Jump to content

சீனாவுடன் பேச்சுக்கு தோவல் நியமனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடன் பேச்சுக்கு தோவல் நியமனம்

 

புதுடில்லி : சீனாவுடனான எல்லைப் பேச்சுக்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு, மீண்டும் துவங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

 

Tamil_News_large_1122942.jpg

இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னை குறித்தும், செயல்திட்ட ரீதியான மற்ற விஷயங்கள் குறித்து, சீனாவுடன் பேச்சு நடத்துவதற்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். தன் பணியின் ஒரு பகுதியாக, எல்லை பேச்சுக்களை அவர் நடத்துவார்.இவ்வாறு, பிரதமர் அலுவலகம் கூறிஉள்ளது.

இதற்கு முன் பதவி வகித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எல்லாம், சீனாவுடனான எல்லைப் பேச்சின் போது, இணை அமைச்சர் அந்தஸ்திலேயே செயல்பட்டனர். அதுபோல், தோவல் செயல்படுவாரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. அதேநேரத்தில், சீன தரப்பில், துணை அமைச்சர் அந்தஸ்திலான அதிகாரி பேச்சில் பங்கேற்பார்.
 

17 முறை பேச்சு:



*எல்லை பிரச்னை தொடர்பாக, இந்திய - சீன சிறப்பு பிரதிநிதிகள் பேச்சு நடத்துவது, 2003ல் துவங்கியது.
*இந்தியா - சீனா இடையே இதுவரை, 17 முறை எல்லை பேச்சு நடந்துள்ளது.
*கடைசியாக பிப்ரவரி மாதம் டில்லியில் நடைபெற்றது.
*அப்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனனும், சீன இணை அமைச்சர் யாங் ஜியாச்சியும் பேச்சு நடத்தினர்.

Link to comment
Share on other sites

தோவல்:ஏற்கனவே உள்ளை வந்திட்டீங்க.. சரி பரவால்ல.. இனி இந்தக் கோட்டைத் தாண்டி நீங்களும் வரக்கூடாது.. நாங்களும் வரமாட்டோம்.. :(

யாங் ஜியாச்சி: அப்பிடியும் வந்திட்டா..?! :icon_mrgreen:

தோவல்: கோட்டை இந்தப்பக்கமா போட்டுக்கிறேன்.. மறுபடியும் பேசுவோம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடன் பேச்சுக்கு, சுப்பிரமணியசாமி தான்... பொருத்தமான ஆள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.