Jump to content

மழையால் சம்பூர் மக்கள் சிரமம்


Recommended Posts

பட்டித்திடல், மணற்சேனை, கிளிவெட்டி ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சம்பூர் மக்கள்;,  தற்போது பெய்கின்ற மழையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார். 
 
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார். 
 
மழைநீர் வழிந்தோட முடியாதவாறும் சேறும் சகதியாகவும் அவர்களின் நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள  பகுதிகளும்; நடைபாதைகளும்  காணப்படுகின்றன. இதனால்,  இந்த  மக்கள் குறிப்பாக, குழந்தைகள் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளை உடனடியாக கவனித்து நலன்புரி நிலையங்களையும்  சூழலையும் சுத்தமாக பேணுவதற்குரிய நிதியொதுக்கீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கூறினார். 
 
இதற்கு பதிலளித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே, இந்தப் பிரச்சினை ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்றது.  இந்த மக்களுக்கு மாற்றிடங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கும்போது, அது பலனளிப்பதில்லை. ஆகவே, இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  உறுப்பினர்கள்  உதவவேண்டுமெனக் கூறினார். 
 
இந்த நிலையில், சி.தண்டாயுதபாணி மற்றும் கிழக்கு மாகாணசபையின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்  கு.நாகேஸ்வரன் தெரிவிக்கையில், 
 
தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு இப்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சம்பூர் அகதிகளை, அவர்களின் சொந்தக்காணிகளுக்கு செல்ல அரசாங்கம் அனுமதித்தால், அது நன்மை அளிப்பதாக இருக்கும்.  சொந்தக்காணிகளில்  அவர்களுக்கு வாழ்வாதாரத்தை தேடவும்; முடியும்.
 
அனல்மின் நிலையத்துக்கும்  கைத்தொழில் அபிவிருத்தி வலயத்துக்கும்  தேவைப்பட்ட காணிகள், சம்பூரில் அரசினால் இனங்காணப்பட்டுள்ளன. அபிவிருத்திக்காக இந்தக் காணிகள் தேவைப்படின், அதற்கு நாம் தடையாக இருக்கவில்லை. அந்தக் காணிகள் போக, மிகுதிக் காணிகளையாவது இந்த மக்களுக்கு மீள அளிக்கவேண்டியது  நியாயம். இதனைச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசரமானதாகும்'  எனக் கூறினர்.          
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.