Jump to content

பாப்பரசரின் பயணத்தை அரசியல் பரப்புரைகளுக்காக பயன்படுத்தும் மகிந்த அரசாங்கம்?


Recommended Posts

பாப்பரசரின் வருகையை அண்டி தேர்தல் நடத்தப்படாது என்று கத்தோலிக்கத் திருச்சபைக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ள சிறிலங்கா அரசாங்கம், பாப்பரசரின் பயணத்தை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையையும் உதாசீனப்படுத்தி வருகிறது.
pope-poset1.jpg
பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரி 13ம் நாள் தொடக்கம் 15ம் நாள் வரை, சிறிலங்காவில் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிறிலங்காவில் அதிபர் தேர்தல் வரும் ஜனவரி 8ம் நாள் நடத்தப்படவுள்ளது.

அதிபர் தேர்தலுக்கும் பாப்பரசரின் பயணத்துக்கும் இடையில் ஐந்து நாட்களே இடைவெளி உள்ளது.

தேர்தலுக்குப் பின்னர், அரசியல் ரீதியான குழப்பங்கள், வன்முறைகள் ஏற்பட்டால், அது பாப்பரசரின் பயணத்தைப் பாதிக்கும் என்று முன்னரே, கத்தோலிக்கத் திருச்சபை தரப்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாப்பரசரின் வருகை, தேர்தலினால் பாதிக்கப்படாது என்றும் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், சிறிலங்கா அரசாங்கம் வத்திக்கானிடம் உறுதியளித்திருந்தது.

இந்தநிலையில், பாப்பரசர் வருகையை அண்டி – அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, கத்தோலிக்கத் திருச்சபைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த கருத்து வெளியிட, கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மறுத்து விட்டார்.

அதேவேளை, பாப்பரசரின் பயணத்திட்டம் தொடர்பான ஊடக மற்றும் தகவல் பணியகத்தின் பேச்சாளர் வண.சிறில் காமினி இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையில்,

“பாப்பரசரின் பயணத்தை அண்டி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசரின் பயணத்துக்கு கொஞ்சம் முன்பாக, தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியளித்திருக்கும்.
ஏற்கனவே பாதுகாப்பு பற்றிய கவலைகள் உள்ளன. எம்மால் அதை நிராகரிக்க முடியாது.ஆனால், ஆனால் நாம், சிறிலங்கா அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதியை முழுமையாக நம்புகிறோம்.

அதன்படி பாப்பரசரின் பயணத்துக்கான ஏற்பாடுகளை திருச்சபை மேற்கொண்டு வருகிறது.

தேர்தலுக்கு முந்திய அல்லது பிந்திய வன்முறைகள் இடம்பெறும் என்று எவராலும் கூற முடியாது.
ஆனால் பாப்பரசரின் பயணத்துக்காக நாம் பிரார்த்திக்கிறோம். இந்தப் பயணம் சுமுகமாக இடம்பெற கடவுளை வேண்டுகிறோம்.

எவ்வாறாயினும், பாப்பரசரின் பயணத்தை அரசியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று நாம் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

தேர்தல் அமைதியாக இடம்பெற பிரார்த்திக்கிறோம். ஆனால் எம்மால் எதையும் உறுதியாக கூற முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாப்பரசரின் பயணத்தை அரசியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற கத்தோலிக்கத திருச்சபையின் கோரிக்கைகளை மீறி, சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே பரப்புரைகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டது.

சிறிலங்கா அதிபர் மற்றும் பாப்பரசரின் படங்களைத் தாங்கிய பதாகைகள், கத்தோலிக்க மக்கள் வாழும் பகுதிகளில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/35580/57//d,article_full.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.