Jump to content

வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன்

நித்தியபாரதி

hariharan-300x200.jpg

தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.

இவ்வாறு International Law Journal of London ஆய்விதழின் முதன்மை ஆசிரியர் Dr Parasaran Rangarajan அவர்களுக்கு வழங்கிய மின்னஞ்சல் வழியான நேர்காணலில் கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

கேள்வி: சிறிலங்காவிலிருந்து தமிழீழத்தைப் பிரித்தெடுப்பதற்கான முயற்சிகளில் இந்தியா ஒருபோதும் இறங்கமாட்டாது என்பதை இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதிப்படுத்துகிறது. ஆனால் சிறிலங்காவில் தனித் தமிழீழத்தை உருவாக்குவதைப் பிரதான நோக்காகக் கொண்டு செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளுக்கான இந்திய வெளியக புலனாய்வு அமைப்பின் (றோ அமைப்பு) ஊடாக 1980களில் இந்தியா ஆயுத உதவிகளை வழங்கியிருந்தது. இவ்வெவ்வேறுபட்ட முரண்பாடான நிலைப்பாட்டைக் கொண்ட இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எத்தகையதாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: 1987 யூலையில் இந்திய-சிறிலங்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் சிறிலங்காவில் செயற்பட்ட ஆயுதக் குழுக்களுடன் இந்தியா எவ்வாறான தொடர்புகளைக் கொண்டிருந்தது என்பது தொடர்பில் பல்வேறு தவறான தகவல்களும் குழப்பங்களும் நிலவுகின்றன என நான் கருதுகின்றேன். 1983ல் சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனக்கலவரமானது பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுவதற்குக் காரணமாகியது.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இக்கலவரமானது சிறிலங்காவில் ஆயுதக் குழுக்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது. 1975ல் அகிம்சை வழிமூலம் சுதந்திர தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி [TULF] உருவாக்கப்பட்டு 1976ல் நடாத்தப்பட்ட தேர்தலில் இம்முன்னணி வெற்றியை ஈட்டியபோதிலும் இதனால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் தமிழ் ஆயுதக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தன. சிறிலங்காவில் சுதந்திர தமிழீழத்தை அமைப்பதற்கான அரசியற் தீர்வொன்றை முன்வைப்பதில் சிறிலங்கா அரசாங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வாய்ப்பை வழங்கவில்லை என்பது உண்மையே.

1983 கலவரத்தின் பின்னர், சிறிலங்கா வாழ் சிறுபான்மைத் தமிழ் மக்கள் சமமாக நடாத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்திய மத்திய அரசாங்கமானது சிறிலங்கா விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசாங்கம் மீது மிகப் பாரிய அழுத்தம் இடப்பட்டது. இக்காலப்பகுதியில் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ஆக்கிரமிப்பு மேற்கொண்டிருந்ததால் இந்தியா பனிப்போர்ச் சூழலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தமிழ் மற்றும் சிறிலங்காத் தலைவர்களுக்கிடையில் திம்பு மற்றும் பங்களுரில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் பின்னர் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்காக திருமதி.இந்திராகாந்தி அந்நாட்டு ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவு வழங்கினார். 1980களில், திருமதி இந்திராகாந்தியோ அல்லது அவருக்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த தலைவர்களோ சுதந்திர தமிழீழம் மலருவதற்கான ஆதரவை ஒருபோதும் வழங்கவில்லை.

ஏன் திருமதி இந்திரா காந்தி, தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கினர் என்பது தொடர்பாக மே 23, 2011ல் நான் வழங்கிய நேர்காணலில் மிக விரிவாக விளக்கியுள்ளேன்: “ஒரு குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு தமிழ் ஆயுதக் குழுக்களை வளர்ப்பதன் மூலம் ஈழத்தமிழர் விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கான ஒரு சமரசத்திற்கான தயார்ப்படுத்தலை மேற்கொள்ள முடியும் என அக்காலப்பகுதியில் திருமதி இந்திரா காந்தி கருதினார்”

இந்திய அரசாங்கத்தின் கட்டளைகளைப் பின்பற்றி மாத்திரமே இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் பணிபுரிந்தன. ஆகவே இந்நிலையில், இவர்கள் தமிழீழத்தை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு செயற்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கின எனக் கூறுவது முற்றிலும் தவறாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒருவர் மாத்திரமே தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியும் என்கின்ற குறிக்கோளுடன் புலிகள் அமைப்பு வளர்க்கப்பட்டதே தவிர இது உண்மையில் இந்தியப் புலனாய்வாளர்களால் ஆதரவளிக்கப்படவில்லை.

கேள்வி: சிறிலங்கா ஒரு இறைமையுள்ள நாடாகும். பாதுகாப்புச் சபை சிறிலங்கா மீது தடை விதிக்காவிட்டால் இது ஐ.நா சாசனத்தை மீறுஞ்செயலாகவே நோக்கப்படும். நேற்றோ[NATO] அமைப்பு கொசோவாவில் போர்க் குற்றங்களை உறுதிப்படுத்தியது போன்று, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்போது, தமிழ் மக்களுக்குத் தீர்வை எட்டக்கூடிய ‘பரிகார இறையாண்மையை’ சிறிலங்காவில் நிலைநிறுத்துவதற்காக எந்தவொரு சக்திகள் தலையீடு செய்யுமா? இவ்வாறு சிறிலங்காவில் வெளிச்சக்திகள் தலையீடு செய்வதற்கு இந்தியா அனுமதிக்குமா? அல்லது ஆப்கானிலிருந்து நேற்றோ வெளியேறியது போன்று இவ்வாறான வெளிச்சக்திகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றுவது தொடர்பாகப் பரிசீலிக்குமா?

பதில்: நான் ஒரு சட்ட வல்லுனரல்ல. ஆனால் இந்த விவகாரத்தை மூலோபாய ரீதியாக நோக்க முடியும். இது எந்தவொரு குழப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அனைத்துலக சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அனைத்துலக நீதிமன்றம் கொசோவா மீதான தனது தீர்ப்பை 22 யூலை 2010ல் வெளியிட்டது. கொசோவா தனக்கான சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திய போது மேற்குலக இராணுவம் இங்கு நிறுத்தப்பட்டது. ஆனால் நாடுகளின் இறையாண்மை மற்றும் அவற்றின் ஒன்றிணைந்த அடையாளமானது மிகவும் சாதாரணமாக வரையறுக்கப்பட முடியும் என நான் கருதுகிறேன்.

எந்தவொரு ஐ.நா உறுப்பு நாடுகளின் இராணுவத்தாலும் இழைக்கப்பட்ட குற்றங்களை அனைத்துலக நீதிமன்றுக்கு நிரூபிக்கக்கூடிய அதிகாரத்தை நேற்றோ NATO போன்ற எந்தவொரு இராணுவ அமைப்பும் கொண்டிருக்க முடியும் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது. இந்த விவகாரத்தை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஐ.நா பாதுகாப்புச் சபை மற்றும் பொதுச் சபை போன்றன கலந்துரையாடி சட்ட ரீதியாகக் கூட்டு நடவடிக்கையை எடுக்க முடியும். ஆனால் நிறைய சந்தர்ப்பங்களில் இந்த அமைப்புக்கள் தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளன. ஏனெனில் இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து செயற்பட விரும்புவதில்லை.

பலம்பொருந்திய உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து கொசோவா பிரிந்து செல்வதை எதிர்த்துப் போர் புரியும் அதேவேளையில் மனித உரிமை மீறல்களைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தி சர்வதிகார ஆட்சி நடாத்தப்படும் ஈராக் மற்றும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட சேர்பியா போன்ற நாடுகளில் வாழும் அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு இதன்மூலம் ஐ.நா சாசனம் முற்றாக மீறப்படும் போது அதனை நியாயப்படுத்துவதற்காக 21வது நூற்றாண்டில் மேற்கொள்ளப்படும் ‘பரிகார இறையாண்மை’ போன்றன தொடர்பில் நான் திருப்தியடையவில்லை.

இந்நிலையில் ‘பரிகார இறையாண்மை’ என்பது அனைத்துலக ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு நாட்டில் வெளியக இராணுவத் தலையீட்டை மேற்கொள்வதற்கு கொசோவாவை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்த முடியாது. சொசோவாவில் ‘பரிகார இறையாண்மையை’ நிலைநிறுத்துவதற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கிய பின்னர், பெப்ரவரி 19, பெப்ரவரி, 2008ல் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், எந்தவொரு பிராந்தியத்தில் நிலவும் மோதலும் தனித்துவமானது எனவும், கொசோவா தான் பிரிந்து செல்வதைத் தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்தி வெற்றி கொண்டதைப் போன்று எந்தவொரு நாடும் தமது சுதந்திரப் பிரகடனத்தைத் தாமாகவே மேற்கொள்வதன் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இத்தகைய அறிவிப்பானது இதன் அரசியல், இராஜதந்திர நாடகத்தின் ஒரு பகுதியாகும். ஏனெனில் தென் ஒசேற்றியாவில் உள்ள ஆப்காசியா, ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து செல்லப்போவதாக அச்சுறுத்திய போது அதில் ரஸ்யா தலையீடு செய்ததையிட்டு அமெரிக்கா அதிருப்தியடைந்தது. அமெரிக்கா தொடர்பான இந்த எடுத்துக்காட்டானது ‘பரிகார இறையாண்மை’ தேவைப்படும் போது பயன்படுத்தப்பட முடியும் என்பதைக் குறிக்கிறது. அமெரிக்க வாத்திற்கு எது நல்லதோ அது ரஸ்ய வாத்திற்குப் பிடிக்காது என்கின்ற ஒரு பழமொழி உண்டு.

தற்போது சிறிலங்காவில் வேற்று நாட்டு இராணுவத்தின் தலையீடுகள் காணப்படவில்லை. சிறிலங்கா மீது தற்போதும் ஐ.நா விசாரணைகளை மேற்கொள்கிறது. மிக முக்கிய மற்றும் பிராந்திய பொறுப்பைக் கொண்டுள்ள இந்தியாவுடன் யுத்தத்தில் ஈடுபடாத சிறிலங்காவில் இந்தியா இராணுவத் தலையீட்டைச் செய்வதற்கான எவ்வித நியாயமான காரணங்களும் தற்போது காணப்படவில்லை.

1987ல் கூட, தமிழ் மக்களுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தமிழ் ஆயுத அமைப்புக்களை நிராயுதபாணிகளாக்கி அதன்மூலம் தமிழ் சிறுபான்மை மக்களின் அரசியல் அவாக்களை ஒன்றிணைந்த சிறிலங்காவுக்குள் நிறைவேற்றுவதற்கான இரு தரப்புப் பேச்சுக்களை நடாத்துவதற்கு உதவுமாறு இந்தியாவிடம் அப்போதைய சிறிலங்கா அதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தமைக்கு அமைவாகவே சிறிலங்காவுக்கு இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. சிறிலங்கா இராணுவம் தனக்கெதிராகச் சதி செய்து ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்வதைத் தடுப்பதற்காகவே அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜெயவர்த்தனா இந்தியப் படைகளை சிறிலங்காவுக்கு அழைத்ததாக நம்பப்படுகிறது.

கேள்வி: அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஒரு கூட்டணியாகச் செயற்படுவதற்கான சாத்தியம் தொடர்பாக அறிவித்தல் விடுத்திருந்தன. இதற்கும் மேலாக, சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தைக் குறைக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் சபை மற்றும் இந்திய அரசாங்கம் போன்றன அழைப்பு விடுத்து வருகின்றன. இதைவிட, நிறைவேற்று அதிபர் முறைமை தொடர்பாக விதந்துரைக்கப்படும் 18ம் திருத்தச்சட்டத்தை நீக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இவ்விரு நகர்வுகளும் 1987ல் உருவாக்கப்பட்ட இந்திய-சிறிலங்கா கூட்டு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வடக்கு-கிழக்கு இணைந்த ஆட்சி நடைபெற வழிவகுக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழித்தல் என்பது சிறிலங்கா அரசியலில் நிரந்தரமாகப் பேசப்படும் ஒரு விவகாரமாகும். இந்த முறைமை ஐ.தே.க வால் உருவாக்கப்பட்டது. ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பாக அதிபர் ராஜபக்ச, மத்தியில் அனைத்து அதிகாரங்கள் அதிபர் என்கின்ற தனிநபரின் கைகளில் குவித்து வைத்திருப்பதன் மூலம் தனது ஆட்சியில் மிகவும் இன்பம் கண்டுள்ளார். சிறிலங்காவில் இடம்பெறும் ஒவ்வொரு தேர்தலில் இந்த விவகாரம் பேசப்பட்டாலும், இது அரசியல் முன்னுரிமைகளிலிருந்து நீக்கப்படுவது வழமையானதாகும். இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடையாவிட்டால், இந்த நிலை மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை. நிகழ்காலத்தில் கூட இது இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ஐ.தே.க வுடன் அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேரவுள்ளதாக அறிவிப்பதென்பது தேர்தற் காலத்தில் இடம்பெறும் வழமையான நிகழ்வாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் ஒன்றுசேர்வதன் மூலம் இவ்விரு வெவ்வேறு சமூகங்கள் சுமக்கும் வரலாற்றுச் சுமைகளை அடிப்படையாகக் கொண்டு சமத்துவமான தீர்வை எட்டமுடியுமா என்பது சந்தேகத்திற்குரியதே.

நிறைவேற்று அதிபர் முறைமையுடன் தொடர்புபட்ட 18வது திருத்தச் சட்டம் எதிர்காலத்திலும் நடைமுறையிலிருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பு சிறிலங்கா வாழ் மக்களிடமே உள்ளது. 2015 ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள தேர்தலானது இதற்கான வாய்ப்பை சிறிலங்கா வாழ் மக்களுக்கு வழங்குகிறது. சிறிலங்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது இந்தியாவையோ நாம் அதிகளவில் நம்பக்கூடாது.

எனது மதிப்பாய்வின் படி, வடக்குக் கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது. சிறிலங்கா உச்ச நீதிமன்றமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிந்து தனித்தனியாகச் செயற்படவேண்டும் எனக் கட்டளையிட்ட போது, இந்தியாவானது இந்த விடயத்தில் தலையிட்டு இவ்விரு மாகாணங்களையும் பிரிக்கக்கூடாது என அதிபர் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருக்க முடியும். ஆனால் அதனை இந்தியா செய்யவில்லை.

சிறிலங்காவுடன் சமாதானப் பேரம் பேசலை மேற்கொண்ட போது வே.பிரபாகரன் வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாகத் தீர்வெட்டுவதற்கான சில வரலாற்று ரீதியான வாய்ப்பைக் கொண்டிருந்தார். ஆனால் இவர் சுதந்திர தமிழீத்தை மட்டுமே கோரினார். வேறு எந்த விட்டுக் கொடுப்புக்களுக்கும் பிரபாகரன் உடன்படவில்லை.

சிறிலங்கா இராணுவம், வடக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ளதானது ஒரு அரசியற் பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினை சிறிலங்கா அரசாங்கத்தாலும் வடக்கு மாகாண சபையாலும் தீர்க்கப்படவேண்டும். ஆனால் இவ்விரு தரப்புக்களுக்கும் இடையில் நீண்ட கால அரசியல் சார் நல்லுறவு பேணப்படுவது மிக அவசியமானதாகும். கெட்டவாய்ப்பாக, இவ்விரு தரப்புக்களுக்கும் இடையிலான சமரசப் பேச்சுக்கள் பல்வேறு காரணங்களுக்காகத் தோல்வியடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புக்களுடனும் சமரசத்தை மேற்கொண்டு மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெறுவதற்கான வழிவகையை மட்டுமே இந்தியா மேற்கொள்ள முடியும்.

கேள்வி: தனித் தமிழீழம் வேண்டுமென சிறிலங்காவிலுள்ள எந்தவொரு குழுவும் கோரிக்கை விடுத்தால், 1980களில் பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது போன்று இந்தியா பொருத்தமான பொறிமுறையின் ஊடாக இதற்கு ஆதரவளிக்குமா?

பதில்: இதற்கு முன்னர் பல தடவைகள் இது தொடர்பாக நான் பதிலளித்துள்ளேன். நீங்கள் ஒருபோதும் 1980 காலப்பகுதியை மீண்டுமொரு தடவை இந்தியாவிலோ அல்லது சிறிலங்காவிலோ உருவாக்க முடியாது. தனித் தமிழீழக் கோரிக்கையை முன்வைப்பதற்கான எந்தவொரு அமைப்பும் சிறிலங்காவில் தற்போது இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட இக்கோரிக்கையை முன்வைக்காது. புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த குழுக்கள் மற்றும் தமிழ்நாட்டில் செயற்படும் சில குழுக்கள் போன்றன இவ்வாறான கோரிக்கையைத் தற்போது முன்வைக்கின்றன. இவற்றின் தமிழீழக் கோரிக்கையும் ‘கருத்தியல் மட்டத்திலேயே’ உள்ளது. இந்நிலையில் இன்னமும் எந்தவொரு அமைப்பும் தனித்தமிழீழம் தொடர்பில் நடைமுறை சார் செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில் இதற்கு இந்தியா எவ்வாறு ஆதரவளிக்க முடியும்?

கேள்வி: சிறிலங்காவில் செயற்படும் தீவிர பௌத்த அமைப்பான பொது பல சேனவைப் ‘பயங்கரவாதிகள்’ என வகைப்படுத்த முடியுமா அல்லது இதனை இந்தியாவால் தடைவிதிக்கப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் இணைக்க முடியுமா?

பதில்: சிறிலங்கா அரசாங்கமோ அல்லது பெரும்பான்மை சிறிலங்கர்களோ பொது பல சேனவை ஒரு தீவிரவாத அமைப்பாகக் கருதுகிறார்களா? சிறிலங்கா காவற்துறை கூட பொது பல சேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் இது ஒரு வலதுசாரி சிங்கள அமைப்பாகவே நோக்கப்படுகிறது. இவர்களது கருத்தியலின் படி, பொது பல சேனவின் நடவடிக்கைகள் தீவிரவாதச் செயற்பாடுகளாக வரையறுக்கப்படவில்லை.

எனது கருத்தின் படி, பொது பல சேன ஒரு பௌத்த அடிப்படைவாத அமைப்பாகும். அரசியலில் தமது செல்வாக்கை அதிகரிப்பதற்காக இவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இவர்கள் அரசாங்க ஆதரவுடன் செயற்படுகிறார்கள். இது ஒரு சட்ட விவகாரமாகும். இதனை மிகவும் உறுதியாகக் கையாளவேண்டும். தம்மைத் தாமே பௌத்தர்களின் மீட்பர்கள் எனக் கூறிக்கொண்டு செயற்படும் பொது பல சேனவுக்கு எதிராக எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு அரசாங்கத்திலுள்ளவர்கள் முன்வராமைக்கு தமது செல்வாக்குக் குறைந்துவிடும் எனக் கருதுவதே காரணமாகும். இதனால் இந்த அமைப்பு வெளிப்படையாக சுதந்திரமாகச் செயற்படுகிறது. நாங்கள் பொது பல சேனவின் நடவடிக்கைகளைக் கொண்டு அதனை ‘தீவிரவாத அமைப்பு’ என வரையறுத்தால், இந்தியா மற்றும் சிறிலங்காவில் அரசியற் கட்சிகளின் கையாட்களாகச் செயற்படும் பல்வேறு அமைப்புக்களும் தீவிரவாத அமைப்புக்கள் என அழைக்கப்பட வேண்டும்.

பொது பல சேனவை இந்தியா ‘பயங்கரவாத’ அமைப்பு என முத்திரை குத்துமா என நீங்கள் வினவியது நகைச்சுவையானதே. ஒரு அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென இந்தியா முத்திரை குத்துவதற்கு வரையறுத்த சில காரணங்கள் உள்ளன. தற்போது பொது பல சேன இந்தியாவில் செயற்படவில்லை. இந்தியா வாழ் முஸ்லீம் மக்கள் கூட, பொது பல சேனவைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை.

கேள்வி: தற்போது கருத்து வாக்கெடுப்பானது சாத்தியமில்லாவிட்டால், சிறிலங்காவின் அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர் வடக்கு கிழக்கு ஒன்றிணைக்கப்படும் போது அல்லது அதற்குப் பின்னர் இது சாத்தியம் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்து வாக்கெடுப்பானது தமிழீழம் தொடர்பானதா அல்லது வடக்கு மாகாணம் ஒன்றிணைக்கப்படுவது தொடர்பானதா? அரசியல் நோக்கம் தவிர வேறெந்த சூழலில் யாரேனும் சிறிலங்காவில் கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட தனது அரசியற் கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரமே கருத்து வாக்கெடுப்பு என்கின்ற பதத்தைப் பயன்படுத்துகிறது. கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்படாமலேயே, நாடாளுமன்றில் சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் வடக்குக் கிழக்கை சட்ட ரீதியாக இணைக்க முடியும். மறுபுறத்தே அரசியல் யாப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் இது சாத்தியப்படும்.

கேள்வி: செல்வாக்கு மிக்க நாடுகளின் உதவியுடன் அனைத்துலக ரீதியில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டால் இந்த அமைப்பிற்கு ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமா?

பதில்: இவ்வாறான ஒரு ஊகித்தல் வினாவுக்குப் பதிலளிப்பது கடினமாகும். நடைமுறையில் தமிழீழம் என்பதை அனைத்துலக சமூகம் இன்னமும் அங்கீகரிக்கவில்லை. அனைத்துலகத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தமிழீழம் என்பது முதலில் தனக்கென நிலப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். அனைத்துலக சமூகம் அங்கீகாரம் வழங்கும் போது, ‘இந்த அமைப்பு’ என நீங்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பிற்கு ஆட்சி செய்தல் மற்றும் சுயாதீன அமைப்பு என்பதற்கு அப்பால் எவ்வித பங்களிப்பும் இருக்காது என்பதே எனது கருத்தாகும். (இந்த அமைப்பு என நீங்கள் தமிழ் பிரிவினைவாத அமைப்பையே குறிப்பிட்டுள்ளீர்கள் என நான் கருதுகிறேன்)

கேள்வி: இறுதியாக, தனித் தமிழீழத்தை எவ்வாறு அமைக்க முடியும் என்பது தொடர்பாகக் குறிப்பிட முடியுமா?

பதில்: தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன். தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் வரலாற்று சார் குடியிருப்புக்களை ஆதாரப்படுத்தி அதற்காக ஆதரவு வழங்கிய ராஜீவ் காந்தி, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வன் மற்றும் பத்மநாபா போன்றோர் தமிழீழ விடுதலைப் புலிகளால் இரக்கமற்ற விதத்தில் படுகொலை செய்யப்பட்ட போது தனித்தமிழீழத்தை அமைப்பதற்கான அனைத்துலக வாய்ப்புக்கள் இழக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தனித் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தோல்வியுற்ற பின்னர், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றுசேர்ந்து தமது பிரச்சினைகளை ஆராய்வதற்கான தக்க தருணம் இதுவாகும். பிரபாகரன் ஏன் தோற்றார் என்பதையும் ஆராய்ந்து அனைத்து தமிழ்ப் பிரதிநிதிகளும் ஒன்றுசேர்ந்து ஒன்றிணைந்த சிறிலங்காவுக்குள் தமது அரசியல் அவாக்களைப் பெற்றுக் கொள்வதற்கான மூலோபாயக் கோட்பாட்டை வரையறுக்க வேண்டும். இதனை அடைவதற்கு ஒற்றுமை என்பது மிகவும் அவசியமானதாகும். கிட்டிய எதிர்காலத்தில் இது நடக்கும் என நான் நினைக்கவில்லை. பூகோளத்தின் இயங்குநிலை தொடர்பாக புதிய இளைய தமிழ்த் தலைமுறை ஆராயும் போதே இது சாத்தியமாகும் என நான் நம்புகிறேன்.

http://www.puthinappalakai.net/2014/11/23/special-news/1065

Link to comment
Share on other sites

வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன்

நித்தியபாரதி

hariharan-300x200.jpg

தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.

 

 

இந்த முடிவைப் பெறுவதற்காகவே இந்தியா மிகப்பெரும் விலைகொடுத்து இலங்கையில் கிணறுவெட்டியது. கிணறுவெட்டப் பூதம் வந்தாலும் சமாளிப்பதற்கு மலையாள மாந்திரீகம் இருக்கிறது என இறுமாந்தும் இருந்தது. ஆனாலும் என்செய்வது....? பூதத்திற்குப் பதிலாகச் சீனா வந்துவிட்டதே..... :(  :o   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனின் தலைவிதியை, இந்தக் ஹரிஹரனும், சுப்பிரமணியன் சுவாமியும் தான் நிர்ணயிக்க முன்னிற்கிறார்கள் போல உள்ளது !

 

நாங்கள் தான் பிரச்னையை மறந்து கொஞ்ச நேரம் நிம்மதியாய் இருப்பம் எண்டாலும்... இவங்கள் இரண்டுபேரும் விட மாட்டாங்கள் போல கிடக்கு!

 

இந்தியா பட்டு வேட்டி கட்ட வெளிக்கிட்டு, இப்ப 'பஞ்சர்' சொல்லுறமாதிரிக் கோவணத்தோட நிக்கிற மாதிரித் தான் எனக்குத் தெரியுது! :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.