இலங்கை தன்­னுடன் நெருக்­க­மாக இருக்க வேண்டும் என்று இந்­தியா எதிர்­பார்ப்­ப­தாக கருதக் கூடாது.

பொரு­ளா­தா­ரத்தில் போட்டி தான், வளர்ச்­சியைத் தீர்­மா­னிக்கும்.

போட்­டி­யில்லா விட்டால், எந்த நாட்­டி­னாலும் வளர முடி­யாது என்­பதை, இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு முன்­பி­ருந்த இந்­தியா நன்­றா­கவே உணர்ந்து கொண்டிருக்­கி­றது.  இப்­போது இந்­தி­யா­வுக்கு சீனா ஒரு சவா­லா­கவே இருந்தாலும், சீனா கொடுக்கின்ற கடும் போட்டி தான், இந்தியாவை இந்தளவுக்கு வளர்ச்சி பெறத் தூண்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது. சீனாவின் பிரமாண்ட வளர்ச்சி இந்தியாவுக்கு கொடுத்த அச்சம் தான், அது தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்ளத் தூண்டியது.

அதன் விளைவு தான், இந்தியா தொழிற்துறையில் வளர்ந்து கொண்டிருப் பதற்குக் காரணம்.

எனவே, இலங்கையில் இருந்து சீனாவில் முதலீடுகளை துரத்துவதென்பது நடக்கக் கூடிய காரியமல்ல.

அதனை இந்தியா வரவேற்கப் போவது மில்லை. நீண்டகாலத் திட்டங்கள், முதலீடுகளுடனும் கடன்களுடனும் சீனா தொடர்புபட்டுள்ளதால், இது குறுகிய காலத்தில் நடந்து விடக் கூடிய காரியமல்ல. ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தாலும் சரி, வராது போனாலும், சரி, இலங்கை சீனாவின் பொருளாதார நிழலுக்குள் இருந்து இப்போதைக்கு விடுபடப் போவதில்லை.

- ஹரி­கரன்

http://ilakkiyainfo.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.