Jump to content

தடை தகர்த்து விளக்கேற்றி மாவீரர்களை அஞ்சலிப்போம்! - தமிழ்க் கூட்டமைப்பு சூளுரை


Recommended Posts

maaveerar%20naal.jpg

 

"தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
"தமிழர் பிரச்சினையை உலக அரங்கிற்கு கொண்டுசென்றவர்கள் மாவீரர்கள். எனவே, எத்தடைவரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து இந்தத் தியாகிகளை நாம் நவம்பர் 27ஆம் திகதி அமைதியான வழியில் நினைவுகூர்ந்து - விளக்கேற்றி அஞ்சலிப்போம்'' என்றும் கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது.
 
மண் மீட்புப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மறவர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் நாளை 27ஆம் திகதி வியாழக்கிழமை உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இந்தத் தினத்தை இலங்கையில் எந்தவொரு இடத்திலும் நினைவுகூர்வதற்கு விடமாட்டோம் என்று இராணுவத்தினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர். "விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு. மாவீரர் என்ற பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ, தீவிரவாதத்தை மகிமைப்படுத்துவதற்கு - பகிரங்கமாக நினைவுகூருவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய நிகழ்வுகளை நாம் தடுத்துநிறுத்துவோம்'' என்றும் இராணுவத்தினரும் பொலிஸாரும் மேலும் தெரிவித்துள்ளனர்.
 
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இந்தத் தடை உத்தரவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
 
செல்வம் அடைக்கலநாதன் "தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது பாரிய மனித உரிமை மீறலாகும். தமிழரின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த உத்தம தியாகிகளை தீவிரவாதிகள் - பயங்கரவாதிகள் என்று அரசும் அதன் படைகளும் முத்திரை குத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எத்தடைவரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து மரணித்த எமது உறவுகளுக்குத் தமிழர்களாகிய நாம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவோம்'' - என்று தெரிவித்தார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.
 
பா.அரியநேத்திரன்: "தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்து தமிழர் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி - தமது இன்னுயிர்களைத் தாயக மண்ணுக்காக அர்ப்பணித்து தமிழர் பிரச்சினையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர்கள் மாவீரர்கள். எனவே, இந்தத் தியாகிகளை நாம் நவம்பர் 27ஆம் திகதி நினைவு கூர்ந்து விளக்கேற்றி அஞ்சலிப்போம். தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் நல்லாட்சியை ஏற்படுத்த அயராது போராடி தமது உயிர்களைத் துறந்த இந்த வீரமறவர்களை அவர்களின் உறவுகள் அமைதியான வழி யில் நினைவுகூருவதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதையடுத்து இவ்வா றான நிகழ்வுக்கு அரச படைகள் தடை விதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், மாவீரர்கள் உயிருடன் உள்ளவர்கள் அல்லர். அவர்கள் இறந்தவர்கள். இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு'' - என்று தெரி வித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன். - 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.