Jump to content

வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா? – பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் நாளைய நாடாளுமன்ற அமர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா? – பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் நாளைய நாடாளுமன்ற அமர்வு 
[sunday 2014-11-23 09:00]
Parliament-Sri-Lanka-200-news.jpg
நாடாளுமன்றில் நாளை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த நிலையிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாலேயே இது குறித்து அனைவரினதும் கவனமும் திரும்பியுள்ளது.
நாடாளுமன்றில் நாளை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த நிலையிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாலேயே இது குறித்து அனைவரினதும் கவனமும் திரும்பியுள்ளது.
 
அரசாங்கத்தை விட்டு வெளியேறிய அமைச்சர் மைத்ரிபால மற்றும் அவருடன் வெளியேறிய ஆறு உறுப்பினர்களும், வெள்ளிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் நாளைய தினம் முதன்முறையாக நாடாளுமன்றில் எதிர்கட்சி ஆசனங்களில் அமரவுள்ளனர். அதேவேளை இவர்கள் நாளை இடம்பெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கக் கூடிய வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த நிலையில் நாளை மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ள ஆளும் கூட்டணியைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களும் ஆளும்கட்சியில் இருந்து வெளியேறி எதிரணியில் இணைந்து கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் நாளைய வாக்கெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
 
இந்தநிலையில் எதிர்கட்சிகளின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்க ஐக்கிய தேசியக் கட்சி வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராகவே வாக்களிக்கும் என்று அறிவித்துள்ளது மாத்திரமன்றி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பது சாத்தியப்படுவது என்பது சந்தேகமே என்பதையும் கோடிட்டுக்காட்டியுள்ளார். வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதால் எழக்கூடிய அரசியல் யாப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்து கவனம்செலுத்தியுள்ளதாகவும் கூறிய ஜோன் அமரதுங்க, எனினும் அனைத்து வாய்ப்புகளுக்குமான கதவுகள் திறந்தே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றில் ஜாதிக ஹெல உறுமயவின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் எதிரணியில் நேற்று முன்தினம் இணைந்துகொண்ட ஆளும் கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தவிர்த்து ஆளும் கட்சிக்கு 152 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் இருக்கின்றனர். கடந்த நவம்பர் இரண்டாம் திகதி இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்திற்கான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஒதுங்கியிருந்தனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். எனினும் ஆளும் கட்சி சார்பில் 157 வாக்குகள் கிடைக்கப்பெற்றது.
 
இந்த நிலையிலேயே நாளை மாலை ஐந்து மணிக்கு இலங்கை நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டத்திற்கான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.இதில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு போலன்றி ஆளும் கட்சியிலிருந்து முக்கிய அமைச்சரான மைத்ரிபால சிறிசேன எதிரணியுடன் இணைந்துள்ள நிலையில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதால் நாளைம் அரசாங்கத்தைப் பொறுத்தவரை மிகவும் சிக்களுக்கு உரியதாகவே அமைந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.