Jump to content

காடுகளை அழித்து வாழ்க்கையா?


Recommended Posts

trees_2218552f.jpg

 

நமக்கென்று இருக்கும் ஒரே வீடான இந்தப் புவியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம்
 
உலகம் மிக வேகமாக இயங்குகிறது. இந்த உலகத்திலேயே மிகப் பெரிய 3 சக்திகள் - சந்தை, இயற்கை அன்னை, மூரின் விதி. இந்த மூன்றுமே ஒரே சமயத்தில் வேகவேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. உலகமயம் காரணமாகச் சந்தையானது முன்னெப்போதையும்விட, எல்லா நாட்டுப் பொருளாதாரங்களையும் நெருக்கமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறது. இதனால், நம்முடைய தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், சந்தைகள் ஆகிய மூன்று தரப்புமே தங்களைப் பாதுகாக்கும் சுவர்கள் ஏதுமின்றி, ஒன்றையொன்று சார்ந்து இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
 
மைக்ரோ சிப்புகளின் வேகமும் ஆற்றலும் 2 ஆண்டுகளுக்கொரு முறை இரட்டிப்பாகிறது என்பதே மூரின் அடிப்படை விதி. இதனால் மென்பொருள், கணினி, ரோபோ ஆகியவற்றின் ஆற்றலும் கூடிக் கொண்டே வருகிறது. ஏற்கெனவே, மனிதர்களால் செய்யப்பட்டுவந்த பல வேலைகளை, நுட்பமான கணினிகளே செய்துவிடுகின்றன. பழைய வேலைகளைச் செய்வதுடன் புதிதாகவும் பல வேலைகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த வேலைகளைச் செய்ய தொழில்நுட்பத்திறன் அதிகம் தேவைப்படுகிறது.
 
நம்முடைய காற்றுவெளியில் கரிப்புகை அதிகரித்து, சுற்றுச்சூழலின் தரத்தைக் குறைக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கத்தால் காடுகள் அழிக்கப்படுகின்றன. நமக் கென்று இருக்கும் ஒரே வீடான இந்தப் புவியும் - நிலம், நீர், காற்றில் சேரும் கழிவுகளால் வேகமாகச் சீர்குலைந்துவருகிறது.
 
3 பருவ மாறுதல்கள்
 
சுருக்கமாகச் சொல்வதென்றால், நாம் இப்போது டிஜிட்டல், சூழலியல், புவிசார் பொருளியல் என 3 விதப் பருவ மாறுதல்களுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவேதான் பெரிய நாடுகள் நெருக்குதலுக்கு உள்ளாகின்றன, வலுவற்ற நாடுகள் கண்டனங்களுக்கு ஆட்படுகின்றன. இந்த விஷயத்தில் உடனடித் தீர்வு என்று ஏதும் இல்லையே என்று அமெரிக்கர்கள் மனம் பதைக்கிறார்கள். அவர்களுடைய ஆதங்கம் நியாயமானது. ஆனால், இந்தத் தீர்வானது சாமானிய நடவடிக்கைகளால் ஏற்பட்டுவிடாது. நீண்ட காலம் பிடிக்கும். ஒருவர் மட்டுமல்ல, பலரும் சேர்ந்து செயல்படுத்த வேண்டிய தீர்வு இது. மீட்சி பெறக்கூடிய அடித்தளக் கட்டமைப்பு, கட்டுப்படியாகும் விலையில் சுகாதார நலன், புதிய வேலைகளுக்கு ஏற்ற படிப்பு - பயிற்சி, திறமைசாலிகளை ஈர்க்கக்கூடிய குடியேற்றக் கொள்கை, தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும்படியான நல்ல சுற்றுச்சூழல், கையை மீறாத கடன் சுமை, நல்ல நிர்வாக அமைப்பு ஆகியவை இருந்தால்தான் இந்த வேகத்தை அடைய முடியும்.
 
பிரேசிலின் கதை
 
பிரேசில் நாட்டின் இயற்கைச் சூழலுக்கு நிகழ்ந்த சேதத்தைப் பற்றிப் பார்க்கலாமா? ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அக்டோபர் 24-ம் தேதி சாவ்பாவ்லோ நகரிலிருந்து இந்தச் செய்தி நறுக்கை வெளியிட்டது: ‘தென்னமெரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய நகரமும் மிகவும் செல்வந்த நகரமுமான சாவ் பாவ்லோவில் நவம்பர் மாத நடுப் பகுதிக்குள் நல்ல மழை பெய்யாவிட்டால், நகரில் கடும் தண்ணீர்ப் பற்றாக் குறை ஏற்பட்டுவிடும்’ என்பதே அது. பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரமான அதில் சுமார் 2 கோடி மக்கள் வசிக்கின்றனர். கடந்த 80 ஆண்டுகளில் இருந்திராத வகையில் தண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரி கடந்த ஆண்டு வற்றியது. அதற்குப் பிறகு மழையே இல்லை. இதுதான் முக்கியக் காரணம்.
 
என்ன, சாவ்பாவ்லோவில் தண்ணீர் இல்லையா? ஆம். பிரேசில் நாட்டின் மூத்த ஆலோசகரான ஜோஸ் மரியா கார்டசோ டா சில்வா இதை விளக்குகிறார்: “செரா டா கான்டரெய்ரா மழைப்பிடிப்புப் பகுதியில் இருந்த இயற்கையான பசுங்காடு அழிக்கப்பட்டுவிட்டது. அங்கு மரங்கள் செழித்து வளர்ந்த காலத்தில், அதைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட 6 பெரிய ஏரிகளுக்கு நிறைய நீர் கிடைத்துவந்தது. சாவ்பாவ்லோ நகரின் தண்ணீர் தேவையில் 50%, கான்டரெய்ரா நீர்த் தேக்கம் மூலமே பூர்த்திசெய்யப்பட்டுவந்தது. அங்கிருந்த காட்டை வெட்டி மரங்களை நல்ல விலைக்கு விற்றார்கள். காட்டை அழித்த பகுதியில் விவசாய நிலங்களை ஏற்படுத்தினார்கள். எப்போதும் நீர் வளத்துடன் இருந்த இடங்கள் மண்ணைக் கொட்டி மேடாக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டன. ஓரளவு பசுமையுடன் இருந்த இடம் மேய்ச்சல் காடாக்கப்பட்டது. போதாததற்கு யூகலிப்டஸ் மரங்கள், வணிக நோக்கில் அதிக எண்ணிக்கையில் நடப்பட்டன. மழை குறைந்தது, காற்றில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறட்சி ஏற்பட்டது. மழை வந்தால் தண்ணீரை நிரப்பிக்கொள்ள ஏரிகளும், எடுத்துச் செல்ல ராட்சதக் குடிநீர்க் குழாய்களும் தவங்கிடக்கின்றன. மழைதான் வருவதே இல்லை” என்கிறார்.
 
காடும் இல்லை பசுமையும் இல்லை
 
இயற்கையான காடுகள் மழை மேகங்களை ஈர்த்துத் தண்ணீரை மழையாக உறிஞ்சி எடுக்கின்றன. அப்படி எடுக்கும் தண்ணீரை ஆறுகளாகவும் ஓடைகளாகவும் மண்ணில் பாய விடுகின்றன. காடுகள் தண்ணீரை மட்டும் பெறுவதில்லை, தண்ணீர் ஓடைகளையும் தூய்மையாகப் பராமரிக்கின்றன. மண் அரிப்பு ஏற்படாமல் காக்கின்றன. தண்ணீரில் அசுத்தம், வண்டல் இல்லாமல் வடிகட்டிச் சுத்தமாகத் தருகின்றன. காட்டை அழித்ததால் மண் தளர்ந்து அரிப்பெடுக்க ஆரம்பித்தது. சிறு மழையில் அவை கரைந்து வெளியேறிவிட்டன. இப்போது காடும் இல்லை, பசுமையும் இல்லை. தண்ணீர் சேர்வதும் குறைந்ததுடன் தண்ணீரின் தரமும் சுவையும் வெகுவாகக் குறைந்துவிட்டன. அரசும் மக்களும் சேர்ந்து இயற்கையை அழித்ததால், மீட்சிபெற முடியாமல் இயற்கை வனம் வறண்ட கட்டாந் தரையாகிவிட்டது. கான்டரெய்ரா பகுதியில் முன்னர் பெய்த மழையில் வெறும் 12% மட்டுமே இப்போது பெய்கிறது.
 
பிரேசிலின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் தில்மா ரூசஃப்பின் பதவிக் காலத்தில்தான் இந்தக் காடு அழிப்பு தொடங்கி பூர்த்தியடைந்தது. ஆனால், இது தேர்தலில் பெரிய பிரச்சினையாகவே பேசப்படவில்லை. அன்டோனியோ நோப்ரே என்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி வருத்தத்துடன் இதுகுறித்துப் பேசுகிறார். “அமேசான் பகுதியில் காடுகளை அழித்த தாலும், சர்வதேச அளவில் புவிவெப்பம் உயர்வதாலும் மழைக்காடுகள் இருக்கும் பகுதியில்கூட மழைப் பொழிவு குறைந்துவிட்டது. அமேசான் பகுதியில் காற்றிலேயே சாரல் போல மழைத்துளிகள் அடர்த்தியாக விரவிக்கிடக்கும். அதை நாங்கள் ‘பறக்கும் ஆறு’என்றே அழைப்போம். அந்த ஆறு இப்போது இல்லை. எனவேதான், இந்த வறண்ட வானிலை” என்கிறார் அன்டோனியோ நோப்ரே.
 
மழை பெய்யும் வரை காத்திரு
 
ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் நிபுணர் பால் கில்டிங், பிரேசிலிலிருந்து மின்னஞ்சலில் இப்படித் தெரிவிக்கிறார்: “பிரேசில் அரசின் மெத்தனத்தைப் பார்க்கும்போது, உலகையே பாதிக்கும் புவிவெப்ப உயர்வுகுறித்து எந்த நாடுமே உளப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை - இனி வாழவே முடியாது என்ற நிலை வரும் வரை - என்றே தோன்றுகிறது. 2 கோடி மக்கள் வாழும் ஒரு நகரின் குடிநீர்ப் பற்றாக்குறை இந்த அளவுக்கு முற்றும்வரை, அந்த அரசு வேறு ஏதோ செயல்களில் கவனம் செலுத்திவந்திருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க என்ன நடவடிக்கை என்று கேட்டால், மழை பெய்யும் என்று காத்திருக்கிறோம் என்ற பதில் வருகிறது. ஏன் இந்தப் போக்கு? காட்டை அழிக்கவிட்டதால்தான் இந்த நிலைமை என்று ஒப்புக் கொண்டால், அதன் விளைவு அரசியல்ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்திவிடும்; மேற்கொண்டு காடுகளை அழிக்கக் கூடாது என்ற கோரிக்கை மக்களிடமிருந்து பலமாக எழக்கூடும். பருவநிலை மாறுதல்களை எதிர்
 
கொள்ள நாட்டைத் தயார்படுத்தும் பொறுப்பும் அடுத்து வந்து சேரலாம். இவற்றையெல்லாம் தவிர்ப்பதற் குத்தான் ஆட்சியாளர்கள் இயற்கையை அழிப்பதைச் சுட்டிக்காட்டினாலும், காதில் ஏதும் விழாததுபோல பாவனை செய்கிறார்கள்” என்கிறார்.
 
சந்தை, இயற்கை அன்னை, மூரின் விதியெல் லாம் இப்படி வேகமாக மாறிக்கொண்டே இருந்தால், வாய்ப்புகளும் நெருக்குதல்களும் அதிகமாகிக் கொண்டே வரும். இதற்கேற்ப, பாதிப்புகளை எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறோம்? எப்படி சாதகமாக்கிக் கொள்ளப்போகிறோம்? அவற்றுக்குத் தகுந்தவாறு எப்படி நம்மை மாற்றிக்கொள்ளப்போகிறோம்?
 
- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.