Jump to content

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் ஊடாக ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் எதிர்க்கட்சிகள்


Recommended Posts

 
 
 
வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் ஊடாக ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.
இதன் போது இரண்டு தரப்பினையும் சேர்ந்த பலர் கட்சித் தாவக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எனவே நாளைய தினம் நடைபெறவுள்ள வரவு செலுவுத் திட்ட வாக்கெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த ஜாதிக ஹெல உறுமய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
 
 
ஆளும் கட்சியில் அங்கம் வகித்து வரும் பல முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சிகளில் நாளை இணையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சில கொழும்பு ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.
 
 
இதேபோன்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை உடைய ஆளும் கட்சியின் வரவு செலவுத் திட்ட யோசனையை தோற்கடிப்பது சற்றே சவாலான விடயம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
 
பாரியளவில் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்தால் மட்டுமே இவ்வாறு வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பினை தோற்கடிக்கச் செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.