Jump to content

வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன்

நித்தியபாரதி

hariharan-300x200.jpg

தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.

இவ்வாறு International Law Journal of London ஆய்விதழின் முதன்மை ஆசிரியர் Dr Parasaran Rangarajan அவர்களுக்கு வழங்கிய மின்னஞ்சல் வழியான நேர்காணலில் கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

கேள்வி: சிறிலங்காவிலிருந்து தமிழீழத்தைப் பிரித்தெடுப்பதற்கான முயற்சிகளில் இந்தியா ஒருபோதும் இறங்கமாட்டாது என்பதை இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதிப்படுத்துகிறது. ஆனால் சிறிலங்காவில் தனித் தமிழீழத்தை உருவாக்குவதைப் பிரதான நோக்காகக் கொண்டு செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளுக்கான இந்திய வெளியக புலனாய்வு அமைப்பின் (றோ அமைப்பு) ஊடாக 1980களில் இந்தியா ஆயுத உதவிகளை வழங்கியிருந்தது. இவ்வெவ்வேறுபட்ட முரண்பாடான நிலைப்பாட்டைக் கொண்ட இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எத்தகையதாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: 1987 யூலையில் இந்திய-சிறிலங்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் சிறிலங்காவில் செயற்பட்ட ஆயுதக் குழுக்களுடன் இந்தியா எவ்வாறான தொடர்புகளைக் கொண்டிருந்தது என்பது தொடர்பில் பல்வேறு தவறான தகவல்களும் குழப்பங்களும் நிலவுகின்றன என நான் கருதுகின்றேன். 1983ல் சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனக்கலவரமானது பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுவதற்குக் காரணமாகியது.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இக்கலவரமானது சிறிலங்காவில் ஆயுதக் குழுக்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது. 1975ல் அகிம்சை வழிமூலம் சுதந்திர தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி [TULF] உருவாக்கப்பட்டு 1976ல் நடாத்தப்பட்ட தேர்தலில் இம்முன்னணி வெற்றியை ஈட்டியபோதிலும் இதனால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் தமிழ் ஆயுதக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தன. சிறிலங்காவில் சுதந்திர தமிழீழத்தை அமைப்பதற்கான அரசியற் தீர்வொன்றை முன்வைப்பதில் சிறிலங்கா அரசாங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வாய்ப்பை வழங்கவில்லை என்பது உண்மையே.

1983 கலவரத்தின் பின்னர், சிறிலங்கா வாழ் சிறுபான்மைத் தமிழ் மக்கள் சமமாக நடாத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்திய மத்திய அரசாங்கமானது சிறிலங்கா விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசாங்கம் மீது மிகப் பாரிய அழுத்தம் இடப்பட்டது. இக்காலப்பகுதியில் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ஆக்கிரமிப்பு மேற்கொண்டிருந்ததால் இந்தியா பனிப்போர்ச் சூழலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தமிழ் மற்றும் சிறிலங்காத் தலைவர்களுக்கிடையில் திம்பு மற்றும் பங்களுரில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் பின்னர் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்காக திருமதி.இந்திராகாந்தி அந்நாட்டு ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவு வழங்கினார். 1980களில், திருமதி இந்திராகாந்தியோ அல்லது அவருக்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த தலைவர்களோ சுதந்திர தமிழீழம் மலருவதற்கான ஆதரவை ஒருபோதும் வழங்கவில்லை.

ஏன் திருமதி இந்திரா காந்தி, தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கினர் என்பது தொடர்பாக மே 23, 2011ல் நான் வழங்கிய நேர்காணலில் மிக விரிவாக விளக்கியுள்ளேன்: “ஒரு குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு தமிழ் ஆயுதக் குழுக்களை வளர்ப்பதன் மூலம் ஈழத்தமிழர் விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கான ஒரு சமரசத்திற்கான தயார்ப்படுத்தலை மேற்கொள்ள முடியும் என அக்காலப்பகுதியில் திருமதி இந்திரா காந்தி கருதினார்”

இந்திய அரசாங்கத்தின் கட்டளைகளைப் பின்பற்றி மாத்திரமே இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் பணிபுரிந்தன. ஆகவே இந்நிலையில், இவர்கள் தமிழீழத்தை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு செயற்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கின எனக் கூறுவது முற்றிலும் தவறாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒருவர் மாத்திரமே தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியும் என்கின்ற குறிக்கோளுடன் புலிகள் அமைப்பு வளர்க்கப்பட்டதே தவிர இது உண்மையில் இந்தியப் புலனாய்வாளர்களால் ஆதரவளிக்கப்படவில்லை.

கேள்வி: சிறிலங்கா ஒரு இறைமையுள்ள நாடாகும். பாதுகாப்புச் சபை சிறிலங்கா மீது தடை விதிக்காவிட்டால் இது ஐ.நா சாசனத்தை மீறுஞ்செயலாகவே நோக்கப்படும். நேற்றோ[NATO] அமைப்பு கொசோவாவில் போர்க் குற்றங்களை உறுதிப்படுத்தியது போன்று, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்போது, தமிழ் மக்களுக்குத் தீர்வை எட்டக்கூடிய ‘பரிகார இறையாண்மையை’ சிறிலங்காவில் நிலைநிறுத்துவதற்காக எந்தவொரு சக்திகள் தலையீடு செய்யுமா? இவ்வாறு சிறிலங்காவில் வெளிச்சக்திகள் தலையீடு செய்வதற்கு இந்தியா அனுமதிக்குமா? அல்லது ஆப்கானிலிருந்து நேற்றோ வெளியேறியது போன்று இவ்வாறான வெளிச்சக்திகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றுவது தொடர்பாகப் பரிசீலிக்குமா?

பதில்: நான் ஒரு சட்ட வல்லுனரல்ல. ஆனால் இந்த விவகாரத்தை மூலோபாய ரீதியாக நோக்க முடியும். இது எந்தவொரு குழப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அனைத்துலக சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அனைத்துலக நீதிமன்றம் கொசோவா மீதான தனது தீர்ப்பை 22 யூலை 2010ல் வெளியிட்டது. கொசோவா தனக்கான சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திய போது மேற்குலக இராணுவம் இங்கு நிறுத்தப்பட்டது. ஆனால் நாடுகளின் இறையாண்மை மற்றும் அவற்றின் ஒன்றிணைந்த அடையாளமானது மிகவும் சாதாரணமாக வரையறுக்கப்பட முடியும் என நான் கருதுகிறேன்.

எந்தவொரு ஐ.நா உறுப்பு நாடுகளின் இராணுவத்தாலும் இழைக்கப்பட்ட குற்றங்களை அனைத்துலக நீதிமன்றுக்கு நிரூபிக்கக்கூடிய அதிகாரத்தை நேற்றோ NATO போன்ற எந்தவொரு இராணுவ அமைப்பும் கொண்டிருக்க முடியும் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது. இந்த விவகாரத்தை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஐ.நா பாதுகாப்புச் சபை மற்றும் பொதுச் சபை போன்றன கலந்துரையாடி சட்ட ரீதியாகக் கூட்டு நடவடிக்கையை எடுக்க முடியும். ஆனால் நிறைய சந்தர்ப்பங்களில் இந்த அமைப்புக்கள் தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளன. ஏனெனில் இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து செயற்பட விரும்புவதில்லை.

பலம்பொருந்திய உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து கொசோவா பிரிந்து செல்வதை எதிர்த்துப் போர் புரியும் அதேவேளையில் மனித உரிமை மீறல்களைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தி சர்வதிகார ஆட்சி நடாத்தப்படும் ஈராக் மற்றும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட சேர்பியா போன்ற நாடுகளில் வாழும் அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு இதன்மூலம் ஐ.நா சாசனம் முற்றாக மீறப்படும் போது அதனை நியாயப்படுத்துவதற்காக 21வது நூற்றாண்டில் மேற்கொள்ளப்படும் ‘பரிகார இறையாண்மை’ போன்றன தொடர்பில் நான் திருப்தியடையவில்லை.

இந்நிலையில் ‘பரிகார இறையாண்மை’ என்பது அனைத்துலக ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு நாட்டில் வெளியக இராணுவத் தலையீட்டை மேற்கொள்வதற்கு கொசோவாவை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்த முடியாது. சொசோவாவில் ‘பரிகார இறையாண்மையை’ நிலைநிறுத்துவதற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கிய பின்னர், பெப்ரவரி 19, பெப்ரவரி, 2008ல் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், எந்தவொரு பிராந்தியத்தில் நிலவும் மோதலும் தனித்துவமானது எனவும், கொசோவா தான் பிரிந்து செல்வதைத் தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்தி வெற்றி கொண்டதைப் போன்று எந்தவொரு நாடும் தமது சுதந்திரப் பிரகடனத்தைத் தாமாகவே மேற்கொள்வதன் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இத்தகைய அறிவிப்பானது இதன் அரசியல், இராஜதந்திர நாடகத்தின் ஒரு பகுதியாகும். ஏனெனில் தென் ஒசேற்றியாவில் உள்ள ஆப்காசியா, ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து செல்லப்போவதாக அச்சுறுத்திய போது அதில் ரஸ்யா தலையீடு செய்ததையிட்டு அமெரிக்கா அதிருப்தியடைந்தது. அமெரிக்கா தொடர்பான இந்த எடுத்துக்காட்டானது ‘பரிகார இறையாண்மை’ தேவைப்படும் போது பயன்படுத்தப்பட முடியும் என்பதைக் குறிக்கிறது. அமெரிக்க வாத்திற்கு எது நல்லதோ அது ரஸ்ய வாத்திற்குப் பிடிக்காது என்கின்ற ஒரு பழமொழி உண்டு.

தற்போது சிறிலங்காவில் வேற்று நாட்டு இராணுவத்தின் தலையீடுகள் காணப்படவில்லை. சிறிலங்கா மீது தற்போதும் ஐ.நா விசாரணைகளை மேற்கொள்கிறது. மிக முக்கிய மற்றும் பிராந்திய பொறுப்பைக் கொண்டுள்ள இந்தியாவுடன் யுத்தத்தில் ஈடுபடாத சிறிலங்காவில் இந்தியா இராணுவத் தலையீட்டைச் செய்வதற்கான எவ்வித நியாயமான காரணங்களும் தற்போது காணப்படவில்லை.

1987ல் கூட, தமிழ் மக்களுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தமிழ் ஆயுத அமைப்புக்களை நிராயுதபாணிகளாக்கி அதன்மூலம் தமிழ் சிறுபான்மை மக்களின் அரசியல் அவாக்களை ஒன்றிணைந்த சிறிலங்காவுக்குள் நிறைவேற்றுவதற்கான இரு தரப்புப் பேச்சுக்களை நடாத்துவதற்கு உதவுமாறு இந்தியாவிடம் அப்போதைய சிறிலங்கா அதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தமைக்கு அமைவாகவே சிறிலங்காவுக்கு இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. சிறிலங்கா இராணுவம் தனக்கெதிராகச் சதி செய்து ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்வதைத் தடுப்பதற்காகவே அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜெயவர்த்தனா இந்தியப் படைகளை சிறிலங்காவுக்கு அழைத்ததாக நம்பப்படுகிறது.

கேள்வி: அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஒரு கூட்டணியாகச் செயற்படுவதற்கான சாத்தியம் தொடர்பாக அறிவித்தல் விடுத்திருந்தன. இதற்கும் மேலாக, சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தைக் குறைக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் சபை மற்றும் இந்திய அரசாங்கம் போன்றன அழைப்பு விடுத்து வருகின்றன. இதைவிட, நிறைவேற்று அதிபர் முறைமை தொடர்பாக விதந்துரைக்கப்படும் 18ம் திருத்தச்சட்டத்தை நீக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இவ்விரு நகர்வுகளும் 1987ல் உருவாக்கப்பட்ட இந்திய-சிறிலங்கா கூட்டு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வடக்கு-கிழக்கு இணைந்த ஆட்சி நடைபெற வழிவகுக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழித்தல் என்பது சிறிலங்கா அரசியலில் நிரந்தரமாகப் பேசப்படும் ஒரு விவகாரமாகும். இந்த முறைமை ஐ.தே.க வால் உருவாக்கப்பட்டது. ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பாக அதிபர் ராஜபக்ச, மத்தியில் அனைத்து அதிகாரங்கள் அதிபர் என்கின்ற தனிநபரின் கைகளில் குவித்து வைத்திருப்பதன் மூலம் தனது ஆட்சியில் மிகவும் இன்பம் கண்டுள்ளார். சிறிலங்காவில் இடம்பெறும் ஒவ்வொரு தேர்தலில் இந்த விவகாரம் பேசப்பட்டாலும், இது அரசியல் முன்னுரிமைகளிலிருந்து நீக்கப்படுவது வழமையானதாகும். இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடையாவிட்டால், இந்த நிலை மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை. நிகழ்காலத்தில் கூட இது இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ஐ.தே.க வுடன் அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேரவுள்ளதாக அறிவிப்பதென்பது தேர்தற் காலத்தில் இடம்பெறும் வழமையான நிகழ்வாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் ஒன்றுசேர்வதன் மூலம் இவ்விரு வெவ்வேறு சமூகங்கள் சுமக்கும் வரலாற்றுச் சுமைகளை அடிப்படையாகக் கொண்டு சமத்துவமான தீர்வை எட்டமுடியுமா என்பது சந்தேகத்திற்குரியதே.

நிறைவேற்று அதிபர் முறைமையுடன் தொடர்புபட்ட 18வது திருத்தச் சட்டம் எதிர்காலத்திலும் நடைமுறையிலிருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பு சிறிலங்கா வாழ் மக்களிடமே உள்ளது. 2015 ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள தேர்தலானது இதற்கான வாய்ப்பை சிறிலங்கா வாழ் மக்களுக்கு வழங்குகிறது. சிறிலங்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது இந்தியாவையோ நாம் அதிகளவில் நம்பக்கூடாது.

எனது மதிப்பாய்வின் படி, வடக்குக் கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது. சிறிலங்கா உச்ச நீதிமன்றமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிந்து தனித்தனியாகச் செயற்படவேண்டும் எனக் கட்டளையிட்ட போது, இந்தியாவானது இந்த விடயத்தில் தலையிட்டு இவ்விரு மாகாணங்களையும் பிரிக்கக்கூடாது என அதிபர் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருக்க முடியும். ஆனால் அதனை இந்தியா செய்யவில்லை.

சிறிலங்காவுடன் சமாதானப் பேரம் பேசலை மேற்கொண்ட போது வே.பிரபாகரன் வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாகத் தீர்வெட்டுவதற்கான சில வரலாற்று ரீதியான வாய்ப்பைக் கொண்டிருந்தார். ஆனால் இவர் சுதந்திர தமிழீத்தை மட்டுமே கோரினார். வேறு எந்த விட்டுக் கொடுப்புக்களுக்கும் பிரபாகரன் உடன்படவில்லை.

சிறிலங்கா இராணுவம், வடக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ளதானது ஒரு அரசியற் பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினை சிறிலங்கா அரசாங்கத்தாலும் வடக்கு மாகாண சபையாலும் தீர்க்கப்படவேண்டும். ஆனால் இவ்விரு தரப்புக்களுக்கும் இடையில் நீண்ட கால அரசியல் சார் நல்லுறவு பேணப்படுவது மிக அவசியமானதாகும். கெட்டவாய்ப்பாக, இவ்விரு தரப்புக்களுக்கும் இடையிலான சமரசப் பேச்சுக்கள் பல்வேறு காரணங்களுக்காகத் தோல்வியடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புக்களுடனும் சமரசத்தை மேற்கொண்டு மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெறுவதற்கான வழிவகையை மட்டுமே இந்தியா மேற்கொள்ள முடியும்.

கேள்வி: தனித் தமிழீழம் வேண்டுமென சிறிலங்காவிலுள்ள எந்தவொரு குழுவும் கோரிக்கை விடுத்தால், 1980களில் பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது போன்று இந்தியா பொருத்தமான பொறிமுறையின் ஊடாக இதற்கு ஆதரவளிக்குமா?

பதில்: இதற்கு முன்னர் பல தடவைகள் இது தொடர்பாக நான் பதிலளித்துள்ளேன். நீங்கள் ஒருபோதும் 1980 காலப்பகுதியை மீண்டுமொரு தடவை இந்தியாவிலோ அல்லது சிறிலங்காவிலோ உருவாக்க முடியாது. தனித் தமிழீழக் கோரிக்கையை முன்வைப்பதற்கான எந்தவொரு அமைப்பும் சிறிலங்காவில் தற்போது இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட இக்கோரிக்கையை முன்வைக்காது. புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த குழுக்கள் மற்றும் தமிழ்நாட்டில் செயற்படும் சில குழுக்கள் போன்றன இவ்வாறான கோரிக்கையைத் தற்போது முன்வைக்கின்றன. இவற்றின் தமிழீழக் கோரிக்கையும் ‘கருத்தியல் மட்டத்திலேயே’ உள்ளது. இந்நிலையில் இன்னமும் எந்தவொரு அமைப்பும் தனித்தமிழீழம் தொடர்பில் நடைமுறை சார் செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில் இதற்கு இந்தியா எவ்வாறு ஆதரவளிக்க முடியும்?

கேள்வி: சிறிலங்காவில் செயற்படும் தீவிர பௌத்த அமைப்பான பொது பல சேனவைப் ‘பயங்கரவாதிகள்’ என வகைப்படுத்த முடியுமா அல்லது இதனை இந்தியாவால் தடைவிதிக்கப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் இணைக்க முடியுமா?

பதில்: சிறிலங்கா அரசாங்கமோ அல்லது பெரும்பான்மை சிறிலங்கர்களோ பொது பல சேனவை ஒரு தீவிரவாத அமைப்பாகக் கருதுகிறார்களா? சிறிலங்கா காவற்துறை கூட பொது பல சேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் இது ஒரு வலதுசாரி சிங்கள அமைப்பாகவே நோக்கப்படுகிறது. இவர்களது கருத்தியலின் படி, பொது பல சேனவின் நடவடிக்கைகள் தீவிரவாதச் செயற்பாடுகளாக வரையறுக்கப்படவில்லை.

எனது கருத்தின் படி, பொது பல சேன ஒரு பௌத்த அடிப்படைவாத அமைப்பாகும். அரசியலில் தமது செல்வாக்கை அதிகரிப்பதற்காக இவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இவர்கள் அரசாங்க ஆதரவுடன் செயற்படுகிறார்கள். இது ஒரு சட்ட விவகாரமாகும். இதனை மிகவும் உறுதியாகக் கையாளவேண்டும். தம்மைத் தாமே பௌத்தர்களின் மீட்பர்கள் எனக் கூறிக்கொண்டு செயற்படும் பொது பல சேனவுக்கு எதிராக எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு அரசாங்கத்திலுள்ளவர்கள் முன்வராமைக்கு தமது செல்வாக்குக் குறைந்துவிடும் எனக் கருதுவதே காரணமாகும். இதனால் இந்த அமைப்பு வெளிப்படையாக சுதந்திரமாகச் செயற்படுகிறது. நாங்கள் பொது பல சேனவின் நடவடிக்கைகளைக் கொண்டு அதனை ‘தீவிரவாத அமைப்பு’ என வரையறுத்தால், இந்தியா மற்றும் சிறிலங்காவில் அரசியற் கட்சிகளின் கையாட்களாகச் செயற்படும் பல்வேறு அமைப்புக்களும் தீவிரவாத அமைப்புக்கள் என அழைக்கப்பட வேண்டும்.

பொது பல சேனவை இந்தியா ‘பயங்கரவாத’ அமைப்பு என முத்திரை குத்துமா என நீங்கள் வினவியது நகைச்சுவையானதே. ஒரு அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென இந்தியா முத்திரை குத்துவதற்கு வரையறுத்த சில காரணங்கள் உள்ளன. தற்போது பொது பல சேன இந்தியாவில் செயற்படவில்லை. இந்தியா வாழ் முஸ்லீம் மக்கள் கூட, பொது பல சேனவைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை.

கேள்வி: தற்போது கருத்து வாக்கெடுப்பானது சாத்தியமில்லாவிட்டால், சிறிலங்காவின் அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர் வடக்கு கிழக்கு ஒன்றிணைக்கப்படும் போது அல்லது அதற்குப் பின்னர் இது சாத்தியம் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்து வாக்கெடுப்பானது தமிழீழம் தொடர்பானதா அல்லது வடக்கு மாகாணம் ஒன்றிணைக்கப்படுவது தொடர்பானதா? அரசியல் நோக்கம் தவிர வேறெந்த சூழலில் யாரேனும் சிறிலங்காவில் கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட தனது அரசியற் கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரமே கருத்து வாக்கெடுப்பு என்கின்ற பதத்தைப் பயன்படுத்துகிறது. கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்படாமலேயே, நாடாளுமன்றில் சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் வடக்குக் கிழக்கை சட்ட ரீதியாக இணைக்க முடியும். மறுபுறத்தே அரசியல் யாப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் இது சாத்தியப்படும்.

கேள்வி: செல்வாக்கு மிக்க நாடுகளின் உதவியுடன் அனைத்துலக ரீதியில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டால் இந்த அமைப்பிற்கு ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமா?

பதில்: இவ்வாறான ஒரு ஊகித்தல் வினாவுக்குப் பதிலளிப்பது கடினமாகும். நடைமுறையில் தமிழீழம் என்பதை அனைத்துலக சமூகம் இன்னமும் அங்கீகரிக்கவில்லை. அனைத்துலகத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தமிழீழம் என்பது முதலில் தனக்கென நிலப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். அனைத்துலக சமூகம் அங்கீகாரம் வழங்கும் போது, ‘இந்த அமைப்பு’ என நீங்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பிற்கு ஆட்சி செய்தல் மற்றும் சுயாதீன அமைப்பு என்பதற்கு அப்பால் எவ்வித பங்களிப்பும் இருக்காது என்பதே எனது கருத்தாகும். (இந்த அமைப்பு என நீங்கள் தமிழ் பிரிவினைவாத அமைப்பையே குறிப்பிட்டுள்ளீர்கள் என நான் கருதுகிறேன்)

கேள்வி: இறுதியாக, தனித் தமிழீழத்தை எவ்வாறு அமைக்க முடியும் என்பது தொடர்பாகக் குறிப்பிட முடியுமா?

பதில்: தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன். தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் வரலாற்று சார் குடியிருப்புக்களை ஆதாரப்படுத்தி அதற்காக ஆதரவு வழங்கிய ராஜீவ் காந்தி, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வன் மற்றும் பத்மநாபா போன்றோர் தமிழீழ விடுதலைப் புலிகளால் இரக்கமற்ற விதத்தில் படுகொலை செய்யப்பட்ட போது தனித்தமிழீழத்தை அமைப்பதற்கான அனைத்துலக வாய்ப்புக்கள் இழக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தனித் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தோல்வியுற்ற பின்னர், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றுசேர்ந்து தமது பிரச்சினைகளை ஆராய்வதற்கான தக்க தருணம் இதுவாகும். பிரபாகரன் ஏன் தோற்றார் என்பதையும் ஆராய்ந்து அனைத்து தமிழ்ப் பிரதிநிதிகளும் ஒன்றுசேர்ந்து ஒன்றிணைந்த சிறிலங்காவுக்குள் தமது அரசியல் அவாக்களைப் பெற்றுக் கொள்வதற்கான மூலோபாயக் கோட்பாட்டை வரையறுக்க வேண்டும். இதனை அடைவதற்கு ஒற்றுமை என்பது மிகவும் அவசியமானதாகும். கிட்டிய எதிர்காலத்தில் இது நடக்கும் என நான் நினைக்கவில்லை. பூகோளத்தின் இயங்குநிலை தொடர்பாக புதிய இளைய தமிழ்த் தலைமுறை ஆராயும் போதே இது சாத்தியமாகும் என நான் நம்புகிறேன்.

http://www.puthinappalakai.net/2014/11/23/special-news/1065

Link to comment
Share on other sites

வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன்

நித்தியபாரதி

hariharan-300x200.jpg

தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.

 

 

இந்த முடிவைப் பெறுவதற்காகவே இந்தியா மிகப்பெரும் விலைகொடுத்து இலங்கையில் கிணறுவெட்டியது. கிணறுவெட்டப் பூதம் வந்தாலும் சமாளிப்பதற்கு மலையாள மாந்திரீகம் இருக்கிறது என இறுமாந்தும் இருந்தது. ஆனாலும் என்செய்வது....? பூதத்திற்குப் பதிலாகச் சீனா வந்துவிட்டதே..... :(  :o   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனின் தலைவிதியை, இந்தக் ஹரிஹரனும், சுப்பிரமணியன் சுவாமியும் தான் நிர்ணயிக்க முன்னிற்கிறார்கள் போல உள்ளது !

 

நாங்கள் தான் பிரச்னையை மறந்து கொஞ்ச நேரம் நிம்மதியாய் இருப்பம் எண்டாலும்... இவங்கள் இரண்டுபேரும் விட மாட்டாங்கள் போல கிடக்கு!

 

இந்தியா பட்டு வேட்டி கட்ட வெளிக்கிட்டு, இப்ப 'பஞ்சர்' சொல்லுறமாதிரிக் கோவணத்தோட நிக்கிற மாதிரித் தான் எனக்குத் தெரியுது! :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.