Jump to content

காற்றின் அலாவல் !!


Recommended Posts

water%20leaves%20water%20drops%202560x10

 

அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவை தானே இவள் இனி

இமை இரண்டும் தனித்தனி

உறக்கங்கள் உறைபனி.

 

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ

.....

ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே

உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே

உதிரட்டுமே உடலின் திரை…

 

எல்லா மொட்டிதழல்களும் மலர்வதற்குதான் குவிந்து காத்திருக்கிறது... எந்தக் காற்று அலாவுமோ என்ற ஏக்கத்தில்!.  காற்றுகளுக்கு அலாவுதலின் அளவைச் சொல்லிக் கொடுப்பார் யாருமில்லை. இருந்தாலும் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும்போது ஏதேனும் ஒரு மொட்டு மலர்ந்து விடும் என்ற நம்பிக்கையில்

 

இசைக்காகவும், இன்குரலுக்காகவும் இந்தப் பாடலின் இனிமையில் இளைப்பாறிச் செல்பவர்கள் அநேகம்....!

 

ஆனால் உவமைகளை உண்ணுபவன் நான். எனது சுவைநரம்புகள் எப்பொழுதும் வரிகளையே மேய்ந்து கொண்டிருக்கும். எந்நாவில் அகப்பட்ட இந்த வரிகளை புசித்த பின்பு முன்னை விட அசுரத்தனமாக பசிக்கிறது. நா நரம்புகளோடு, நாடி நரம்புகளும் வேட்கை கொண்டு உவமைகளைத் வேட்டையாட அலைகிறது …!

எதுவும் அகப்படாத வேளைகளில், முன்னொரு வேனிற்காலத்தில் வீழ்ந்துபோன காதல் நினைவு இந்த கார்காலப்  பொழுதுகளில் மெல்ல அரும்பி  இரவுகளில் வளர்ந்து விருட்சமாக படர்கிறது. என்றோ தழுவிய தழுவலின் தடங்களை இன்னும் கரங்களின் கணுக்களில் உணர முடிகிறது. மாந்தளிர் மேனியின் மல்லிகைப்பூ வாசம் முகர்ந்து, கருங்கூந்தல் வளைவுகளில் என் முகமிழைத்து, அர்த்தமில்லா வார்த்தைகளிலும் சொக்கித்திரிந்த சுகத்தை என்னவென்று உரைப்பது?

 

கன்னியர்  நினைவு இல்லையென்றால் காளைகளை உலகம் பாலைவனம்தான்...

 

இங்கே சங்க காலப் பெண்ணொருத்தி பூத்து நிற்கும் வேப்பம் பூக்களைக் கண்டு வாட்டமடைகிறாள். கொல்லையில் நிற்கும் வேப்பம் மரமானது பூத்து குலுங்கி இளவேனிலின் வரவை உரத்துச் சொல்லுகிறது. இளவேனில் திரும்பி வருவேன் எனச் சொல்லிச் சென்ற காதலன் இன்னும் வரவில்லை.  காதலன் வராததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காதலன் இவனை விட்டுச் சென்றுவிட்டான் என்று கொடிய சொற்களை என்மீது ஏவுகின்றனர். உயர்ந்த மரத்திலிருந்து விழுந்த அத்திப் பழத்தை உண்ண பல நண்டுகள் மொய்த்ததால் அந்த அத்திப் பழம் எப்படி குலைந்து போகுமோ அதுபோல நானும் குலைந்து போயுள்ளேன் என்று வருத்தப்படுகிறாள்.

 

இந்த சங்ககால தலைவியின் தவிப்பை உணர்த்த அருமையான மொழிநடையை மேல உள்ள திரைப் பாடல் தருகிறது..

மன்னவன் இல்லையென்ற நினைவு அனலாய்ச் சுட அதில் அவன் விட்டுச்சென்ற இன்ப நினைவுகள் பனித்துளியாய் வந்து செல்கிறது. மழைத்துளி தான் தஞ்சமடைய மரத்தை நாடுவதுபோல் இவள் இவன் மன்னவன் நெஞ்சம் வேண்டுகிறாள். தலைவனின் தாழாத நினவுகளில் முழ்கி கிடக்கும் இவளால் உறக்கம் எப்படிக் கொள்ள முடியும் ??

 

காற்று அலாவவில்லையெனில் மலரிதழ்களுக்கும் வதந்கித்தான் போகும்... !!

 

 

கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்    

என்னை யின்றியுங் கழிவது கொல்லோ   

ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்     

தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்   

குழையக் கொடியோர் நாவே    

காதல ரகலக் கல்லென் றவ்வே.

-- குறுந்தொகை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.