Jump to content

மாவீரர் நினைவாலயம் அமைக்கும் பெரும்பணிக்கான திட்டவாக்கக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கியது !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
TGTE-200-seithy-news.jpg

தமிழீழ விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை உலகத் தமிழர்கள் தம் நெஞ்சிருத்தி வணக்கம் தெரிவிக்கும் இந்நாட்களில் மாவீரர்; நினைவாலயம் அமைக்கும் பெரும்பணியொன்றினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கிறது எனும் செய்தியினை மக்களுக்கு அறியத் தருவதில் பெருநிறைவடைவதாக நாதமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களின் ஒருங்கிணைப்பில் 14 பேர்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டவாக்கக்குழு, நினைவாலயம் அமைக்கும் திட்டம் தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி, எதிர்வரும் 30.06.2015க்குள் முன்னராக பரிந்துரையினை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நினைவாலயம் அமைக்கும் இத் திட்டவாக்கல் முயற்சியில் இணைந்து கொள்ள விரும்புவோருக்கான பொதுஅழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் :

நமது தமிழீழத் தாயகம் சிங்கள ஆயுதப்படையினரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, மாவீரர் துயிலும் இல்லங்களும், மாவீரர் நினைவுத்தூபிகள், நினைவுச் சின்னங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டவர்களாகத் தாயக மக்கள் வாழ்ந்து வரும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.

இத்தகையதொரு சூழலில் நமது மாவீரர்களை காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக மக்கள் நெஞ்சிருத்தி வணக்கம் தெரிவிக்க வழிவகை செய்யவும், மாவீரர் நினைவுகளை மனதில் சுமந்தவாறு நமது சுதந்திரக்கனவை உயிர்ப்போடு முன்னெடுக்கும் நோக்குடனும், தமிழ் மக்களின் இதயங்களில் மாவீரர் வகித்துவரும் உயர்ந்த இடத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த மாவீரர் நினைவாலயம் அமைக்கப்படுதல் காலத்தின் தேவையாக உள்ளது.

உலகின் தேசங்கள் அனைத்தும் தத்தமது தேசத்துக்காக, மக்களுக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த தேசப் புதல்வர்களை மிகுந்த கௌரவத்துடன் நினைவு கூர்ந்து வருவதனைப் பண்பாடாகவே பேணுகின்றன.

இவர்களின் வரலாற்றைத் தேசத்தின் வரலாற்றில் உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டாடுகின்றன. இவர்களின் நினைவுகள் காலம் காலமாக நிலைக்கும் வகையில் இவர்களுக்கான நினைவிடங்களை அமைத்து மரியாதை செய்து வருகின்றன. இவ்வகையில் தமிழர் தேசமும் தனது தேசத்தின் மாவீரர்களை நினைவுகூரும் வகையிலான நினைவாலயத்தை உயர்ந்த தரத்துடன் உருவாக்குவது எமது வரலாற்றுக் கடமையாக அமைகிறது.

இந் நினைவாலயம் அமைக்கும் திட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்தாலும் இதனை உருவாக்கும் பெரும் பணி அனைத்துத் தமிழ் மக்களது பங்கு பற்றுதலோடுதான் நிறைவேற முடியும். இதனால் இந் நினைவாலயம் அமைக்கும் திட்டம் தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி எங்கு, எத்தகைய முறையில் இம் மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான திட்டமொன்றினைத் தயாரிப்பதற்கான திட்டவாக்கல் குழுவொன்று பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களின் ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம்.

இத் திட்டவாக்கற்குழு மாவீரர் நினைவாலயம் அமைக்கும் திட்டத்துடன் இணைந்த வகையில் மாவீரர்குடும்ப நலன் மற்றும் போராட்டத் தியாகிகளான முன்னைநாள் போராளிகள் நலன் பேணும் வகையிலான நிறுவனரீதியான ஏற்பாடு தொடர்பாகவும் தனது பரிந்துரைகளை வழங்கும்.

இம் மாவீரர் நினைவாலயத் திட்டவாக்கக்குழுவில் பின்வருவோர் அங்கம் வகிக்கின்றனர்.

1. பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா - ஒருங்கிணைப்பாளர் - சுவீடன்

2. திரு வேலும்மயிலும் மனோகரன் - இணைச் செயலாளர் - பிரான்ஸ்

3. திரு சீனிவாசகம் ஞானேஸ்வரன் - இணைச் செயலாளர் - கனடா

4. வைத்தியக் கலாநிதி சிவேன் சீவநாயகம் - அவுஸ்திரேலியா

5. பேராசிரியர் பழனிசாமி இராமசாமி - மலேசியா

6. திரு கொளத்தூர் மணி - தமிழ்நாடு

7. வைத்தியக் கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் - ஐக்கிய அமெரிக்கா

8. செல்வி எலீசா மான் - பிரித்தானியா

9. சட்டவாளர் காசிநாதர் சிவபாலன் - நோர்வே

10. பேராசிரியர் பீற்றர் சால்க் - சுவீடன்

11. திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் - பிரித்தானியா

12. செல்வி சுகன்யா ஆறுமுகம் - சுவிற்சலாந்து

13. திரு விஜயரூபன் சிவராஜா - நோர்வே

14. தேசிய மாவீரர் பணிகள் செயலகம் பணி முதல்வர்

இத் திட்டவாக்கல் குழு ஒரு சுயாதீனமான குழுவாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கட்டமைப்புக்கு வெளியே நின்று, தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிவரும் அனைத்துத் தமிழ்; அமைப்புக்களுடனும் இணைந்த வகையில் மாவீரர் நினைவாலயம் அமைக்கும் திட்டத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபடும்.

இத் திட்டவாக்கல் குழுவினர் மாவீரர் நினைவாலயம் அமையும் இடம் அதன் வடிவமைப்பு, நினைவாலயத்தை உருவாக்க எடுக்கக்கூடிய காலம், அதற்கு ஏற்படக்கூடிய செலவு, மாவீரர் நினைவாலய உருவாக்கக்குழுவின் கட்டமைப்பு உள்ளடங்கலான பல்வேறு விடயங்களை ஆய்வு செய்து எதிர் வரும் 30.06.2015 க்கு முன்னர் தமது திட்ட அறிக்கையினை முன்வைப்பர். இத் திட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்;படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மாவீரர் நிiனைவாலயம் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும்.

எம் மாவீரர்களுக்கான நினைவாலயம் அமைக்கும் இத் திட்டவாக்கல் முயற்சியில் இணைந்து கொள்ள விரும்புவோர் அனைவரையும் பின்வரும் maveerar@tgte.org மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

மாவீரர் கனவு விரைவில் நனவாகும்!! ஈழத் தாயகம் விடுதலைப் பேறடையும்!!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகச் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://seithy.com/breifNews.php?newsID=121519&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.