Jump to content

‘டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சி – சிறிலங்காவுக்கு ஆபத்தை உண்டுபண்ணும்’


Recommended Posts

‘டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சி – சிறிலங்காவுக்கு ஆபத்தை உண்டுபண்ணும்’ NOV 26, 2014 | 12:21by நித்தியபாரதிin சிறப்பு செய்திகள்

Ajith-Nivard-Cabraal-300x200.jpgடொலருக்கு எதிராக யப்பான் நாணயமான யென் [Yen] வீழ்ச்சியடைந்துள்ளதானது ஆசியாவின் நாணய ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.

யென்னின் பெறுமதி வீழ்ச்சியடைவதன் மூலம் சிறிலங்காவால் யென் நாணயப் பெறுமதியில் வழங்கப்பட வேண்டிய கடன்களை மீள வழங்குதல் மற்றும் யப்பானிய உற்பத்திப் பொருட்களை மலிவான விலையில் இறக்குமதி செய்தல் போன்ற குறுகிய கால நலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஆனால் டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சியேற்பட்டுள்ளதானது ஏனைய விடயங்களில் ஆபத்தை உண்டுபண்ணும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒக்ரோபர் 31 அன்று யப்பானிய வங்கியானது புதிய நாணய ஊக்கப் பொறிமுறைகளை வெளியீடு செய்ததிலிருந்து டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியானது 4.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. யப்பானின் இத்தகைய பொறிமுறையால் ஏனைய நாடுகளும் தமது நாணயப் பெறுமதிகளில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளதாக திரு.கப்ரல் நேர்காணல் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாடுகள் தமக்கு எத்தகைய பொறிமுறைகள் நலன் பயக்கின்றனவோ அவற்றை நடைமுறைப்படுத்தும் என்பதை நாங்கள் தற்போது புரிந்து கொள்ள வேண்டும். யென்னின் நாணய இறக்கமானது எவ்வாறான ஆபத்தைத் தோற்றுவித்துள்ளது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும்” எனவும் சிறிலங்காவின் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தனது நாணயப் பெறுமதியில் வீழ்ச்சியை ஏற்படுத்தியதானது தனது வங்கியின் இரண்டு வீத பணவீக்கத்தை இலக்காகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் யென்னுக்கென சிறப்பான ஒரு முகப்பெறுமதியை வழங்குவதை இலக்காகக் கொண்டதல்ல எனவும் யப்பானிய வங்கி மீண்டும் தெரிவித்துள்ளது.

யென்னின் நாணய இறக்கமானது யப்பானிய நிறுவனங்கள் தமது உற்பத்திகளை மிகக் குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் பங்குச் சந்தைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என ஆசியாவைச் சேர்ந்த நிறைவேற்றுத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அச்சம் கொள்கின்றனர். இந்த நிலையானது யப்பானின் வெளிநாட்டு முதலீடுகளைக் குறைத்துக் கொள்வதற்கும் வழிவகுக்கும் என ஆசியாவின் அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் கருதுகின்றனர்.

சிறிலங்காவானது ஏற்றுமதித் துறையில் யப்பானுடன் நேரடியாகப் போட்டியிடுவதில்லை எனவும், ஆனால் யென்னின் பெறுமதி இறக்குமானது வேறு பிரச்சினைகளை உருவாக்கும் எனவும், குறிப்பாக சிறிலங்கா ஆடைகளை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு யப்பான் தனது நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை ஏற்றுமதி செய்யும் போது சிறிலங்கா பிரச்சினையைச் சந்திக்க வேண்டியேற்படும் என திரு.கப்ரல் தெரிவித்துள்ளார்.

யப்பானிய வங்கியின் நகர்வானது, யென்னின் வீழ்ச்சியானது ஆசியாவின் அந்நியச் செலாவாணிச் சந்தைகளின் ஊடாக எதிரொலிக்கும் என பந்தயம் கட்டியுள்ள கொரியா, சிங்கப்பூர் மற்றும் இந்திய நாணயங்களில் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ளத் தூண்டியுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கும் யப்பானுக்கும் இடையிலான மிகவும் வலுவான வர்த்தக மற்றும் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாகவே யென் நாணயப் பெறுமதியானது டொலருக்கு எதிராக வீழ்ச்சியடைவதற்கும் அதிகரிப்பதற்கும் காரணமாகும் எனவும் இதனாலேயே ஆசிய நாடுகளின் நாணயப் பெறுமதி யென்னை முதன்மையாகக் கொண்டுள்ளதாக சில பொருளியிலாளர்கள் கூறுகின்றனர்.

யப்பானால் இவ்வாண்டின் முதல் அரை ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நேரடி அந்நிய முதலீட்டின் கால்வாசியாக 14.8 பில்லியன் டொலர்கள் ஏனைய ஆசிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக யப்பானிய வெளியக வர்த்தக நிறுவனத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் செல்வாக்குச் செலுத்தும் சில சக்திகள் குறிப்பாக சீனாவின் மந்தமடையும் பொருளாதாரமானது ஆசியாவின் வளர்ச்சியில் எதிர்விளைவை ஏற்படுத்தலாம் என தான் கவலை கொள்வதாக திரு.கப்ரல் குறிப்பிட்டுள்ளார். சீனக் கொள்கை வகுப்பாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை அடையாளங் கண்டு அதனைத் தீர்ப்பதற்கும், ஒரு ஆண்டில் ஏழு தொடக்கம் 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குமான வழிவகைகளை ஆராய்வார்கள் என்பதில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக திரு.கப்ரல் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது மந்தமான பொருளாதாரத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தற்போது முதற்தடவையாக சீன மத்திய வங்கி தனது கடன் வீதத்தைக் குறைத்துள்ளதானது உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிறிலங்கா மீதான சீனாவின் பொருளாதார நடவடிக்கையில் மந்தகதி ஏற்பட்டுள்ளது என மக்கள் அச்சப்படுகின்ற அளவுக்கு நிலைமை மோசமானகவில்லை என திரு.கப்ரல் தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் ஆசியாவின் பொருளாதாரத்தில் சிறிலங்காவானது தனியிடம் பிடித்துள்ளதாகவும், சிறிலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டு கால யுத்தமானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுற்றதிலிருந்து அனைத்துலக முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை சிறிலங்காவில் மேற்கொள்வதாகவும் திரு.கப்ரல் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியானது 7.8 சதவீதமாக உள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து சிறிலங்கா மீதான முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை போன்றவற்றில் மேலும் வளர்ச்சி ஏற்படும் எனவும் இதனால் அடுத்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சியானது 8 சதவீதத்தால் அதிகரிக்கும் எனவும் திரு.கப்ரல் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் மீண்டும் அதிபர் தேர்தலை நடாத்துவதற்கான அறிவித்தலை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி வழிமூலம் : AFP By Patrick Barta And Gabriele Parussini

மொழியாக்கம் : நித்தியபாரதி

http://www.puthinappalakai.net/2014/11/26/special-news/1183

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.